> என் ராஜபாட்டை : July 2011

.....

.

Sunday, July 31, 2011

நக்கீரன்- ஏண்டா இந்த பிழைப்பு உங்களுக்கு…




மகள் : டாடி ! நான் காலேஜ் போறேன்..

அப்பா : ஸ்கூல் போகும் போது அப்பானு சொல்லிவ.. இப்ப ஏன் டாடினு
           சொல்லுற?

மகள் : அப்பானு சொன்னா லிப்ஸ்டிக் அழிஞ்சுடும் அதான்.

அப்பா : !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


TNEP(தமிழ் நாடு மின்வாரியம்) அறிவிப்பு பலகை

“ 1000 வாட்ஸ்
  தொட்டால் உயிர் போய்விடும்.

மீறி தொட்டால் 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கபடும்.”


ஒரு கையில் பேனா

ஒரு கையில் போன்

ஒரு காதில் ஆசிரியர் பேச்சு

ஒரு காதில் நண்பன் பேச்சு

ஒரு கண் கரும்பலகையில்

ஒரு கண் கன்னிபெண்மேல்

எவன் சொன்னான் காலேஜ் லைப் இஸினு…….


மகன் : அம்மா எதிர் வீட்டு ஆண்டி பெயர் என்ன ?

அம்மா : மேனகா டா..

மகன் : அப்பாக்கு அதுகூட தெரியவில்லை, அவுங்களை டார்லிங்னு கூப்பிடுறாங்க.

அம்மா : ??????????????????
அற்ப்பமாக இருக்கும் 10 இளைஞ்ர்களை என்னிடம் அனுப்புங்கள் அவர்களை சிற்ப்பமாக்கி காட்டுகிறேன்.

-          சுவாமி விவேகானந்தர்

சிற்ப்பமாக இருக்கும் 10 பெண்களை என்னிடம் அனுப்புங்கள் அவர்களை கர்ப்பமாக்கி காட்டுகிறேன்.

-          சுவாமி நித்யானந்தா


ஆபாச சி.டி விற்றவர் கைது # செய்தி

அப்ப நித்தி-ரஞ்சிதா மேட்டர் சி.டிய நெட்ல வித்த நக்கீரனை என்ன செய்விங்க.  # டவுட்.


குண்டலி யோகா என மக்களை ஏமாற்றுகிறார் நித்தி # நக்கீரன் செய்தி

கூடுவிட்டு கூடு பாய்வது எப்படி ? # நக்கீரன் பிரசுரம் வெளியீடு

ஏண்டா இந்த பிழைப்பு உங்களுக்கு


சமசீர் கல்வியா ? மெட்ரிக் கல்வியா ? மாணவர்கள் குழப்பம்

ஸ்டாலினா ? அழகிரியா ?                - கருணா நிதி  குழப்பம்

தி.மு.க வா? அ.தி.மு.க வா?              - ராமதாஸ் குழப்பம்

பெயில் கிடைக்குமா ? கிடைக்காதா? கனிமொழி குழப்பம்

நான் தலைவனா இல்லையா?            - தங்கபாலு குழப்பம்

இந்த பதிவுக்கு போடவேண்டியது ஓட்டா? பின்னுட்டமா ? படிப்பவர்கள் குழப்பம்.





Thursday, July 28, 2011

டி.வியாடா நடத்துறிங்க





ஆட்சியில் இருக்கும் போது இலங்கை தமிழருக்கு ஆதரவாக சட்டசபையில் ஒரு தீர்மானம் இயற்ற துப்பில்லை, ஆட்சி போனபின் பிலிம் காட்ட கட்சி பொதுகுழுவில் ஈழ தமிழருக்கு ஆதரவாக தீர்மானமாம். ஒட்டுமொத்த தமிழர்களின் ஆதரவுடம் ஆட்சி செய்யும் ஆ.தி.மு.க சட்டசபையில் கொண்டுவந்த தீர்மானத்தையே மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை, தி.மு.க அரசியல் தெரிந்த அனைவருக்கும் தெரியும் இது கருனாநிதியின் கண்துடைப்பு நாடகம் என.

நில அபகரிப்பு வழக்குகள்.

ஜெயலலிதாவால் போடபடும் நில அபகரிப்பு வழக்குகளில் 95% உண்மை, இதை தி.மு.க.காரர்களே ஒத்துகொள்ளுவார்கள். ஆட்சியில் இருக்கும்போது அரசியல்வாதியாக இல்லாமல் அரசியல்வியாதியாக இருந்து அடியாட்கள் துனையுடம் அபகரிக்கபட்ட நிலங்கள் பல. அடங்கிபோய், யாரிடம் முறையிடுவது என தெரியாமல் இருந்த மக்கள் இபோ நிம்மதியாக உள்ளனர்.

