> என் ராஜபாட்டை : March 2011

.....

.

Tuesday, March 29, 2011

எனக்கு பிடித்த புத்தகம் part 5


கவிதையை ரசிக்காதவர்கள் , பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. கவிதை படிக்கும் பழக்கம் உள்ள அனைவர்க்கும் பரிச்சியமான ஒருவர் தபூ சங்கர் . குறைந்த வரிகளில் அழகான கவிதை எழுதும் இவரின் கவிதைகள் இன்றைய இளைகேர்களுக்கு தேசியகீதம் . அவரின் மிக சிறந்த பல நூல்களில் 3 இங்கே


தேவதைகளின் தேவதை

வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய்

விழிஈர்ப்பு விசை

உலகமகா காமெடி



கலைகர் டிவி க்கும் எனக்கும் எந்த சம்பதமும் இல்லை . டிவி இல் மட்டும் தான் என் பெயர் இருக்கும். என் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு அதில் பங்கு உண்டு  , அது எவ்வளவு என எனக்கு இப்பொழுதுதான் தெறியும்.

- கலைகர்









(அவருகே சிரிப்பு தாங்கள )

வாக்கு

அன்பிற்கினிய தமிழ் மக்களே! தேர்தல் நெருங்க நெருங்க சுயலாப அரசியல்வாதிகளின் அனல் தெறிக்கும் பேச்சுகளும், ஆடையில்லா வாக்குறுதிகளும் செவிப்பறை புகுந்து பொதுமக்களின் மனத்தை திசைத்திருப்பும் உரைகளும் கூடிக் கொண்டிருக்கும் வேளையில் எனது சில கருத்துக்களை பகிர்ந்து கொள்கின்றேன்!
நாம் யார் என்பதை நாம் முதலில் புரிந்து கொள்ளவேண்டும்! காரணம் புரிந்து கொண்டவர்கள் வாக்களிக்கும் வேட்பாளர்கள் வாங்கியிருக்கும் வாக்கை பார்த்தால் அது மிகவும் குறைவாகத்தானிருக்கும்!
இப்படியேப் போனால் நாம் வாழும் பாரதம் நம்முடையதா என்ற கேள்விக்கு வித்திட்டுவிடும், எத்தனை சீர்த்திருத்தங்கள் செய்து உண்மையை விளக்கினாலும் விளங்கக் கூடிய நிலைமையிலிருந்து மக்கள் விலகியே நிற்கின்றார்கள்!
பொதுமக்களாகிய நமக்கு கிடைக்கும் பொன்னான வாய்ப்பு நாம் இடும் வாக்கு தான், இதன் பிறகு நாம் தேர்ந்தெடுத்த வேட்பாளர் ச.உ.ஆனதும் நம்மை திரும்பிப்பார்ப்பது என்பது ஒரு கேள்விக்குறிதான்!
அதேபோல் நமது காலைப்பிடித்து கெஞ்சும் கட்சி தலைமகளும் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்த பின் நம்மை ஒரு ஐந்து வருடக்காலத்திற்கு அடிமையாகத் தான் பார்க்கும், பின்பு நமக்கு வேண்டியதைப் பெற ஒன்று மனுக்கொடுக்கவோ இலஞ்சம் கொடுக்கவோ வேண்டும்.
வாக்கு கேட்டு வரும்போது நம்மை யாரென்றும் தெரியாதவர் ஏதோ பலவருடங்கள் பழக்கப்பட்டவர் போல் நம்மை அனுகும் கட்சிக்காரர்கள், எல்லாம் முடிந்த பின்பு அவர்கள் நம்மை பார்க்கும்போதோ ஒரு புழுவைப் பார்ப்பது மாதிரி பார்ப்பார்கள்!
இந்த பழக்கம் காலம் காலம் தொட்டு பின்பற்றப்படுகின்ற ஒரு முறை,இதை பொது மக்களாகிய நாம் உணர வேண்டும்.
கட்சி உறுப்பினர் என்ற பெயரில் அக்கட்சிகளின் விசுவாசிகள் தான் உழைத்தால் தான் தன் குடும்பம் வாழும் என்பதை மறந்து யாரோ ஒருவர் மீது எதற்காக என்று அறியாமல், அவர் நம்பும் தலைமை செய்யும் செய்த தவறுகளை எண்ணிப் பார்க்காமல் அவர்களுக்காக அல்லும்பகலும் அயராது உழைத்து தன் குடும்பம் நோக்காமல் கட்சிக்காரர் கொடுக்கும் சில தேவைகளை நம்பி தனது மக்களுக்கு தீங்கு செய்கின்றோமே என்று எண்ணாமல், சில நேரங்களில் இரத்தக் களரியும் ஏற்படுத்தி ஒரு தவறான ஆளை பதவியில் அமர்த்த துடிக்கும் தொண்டர்களாலும் வாக்கு சிதைக்கப்பட்டு இந்த நாடு அவமதிப்புக்கு உள்ளாகின்றது!
ஒவ்வொரு வேட்பாளரின் தகுதியை பொதுமக்களாகிய நாம் தான் சரியா தவறா என்று தெரிந்து கொண்டு அவர்களுக்கு வாக்களிக்க வேண்டும், சாதிக்காரன் என்றும், நம் மதத்தை சேர்ந்தவன் என்றும் நம்பி ஒரு தவறான ஆளைத் தேர்ந்தெடுத்து நமது நாட்டிற்கு களங்கத்தை ஏற்படுத்துவதில் பொதுமக்களின் பங்கும் அமைந்துள்ளது, எனவே இதை நாம் தான் தவிற்க வேண்டும், ஒரு சரியான மக்கள் சேவகனுக்கு பொதுமக்களின் வாக்கயளிக்க வேண்டும்!
எனவே பொதுமக்களே தாங்கள் அம்மா,அப்பா என்பதை நினையாமல் ஒரு நல்ல
ஆட்சியமைந்திட் ,தங்களது விலைமதிக்க முடியாத வாக்கு மூலம் நிருபிப்பீராக!

Thanks : http://tamilnanbargal.com

Monday, March 28, 2011

சிரிக்கலாம் வாங்க.




SMS ல வந்தவை:

டைடானிக்ல JACK DIED
-        ROASE ESCAPE

காதல் ல-  பரத் பைதியம்
      சந்தியா ESCAPE

சுப்புரமணியபுரம்  -  ஜெய் DIED
-        சுவாதி ESCAPE

கடைசியா   - நித்தியானந்தா மாட்டிக்கிட்டார்,
                   ரஞ்சிதா ESCAPE

நீதி : மச்சி எப்பவும் பொன்னுக SAFE, பசங்க தான் பாவம்.


நித்தியானந்தாவின் புது உபதேசம் :

“ LOVE THE LADY BUT
  DON’T TOUCH HER BODY
  IF U TOUCH THE BODY
  SOMEONE WILL MAKE THE CD”


GIRL : நான் MOBILE நீ SIM CARD

BOY : ஒ , நாம எப்பவும் சேர்ந்தே இருபோம்னு சொல்றியா?

GIRL : இல்ல , நல்ல OFFER வந்தா வேற SIM CARD கு மாறிடுவேன்.


சிபி : NIGHT தூக்கம் வரலைனு சோபா மேல படுத்தது தப்பா போய்டு..?

கரண் : ஏன்?

சிபி : சோபா புருஷன் சண்டைக்கு வந்துடான்.


எனக்கு 3 வயசு இருக்கும் போது எல்லா பொன்ணுகளும் என்னிடம் முத்தம் கேட்டாங்க, நானும் குடுத்தேன்.

இப்ப எனக்கு 18 வயசு, இப்ப முத்ததை திருப்பி கேட்டால் யாரும் தரமாட்டேன் என்கின்றனர். நன்றி கெட்ட உலகம்டா இது.


மனைவி : அட பாவி !!!! இவதான் உன் சின்ன வீடா ? பாக்க பிச்சைகாரி
             போல இருக்கா…….

கனவன் : தூக்கதுல கண்ணாடி முன்னாடி நின்னு உளறாம போய் படுத்து
            தூங்குடி


TODAY PUNCH :

         QUESTION PAPER ய பாத்து நாம அழுதா அது “ தரித்திரம் “.
நம்ம ANSWER PAPER ய பாத்து திருத்துபவர் அழுதால் அது “ சரித்திரம் “


Sunday, March 27, 2011

What is 49 "O"

Text of Rule 49-O
49-O. Elector deciding not to vote.-If an elector, after his electoral roll number has been duly entered in the register of voters in Form-17A and has put his signature or thumb impression thereon as required under sub-rule (1) of rule 49L, decided not to record his vote, a remark to this effect shall be made against the said entry in Form 17A by the presiding officer and the signature or thumb impression of the elector shall be obtained against such remark.

Present Implications of Rule 49-O
Since the ballot paper / Electronic voting machine (EVM) contains only the list of candidates, a voter cannot record his vote under Section 49-O directly. He must inform the presiding officer at the election booth. This violates the secrecy of the ballot. However, with paper ballot a different method is used to "waste" ones vote, which is stamping on multiple candidates. In fact this was the standard method of giving null votes without violating secrecy before the advent of the EVM.
At present, in an election, a winner will be declared irrespective of the number of 'non-votes'. However, a note of every 'non-vote' will be made with the Election Officer, and the total number of non-voters will, presumably, be available under the Right to Information Act.

