> என் ராஜபாட்டை : February 2014

.....

.

Friday, February 28, 2014

பதிவர்கள் அறிமுகம்





புதியபதிவர்களை அறிமுகம் செய்வதில் முதலிடத்தில் உள்ளது வலைசரம் . நம்மையும் யாராவது அறிமுகம் செய்ய மாட்டார்களா என ஏங்கிய நாட்கள் உண்டு . பல நல்லபதிவுகள் வெளியே தெரியாமலே போய்விடுகிறது . எனவே இனி அடிகடி இது போல சில புதிய பதிவர்களை நண்பர்களுக்கு அறிமுகம் செய்யலாம் என எண்ணுகிறேன் .



1. நீடூர் சீசன் 


              முகமது அலி என்ற பதிவரால் எழுதபட்டு வருகிறது .இவர் இந்த வலைத்தளம் மட்டுமல்லாமல் பல தளங்கள் நடத்திவருகிறார் . மிக எளிய நடையில் எழுதுவது இவர் சிறப்பு . 

சில பதிவுகள் :

1. லேனா ஓர் ஆச்சரியம்

2. காதல் தோழி !

3. கணினியும் கன்னியும் வைரஸ்!



==========================================================================

2.  நினைத்து பார்க்கிறேன் .

            திரு வே .நடனசபாபதி என்ற பதிவரால் நடத்தபடுகிறது . ஒரு வங்கியில் வேலை பார்ப்பவர் எழுதிய பதிவுகள் என்று சொல்ல முடியாத அளவு வார்த்தை பிரயோகம் அருமையாக உள்ளது . தொடர் பதிவுகள் இவரின் சிறப்புதன்மையாகும் .

சில பதிவுகள் :

 1. மீண்டும் சந்தித்தோம்! 19

2. நினைவோட்டம் 75

3.  வாடிக்கையாளர்களும் நானும் 39


========================================================================


3. நில் ... கவனி .. செல் 

        ஆனந்தராஜ் என்பவர் எழுதும் வலைபூ இது . மிக சில பதிவுகள் மட்டுமே எழுதியுள்ளார் . ஆனால் அனைத்தும் அருமையான பதிவுகள் . போய் படித்து பாருங்கள் .

 சில பதிவுகள் :

1. சாப்பிட்டுக்கொண்டு இருக்கும் போது அழுகுரல் ஒன்று கேட்டது..!

2. விசேஷ ஆற்றல்கள் படைத்த பெண்களின் மூளை..!

==================================================
4. நாம் நண்பர்கள்  ஜானி

            சமுக அக்கறையுடன் , சமுகத்தில் நடக்கும் அவலங்களை தன பதிவில் சுட்டிகாடும் பதிவர் இவர் . மிக சில பதிவுகள் தான் எழுதியுள்ளார் . ஆனால் அனைத்தும் அருமையாக உள்ளது படித்து பாருங்கள் .

சில பதிவுகள் :

1.  யார் குற்றவாளி

2. மலை மனிதன் தசரத் மான்ஜி

3. மனித உறவுகள் மேம்பட


 
தொடரும் !!!!!!!!!!!!!!

Friday, February 21, 2014

இலவசமாக சில முக்கிய மென்பொருள்கள் (FREE SOFTWARES)










நாம் நமது கணினியில் அன்றாடம் பயன்பாட்டுக்காக பல வகையான மென்பொருள்களை வைத்திருப்போம் . அவற்றில் பெரும்பாலானவை இலவச மென்பொருள்தான் . அனைத்து மென்பொருளையும் பணம் கொடுத்து வாங்கினால் கணினியின் விலையைவிட மென்பொருள் விலை அதிகமாக போய்விடும் . எனவே தான் நாம் இலவச மென்பொருள்களை பயன்படுத்துகிறோம் .

இன்று இந்த பதிவில் நமக்கு அடிக்கடி தேவைப்படும் சில மென்பொருள்களை அளித்துள்ளேன் . இவை உங்களிடம் ஏற்கனவே இருக்கலாம் . ஆனால் இது புது பதிப்பு . எனவே இதை நீங்கள் கண்டிப்பாக பயன்படுத்திக்கொள்ளவேண்டும் . இலவசம் என்பதால் வைரஸ் பயம் வேண்டாம் . நானும் இதை பயன்படுத்துகிறேன் .