சமசீர் கல்விக்காக அல்லது ஈழதமிழர்களுக்காக அல்லது கஷ்டபடும் தி.மு.கவினர்க்கு உதவி செய்யாத வக்கீல்கள் சங்கம், நில அபகரிப்புக்கு மட்டும் வரிந்துகட்டிகொண்டுவருகிரது. (வக்கீல்கள் எண்ணிக்கையே விட வழக்குகள் அதிகமாம்). உப்பு தின்னவன் தண்ணிகுடிக்கனும்.

பல்டி ராமதாஸ்

தேர்தலுக்கு முன் ஒரு மாதிரியாகவும், தேர்தல் முடிந்தால் ஒரு மாதிரியாகவும் பேசுவது ராமதாஸ் வழக்கம். சமிபத்தில் அவர் உதித்த முத்து “ தி.மு.க,  அ.தி.மு.க இரண்டும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள், இலவசங்கள் குடுத்து மக்களை சோம்பேரிகள் ஆக்கிவிட்டனர்” . ரொம்ப சரியா சொன்னிங்க அய்யா.. ஆனா இந்த புத்தி தேர்தலுக்கு முன் எங்கே போச்சு. இரண்டு கட்சியுடனும் மாத்தி மாத்தி கூட்டணி வைக்கும்போது எங்கே போச்சு.(…………திங்க போச்சா?)


டி.வியாடா நடத்துறிங்க

ஆர்.ராசா சிதம்பரத்துக்கும், மன்மோகன் சிங்கிர்க்கும் ஆப்பு வைக்கும் விதமாக வாக்குமுலம் குடுகின்றார்.(அவனுக்கு என்ன மரியாதை) குடுக்குறான். எனக்கு முன் இருந்த அமைச்சர்களும் இப்படிதான் என உண்மையே போட்டு உடைக்கிறான். கனிமொழிக்கு ஜாமின் கிடையாது, கருப்பு பனத்தை மீட்க உச்சனீதிமன்றம் தனி குழு அமைகிறது. இது பத்தியல்லாம் வாய்திறக்காத சன் டி.வி, கலைஞர் டி.வி , ஜெயலலிதா கேஸ் பத்தி SPLASH NEWS போடுறனுங்க. இதுவும் கேஸ்தான் என்றாலும் அவர்கள் சம்பந்தபட்ட செய்தியை மறைக்க இவனுங்க பன்னும் லொள்ளு ஒவர்.

Wednesday, July 27, 2011

உறவு வலுப்பட என்ன செய்யலாம்




நண்பர்களுடனும், உறவினர்களுடனும் உள்ள நமது உறவு வலிமையாகவும், நல்ல படியாகவும் இருக்க சில வழிகள்.

  1. நண்பர்கள்/உறவினர்கள் திருமண நாள், பிறந்த நாளை குறித்துவைத்து கொள்ளுங்கள். Call செய்ய முடியாவிட்டாலும் ஒரு SMS லாவது ஒரு வாழ்த்து சொல்லுங்கள்.

  1. திபாவளி, பொங்கல் போன்ற முக்கிய நாட்களில் முடிந்தால் நேரில் அல்லது போனில் பேசுங்கள்.

  1. நண்பர்கள்/உறவினர்களின் நல்ல விஷயத்தில் கலந்துகொள்கின்றிர்கலோ இல்லையோ துக்க காரியத்தில் தவறாமை கலந்துகொள்ளுங்கள்.

  1.  நண்பர்கள்/உறவினர்கள் நமது வீட்டிர்க்கு வந்தால் முதலில் டி.வி யை அனைத்துவையுங்கள்.

  1. நாம் அடுத்தவர் வீட்டுக்கு சென்றால் அவர்கள் டி.வி பார்த்தால் அவர்கள் பார்க்கும் நிகழ்சியை நீங்களும் பாருங்கள். உங்கள் விருப்பத்தை திணிக்காதிர்கள்.

  1. குழந்தை உள்ள வீட்டுக்கு சென்றால் பிஸ்கட், பழங்களும் வாங்கிசெல்லுங்கள்.

  1. நமது வீட்டிர்க்கு யாராவது எதாவது வாங்கிவந்தால் “அய்யோ ! இதை இங்கே யாரும் திங்கமாட்டாங்கலே” என்று சொல்லாதிர்கள்.