Proposals by the Election Commission of India


Among the proposed electoral reforms[2] submitted in 2004 to the then Prime Minister, Dr. Manmohan Singh the then Chief Election Commissioner of India, T.S. Krishnamurthy, suggested the following:


. NEGATIVE / NEUTRAL VOTING
The Commission has received proposals from a very large number of individuals and organizations that there should be a provision enabling a voter to reject all the candidates in the constituency if he does not find them suitable. In the voting using the conventional ballot paper and ballot boxes, an elector can drop the ballot paper without marking his vote against any of the candidates, if he chooses so. However, in the voting using the Electronic Voting Machines, such a facility is not available to the voter. Although, Rule 49 O of the Conduct of Election Rules, 1961 provides that an elector may refuse to vote after he has been identified and necessary entries made in the Register of Electors and the marked copy of the electoral roll, the secrecy of voting is not protected here inasmuch as the polling officials and the polling agents in the polling station get to know about the decision of such a voter.
The Commission recommends that the law should be amended to specifically provide for negative / neutral voting. For this purpose, Rules 22 and 49B of the Conduct of Election Rules, 1961 may be suitably amended adding a proviso that in the ballot paper and the particulars on the ballot unit, in the column relating to names of candidates, after the entry relating to the last candidate, there shall be a column None of the above, to enable a voter to reject all the candidates, if he chooses so. Such a proposal was earlier made by the Commission in 2001 (vide letter dated 10.12.2001).

Friday, March 25, 2011

அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா…!

அன்று ஜூனியர் விகடன் ( 08- 04- 2009) இல் ராமதாஸ்
 

'' இந்தத் தேர்தலில் ஈழப் பிரச்னை, பிரதான பங்கு வகிக்கும். குறிப்பாக, ஈழத் தமிழர்களுக்காகக் கலைஞர் செய்த துரோகம் எங்கள் மேடைகளில் ஓங்கி ஒலிக்கும். ஈழப்பிரச்னை பற்றி எங்கள் கட்சித் தலைவர்கள் பேசிய கூட்டங்களில், கட்சி பேதமின்றி இளைஞர்கள் பெரும் திரளாகத் திரண்டார்கள் ! 

கேள்வி : '' நீங்கள் போட்டியிடும் தொகுதிகளில் உங்கள் வேட்பாளர்களைத் தோற்கடிக்க , திமுக அமைச்சர்களும் மாவட்டச் செயலாளர்களும் சபதம் போட்டிருக்கிறார்களாமே ?''

'' இதில் என்ன வியப்பு இருக்கிறது ! நாங்கள் திமுக-வோடு கூட்டணி வைத்திருந்தபோதும் அதைத்தானே செய்தார்கள். அதையும் தாண்டித் தானே எங்கள் வேட்பாளர்கள் வெற்றி பெற்றார்கள் ! பணமும், பலமும் அவர்களிடம் இருக்கிறது ! அதை வைத்து எதையும் செய்வார்கள், எப்படியும் செய்தி பரப்புவார்கள் ! ஆனால், மக்கள் நம்ப மாட்டார்கள் !'' 

December 29th, ௨௦௦9 :பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேசியதாவது: 

வரும் 2011ல் ஆட்சி அமைப்போம் என நாம் கோஷம் எழுப்பியதால், பயந்து, கடந்த லோக்சபா தேர்தலில் தி.மு.க.,வும், - அ.தி.மு.க.,வும் ரகசிய கூட்டணி அமைத்து, நாம் போட்டியிட்ட ஏழு இடங்களிலும் நம்மை தோற்கடித்தனர்.


முன்பு ஒருமுறை :


ராமதாஸ் பேசுகையில், உள்ளாட்சித் தேர்தலில் பாமக வேட்பாளர்கள் பல இடங்களில் தோற்கடிக்கப்பட்டுள்ளனர். கூட்டணி தர்மத்தை திமுகவினர் கடைப்பிடிக்கவே இல்லை. இதை நாங்கள் சுட்டிக் காட்டி அறிக்கை வெளியிட்டால், நான்கு சுவர்களுக்குள் நடந்ததை வெளியில் சொல்லக் கூடாது என்கிறார் கலைஞர். வெளியில் சொல்லாவிட்டால் எங்கே போய்ச் சொல்வது?
இத்தனை தவறுகள் நடந்துள்ளன என்று நாங்கள் கூறியபோதிலும் கூட அதை ஏற்றுக் கொள்ளாமல், தவறுகளையெல்லாம் அவர்கள் செய்து விட்டு, பச்சை துரோகம் செய்து விட்டு, எங்கள் மீதே குற்றம் சாட்டுகிறார் கலைஞர். இதை வெளியில் வேறு சொல்லக் கூடாது என்றும் கூறுகிறார்.
தொகுதிப் பங்கீட்டு ஒப்பந்தத்தை திமுக அமைச்சர்களும், மாவட்டச் செயலாளர்களும் மதிக்கவே இல்லை. எங்களை இழிவுபடுத்தி விட்டனர். பாமகவினருக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் திமுக போட்டி வேட்பாளர்கள் போட்டியிடப் போவதை முன்கூட்டியே உளவுத்துறை மூலம் அறிந்து கொண்ட கருணாநிதி, அதைத் தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அதேபோல 6 மாநகராட்சிகளிலும் துணை மேயர் பதவிகளை பாமகவுக்கு தருவதாக கூறியிருந்தார் கருணாநிதி. ஆனால் தேர்தலில் வெற்றி பெற்றவுடன் அந்த உடன்பாட்டையும் குழி தோண்டிப் புதைத்து விட்டார்.


* ஆட்சியைத் தக்கவைக்க, காங்கிரசின் தயவு வேண்டும் என்பதால், இலங்கைத் தமிழர்களுக்கு கருணாநிதி துரோகம் செய்துவிட்டார். – ராமதாஸ், 25.3.2009
* இலங்கைத் தமிழர் பிரச்னையில் முதல்வர் கருணாநிதி மாற்றி மாற்றி பேசுகிறார். இருப்பது ஓர் உயிர். அது, இலங்கைத் தமிழர்களுக்காகப் போகட்டும் என்றார். பின்னர், “மத்திய அரசு நினைத்தால், இலங்கைத் தமிழர்களின் உயிர்களைக் காப்பாற்றலாம். இல்லையென்றால், இங்குள்ள தமிழர்களும் சாக வேண்டியது தான்’ என்றார். அதிலிருந்தும் பல்டியடித்து, “இலங்கைத் தமிழர் பிரச்னையில் இதை விட அதிகமாக செய்வதற்கு எதுவும் இல்லை’ என்கிறார். – ராமதாஸ், 11.4.2009
* இலங்கைத் தமிழர்களுக்கு காங்கிரஸ் துரோகம் செய்துவிட்டதாகக் கூறும் ராமதாஸ், மத்திய அமைச்சரவையில் தன் மகனை இன்னும் நீடிக்கச் செய்வது ஏன்? பதவியை ராஜினாமா செய்துவிட்டு இதையெல்லாம் பேசியிருந்தால், ராமதாஸ் நேர்மையானவர் என கருதலாம். – கருணாநிதி, 16.4.2009
* தமிழக முதல்வர் கருணாநிதி டில்லி சென்று, காங்கிரஸ் தலைவர் சோனியாவின் முன் அமர்ந்து, இலங்கைப் போரை நிறுத்தும்படி வலியுறுத்தியிருக்க வேண்டும். மாறாக, பொது வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுப்பதெல்லாம் கண் துடைப்பு வேலை. – அன்புமணி, 22.4.2009
* லோக்சபா தேர்தலில் அ.தி.மு.க., கூட்டணி, 40க்கு, 40 தொகுதிகளிலும் மாபெரும் வெற்றி பெறும். தேர்தல் முடிந்ததும், தமிழக அரசியலிலும், தி.மு.க., ஆட்சியிலும் மிகப் பெரிய மாற்றம் ஏற்படும். – ராமதாஸ், 27.4.2009
* பஸ் கட்டணக் குறைப்பு என்பது, இதற்கு முன் கேள்விப்பட்டிராதது. லோக்சபா தேர்தலை ஒட்டி இந்த நடவடிக்கையை எடுத்துள்ள முதல்வர் கருணாநிதியும், போக்குவரத்து அமைச்சர் நேருவும் தங்கள் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். – ராமதாஸ், 3.5.2009
* லோக்சபா தேர்தல் வருவதால், இலங்கைத் தமிழர் பிரச்னையில் தமிழக மக்களை ராமதாஸ் ஏமாற்றுகிறார். அவருக்கு இந்தத் தேர்தலில் மக்கள் சரியான பாடம் புகட்ட வேண்டும். – ஸ்டாலின், 7.5.2009
* டாஸ்மாக் நிறுவனம், 12,300 கோடி ரூபாய் லாபத்தில் இயங்குவதாக, தி.மு.க., அரசு சொல்கிறது. அது, ஏழைகளிடம் இருந்து சுரண்டப்பட்ட பணம். – ராமதாஸ், 9.1.2010
* குடிசை மாற்று வாரியம் என்பது, குடிசைகளை ஒழித்து, அவர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்காக, 1967ம் ஆண்டு தி.மு.க., அரசால் உருவாக்கப்பட்டது. ஆனால், சென்னை இன்னமும் குடிசைகளின் நகரமாகத் தான் இருக்கிறது. – ராமதாஸ், 9.1.2010
* தி.மு.க., – அ.தி.மு.க., என எந்தக் கட்சியும் கூட்டணி வைக்கத் தயாராக இல்லாததால், விரைவில் பா.ம.க., என்ற கட்சியே காணாமல் போய்விடும். – ஸ்டாலின், 19.1.2010
* வாக்காளர்களுக்கு இலவச வேட்டி, சேலை வினியோகிக்கும்போது தி.மு.க.,வினர் கையும், களவுமாக பிடிக்கப்பட்டுள்ளனர். அப்படியும் அவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க மறுக்கின்றனர். – ராமதாஸ், 27.2.2010
* தி.மு.க.,வுடனான கூட்டணியில் மீண்டும் இணைய நாங்கள் விரும்புகிறோம்; ராஜ்யசபா சீட் ஒன்றை எங்களுக்கு ஒதுக்க வேண்டும். – ராமதாஸ், கடிதம்
* வரும் 2011ம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்குப் பிறகு தான் ராஜ்யசபா தேர்தலில் சீட் ஒதுக்குவது பற்றி பரிசீலிக்கப்படும். – தி.மு.க., தீர்மானம், 30.5.2010
* தன்னைத் தானே சமூக நீதி போராளி என அழைத்துக்கொள்ளும் கருணாநிதி, ஜாதிவாரி கணக்கெடுப்புக்குத் தயாராக இல்லாதது துரதிர்ஷ்டவசமானது. – ராமதாஸ், 26.8.2010
* புராணங்களில் குரு என்றழைக்கப்பட்ட சுக்கிராச்சாரியார், நல்லவற்றை நடக்கவிடாமல் தடுத்து வந்தார். (காடுவெட்டி ) குரு என்றால் அது தான் அர்த்தம். – கருணாநிதி, 5.9.2010
* இந்தியாவிலேயே அதிகம் இளம் விதவைகள் இருப்பது தமிழகத்தில் தான். பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும் வரை இந்நிலை தான் தொடரும். – ராமதாஸ், 8.1.2011
* காங்கிரஸ், பா.ம.க., விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் எங்கள் கூட்டணியில் உள்ளன. – கருணாநிதி, 30.1.2011
* கூட்டணி குறித்து பா.ம.க., இன்னும் முடிவு செய்யவில்லை. எங்களுக்கு பல்வேறு தரப்பில் இருந்து அழைப்பு வருகிறது. – ராமதாஸ், 30.1.2011
* பா.ம.க., இருக்கிறது என்று நாங்கள் சொன்னபோது, அவர் மறுத்தார். இனி, கூட்டணி பற்றிய கேள்விக்கே இடமில்லை. – கருணாநிதி, 1.2.2011
* பா.ம.க.,வை கூட்டணியில் சேர்க்க சோனியா விரும்பவில்லை. டில்லியில் அவர் என்னிடம், “எதிரிகளைக் கூட மன்னித்துவிடலாம்; துரோகிகளை மன்னிக்கக் கூடாது’ என்றார். – கருணாநிதி, 3.2.2011
* தி.மு.க., – பா.ம.க., கூட்டணி மகத்தான வெற்றி பெறும். – ராமதாஸ், 17.2.2011
நன்றி-தினமலர்