  •   VLC PLAYER (NEW VERSION)
               

                 கணினியில் படம் பார்க்கும் அனைவருக்கும் மிகவும் பிடித்த மென்பொருள் இது . மிக சிறிய ஆனால் அழகான, வேகமான மென்பொருள் இது . கடந்த பதிப்பை விட இதில் பல நல்ல விஷயங்கள் உள்ளன . தரவிறக்கி பயன்படுத்தி பாருங்கள் .


===========================================================================

  •  CODEC FOR ALL 



                கணினியில் உள்ள விடியோக்கள் நல்ல முறையில் இயங்க உதவும் மென்பொருள் தொகுப்பு இது . இதுவும் புதிய பதிப்பு தான் . தரவிறக்கி பயன்படுத்தி பாருங்கள் 



=========================================================================
  • POWER POINT TO VIDEO CONVERTER 



                  நீங்கள் உங்கள் ஆபிஸ் தொகுப்பில் உள்ள பவர் பாயின்ட் மூலம் உருவாக்கிய கோப்புகளை விடியோவாக மாற்றும் அற்புத மென்பொருள் இது . இதன் மூலன் உங்கள் எண்ணங்களை அழகான விடாயோ தொகுப்பாக மாற்றலாம் . மிகவும் எளிதானது இது .


 ======================================================================
  • UTORRENT 


                    திரைப்படங்களை தரவிறக்க உதவும் மென்பொருள் இது . திரைப்படம் மட்டும் இல்லாமல் நிறைய மென்பொருள்கள் கூட கிடைகிறது . இதில் உள்ள பெரிய வசதி என்னவென்றால் கணினி துவங்கியதும் இதுவும் துவங்கும் . எனவே டவுன் லோட் செய்ய நீங்கள் இருக்க வேண்டியதில்லை . தரவிறக்கும் போது மின்தடை வந்தாலும் நீங்கள் பயப்பட வேண்டாம் , கடைசியாக எங்கு தடை பட்டதோ அன்கேருந்தே மீண்டும் தொடரும் .




Monday, February 17, 2014

பெரியாரின் நூல்கள் இலவசமாக வேண்டுமா ?






வெண்தாடி வேந்தன் , பகுத்தறிவு பகலவன் என அனைவராலும் பாரட்ட பட்ட , சாதி , கடவுள் மறுப்பாள் அனைவர் மனதில் இடம் பிடித்த , கீழ் தட்டு மக்களுக்காகவும் , பெண்ணடிமை தனத்திற்கு எதிராகவும் போராடி சாதாரண மக்களின்தலைவனாக தெரிந்தவர் . ஈ.வே. ராமசாமி என்ற பெரியார் .

அவர் எழுதிய நூல்கள் வெளியிடுவதில் சிலருக்கிடையே போட்டி நடைபெற்றது . யார் ஜெய்த்தால் நமக்கென்ன , நல்ல நூல்களை நாம் படிக்க வேண்டும் , நீங்கள் படிக்க வேண்டும் . எனவே தான் அவர் எழுதிய பல நூல்களை இங்கே இலவசமாக தருகிறேன் .

அவரின் சில கருத்துக்கள் என்னால் ஏற்றுகொள்ள முடியாவிட்டாலும் பல கருத்துக்கள் ஏற்றுகொள்ளவேண்டியவைதான் . மூட நம்பிக்கை என்ற பெயரில் செய்யப்படும் அராஜகங்களை எதிர்க்கலாம் , ஆனால் அடுத்தவர் நம்பிக்கையை கொச்சை படுத்துவது தவறு என்பது என் கருத்து .



கடவுளை நம்புகிறவர்கள் காண்டுமிராண்டி என சொல்வது தவறு என்பது என் கருத்து .  கடவுள் பெயரால் மற்றவர்களை கொடுமை செய்வது , கேவலபடுத்துவது போன்ற செயலில் ஈடுபவடுபவர்கள் காண்டிமிராண்டிகள் என்பதில் சந்தேகம் இல்லை .