  1. முடித்தவரை வார இறுதி நாட்களில் மதியம் 2 TO 4 யார்வீட்டுக்கும்  செல்லாதிர்கள். அவர்கள் சாப்பிட்டுவிட்டு ஒய்வு எடுக்கும் நேரம் அது.

  1. இரவு தங்க போவதாக இருந்தாலோ அல்லது சாப்பிடும் நேரத்தில் செல்ல வேண்டி இருந்தாள் அவர்களுக்கு போன் செய்துவிட்டு செல்லுங்கள்.

  1. நீங்கள் செல்லும் வீட்டில் திருமணமாகி சில மாதமான பெண் இருந்தால் “எதாவது விஷேஷம் உண்டா?” என கேட்காதிர்கள். அவர்கள் தாய்மை அடையவில்லை என்றால் அதை சொல்ல வருத்தபடலாம்.

  1. நண்பர்கள்/உறவினர்களுக்கு பிறந்த குழந்தையை பார்க்க போகும் இடத்தில் “குழந்தை ஏன் கருப்பா இருக்கு, முடி ஏன் கொஞ்சமா இருக்கு, ஏன் அப்பா போல இல்லை , பெண் குழந்தைதானா?” என குடும்பத்தில் குண்டு வைக்கும் கேள்விகளை கேட்காதீர்கள்.

  1. நண்பர்கள்/உறவினர்களிடம் முடிந்த அளவு கடன் வாங்காதீர்கள்/ கொடுக்காதீர்கள்.

  1.  நண்பர்கள்/உறவினர்களின் முன்பு குழந்தையை திட்டாதீர்கள் அவர் மனம் பாதிக்கும்.



எனக்கு தெரிந்த அளவு சொல்லியுள்ளேன். உங்களுக்கு வேறு எதாவது தோன்றினால் பின்னுட்டதில் சொல்லுங்கள்.

Tuesday, July 26, 2011

எல்லோரும் வாங்க, ஒரு முக்கியமான விஷயம்

1.தேமுதிகவின் அதிகாரபூர்வ வெப்சைட்டான http://www.dmdkparty.com – ல் தங்களது கட்சியின் 29 சட்ட மன்ற உறுப்பினர்களின் இ – மெயில் முகவரியை வெளியிட்டுள்ளார். இதில் தேமுதிக தலைவரும், எதிர்கட்சி தலைவருமான விஜயகாந்த் முகவரியும் அடக்கமாகும்.

மெயில் அனுப்ப தெரியாதவங்களுக்கு புறா வழங்க படும் 

======================================================================  


2. தற்போது மீண்டும் சீமானுடன் குடும்பம் நடத்தியதற்காக ஆதாரங்களை வெளியிட்டு பரபரப்பை கிளப்பியுள்ளார் விஜயலட்சுமி.

வீடியோ ஆதாரம் எதாவது உண்டா ? ( சி .பி )

 =====================================================================
3. உங்களை பணம் கேட்டு சிலர் மிரட்டியதாக முன்பு ஒருமுறை கூறியிருந்தீர்களே, அது யார் என்று இப்போது சொல்ல முடியுமா என்று கேள்வி எழுப்பப்பட்டது. இல்லை, நான் உங்களிடம் சொல்ல முடியாது. யார் யார் மிரட்டினார்கள் என்பதை நான் கமிஷனரிடம் சொல்லியிருக்கிறேன் என்றார் ரஞ்சிதா.

படமே பாத்துடோம் ஆளு யார்னு சொல்லாடி என்ன கவலை

=======================================================================
4. ஸ்பெயின் நாட்டை சேர்ந்த ஒரு பெண், சூரியனுக்கு உரிமை கொண்டாடுகிறார்.

அங்கேயும் சூரியனுக்கு பிரச்சனையா ?
========================================================================

5. ராங்நம்பர் உருவாக்கிய காதல்: எதிர்ப்பை மீறி திருமணத்தில் முடிந்தது

ராங் நம்பர் தான் ஆனா ராங் நபர் இல்ல .. வாழ்த்துகள்
=======================================================================

6. நில மோசடி: 2 அதிமுகவினருக்கு கல்தா- ஜெயலலிதா அதிரடி


அம்மானா சும்மாவா ?
 
டிஸ்கி : தலைப்புக்கும் பதிவுக்கும் சம்பந்தம் இருக்க கூடாதாம் . அதான் இப்டி ..

Monday, July 25, 2011

கடிக்க போறிங்களா ? ஒரு நிமிடம் ப்ளீஸ் ..