Thursday, March 24, 2011

வை.கோ.விற்கு எதிராக ஒரு அணியை ம.தி.மு.க.வில் உருவாக்க சதி?

சென்னை: தேர்தலில் போட்டியிடுவதில்லை என்ற முடிவில் மிக உறுதியாக இருக்கும் வைகோவுக்கு திமுக - அதிமுக எதிர்ப்பாளர்களின் ஆதரவு பெருகி வரும் வேளையில், அவரது கட்சியையே உடைக்கும் சதி ஒன்றும் ரகசியமாக நடந்து வருகிறது.

தமிழகம் முழுக்க ஒரு கட்டுக்கோப்புடன் உள்ள அரசியல் அமைப்பு மதிமுக. திமுக, அதிமுகவுக்கு அடுத்து, ஒரு தலைமையின் கீழ், பெரிய கோஷ்டிப் பூசல் இல்லாமல் சீரான நிர்வாக அமைப்பைக் கொண்ட கட்சி என்ற பெயர் மதிமுகவுக்கு உண்டு. கட்சியின் மூத்த தலைவர்கள் சில திமுகவுடன் இணைந்த போது கூட, மதிமுகவின் இந்த கட்டுக்கோப்பு சிதையவில்லை.

ஆனால் வைகோவின் இப்போதைய தேர்தல் புறக்கணிப்பு முடிவு, கட்சிக்குள்ளேயே இருவிதமான கருத்துக்களை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் கட்சி என்று ஆன பிறகு தேர்தலில் போட்டியிடுவதுதான் தங்கள் இருப்பை வெளிக்காட்டுவதாக அமையும். புறக்கணித்து ஒதுங்கி நின்றால் காணாமல் போகும் அபாயம் உள்ளது என மாவட்டச் செயலாளர்கள் பலரும் கூற ஆரம்பித்துள்ளனர்.

சில ம.தி.மு.க உறுப்பினர்கள் சுயேட்சையாகப் போட்டியிட முனைந்துள்ள ஒரு எம்.எல்.ஏ உட்பட சிலர் இராஜீனாமாச் செய்துமுள்ளனர். இதனையே காரணமாக வைத்து மதிமுகவின் கட்டுக் கோப்பை உடைக்கும் முயற்சியில் சிலர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

வைகோ முடிவால் அதிருப்திக்குள்ளாகியிருக்கும் மதிமுகவின் மாவட்டச் செயலாளர்களை தனியாக ஒரு கூட்டம் நடத்த வைக்க சிலர் முயன்று வருகின்றனர்.

இந்தக் கூட்டத்தில் வைகோவுக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்றும், தாங்களே உண்மையான ம.தி.மு.க. என்று அறிவிக்கக் கூடும் என்றும் கூறப்படுகிறது. இதற்கான வேலைகளைச் சிலர் தொடங்கிவிட்டதாகவும், ம.தி.மு.கவின் முக்கிய நிர்வாகிகளுடன் இவர்கள் தொடர்பிலிருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.

கட்சி அரசியல் என்றால் தேர்தல் தான் அதன் உயிர்நாடி என்பதே என்பதை வை.கோ.வும் புரிந்து செயற்பட வேண்டும் என்றும் அல்லது எதிர்வரும் நான்கு ஆண்டுகளிற்குள் ம.தி.மு.க அதளபாதாலளத்திற்குள் விழுந்து விடும் என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது.

இந்த நகர்வுகள் வைகோவுக்கும் தெரியும். எனினும் “என்ன நடந்தாலும் கவலையில்லை. பதவி, பலனை மட்டுமே பெரிதாக நினைப்பவர்களை வைத்துக் கொண்டிருந்தால், நாம் நினைத்த எதுவும் கைகூடாது. தேர்தலுக்குத் தேர்தல், இவர்களின் பதவிப் பசியை போக்க திமுக அல்லது அதிமுகவிடம் கையேந்தும் நிலைதான் கடைசி வரை தொடரும். இன்றைய தலைமுறைக்கு சரியான வழிகாட்டியாகவும் திகழ்வதுதான் எனது லட்சியம் என்று தன்னிடம் சமரசம் பேச வந்த திராவிட இயக்க தலைவர் ஒருவரிடம் நிதானமாகவும் அழுத்தமாகவும் தெரிவித்துள்ளார் வைகோ.

இதேவேளை தேர்தலில் தங்களுடன் கூட்டுச் சேருமாறு பா.ஜ.க கூட ம.தி.மு.மவிற்கு அழைப்பு விடுத்துள்ளது. வை.கோ. ஏதோ ஒரு விதத்தில் தொண்டர்களிற்கு பதில்சொல்ல வேண்டிய நிலையை மேற்காட்டிய விடயங்கள் ஏற்படுத்தியுள்ளன.

இதேவேளை தமிழ்த் தேசியத்தின் எதிரியாகவே இருந்து வரும் கலைஞர் கருனாநிதி “விடுபட்டோர்- விரட்டப்பட்டோர்- துரத்தப்பட்டோர்- விலை போகாது வெங்குருதி தனிற் கமழ்ந்த எங்கள் வீர மூச்சு- தமிழ் மூச்சு எனத் தடந்தோள் தட்டி வந்திடுவீர் வாகை சூட என்று கண் மூடி தவம் இருக்கும் துறவிகளைப்போல்- தூய ஞானிகளைப்போல் -நான் தவம் இருக்கின்றேன்- என் உயிரினும் இனியோரே! இன்ப முடிவினை எல்லோரும் சேர்ந்து சுவைப்போம்! வருக! வருக! வரிப்புலி வரிசையே வருக” என்று நக்கல் கலந்த தமிழில் வை.கோ.விற்கு மறைமுக அழைப்பு விடுத்துள்ளார்.

அந்த அழைப்பிலும் ஈழத்தமிழர்களின் முதுகில் குத்துவது போல “வரிப்புலி வரிசையே வருக” என வை.கோ.வின் ஈழத்தமிழர்கள் மீதான பாசத்தை மறைமுகமாக கிண்டல் பண்ணியுள்ளார்.

Thanks :http://www.sankathi.com

விஜய்காந்த் மீது என்ன தவறு?



விஜய்காந்த் ஆ.இ.ஆ.தி.மு.க வுடன் கூட்டணி வைததை சிலர் கிண்டல் செய்கின்றனர். அவர்களிடம் சில கேள்விகள்.

தனியாக 234 தொகுதிகலிலும் நின்று தன் பலதை நிருபித்தார். பெரிய கட்சினு மார்தட்டும் எந்த கட்சிகும் இந்த துனிவு உண்டா? ராமதாஸ் கூட
கட்சி துவங்கிய போது நின்றார். அப்போது அவரும் ஒரு seat தான் வென்றார் . ஆனால் அது  ஜாதி கட்சியாக துவங்கியது , இது மக்கள் கட்சியாக துவங்கியது

தேர்தலுக்கு, தேர்தலுக்கு கூட்டணி மாறும் பா.ம.க போலா மாறினார்?