ஆனால் பெரியாரின் பெயரில் கட்சி நடத்துபவர்கள் இன்று அவரது கொள்கைகளைமுழுவதுமாக , சரியாக கடைபிடிகிரார்களா என்பது சந்தேகமே உங்கள் கருத்துகளை சொல்லுங்கள் .

அரசியல் சட்ட எரிப்பு போராட்டம் .

பக்தர்களுக்கு 100

தமிழர்கள் இந்துக்களா ?

பெண் 

இனிவரும் உலகம் 

பெரியார் 

பெரியார் வரலாறு 

மற்றும் பல ...

மொத்தமாக தரவிறக்கம் செய்ய ...


CLICK HERE .

1

2

3

4 
 
 




Tuesday, February 4, 2014

தெரியுமா ??







நமக்கு பல விஷயங்கள் தெரியும் ஆனால் அதனுடன் சம்பந்தபட்ட சில விஷயங்கள் தெரியாமல் இருக்கும் . கிழே சில செய்திகள் கொடுத்துள்ளேன் அவை உங்களுக்கு தெரியுமா என பாருங்கள் . பொறுமையாக படியுங்கள் கண்டிப்பாக 100% உங்களுக்கு தெரிய வாய்ப்பில்லை .

பெண்களைவிட ஆண்களுக்கு மூளையின் எடை அதிகம் என்பது தெரியும் ஆனால் நம்மைவிட எலிக்கு மூளையின் எடை அதிகம் என்பது தெரியுமா ?


இந்திய ஜனாதிபதி மாளிகையை கட்டியவர் எட்வின் லூட்யன்ஸ் எனபது தெரியும் ஆனால் அவர் மாளிகை திறப்புவிழா அன்றுதான் இறந்தார் என்பது தெரியுமா ?


பல்லிகளில் 2500 வகைகள் உள்ளது என்பது தெரியும் ஆனால் சோமாலியாவில்  பல்லிகளே கிடையாது  எனபது தெரியுமா ?


பாரதியார் “பாரதி “ என்ற பட்டம் பெற்ற போது அவர் வயது 11 என தெரியும் ஆனால் அவர் முதல் பாடல் எழுதியது 6 வயதில் என்பது தெரியுமா ?


கடிகார திசையில் சுற்றும் ஒரே கிரகம் வீனஸ் என்பது தெரியும் ஆனால் அதுக்கு 27 சந்திரன்கள் உண்டு என்பது தெரியுமா ?


சந்திரன் ஒவ்வொரு ஆண்டும் பூமியை விட்டு 3.8 CM cm நகர்ந்து செல்கிறது என்பது தெரியும் ஆனால் சந்திரனின் அளவு 5 வருடங்களுக்கு ஒருமுறை 1.23 CMcm குறைகிறது என்பது தெரியுமா ?


தேனிக்களுக்கு 4 கண்கள் உண்டு என்பது தெரியும் ஆனால் அதுக்கு காது கிடையாது என்பது தெரியுமா ?


ஸ்டெதஸ்கோப் கண்டுபிடித்தவர் டாக்டர் ரெணிலக் என்பது தெரியும் ஆனால் அவர் ஊமை என்பது தெரியுமா ?


சாக்கடல் , காஸ்பியன் கடல் எல்லாம் கடல் அல்ல ஏரிகள் என்பது தெரியும் ஆனால் அந்த ஏரிகளின் தண்ணீர் பச்சையாக இருக்கும் என்பது தெரியுமா ?


ஆத்திசுடியை எழுதியது அவ்வையார் என தெரியும் ஆனால் அதில் மொத்தம் 113 வரிகள் உள்ளன என்பது தெரியுமா ?





மேலே உள்ளவற்றில் கருப்பு எழுத்தில் உள்ளவை
 அனைத்தும் உண்மை என தெரியும் ஆனால்  
சிகப்பு நேரத்தில் உள்ள அனைத்தும் என் கற்பனை என்பது தெரியுமா ?