மனிதனின் வாயில் பாக்டீரியாக்கள் உயிர்வாழ்வதன் காரணமாக மிருகக் கடியினைப் போலவே மனிதக் கடியும் ஆபத்தானது. கடியினால் காயம் ஏற்பட்டால் உடனடியாக காயத்தை சுத்தமாக்கி சிகிச்சைக்கு உட்படுத்த வேண்டியது மிக முக்கியமானது. கடியின் தன்மையைப் பொறுத்து உடனடி மருத்துவ சிகிச்சையைப் பெற்றுக்கொள்வதும் அவசியமானது.
மனிதக் கடிகள் எவ்வாறு ஏற்படுகின்றன?
மனிதக்கடி நேரடியாகவோ (உதாரணமாக ஒரு குழந்தை ஒருவரைக் கடித்தல்) அல்லது மறைமுகமாகவோ (சண்டைகளின் போது அல்லது விளையாட்டுக்களின் போது தற்செயலாக) வாயினால் ஒருவருடைய உடற்பாகங்களைக் கடிப்பதினால் ஏற்படுகிறது.
பொதுவாக மனிதக் கடி கைகளில் தான் ஏற்படுகிறது, ஆனால் நேரடியாகக் கடிப்பது உடலின் எந்தப் பகுதியில் வேண்டுமானாலும் இடம்பெறலாம். தோலில் கடித்துக் காயப்படுத்துவது கன்றிப்போதல் அல்லது திசு சேதங்கள் மற்றும் தொற்றுக்கள் ஏற்படல் போன்றவற்றிற்கு காரணமாக அமையும். டெட்டனஸ் மற்றும் ஹெபாடைட்டிஸ் பி போன்ற தொற்றுக்களை மனிதக் கடி பரப்பும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
காயத்தை ஏற்படுத்தும் கடி
காயங்கள், துளைகளை ஏற்படுத்தும் கடியினால் மேலோட்டமான அல்லது ஆழமான புண்கள் ஏற்பட்டு உதிரப் போக்கு ஏற்பட வாய்ப்புண்டு. ஆழமாகக் கடிப்பது உதிரப்போக்கை ஏற்படுத்தும், இதற்கான முதலுதவியின் முதற் படி அந்தக் காயத்தை சோப் மற்றும் நீரினால் தூய்மைப்படுத்தி அதிலுள்ள பாக்டீரியாக்களை அகற்றுவது தான்.
ஆழமான கடி
ஆழமான கடிகளின் போது தசை நாண்கள் அல்லது மூட்டுக்களில் சேதங்கள் ஏற்பட்டுள்ளதா இல்லையா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். குறிப்பாக கணுக்களில் ஏற்படும் ஆழ்ந்த கடிகள் காரணமாக எலும்புகள் மற்றும் தசைநார்களில் சேதங்கள் ஏற்பட்டு அந்தக் காயம் ஒழுங்காக சிகிச்சைக்கு உட்படுத்தப்படாமல் விடப்பட்டால் நீண்டகால வலிகளுக்கு வழிகோலும். எனவே இதனை எக்ஸ்ரே மூலம் மருத்துவர் உறுதிப்படுத்திக் கொள்வது நல்லது.
மேலோட்டமான கடி
மேலோட்டமான கடி காயங்களை ஏற்படுத்தாவிட்டாலும் திசுக்களில் சேதங்களை ஏற்படுத்தக் கூடும். இவ்வாறான பெரும்பாலான கடிகளுக்கு வீட்டிலேயே சிகிச்சைகளை செய்துகொள்ள முடியும். குளிர்ந்த ஒத்தனம் வீக்கமடைவதிலிருந்து தடுக்கும். ஆழமான கடி இல்லாவிட்டாலும் அதைக் கழுவி சுத்தப்படுத்தி பாக்டீரியாக்களை நீக்குவது நல்லது.

டிஸ்கி 1 : இந்த கடில சி.பி யின் பஸ் கணக்குல வராது ..