மக்களுக்காகனு கட்சி ஆரம்பித்து தன் மகன்கலுக்காக கட்சி என வியபாரம் செய்யும் கட்சிகலுக்கு மத்தியில் மனைவி, மச்சான்னுடன் கட்சி ஆரம்பித்து அவர்கலுக்கு பதவி தந்தது என தப்பு?

கூட்டணில் இருந்தால் ஒரு பேச்சு, இல்லை என்றால் ஒரு பேச்சு பேசும் ராமதாஸ் போலவா பேசுகிறார்?

கூட்டணி இல்  இல்லாத போது தி .மு . க க்கு
௦ மார்க் போட்டவர் ராமதாஸ், இன்று கூட்டணி சேர்த்ததும் பசி , பட்டினி இல்லா ஆட்சி என்று மாத்தி பேசுகிறார் .
ஜெயலலிதா பற்றி தான் கூறியதை இது வரை மாறுத்ததில்லை.

மகனுக்காக, மகள் மேல் உள்ள வழக்குகாக என கூட்டணி போடும் கட்சிகளுக்கு மத்தியில் கட்சிகாக கூட்டணி சேர்ந்த்தது என தப்பு?


Wednesday, March 23, 2011

மானமிகு வைகோ அவர்களுக்கு, ஓர் அவசர வேண்டுகோள்!

தன்மானமும், தனது இனத்தின் மீது உண்மையான பற்றும், தளராத மன உறுதியும், அரசியல் நேர்மையும் கொண்ட வைகோ அவர்களுக்கு!


தமிழகத்தின் நல்ல தலைவர்களில் ஒருவராக விளங்கும் உங்களுக்கு ஏற்பட்ட அவமானம் காரணமாக; உங்கள் கட்சி இந்தத் தடவை தமிழகம்-புதுவை இரண்டிலும் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்துள்ளீர்கள்.

தி.மு.கவில் இருந்து நீங்கள் வெளியேறிய சமையத்தில், “ஓர் உறையில் இரண்டு போர் வாள்கள் இருப்பது சாத்தியமானதல்ல” என்னும் பேச்சுப் பரவியிருந்தது. அதில் ஒரு வாள் ஏற்கனவே ‘ஆரிய’த்தின் முன்னால் மண்டியிட்டுத் தன் கூர்மையை இழந்து வெகு நாட்கள் ஆகிவிட்டன! அவ்விரண்டில் எஞ்சி இருப்பது உங்கள் தலைமையில் உள்ள ம.தி.மு.கவும் அதன் ‘விலைபோகாத’ தொண்டர்களுந்தான்.

இந் நிலையில் தாங்களும் ’அரசியல் துறவறம்’ என ஆரம்பித்தால், இன்றில்லாவிடினும் என்றாவது ஊழலும், சுரண்டலும், உண்மை இன உணவும் கொண்ட அரசினைத் தமிழகதில் உருவாக்கும் பணி மேலும் தேக்கமடைந்து விடாதா?

ஒவ்வொரு தேர்தல்களின் போதும் நடிகர் ரஜனிகாந்த் இமையமலைக்குச் செல்வது போன்று, நீங்களும் இந்தத் தேர்தலில் பங்கு கொள்ளாமல் விலகி இருப்பது எந்த வகையில் நியாயம்?

ரஜனி காந்த் ஓர் நடிகர் மட்டுமே, ஆனால் நீங்களோ தமிழக அரசியலில் நேர்மை மிக்க ஓர் தலைவர். நீதிக்காகப் போரிடும் ஓர் மன்னன் தான் தோற்றுவிட்டால் களத்திலிருந்து தப்பி ஓடி ஒளிவதற்கு எண்ணுவதில்லை.மாறாக, மீண்டும் படை திரட்டிப் போரிடவே துணிவான்.

ஆனால், நீங்களோ, உங்களைப் பிறர் புரிந்து கொள்ளவில்லை என்னும் ஆதங்கத்தில், உங்கள் ‘கடமை’யைத் துறக்க முயல்வது ஏற்புடையதாகப் படவில்லை.

உங்கள் கட்சிக்கு எனக் கொள்கை அதனை அடைவதற்கு உரிய செயல் திட்டம், அவற்றைச் செயல்படுத்தும் அடுத்த கட்டத் தலைவர்கள், தொண்டர்கள் என ஓர் அமைப்பே இருக்கும் போது, வருடம் முழுவதும் கண் துஞ்சாது படித்த மாணவன் ஒருவன் ஆசிரியர் கோபித்துக் கொண்டதற்காகப் பரீட்சை எழுத மறுப்பது போன்று, தேர்தலைப் புறக்கணித்துவிட்டு அஞ்ஞாதவாசம் செய்யப் போகிறேன் என்றால் எப்படி ?

போர்க்களத்துக்கு அஞ்சும் கோழையல்ல நீங்கள் என்பது உண்மையானால், இந்தத் தேர்தலின் போது; அ.தி.மு.க விடம் கேட்டிருந்த 35 தொகுதிகளிலும் உங்கள் கட்சி தனித்துப் போட்டியிட ஆவன செய்யுங்கள். முடிந்தால் அத்தனையும் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளாக இருப்பின் சிறப்பானது. இறுதி நேர சலசலப்பின் பின்னர் தங்களுக்கு, வேண்டாவிருப்பாக அளிக்கப்பட்ட சில தொகுதிகளை ஏற்றுக்கொண்டு, இப்போது உங்களை மீள் பரிசீலனை செய்யுமாறு கோரும் இந்திய கம்யூனிஸ்ட்டுகளும், மார்க்ஸிஸ்ட்டுகளும் உங்களுடன் இணைந்து காங்கிரஸ் கட்சி போட்டியிடும் 63 தொகுதிகளிலும் போட்டியிடலாமே? இதன் மூலம் நீங்களும் அவர்களும் தங்கள் சுயமரியாதையைக் காப்பாற்றிக் கொள்வதோடு, தமிழகத்தின் முதல் எதிரியான காங்கிரஸை அத்தனை தொகுதிகளிலும் தோல்வியுறச் செய்ய இயலாவிடினும், அதன் பலத்தைப் பெருமளவு குறைப்பதில் வெற்றி காணாமுடியும் அல்லவா?

ஏற்கனவே, காங்கிரஸின் செயல்களால் மனம் புண்பட்டிருக்கும் தி.மு.க வின் தன்மானம் மிக்க சில தலைவர்களும் தொண்டர்களும் நிச்சயம் உங்களுக்கு மறை முகமாகவேனும் ஆதரவு அளிக்கவே செய்வார்கள். கலைஞரோடு, தங்கள் அரசியல் லாபங்களுக்காக ஒட்டிக் கொண்டிருக்கும் இவர்கள்;சந்தர்ப்பம் கிட்டிய போது தங்கள் கண்களில் விரலை விட்டாட்டும்

காங்கிரஸுக்குப் பாடம் புகட்டவாவது உங்களை ஆதரிக்கவே செய்வார்கள்! இவை அனைத்துக்கும் மேலாக உங்களை மதிக்கும் பலர் இன்றும் தி.மு.கவிலும்… ஏன்…அ.தி.மு.கவிலும் இருக்கவே செய்கிறார்கள்.

தி.மு.க; அ.தி.மு.க இவ்விரண்டு கட்சிகளிலும் நம்பிக்கை இழந்த பலர் விஜயகாந்தின் கட்சியை நாடியது போல், இப்போது உங்களை நாடும் வாய்ப்பும் உள்ளது.

எனவே, தன்னம்பிக்கையுடன் உங்கள் தொண்டர்களோடு களமிறங்குங்கள்.

நெடுமாறன் ஐயா, சீமான் போன்றவர்களையும் அரவணைத்துக் கொண்டு செயலாற்றுங்கள்.

பூனை இல்லா வீட்டில் எலிகளுக்குக் கொண்டாட்டம் என்பது போன்று, நேர்மையான அரசியல் வாதிகள் போட்டியில் இருந்து விலகி விட்டால், ’ஊழல் பெருச்சாளி’களுக்கே கொண்டாட்டமாகிப் போகும். இது வீட்டிற்கோ, நாட்டிற்கோ நன்மை தராது.

புதியதோர் விடியலுக்கு உங்கள் முயற்சிகள் ஆரம்பமாக அமையட்டும்.

முறைகேடுகள், குடும்ப அரசியல், மக்களின் தன் மானத்தை விலை பேசுதல்,கபடத்தனம் இவை அனைத்தும் ஓர் நாளில் மறைந்துவிடாது. தொடர்ச்சியான போராடங்களின் மூலமே இது சாத்தியமாகும்.

அரசியல் நேர்மையின் முதற் ’பொறி’யினை மூட்டும் கைகள் உங்களதாக இருக்கட்டுமே. காலப் போக்கில் பல கைகள் இதில் ஈடுபடும் என்பது திண்ணம்.

சர்வசித்தன்
ஈழநேசன்

[2011-03-21 ஆ.விகடன் ‘கருத்துக்களம்’ பகுதியில் வெளியானது]
Thanks : http://tamilthesiyam.blogspot.com

படமாகும் ரஞ்சிதா- நித்தியானந்தா கதை!

