> என் ராஜபாட்டை : October 2014

.....

.

Wednesday, October 15, 2014

நட்பு நீடிக்க ...





உலகில் எது இல்லாமல் வேண்டுமானாலும் ஒருவன் இருக்கலாம் ஆனால் நண்பர்கள் இல்லாமல் யாரும் இருக்க முடியாது . நல்ல நண்பர்களை பெற்றவன் எப்பொழுதும் மகிழ்ச்சியாகவே இருப்பான் காரணம் அவன் நண்பர்கள் அவன் கஷ்ட படுவதை பார்த்துகொண்டு இருக்க மாட்டார்கள் . அப்படிபட்ட நட்பு நீண்ட நாள் நீடிக்க என்ன செய்ய வேண்டும் என ஆராய்வதே இந்த பதிவு ...

நண்பர்களிடம் சாதி மதம் பார்க்காதிர்கள் , எக்காரணம் கொண்டும் அவர்கள் சாதி மதத்தை அவர்கள் முன் கிண்டல் செய்தீர்கள் .


நண்பர்களின் பிறந்த நாள் , திருமண நாள் போன்றவற்றிற்கு முடிந்தவரை நேர்ல லாது தொலைபேசியில் வாழ்த்து சொல்லுங்கள் . இல்லாவிட்டால் ஒரு SMS அனுப்புங்கள் .


நல்ல காரியங்களுக்கு செல்கிறோமோ இல்லையோ நண்பர்களின் வீடுகளில் நடக்கும் துக்க காரியங்களுக்கு செல்லுங்கள் . அப்பொழுதுதான் சோகத்திலும் நண்பன் கூட  இருக்கிறான் என்ற ஆறுதல் இருக்கும்


நண்பர்களின் உடலை அல்லது அவர்களின் பழக்க வழக்கங்களை போது இடத்தில் கிண்டல் செய்யாதிர்கள் (முக்கியமாக பெண்கள் இருக்கும் போது )


விசேஷ நாட்களில் அவர்கள் வீட்டிற்கும் , அவர்களை உங்கள் வீட்டிற்கும் அழையுங்கள் .


கூடுமான வரை நண்பர்களிடம் கடன் வாங்காதீர்கள் , பல நட்புகள் பிரிய கடந்தான் முக்கிய காரணம் .


நண்பர்களின் தவறுகளை எடுத்து கூறுங்கள் ஆனால் எப்பொழுதும் குறை சொல்லிக்கொண்டே இருக்காதீர்கள் .


நண்பர்கள் பேசுவதை கவனியுங்கள் நாம் பேசுவதை அவர்கள் கவனிக்க வேண்டும் என நாம் ஆசை படுவதை போல அவர்களும் ஆசை படுவார்கள் அல்லவா ?


நண்பர்களிடம் பொய் சொல்லாதீர்கள் அது பின்பு உங்களுக்கே பிரச்சனையாக வரலாம் .


பெண்கள் தங்கள் தோழிகளிடம் நகைகள் கடன் வாங்காதீர்கள் .

நண்பர்களின் மொபைல் போனை நொண்டாதிர்கல் . மிகவும் அவசியம் என்றால் மட்டுமே அவர்கள் போனை பயன்படுத்துங்கள் .

அவர்கள் அனுமதியின்றி அவர்கள் மொபைல் நம்பரை யாருக்கும் அளிக்காதிர்கள் .



இவை கொஞ்சம் தான் இன்னும் இன்னும் பல விஷயங்கள்  உள்ளது .பதிவின் நீளம் கருதி எழுதவில்லை . உங்களுக்கு தோன்றும் கருத்தை சொல்லுங்கள் .

இது ஒரு மீள் பதிவு