Thanks : வணக்கம்நெட்

Sunday, July 24, 2011

நான் ரசித்த ஓவியங்கள்

இது ஒரு மீள் பதிவு ...(பல நண்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்க )
(பதிவு போட வேற மேட்டர் கிடைக்கவில்லைனு உண்மைய சொல்லு  #சி . பி )

 

Saturday, July 23, 2011

மைக்ரோசொப்ட்டின் புதிய சமூக இணைய வலையமைப்பு விரைவில்

உலகின் முதனிலை மென்பொருள் நிறுவனங்களில் ஒன்றாகக் கருதப்படும் மைக்ரோசொப்ட் நிறுவனம் புதிய சமூக இணைய வலையமைப்பு ஒன்றை அறிமுகம் செய்யும் முனைப்புக்களில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அண்மையில் மைக்ரோசொப்ட் இணையதளத்திலிருந்து கசிந்த தகவல்கள் இதனை பறைசாற்றும் வகையில் அமைந்துள்ளது.
டுலாலிப் (Tulalip) என்னும் சமூக இணைய வலையமைப்பை மைக்ரோசொப்ட் உருவாக்கி வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.
டுலாலிப் என்னும் இந்த சமூக இணைய மற்றும் தேடுதளம் பற்றிய தகவல்கள் தவறுதலாக இணையத்தில் பிரசுரமாகியிருந்தது.
Socl.com”  என்னும் இணைய தளத்தில் இந்த தகவல்கள் வெளியிடப்பட்டிருந்தன.
மைக்ரோசொப்ட் ஆய்வு குழுவினரால் தயாரிக்கப்பட்ட புதிய திட்டம் தொடர்பான உத்தேச ஆவணமொன்றே இவ்வாறு பிரசுரிக்கப்பட்டிருந்தது.
தகவல்களை பரிமாறிக் கொள்வதற்கும் தகவல்களை தேடுவதற்கும் மிகவும் காத்திரமான இணையமாக இந்த புதிய சமூக இணைய வலையமைப்பு அமையும் என வெளியிடப்பட்டிருந்த தரவுகளைக் கொண்டு அணுமானிக்க முடிந்ததாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
‘உங்களுக்கு எது தேவையோ அதனை தேடுவதற்கும், எதனை பகிர வேண்டுமே அதனை மிகவும் இலகுவாக பகிர்ந்து கொள்ள முடியும்’ என்ற இந்த புதிய இணையத்தின் அறிமுக வாசகத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
துரதிஸ்டவசமாக இணையத்தில் கசிந்த தகவல்களில் உத்தேச இணையத்தின் செயன்முறை தொழிற்பாடுகள் குறித்த தகவல்கள் உள்ளடக்கப்படவில்லை.
கடந்த 12ம் திகதி Socl.com என்னும் இணையத்தை மைக்ரோசொப்ட் நிறுவனம் கொள்வனவு செய்திருந்தது.
மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் தலைமைக் காரியாலயம் அமைந்துள்ள மேற்கு வொஷிங்டன் பிரதேசத்தைச் சேர்ந்த அமெரிக்க மக்களை குறிக்கும் சொல்லே டுலாலிப் ( Tulalip ) என்பது குறிப்பிடத்தக்கது.
சமூக இணைய வலையமைப்பு ஒன்றை உருவாக்குவதில் மைக்ரோசொப்ட் ஆர்வம் காட்டுகின்றதா என்பது இன்னமும் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.
எனினும், கூகிள் பிளஸ் சமூக இணைய வலையமைப்பு பிரபல்யம் அடைந்து வருகின்ற நிலையில், மைக்ரோசொப்ட் நிறுவனம் மற்றுமொரு சமூக வலையமைப்பை உருவாக்க முயற்சி செய்தால் அது சவால் மிக்கதாகவே கருதப்பட வேண்டுமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.





Thanks: vanakamnet.com

Thursday, July 21, 2011

எப்படி இந்தியாவை காப்பாத்துவேன்?

ஏன் இந்தியா பிரச்சனையிலே இருக்கு.
மக்கள் தொகை: 110 கோடி
9 கோடி ஓய்வு பெற்றவர்கள்
Visit


 XciteFun.net
30 கோடி மாநில அரசு பணியாளர்கள்
17 கோடி மத்திய அரசு பணியாளர்கள்
(இருவருமே வேலை செய்யறதில்லை)
Visit XciteFun.net
 
 
1 கோடி IT ஆளுங்க (அவங்க என்னிக்கு இந்தியாக்கு உழைசாங்க)
Visit XciteFun.net
 
 
25 கோடி பள்ளில படிப்பவர்கள்
Visit XciteFun.net
 
 
1 கோடி 5வயசுக்கும் கீழானவர்கள்
Visit XciteFun.net
 
 
15 கோடி வேலை தேடுவோர்
Visit XciteFun.net
 
 
1.2 கோடி சீக்கு புடிச்சி ஆஸ்பிடலில் இருப்போர்
Visit
 XciteFun.net

 
 
ஒரு புள்ளிவிபரத்தின் படி 79,99,998பேர் ஜெயிலி
 
 
மிச்சம் இருப்பது நீயும் நானும்

நீ எப்போ பார்த்தாலும் பிளாக் படிக்கிறதுல பிஸி
Visit XciteFun.net 

அய்யோ!! நான் மட்டும் ஒத்தையாளா எப்படி
இந்தியாவை காப்பாத்துவேன்
Visit XciteFun.net 
 
 ?ui=2&view=att&th=1256889301c88c70&attid=0.1&disp=attd&realattid=ii_1256889301c88c70&zw

 
ஒண்ணுமே புரியல போங்க ...