சாமியார் நித்யானந்தா, நடிகை ரஞ்சிதா படுக்கையறை காட்சிகள் டெலிவிஷனில் ஒளிபரப்பாகி பரபரப்பு ஏற்படுத்தின. இதில் நித்யானந்தா கைதானார். ரஞ்சிதா தலைமறைவானார் தற்போது இருவரும் அது உண்மையான படமல்ல, கிராபிக்ஸ் என்று மறுத்து வருகின்றனர். இந்த நிலையில் நித்யானந்தா ரஞ்சிதா சர்ச்சையை மையமாக வைத்து கன்னடத்தில் சத்யானந்தா என்ற பெயரிலும், தெலுங்கில் ஐ.ஆர்.ஏ. என்ற பெயரிலும் படம் தயாராகி வருகிறது.
 
கன்னடத்தில் நித்யானந்தா வேடத்தில் ரவிசேத்தனும், தெலுங்கில் ராஜேந்திரபிர சாத்தும் நடிக்கின்றனர். இப்படத்துக்கு நித்யானந்தா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். என் வாழ்க்கையை படமாக்க கூடாது என்று வலியுறுத்தி கன்னடத்தில் படத்தை தயாரிக்கும் மதன் பட்டேலுக்கும், ரவிசேத் தனுக்கும் வக்கீல் கிருஷ்ண குமார் பகவதி மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இதுபோல் தெலுங்கில் தயாராகும் படத்தை தடை செய்ய கோரி ஐதராபாத் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
 
இது குறித்து தயாரிப்பாளர் மதன் பட்டேல் கூறும்போது, சத்தியானந்தா படத்தின் படப்பிடிப்பை எக்காரணம் கொண்டும் நிறுத்த மாட்டோம். படம் முடிந்து ரிலீசாகும்போது பார்த்து அதில் ஆட்சேபனையான காட்சிகள் இருந்தால் நித்யானந்தா எதிர்க்கட்டும். படம் வருவதற்கு முன்பே இது போன்று வக்கீல் நோட்டீஸ் அனுப்பி தடுக்க முயல்வதை ஏற்க முடியாது என்றார். நித்யானந்தாவாக நடிக்கும் ரவிசேத்தன் கூறும் போது, இந்த படத்தில் நடித்ததில் இருந்து எனக்கு மிரட்டல்கள் வருகின்றன.
 
நித்யானந்தா வேடத்தில் நடிக்க கூடாது என்று எச்சரிக்கை விடுக்கிறார்கள். நான் பயப்பட மாட்டேன் என்றார். இந்த படத்துக்கு ஆந்திரா, கர்நாடகாவில் பலத்த எதிர்பார்ப்பு உள்ளது. நித்யானந்தா ஆசிரம நடவடிக்கைகள் அனைத்தும் இப்படம் மூலம் அம்பலமாகும் என்று பேசுகின்றனர். படத்தை தமிழில் டப்பிங் செய்து வெளியிடவும் ஏற்பாடுகள் நடக்கிறது
 
Thanks : kingtamil.com

Tuesday, March 22, 2011

NEW FOLDER VIRUS ய் அழிக்க வேண்டுமா?



 வளர்ந்து வரும் கணினி உலகில் வைரஸ் என்பது தடுக்க முடியாத ஒன்று.
PEN DRIVE, MEMORY CARD பயன் படுத்தும் அனைவரும் சந்திக்கும் ஒரு VIRUS தான்  NEWFOLDER VIRUS. உங்கள் கணினில் உள்ள அனைத்து FOLDER களிலும் அதே FOLDER பெயரில் ஒரு FOLDER ய் உருவாககிவிடும். இந்த FOLDER ய் DELETE செய்ய முடியாது. அப்படி அழிந்தாலும் மீண்டும் உருவாகிவிடும்.

இது போல உள்ள சில VIRUS களை முழுவதும் அழிக்க உதவும் SOFTWARE தான் COMBO FIX. இதை உங்கள் கணினில் INSTALL செய்துவிட்டு , கணினியை RESTART செய்யவும். கணினி BOOT ஆகும் போது F8 ய் அழுதவும். வரும் மெனுவில் SAFE MODE ய் தேர்வு செய்யவும்.

இப்போழுது COMBO FIX ய் RUN செய்யவும். இது உங்கள் கணினியை முழுவதுமாக SCAN செய்து அனைத்து VIRUS யும் அழித்துவிடும். அது தானாகவே RESTART ஆகும்.( நீங்கள் RESTAR செய்ய கூடாது)

Download COMBO FIX

Sunday, March 20, 2011

இசைஞானி இளையராஜா .



இசை உலகில் முடிசூடா மன்னன் . ஒரு கிராமத்தில் பிறந்து உலகத்தை தன் இசையால் வசியம் செய்த மந்திரவாதி . மெல்லிசை , துள்ளிசை என எல்லா ஏரியாவிலும் இவர்  All rounder. இவரின் வாழ்கை வரலாறு நான் கண்டிப்பாக அறிய வேண்டிய ஒன்று . இவரை பற்றி பல புத்தகங்கள் வந்து உள்ளது அதில் ஒன்று  இசைஞானி இளையராஜா .

இதை  Download  செய்ய இங்கே  Click செய்யவும்

ஜாவா கற்கலாம் வாங்க ..

இன்றைய கணிபொறி உலகில் ஜாவா இல்லாமல் எதுவும் இல்லை . ஜாவா தெரிந்தால் பல நிறுவனங்களில் வேலை மிக எளிதாக கிடக்கும் . அதை நான் எளிதாக கற்றுக்கொள்ள ஒரு புத்தகம் உள்ளது அது தான் ஜாவா (தமிழில் ).

அதை தரவிறக்கம் செய்ய இங்கே CLICK  செய்யவும்
இதனுடன் இணைத்த மற்றொன்று  java script.  அதை கற்றுக்கொள்ள இங்கே  CLICK  செய்யவும்

Saturday, March 19, 2011

துப்பறியலாம் வாங்க . . .!



உங்கள் புத்திசாலிதனதை கண்டுபிடிக்க ஒரு வாய்ப்பு. கதையின் முடிவில் யார் குற்றவாளி என கண்டுபிடியுங்கள்.

கதை 1 :

அந்த வீட்டின் படுக்கை அறையில் ரவியின் உடல் மின்விசிறியில் தொங்கியது. இன்ஸ்பெக்டர் ராஜா வீட்டில் உள்ளவர்களிடம் விசாரனை செய்கின்றார். அனைவரும் இது தற்கொலை என்றும் , அவர் சாகும் முன் ஒரு கடிதம் எழுதி வைதுள்ளார் எனவும் கூறினர்.

ரவிக்கு 3 மகன்கள் . மூத்தவன் சுப்பு “ நான் செய்தி கேள்விபட்டுதான் இந்த வீட்டுகு வந்தேன்”

இரண்டாம் மகன் விஜய் “ நான் பக்கத்து ரூம் ல துங்கிடேன்”

மூன்றாம் மகன் சக்தி “நான் காப்பி குடுக்க வந்தேன், அப்பதான் பாத்தேன்.”

ராஜா “ இந்த கடிதம் எங்கே இருந்தது?”

சக்தி “ அவர் படுக்கையில் இருந்த ராமாயணம் புத்தகதில் 49 , 50 ம் பக்கதுக்கு நடுவுல இருந்தது “

இப்படி ராஜா பலரிடம் விசாரனையை நடத்தி முடித்தார். முடிவில் இது தற்கொலை இல்ல கொலை தான் , இந்த கொலைய செய்தது சக்திதான் என்றும் முடிவு செய்தான்.

எப்படி ?????


















கதை 2 :

20 மார்ச் 2011., அந்த வீட்டின் படுக்கை அறையில் ரவியின் உடல் கட்டிலில் கிடந்தது. கத்தி அவர் நெஞ்சில் ஆழமாக சொருகி இருந்தது. இன்ஸ்பெக்டர் ராஜா வீட்டில் உள்ளவர்களிடம் விசாரனை செய்கின்றார்.

ரவிக்கு 3 மகன்கள் . மூத்தவன் சுப்பு “ நான் குளித்து கொண்டு இருந்தேன்“

2 வது மகன் ராமு “ நான் தோட்டதில் செடிக்கு தண்ணி ஊத்தி கொண்டு இருந்தேன் “

3 வது மகன் சோமு “நான் POST OFFICE போய்யிருந்தேன், அங்க ஸ்டாம்ப்(STAMP) வாங்க்கிட்டு இப்பதான் வாறேன்”


இப்படி ராஜா பலரிடம் விசாரனையை நடத்தி முடித்தார். முடிவில் இது இந்த கொலைய செய்தது சோமுதான் என்றும் முடிவு செய்தான்.

எப்படி ?????






கொஞ்சம் சிரிக்கலாம் வாங்க..!



Very Long and More Powerful Line :
-
-
-
-
-
-
-
-
-
-
-
EB Line.


மந்திரி : மன்னா ஏன் போருக்கு போகும் போது “ கவசம்
            போடுகின்றிர்கள்?

மன்னன் : இல்லனா எனக்கு “ திவசம்” செய்து விடுவார்கள்.


ராஜா : ஜப்பான் ல சுனாமி வந்த்ததும் நம்ம நடிகர் தனுஷ் அ உதவிக்கு
 கூப்பிட்டாங்க்கலாம்..

விஜய் :  ஏன்?

ராஜா  : அவர்தான் சுனாமியிலயே swimming போடுபவராசே…!


குட்டி குரங்கு : அம்மா நாம ஏன் இப்படி அசிங்கமா இருகோம் ?

தாய் குரங்கு : கவலை படாதே ! இப்ப இந்த BLOG ய் படிக்கிரவரை விட நீ
                   அழகுதான்.


மனைவி : வேலைக்காரனுக்கு உங்க சட்டைய குடுகாதிகனு சொன்னென்ல கேட்டிங்கலா?

கனவன் : ஏன்?

மனைவி : நீங்கதான்னு நினைந்து…?

கனவன் : அய்யயோ ! ! என்ன ஆச்சு ?

மனைவி : அவனை பூரிகட்டையலா அடிச்சிடேன்.


தத்துவம் 1 :

         பெண்ங்க்களை எந்த அளவு நாம லவ் பண்னனும் என்றால் நாம லவ் பண்னும் அழகை பாத்து நாம்ம காதலின் தோழி நம்மகூட ஒடி வரனும்.
( காவலன் ரசிகன்)

ததுவம் 2 :

         ஓவரா பேசுர வாயும் ,
         இரவில் கத்தும் நாயும்
         அடி வாங்க்காம போனதா சரித்திராமே இல்லை.





உலக அணுவாயுதக் கையிருப்பை விட 1000 மடங்கு சக்தி வாய்ந்த ஜப்பான் பூமியதிர்ச்சி

ஜப்பானில் அண்மையில் ஏற்பட்ட பூமி அதிர்ச்சியானது உலக நாடுகள் அனைத்தினதும் அணு ஆயுதங்களை விட 1000 மடங்கு சக்தியினை வெளியிட்டதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். மேலும் அவ்வதிர்ச்சியானது 6.7 டிரில்லியன் தொன்கள் டி.என்.டி வெடிபொருட்களின் சக்திக்கு சமனானதெனவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
டி.என்.டி எனப்படுவது Trinitrotoluene என்பதன் சுருக்கமாகும். இது ஒருவகை வெடிக்கக்கூடிய இரசாயன பொருளாகும். பொதுவாக கடல் அடியில் ஏற்படும் புவி அதிர்வானது சாதாரண நில அதிர்வினை விட பல மடங்கு சக்தி வாய்ந்ததாகும். உலகில் ஏற்படும் நில நடுக்கங்களில் 20 வீதமானவை ஜப்பானிலேயே இடம்பெறுகின்றன.
இவற்றில் அதிகமானவை 6 ரிச்டர்களுக்கும் அதிகமாகும். புவியியலாளர்களின் கருத்தின்படி பூமியின் பல கண்டங்களினதும் மற்றும் சமுத்திரங்களினதும் தட்டுக்கள் உதாரணமாக பசுபிக் தட்டு, பிலிப்பைன் தட்டு, யூரோ ஏசிய தட்டு, வட அமெரிக்க தட்டு ஆகியன ஜப்பானிய பகுதியிலேயே சந்திக்கின்றன.
இதன் காரணமாகவே அங்கு பல எரிமலைகள் மற்றும் வெந்நீர் ஊற்றுக்கள் எனபன அமைந்துள்ளன. மேலும் ஜப்பான் பசிபிக் எரிமலை வலையம் எனப்படும் உலகின் அதிகமான நிலநடுக்கங்கள் எரிமலை கொந்தளிப்புக்கள் இடம்பெறும் பகுதியிலேயே அமையப்பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கதொரு காரணியாகும்.
நன்றி : kingtamil.com

சுஜாதாவின் நூல்களில் இன்று - Part 6




நாவல் , சிறுகதைகள் இவற்றில் மட்டுமல்ல கட்டுரை எழுதுவதிலும் தான் ஒரு மன்னன் என நிருபித்தவர் சுஜாதா. அறிவியலை மிக எளிதாக பாமரரும் புரிந்துகொள்ளும் வண்ணம் எழுதுவதில் அவர்க்கு நிகர் அவர்தான். அறிவியலை பக்தியுடன் இணைத்து எழுதுவதிலும் அவர் நிபுணர். கட்டுரையில் கூட நகைச்சுவை உணர்வுடன் எழுதுவது அவர் சிறப்பு. அப்படி எழுதிய ஒரு கட்டுரை தான் ஒரு விஞ்ஞான  பர்வையிலேருந்து .

ஒரு விஞ்ஞான  பர்வையிலேருந்து .

நாடகங்கள் எழுதுவதிலும் அவர் வல்லவர் என நிறுபித்தது இந்த நாடகம் தான் . 

கடவுள் வந்திருந்தார்

Friday, March 18, 2011

எனக்கு பிடித்த புத்தகங்கள் - Part 5



S. ராமகிருஷ்ணன்  அவர்கள் தற்கால எழுத்துலகில் முன்னனில் உள்ள எழுத்தாளர். அழகான நடையில் , வசிகர தமிழில் அவரது எழுத்துகளை படித்தவர்கள் அவரின் எழுத்துக்கு அடிமையகிவிடுவர்கள். பல இதழ்களில் பல தொடர்கள் எழுதி உள்ளார் . அதில் ஒன்று தான் அயல் சினிமா . படித்து பாருங்கள் .

அயல் சினிமா





மதன் - கார்டூனிஸ்ட் , எழுத்தாளர் , விமர்சகர் , வசனகர்த்தா என பலமுகம் ( பல திறமை ) படைத்தவர். இவரின் கார்டூன்கு சிரிக்காதவர்கள் கூட சிரிப்பார்கள். ஜூனியர் விகடன் இதழில் அவர் எழுதிய தொடர் தான் மனிதனுள் ஒரு
மிருகம் .

மனிதனுள் ஒரு மிருகம் .

சுஜாதாவின் நூல்களின் வரிசையில் இன்று - Part 4



அமரர் சுஜாதாவின் நூல்கள் வரிசையில் இன்று நாம் பார்க்கபோவது
இவை மூன்றும் அவரின் சிறுகதைகள் . இவை அவரின் எழுது கலைக்கு சான்று.

1 . அரிசி

2 . கர்ணம்

3 .எல்டோரடா


Thursday, March 17, 2011

ஜப்பான் சுனாமி பேரழிவிற்கு ஆன்லைனில் நம்மால் முடிந்த சிறு உதவி

 நன்றி : இந்த பதிவு வந்தே மாதரம்  Blog இல் இருந்து அவரின் அனுமதியுடன் பிரசுரிகபடுகிறது

இன்றைய உலகின் கவனம் ஜப்பானின் பேரழிவின் மீது தான் உள்ளது. இந்த பேரழிவில் ஏராளமான உயிர்ச்சேதமும், பொருட்சேதமும் ஏற்ப்பட்டுள்ளது. இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் ஜப்பானில் ஏற்ப்பட்ட மிகப்பெரிய இழப்பாக இது கருதப்படுகிறது. இது போதாது என்று அவர்கள் நிறுவி இருந்த அணு உலைகள் அவர்களுக்கே இப்போது தீங்காக முடிகிறது. ஜப்பான் எப்படி இந்த நிலைமைகளை சமாளிக்க போகிறது என்பது தான் உலகத்தில் உள்ள அனைத்து நாடுகளும் எதிர்பார்க்கிறது. எவ்வளவு பெரிய நாடாக இருந்தாலும் இந்த பேரழிவிலிருந்து திரும்பவும் பழைய நிலைமைக்கு வருவது மிகக்கடினமான ஒன்று தான்.

ஆனால் ஜப்பானுக்கு இது புதிதல்ல சுறு சுறுப்பானவர்கள் என்று பெயர் எடுத்த ஜப்பானியர்கள் அமெரிக்காவால் தங்களின் இரு நகரங்கள் தாக்க பட்ட போதும் துவண்டு விடாமல் எழுந்து மீண்டும் உலக பொருளாதரத்தில் முதலிடம் பிடித்த ஜப்பானியர்கள் இந்த பேரழிவில் இருந்தும் மீண்டு வருவார்கள். ஆனால் இந்த பேரழிவில் தற்போது அடிப்படை வசதிகள் கூட கிடைக்காமல் எவ்வளவோ மக்கள் துன்பப்பட்டு கொண்டு உள்ள நிலையில் இந்த மக்களுக்கு நம்மால் ஆன சிறு உதவி செய்ய விரும்புவர்கள் கீழே உள்ள வழிமுறையை பின்பற்றவும்.

(இந்த பேரழிவிலும் சில ஈனப்பிறவிகள் போலியாக ஒரு இணையதளத்தை உருவாக்கி அதன் மூலம் ஏமாற்றி இப்படி நன்கொடையை வாங்கி ஏமாற்று கிறார்கள் ஆகவே கவனமாக இருக்கவும்.)
  • இந்த பேரழிவிற்கு உதவ நினைப்பவர்கள் இந்த லிங்கில் க்ளிக் http://www.google.com-japan quake2011- Donations செய்யவும்.
  • இந்த தளம் கூகுள் நிறுவனத்தினால் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த தளத்தில் மூன்று நிறுவங்களின் மூலம் நம் உதவியை கொடுக்கலாம். 
  • JAPANESE RED CROSS SOCIETY
  • UNICEF- United Nations Children's Fund
  • SAVE THE CHILDREN
  • இதில் நீங்கள் எந்த நிறுவனம் மூலம் உதவி செய்ய விரும்புகிறீர்களோ அந்த நிறுவனத்திற்கு அருகில் உள்ள சிறிய கட்டத்தில் உங்களின் உதவி தொகையை கொடுத்து DONATE பட்டனை அழுத்தவும்.
  • குறைந்தது 5$ (250 ரூபாய்) முதல் உதவித்தொகை வழங்கலாம். அடுத்து வரும் விண்டோவில் உங்கள் விவரங்களை கொடுத்து நீங்கள் உங்கள் தொகையை அனுப்பலாம். 
நாம் செய்யும் சிறு சிறு உதவிகள் உணவு குடிநீர் இல்லாமல் இருக்கும் அந்த மக்களுக்கு பயன்படும்.