Wednesday, July 20, 2011

பிளாக்கர் வலைப்பூவை எளிதாக பேக்கப் செய்வது மீட்பது எப்படி?

இணைய உலகில் நமது கருத்துகளைப் பகிர்ந்து கொள்ள ஒரு தளமாக இருப்பது கூகிளின் பிளாக்கர் தளமாகும் (Blogger). இங்கே தான் எல்லோரும் அவர்களின் கருத்துகளை எழுதி வலைப்பூவில் வெளியிடுகின்றனர். இது ஒரு இலவச சேவையாகும். கணிணியின் தகவல்களைப் பாதுகாப்புக்கு பேக்கப் செய்வது போல பிளாக்கர் வலைப்பூவையும் பேக்கப் செய்து கொண்டால் எதாவது பிரச்சினையின் போதும் தவறுதலாக அழிந்து விடும் போதும் மீட்டுக் கொள்ள முடியும்.
நமது வலைப்பூவை அவ்வப்போது காப்புநகல் எடுத்து வைத்துக் கொள்வது ஆபத்தின் போது நன்மை பயக்கும். இதற்கு பிளாக்கர் தளத்தில் நுழைந்து Blogger Settings -> Basic என்ற மெனுவிற்குச் செல்லவும். அதில் Export Blog என்பதைக் கொடுத்தால் உங்கள் வலைப்பூவின் நிரல்வரிகள் கணிணியில் சேமிக்கப்படும்.

பேக்கப் செய்யப்பட்ட கோப்பிலிருந்து வலைப்பூவை எப்படி மீட்பது?
Blogger Settings-> Basic என்ற மெனுவில் சென்று Import Blog என்பதைக் கிளிக் செய்து நீங்கள் ஏற்கனவே சேமித்துள்ள கோப்பைத் தேர்வு செய்து Import என்ற பொத்தானைக் கிளிக் செய்யவும்.
இந்த நேரத்தில் “Automatically publish all imported posts” என்பது டிக் செய்யப்பட்டிருக்க வேண்டும். அப்போது தான் அனைத்து பதிவுகளும் மீட்கப்படும்.

இந்த எளிய வசதியினைப் பயன்படுத்தி பிளாக்கர் வலைப்பூவை சேமிக்க முடியும். மீட்டுக் கொள்ள முடியும். மேலும் ஒவ்வொரு பதிவின் வகைகளும் கருத்துரைகளும் சேர்ந்தே மீட்கப்படும் என்பதால் இது பிளாக்கர் பயன்படுத்துவோருக்கு சிறப்பான வசதியாகும்.

Thanks: Vanakkamnet

Tuesday, July 19, 2011

வாய வச்சுகிட்டு சும்மா இருக்கனும், இல்லனா இப்படிதான்.




விமான நிலையத்தில் ஒரு நாள் :

ஒரு விமானத்தின் அருகில் ஒருவர் புகைபிடிக்கிறார், அவரிடம் பயணி ஒருவர்..


பயணி : நீங்க ஒரு நாளைக்கு எத்தனை சிகரெட் பிடிப்பிங்க ?

Mr. X : எதுக்கு ?

பயணி : சும்மா சொல்லுங்க ..

Mr. X : குறைந்த பட்சம் 20.

பயணி : ஒரு சிகரெட் விலை என்ன ?

Mr. X : 20 ரூபாய்

பயணி : எத்தனை வருடமாக குடிக்கிறிங்க?

Mr. X : கடந்த 20 வருடமாக..

பயணி : இதுவரை 29,20,000 குடித்துஇருகின்றிர்கள். இத வைத்து இது
           போல ஒரு விமானம் கூட வாங்கி இருக்கலாம்.

Mr. X : இது உங்க விமானமா ?

பயணி : இல்லை   ஏன் ?

Mr. X :  இது என் சொந்த விமானம்.

பயணி : ??????????????????????????

(அந்த Mr. X  விஜய் மல்லாயா)

Moral : ஆள் தெரியாம அட்வைஸ் பன்ன கூடாது

(இது எனக்கு SMS ல வந்தது)

Monday, July 18, 2011

என்ன கன்றாவி இது ?




 
காதலி அன்பை தருவாள்..
அம்மா பாசம் தருவாள் ..
அப்பா அறிவை தருவார்..
உன்மை நண்பன்
--
--
--
--
நல்ல பிகர் மொபைல் நம்பரை தருவான்  # நட்பாலஜி




குவார்டர் விலை உயர்ந்தது..
“குடி”மகனை கவனிக்காத அரசு
குட்டிசுவராக போகும் #  கருனாநிதி கவிதை


எல்லாருகும் லேப்டாப் தரும் திட்டம்,
திட்டதிற்க்கு மனோ பெயர் வைப்பார்களா? # டவுட்


எல்லாரும் உன்னை விட்டு விலகி செல்லும் போது
உன்னையே உனக்கு பிடிகாத போது- நி புரிந்து கொள்ள வேண்டும்
--
--
--
இன்றாவது குளிக்க வேண்டும் என்று.


எப்போழுதும் கீழே விழுந்து விட்டோம் என பீல் பன்னகூடாது,
நம்மிடம் இருக்கும் சக்தியல்லாம் ஒன்று சேர்த்து எழுந்து சொல்லவேண்டும்..
--
--
--
--
நல்ல வேலை யாரும் நம்மை பார்கவில்லை


ஒருவர் புது ஐடியா சிம் வாங்கினார். முதல் அழைப்பை தனது மனைவிக்கு செய்தார். சில Network Problem , அழைப்பு வேறு ஒரு பெண்னுக்கு சென்றுவிட்டது. அது காதலாக மாறி, பின்பு அவளையே திருமணம் செய்துகொண்டார்.

நீதி : ஒரு ஐடியா உங்கள் வாழ்கைய மட்டும் அல்ல, வாழ்கை துணையயே மாறிவிடும். ( What a Idea sirji?)




டிஸ்கி : இந்த பதிவை படித்துவிட்டு நீங்கள் நினைக்கும் வார்த்தைதான்
           இந்த பதிவின் தலைப்பு.


Sunday, July 17, 2011

அசினையும் தெரியும், நமீதாவையும் தெரியும்! -திருமாவளவன்

சென்னை, இந்தியா: கடந்த சட்டமன்றத் தேர்தலில் தமது கட்சிக்கு ஓட்டுப் போடாமல் (ஒரு இடத்தில்கூட ஜெயிக்கவில்லை), தனக்குப் பின் அரசியலுக்கு வந்த விஜயகாந்தின் கட்சிக்கு ஓட்டுப்போட்ட மக்கள்மேல் கடும் கோபத்தில் இருக்கிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்.




அவரது கோபம், வார்த்தைகளாக வெடித்திருக்கின்றன.



“எங்களுக்கு ஓட்டுப் போடாமல், யார் யாரையோ சட்டமன்ற உறுப்பினர்களாக்கி எதிர்க்கட்சியில் உட்கார வைத்திருக்கிறீர்கள். எதிர்க் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுக்கு என்ன தெரியும்?” என்று கேள்வி எழுப்பிய திருமா, அதற்கான பதிலையும் கூறியுள்ளார்.



“எதிர்க் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு சமூக நீதி அரசியல் தெரியாது. ஆனால், அசினைப் பற்றியும் நமீதாவைப் பற்றியும் நன்றாகத் தெரியும்.


அம்பேத்காரைப் பற்றித் தெரியாது. ஆனால், தமது தலைவனோடு (விஜயகாந்த்) சினிமாவில் சேர்ந்து டூயட் பாடிய நடிகைகளைப் பற்றி விலாவாரியாகத் தெரியும்!” என்று ஆவேசமாக முழங்கியுள்து இந்தச் சிறுத்தை!



கடந்த சட்டசபைத் தேர்தல் பிரசாரங்களுக்காக விடுதலைச் சிறுத்தைககளின் கூட்டணிக் கட்சி தி.மு.க. மேடையேற்றியது யாரை? குஷ்பு உட்பட சினிமா நடிகைகளையும்தான். குஷ்புவுக்கு எதிராகப் போராட்டம் நடாத்திய திருமாவின் கட்சிக்கும் சேர்த்துத்தான் இந்த நடிகைகள் பிரசாரம் செய்தார்கள்.