சுஜாதாவின் நூல்களின் வரிசையில் இன்று - Part 3


முந்தய பதிவில் இரு நாவல்களும் , மற்றொரு பதிவில் இரு புத்தகங்களும் அளித்தேன் .
அந்த வரிசையில் இன்று சுஜாதாவின் வேறு இரு புத்தகங்கள்.

1 .  எங்கே என் விஜய் ( சிறுகதை)


2 .  அம்மாமண்டபம்  ( சிறுகதை)

விரைவில் பல புத்தகங்களை எதிர்பாருங்கள்

நோக்கியா பயன்படுத்துபவரா ?

 
இன்று உலகம் முழுவதும் அதிகம் விற்பனை ஆவது நோக்கியா(Nokia) மொபைல் போன் தான். பயன் படுத்த எளிதான மெனு , நல்ல தரம் என பல விழயத்தில் இது முன்னிலை வகிக்கின்றது . இதில் பல சமயம் Error  வரலாம் . காரணம்  Software Problem.  உங்கள் மொபைல் இன்   Software ய் மாற்ற அல்லது மேம்படுத்த (Update)  செய்ய ஒரு Software  உள்ளது . அதுதான்  Nokia Software updater .  இதன் மூலம் உங்கள் மொபைல் ய்  update  செய்யலாம் .

Software  கு  Click Here

Wednesday, March 16, 2011

சும்மா ஜாலி யா


சுஜாதாவின் நூல்கள் வரிசையில் இன்று

சுஜாதாவின் நூல்கள் வரிசையில் இன்று

1 . சுஜாதாவின் சிறுகதை தொகுப்புகள்
                நாவல் உலகில் மட்டும்மல்ல சிறுகதை உலகிலும் தான் ஒரு அரசன் என நிருபித்தவர் சுஜாதா.
                அவர் எழுதிய 28  சிறுகதைகளின் தொகுப்பு இங்கே . Click here

௨. கற்றதும் பெற்றதும்

            ஆனந்த விகடனில் தொடராக வந்த கட்டுரைகளின் தொகுப்பு இது. அருமையான நடையில் அனைத்தையும் பற்றி விளக்கமாக எழுதி இருபார்.
            இதை  Download செய்ய  Click Here

Tuesday, March 15, 2011

எனக்கு பிடித்த புத்தகங்கள்


பள்ளியில் படிக்கும் போதே பாட புத்தகத்தைவிட நாவல் , கதை என பல வகை புத்தகங்கள் படிப்பது உண்டு . ராஜேஷ்குமார்  , பட்டுகோட்டை பிரபாகர் , சுபா ,
ஆர்னிக நாசர் கிரைம் கதைகள், பாலகுமாரன் கதைகள் இவளவு ஏன் சிறுவர்மலரை கூட விடாமல் படிப்பேன். அப்பொழுது என் நண்பன் VIJAY முலம் அறிமுகமானது சுஜாதா வின் நாவல்கள்.

அழகான தமிழில் , எளிய நடையில் நகைசுவை ததும்ப அவரின் நாவல்கள் படிக்க படிக்க நேரம் போவதே தெரியாது .
அப்படிபட்ட நாவல்களில் ஒன்று தான் என் இனிய இயந்திரா (பாகம் 1)  மீண்டும் ஜீனோ (பாகம் 2)

2021 இல் கதை ஆரம்பிக்கும் , ஒரு ரோபோ நாய் தனது அறிவு திறமையால் எப்படி ஒரு நாட்டை காப்பாத்துகிறது என்பது தான் கதை .

படித்து பாருங்கள் புரியும் ..

புத்தகத்தை Download  செய்ய  Click செய்யவும் :

என் இனிய இயந்திரா (பாகம் 1)

மீண்டும் ஜீனோ (பாகம் 2)

விருது


இலங்கை கொண்டான்  - கருணாநிதி

இலங்கைல அப்பாவி தமிழர்கள் சாகும் போது கூட  கடிதமும் , அரை மணி நேரம் உண்ணாவிருதமும் இருந்த சாதனைக்காக.

பல்டி மன்னன்  - ராமதாஸ்

கடந்த மாதம் வரை கருணாநிதியை திட்டிவிட்டு அன்பு மணிக்கு ராஜ்யசபா பதவி உண்டு என்றதும் கருணாநிதிதான் உலகமகா உத்தமர் என பல்டி அடித்த காரணத்துக்காக .

ஆடுடா ராமா ஆடுடா - கி - வீரமணி

கருணாநிதி எது சொன்னாலும் அப்படியே அறிக்கைவிட்டு சூடு படும் காரணத்திற்காக ..


நான்தான் First  - மன்சூர் அலிகான்
 
பெரிய கட்சிகளே தேர்தல் அறிக்கை விடாத நிலையில் நான் ஜெயித்தால் அனைவருக்கும் வாஷிங் மெசின் இலவசம் என அறிவித்த மன்சூர் அலிகான்


அப்பாவி அப்ருவர் - மன்மோகன் சிங்
எல்லா தப்பையும் தன் மேல போட்டு கொண்டு மன்னிப்பு கேட்பதால்




இன்னும் பல விருதுகள் இருக்கு .. உங்களுக்கு எதாவது விருது தோன்றினால் பின்னுடம் இடுங்கள் .

How to hide Recycle bin ?

How to hide Recycle bin ?

Open Regedit by going to START - RUN and type Regedit and hit enter. Then you should navigate to following entry in registry HKEY_LOCAL_MACHINE\SOFTWARE\Microsoft\Windows\CurrentVersion\Explorer\
Desktop\NameSpace\{645FF040-5081-101B-9F08-00AA002F954E} and delete it. This action should remove recycle bin from your desktop.

Mozilla Firefox Shortcuts

Mozilla Firefox Shortcuts


• Ctrl + Tab or Ctrl + PageDown: Cycle through tabs.
• Ctrl + Shift + Tab or Ctrl + PageUp: Cycle through tabs in reverse.
• Ctrl + (1-9): Switch to tab corresponding to number.
• Ctrl + N: New window.
• Ctrl + T: New tab.
• Ctrl + L or Alt + D or F6: Switch focus to location bar.
• Ctrl + Enter: Open location in new tab.
• Shift + Enter: Open location in new window.
• Ctrl + K or Ctrl + E: Switch focus to search bar.
• Ctrl + O: Open a local file.
• Ctrl + W: Close tab, or window if there's only one tab open.
• Ctrl + Shift + W: Close window.
• Ctrl + S: Save page as a local file.
• Ctrl + P: Print page.
• Ctrl + F or F3: Open find toolbar.
• Ctrl + G or F3: Find next...
• Ctrl + Shift + G or Shift + F3: Find previous...
• Ctrl + B or Ctrl + I: Open Bookmarks sidebar.
• Ctrl + H: Open History sidebar.
• Escape: Stop loading page.
• Ctrl + R or F5: Reload current page.
• Ctrl + Shift + R or Ctrl + F5: Reload current page; bypass cache.
• Ctrl + U: View page source.
• Ctrl + D: Bookmark current page.
• Ctrl + NumpadPlus or Ctrl + Equals (+/=): Increase text size.
• Ctrl + NumpadMinus or Ctrl + Minus: Decrease text size.
• Ctrl + Numpad0 or Ctrl + 0: Set text size to default.
• Alt + Left or Backspace: Back.
• Alt + Right or Shift + Backspace: Forward.
• Alt + Home: Open home page.
• Ctrl + M: Open new message in integrated mail client.
• Ctrl + J: Open Downloads dialog.
• F6: Switch to next frame. You must have selected something on the page already, e.g. by use of Tab.
• Shift + F6: Switch to previous frame.
• Apostrophe ('): Find link as you type.
• Slash (/): Find text as you type.

Sunday, March 13, 2011

மங்காத்தாவைப் பார்த்து பிரம்மித்த தயாநிதி.....!!

அஜீத் நடித்து வெங்கட் பிரபு இயக்கும் படம் மங்காத்தா. படத்தின் ஷூட்டிங் முடிந்துள்ள நிலையில், படத்தின் எடிட்டிங்கையும் முடித்துள்ளார் இயக்குனர் வெங்கட் பிரபு. 
பில்லா வெற்றிக்குப் பிறகு அஜீத் நடித்த ஏகன், அசல் என இரண்டு படங்களுமே அவருக்கு படு தோல்வியை கொடுத்ததோடு அவர் ரசிகர்களையும் ஏமாற்றத்தில் ஆழ்த்தியது. அவர் ரசிகர்களை திருப்த்திப்படுத்தும் வகையில் மங்காத்தா இருக்கும் என வெங்கட் பிரபு சொல்லிவருகிறார்.
அதனால் ரசிகர்கள் மத்தியிலும் அதிக எதிர்ப்பார்ப்பு இருக்கிறது. அதுவும் அஜீத் பிறந்தநாளன்று படம் வெளிவர இருப்பதால் அஜீத் ரசிகர்கள் இந்த வருட தீபாவளியை மங்காத்தா ரிலீஸில் இருக்கும் என்றே சொல்லாலாம்.
படத்தில் இன்னொரு முக்கிய நட்சத்திரமும் இருக்கிறார், அவர் ஆக்‌ஷன் கிங் அர்ஜுன். திரிஷா ஹீரோயினாக நடிக்கும் இந்தப் படத்தில் லக்‌ஷ்மி ராய், அஞ்சலி, வைபவ் என பல முன்னனி நட்சத்திரங்களும் இருக்கிறார்கள்.
படத்தின் எடிட்டிங் முடித்திருப்பதால் படத்தின் தயாரிப்பாளர் தயாநிதி அழகிரிக்கு படத்தை போட்டுக் காண்பித்திருக்கிறார் இயக்குனர் வெங்கட் பிரபு. எடிட்டிங் மட்டுமே முடிந்துள்ள நிலையிலும் படத்தைப் பார்த்த தயாநிதி அழகிரி பிரம்மித்துப் போனாராம்.
படம் பிராமாதமாக இருப்பதைப் பார்த்து உற்சாகத்தில் `தல தல தான்` என்றும் சொல்லி இருக்கிறார். படத்தைப் பார்த்த எல்லோருமே பாராட்டுகிறார்கள் என்று சொல்கிறது மங்காத்தா டீம். யுவன் ஷங்கர் ராஜா படத்தின் பின்னணி இசை வேளைகளை படு வேகமாக செய்துவருகிறார்.
 
Thanks : tamilcnn.com

மார்ச் 19 பூமிக்கு மிக அருகில் வருகிறது நிலவு!



பூமியை ஒரு நீள் வட்டப் பாதையில் சுற்றிவரும் நிலவு, வரும் 19ஆம் தேதி பூமிக்கு மிக அருகில் வருகிறது. பூமியில் இருந்து நிலவு சுற்றிவரும் சுழற்சிப் பாதையில் அதன் சராசரி தூரம் 2,38,857 மைல்களாகும், அதாவது 3,84,403 கி.மீ. அது ஒரு நீள் வட்டப் பாதையில் பூமியை சுற்றி வருவதால் பூமிக்கு குறைந்த தூரத்திலும், பூமியில் இருந்து மிக அதிக தூரத்திற்கும் சென்று சுற்றி வருகிறது. அதன் சுழற்சிப் பாதையில் பூமியில் இருந்து வெகு தூரத்திற்கும் செல்லும்போது (அபோஜி) பூமியில் இருந்து 4,06,395 கி.மீ. தூரம் வரை செல்கிறது.
 
அது தனது சுழற்சிப் பாதையில் பூமிக்கு மிக அருகில் வரும்போது (பெரிஜி) அதன் தூரம் 3,57,643 கி.மீ. ஆக சுருங்குகிறது. இப்படிப்பட்ட நிலைதான் வரும் 19ஆம் தேதி, சனிக்கிழமை ஏற்படுகிறது. அன்றைக்கு நிலவு பூமிக்கு மிக அருகில் வருகிறது. அன்று பூமியில் இருந்த அதனை நாம் காணும் தூரம் 2,21,567 மைல்களாக, அதாவது 3,54,507.2 கி.மீ. தூரத்திற்கு வருகிறது. இதனால் நிலவு மிகப் பெரியதாக தெரியும். இப்படிப்பட்ட குறைந்த தூரத்திற்கு நிலவு வருவது ஒவ்வொரு ஆண்டும் நிகழவில்லை என்று அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.
 
இதற்கு முன்பு 1955, 1974, 1992, 2005 ஆகிய ஆண்டுகளில் நெருக்கமாக நிலவு வந்தது. அதன் பிறகு ஆறே ஆண்டுகளில் பூமிக்கு நெருக்கமாக வருகிறது. அன்று வானத்தில் மேக மூட்டம் ஏதுமில்லாமல் இருந்தால் நீங்கள் அழகிய நிலவை மிக அருகில் நின்று பார்ப்பது போன்ற உணர்வுடன் பார்க்கலாம். மேட்டர் இத்துடன் முடிந்துவிடவில்லை! நிலவு இப்படி பூமியை நெருங்கி வருவதால் கடல் பொங்கும் (எல்லா பெளர்ணமி, அமாவாசை தினங்களிலும்தான் பொங்குகிறது), நில நடுக்கம் ஏற்படும், எரிமலைகள் வெடித்துச் சீரும் என்றெல்லாம் எக்கச்சக்க புரளிகளும் பரவி வருகின்றன.
 
ஆனால் இதையெல்லாம் அறிவியலாளர்கள் மறுத்துள்ளனர். அன்றைக்கு கடலில் எழும் அலைகள் அதிகமாக இருக்கும் என்று மட்டும் கூறியுள்ளனர்.
thanks: kingtamil

மாவீரர் துயிலும் இல்லத்தில் இராணுவ அலுவலகம்

யாழ் கோப்பாயில் அமைந்திருந்த விடுதலைப்புலிகள் அமைப்பினரின் உயிரிழந்த போராளிகளை அடக்கம் செய்திருந்த அவர்களது மாவீரர் துயிலும் இல்லம் ஒன்றை முன்னதாக தரைமட்டமாக்கிய இராணுவத்தினர், அதில் புதிய பிராந்திய இராணுவ தலைமையகம் ஒன்றை அமைத்துள்ளது தெரியவந்துள்ளது.
தனியாரின் காணியில் தற்காலிகமாக இருந்த தமது அலுவலகத்தை அங்கிருந்து அகற்ற வேண்டும் என்று அரசாங்கம் உத்தரவிட்டதால், தாம் அரசாங்க காணியிலேயே தமது புதிய அலுவலகத்தை நிர்மாணித்துள்ளதாக இராணுவம் கூறுகிறது.
யாழ்ப்பாணத்தில் கோப்பாயில் வெள்ளியன்று நடந்த இந்த இராணுவத்தின் 51 வது படையணியின் புதிய தலைமையகத்தின் திறப்பு விழா குறித்து இராணுவ இணையத்தளத்தில் படங்களுடன் விபரமான தகவல்களை வழங்கியிருந்தார்கள்.
அணிவகுத்து நிற்கும் இராணுவத்தினர், சிரித்த முகத்துடன் இராணுவ தளபதி ஜெனரல் ஜகத் ஜயசூரிய என்று அந்த தளத்தில் காணப்பட்டன.
மத வைபவங்களுடன் அந்த தலைமையக அலுவலகம் திறந்து வைக்கப்பட்டதாகவும் இணையத்தளம் கூறியிருந்தது.
ஆனால், விடுதலைப்புலிகளால் அவர்களது மாவீரர் துயிலும் இல்லமாக பயன்படுத்தப்பட்ட இந்த இடத்தைத்தான் கடந்த வருடத்தில் இராணுவத்தினர் தரைமட்டமாக்கினார்கள் என்பது குறித்து அது எதுவும் கூறவில்லை.
கடந்த காலங்களில் விடுதலைப்புலிகளால் மயானங்களாக பயன்படுத்தப்பட்டவற்றை தரைமட்டமாக்கியது குறித்து தமிழ் தேசியவாதிகள் மிகவும் கடுமையாக விமர்சித்து வந்தனர்.
அந்த மயானத்தில் விடுதலைப்புலிகளின் போராளிகள் சுமார் 2000 பேரது உடல்கள் அடக்கம் செய்யப்பட்டிருந்தததாகவும், அவர்களுக்கான ஞாபகார்த்த கற்களுமாகச் சேர்த்து அங்கு இருந்த சமாதிகளின் எண்ணிக்கை இரு மடங்காக இருந்ததாக கூறிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான எம். கே. சிவாஜிலிங்கம் அவர்கள் அவை நிர்மூலம் செய்யப்பட்டமை குறித்து தான் மிகுந்த அதிர்ச்சியடைந்ததாகக் கூறினார்.
இப்படியாக நடந்துகொள்வதன் மூலம் அரசாங்கம் எப்படி தேசிய நல்லிணக்கத்தை கட்டியெழுப்பப்போகிறது என்று அவர் கேள்வி எழுப்பினார்.
ஆனால், தனியார் ஹோட்டல் ஒன்றில் இருந்து வெளியேற வேண்டி நேர்ந்ததால், இராணுவத்தின் 51 வது படைப்பிரிவின் அலுவலகம் ஒரு அரசாங்க காணிக்கு மாற வேண்டியிருந்ததாக இராணுவ தளபதி பிபிசியிடம் கூறினார்.
ஆனால், இந்த விடயம் தொடர்பாக மக்கள் மகிழ்ச்சியீனத்தை வெளிப்படுத்துவது குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்று கூறிய அவர், இராணுவம் சிறைச்சாலை திணைக்களத்துக்கு சொந்தமான இடத்திலேயே குடியேறியுள்ளதாகவும் கூறினார்.
கடந்த வருடத்தில் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் பரம்பரை வீடு ஒன்றை இராணுவம் இடித்து தரைமட்டமாக்கியது.
விடுதலைப்புலிகளின் எந்தவொரு தடயத்தையும் அழிக்க வேண்டும் என்றும், அவர்களுடைய வன்முறைகள் மறக்கடிக்கச் செய்யப்பட வேண்டும் என்றும் இராணுவம் கூறுகிறது.
எப்படியிருந்த போதிலும், போரில் இறந்த அரசாங்க படைச் சிப்பாய்களுக்கு பல ஞாபகார்த்த விடயங்களை அது திறந்துள்ளது.
வடக்கின் பெரும்பகுதி தம் வசம் இருந்த வேளையில் இந்துக்கள் தமது சடலங்களை எரிக்கும் வழமைக்கு மாறாக, விடுதலைப்புலிகள் தமது போராளிகளுக்கு பெரிய பெரிய கல்லறைகளை கட்டினார்கள். மாவீரர்களை வழிபடும் முறையின் ஒரு பகுதிதான் இது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.
பிரபாகரனின் 81 வயதான தாயார் அண்மையில் காலமானார். அவரை எரித்த இடம் சில நாட்களின் பின்னர் இழிவுபடுத்தப்பட்டதாக செய்திகள் வந்திருந்தன.