அட, அதை விடுங்கள். திருமா சினிமாவில் நடிக்கவில்லையா? அன்புத்தோழி என்றொரு படத்தில் (யாராவது பார்த்தீர்களா?) ஹீரோவாக நடித்தாரே? அதில் ஹீரோயினே கிடையாதா?

Thanks: Viruvirupu.com

Saturday, July 16, 2011

மிக சிறந்த பல்சுவை வலைத்தளம் விருது

பதிவுலகில் பலர் இருந்தாலும் சிலர் தான் அனைவரையும் கவர்கின்றனர் . கதை , கவிதை , கட்டுரை , சினிமா , அரசியல்  என அனைத்து துறைகளிலும் தனது எழுத்து திறமையால் பல பதிவுகளை படைத்து நம்மை மகிழ்விப்பவர் இவர்.

சமுக அக்கறையுடன் எழுதுவதில் வல்லவர் இவர் . அதில் தனது சொந்த கருத்துகளை அனைவரும் ஏற்று கொள்ளும் வகையில் எழுதுவார் .கவிதை பல எழுதி வைரமுத்துவை வம்புக்கு இழுப்பவர் .

அவர்தான் நமது " வேடந்தாங்கல் " ருண் .


அவருக்கு இந்த பல்சுவை வலைத்தளம் விருதை வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன் .

Friday, July 15, 2011

மூன்று… மூனு… திரி(Three)… தீன்..




நண்பர் “நுனிபுல்லில் ஒருபனிதுளி “ ரியாஸ் அஹமது அவர்களின் வேண்டுகோளுக்கினங்க இந்த பதிவை இடுகிறேன்.

1)         நீங்கள் விருப்பும் 3 விஷயம்.

# என் தங்கையின் குழந்தையின் சிரிப்பு(மேல உள்ள 
   படத்த பாருங்க)
# புத்தகங்கள்
# என் மானவர்கள்

2)       நீங்கள் விருப்பாத 3 விஷயம்.

# பள்ளி பருவ காதல்
# தந்தையை ஒருமையில் பேசும் பழக்கம்
# அடுத்தவரை குறைகூறுதல்

3)       நீங்கள் பயப்படும் 3 விஷயம்.

# பாம்பு
# தனிமை
# மின்சாரம்( சம்சாரம் இல்ல)
4)       நீங்கள் ரசித்த 3 படம்.

# சேது
# பிதாமகன்
# முகவரி

5)       நீங்கள் விருப்பும் 3 பாடல்.

# துள்ளி திரிந்ததோறு காலம்(படம்: என்றும் அன்புடன்)
# தேவதை இளம் தேவி (படம்: ஆயிரம் நிலவே வா)
# நான் பாடும் மெளனராகம் ( படம் : இதயகோவில்)

6)       உங்களுக்கு பிடித்த 3 உணவு .

# பூரி
# சப்பாத்தி
# தோசை
7)       இது இல்லை என்றால் வாழ முடியாது

# என் மனைவி சக்தி
# என் மனைவி சக்தி
# என் மனைவி சக்தி


8)       கற்று கொள்ள விரும்பும் 3 விஷயங்கள்

# கார்
# தேவையான இடங்களில் கோவப்பட
# கணினி மென்பொருள்

9)        கேட்க விரும்பாத 3 விஷயங்கள்.

# அடுத்தவரை பற்றிய தவறான தகவல்
# என்னை பற்றிய பாராட்டை
# நண்பனின் வருமானத்தை

10)     நான் பெருமையாய் நினைக்கும் 3 காரியங்கள்

# சொந்த உழைப்பில் கட்டிய வீடு
# TCS, WIPRO வில் என் மாணவர்கள்
# கணினி படிப்பு படிக்காமல் கணினி ஆசிரியர் ஆனது

11)       புரியாத 3 விஷயம்

# பெண்னின் மனது
# என் உன்மையான குனம்
# பதிவுலகில் பிரபலமாவது எப்படி?

12)     வாழ் நாள் முடிவதர்க்குள் செய்ய நினைக்கும் 3 விஷயம்.

# அம்மாவை விமானத்தில் அழைத்து செல்வது
#  சொந்தமாக பள்ளி
# நல்லாசிரியர் விருது

13)      மறக்க முடியாத(கூடாத) 3 நண்பர்கள்

# விஜய் ( இப்ப அமெரிக்காவில்)
# சுப்பையா ( பக்கத்து வீட்டில்)
# மணிமேகலை ( கல்லூரி தோழி ஆனால் அக்கா)

14)      இதை தொடர அழைக்கும் 3 பதிவர்கள்