> என் ராஜபாட்டை : September 2015

.....

.

Thursday, September 17, 2015

"பதிவர்"களுக்காக ஒரு அருமையான திரட்டி






           பதிவர்களாகிய நாம் நமது பதிவுகள் அதிகமான நபர்களை சென்று அடைய வேண்டும் என ஆசைபடுவோம். அதற்காக நமது பதிவுகளை பல திரட்டிகளில் இணைப்போம். உதாரணமாக இன்ட்லி, தமிழ்மணம்,  தமிழ்களஞ்சியம் , கூவம், தேன்கூடு என பல உள்ளது . இந்த வரிசையில் தற்போது புதிதாக (பழைய திரட்டிதான் ஆனால் புதிய தோன்றம் மற்றும் வசதிகளுடன்) வந்துள்ளது.

திரட்டியின் பெயர் : பதிவர்

தளத்திற்கு செல்ல : CLICK HERE   

உங்கள் வலைப்பூவை இணைக்க
:

* முதலில் இங்கே கிளிக்  செய்யவும்

* அதில் உங்கள் பயனாளர் பெயர், கடவுச்சொல் , வலைமுகவரி கொடுக்கவும்.


* CREATE USER  பட்டனை கிளிக் செய்யவும்.

உங்கள் பதிவுகளை இணைக்க :

* உங்கள் கணக்கில் முதலில் நுழையவும்.

* மேலே "இணைக்க " என்று உள்ள ஆப்ஷனை கிளிக் செய்யவும்.

* உங்கள் பதிவின் URL கொடுக்கவும்.

* பதிவின்  வகைகள் பற்றி கொடுக்கவும்( தொழில்நுட்பம், சினிமா, கவிதை ...)

* SUBMIT பட்டனை கிளிக் செய்யவும்.


நன்மைகள் :

# உங்கள் பதிவு பலரை எளிதில் சென்றடைகிறது .

# நமக்கு தெரியாத புதிய வாசகர்களை நமது தளத்துக்கு வரவழைக்க முடிகிறது.

#பல புதிய தளங்களை நாம் அறிய உதவுகிறது .

# பதிவுகளை இணைப்பது மிக எளிது .

உங்கள் தளத்துடன் திரட்டியின் இணைப்பை கொடுக்க விரும்பினால் :



Saturday, September 12, 2015

System Restore Point என்றால் என்ன ?






         

             இன்று பள்ளியில் உள்ள ஒரு கணினியில் ஒரு பிரச்சனை. எந்த பைலையும் காபி செய்தாலும் "the file already exists" என்ற பிழை செய்தி வந்தது. சில கோப்புகள் காப்பி செய்து பெண் டிரைவில் போட்டால் எல்லாமே shortcut ஆக மாறிவிடுகிறது. shortcut virus எடுக்க உள்ள வழியை செயல்படுத்தியும் போகவில்லை. அப்போது தோன்றியதுதான் இந்த  System Restore Point ஐடியா.

System Restore Point என்றால் என்ன ?

சந்திரமுகி படத்தில் ஜோதிகாவை ரஜினி ஹிப்னாடிசம் மூலம் அவரது பழைய நினைவுகளை கிளறி அந்த கால நேரத்திற்கு அழைத்து செல்வார். அதுபோல தான் நமது கணினியில் ஏதாவது பிரச்சனை வந்தால் நமது கணினியை அது எப்போது நன்றாக இருந்தாதோ அந்த நிலைக்கு மீண்டும் மாற்றும் ஒரு வழிதான் இது.

நன்மைகள் :

கணினியில் ஏற்படும் எதிர்பாராத பிழைகளை சரிசெய்யலாம்.

நம்மை அறியாமல் ஏற்படும் பிரச்சனைகளை களைந்து மீண்டும் பழையபடி கணினியை அயன்படுத்தலாம்.

நமது கோப்புகள் அழிவதில்லை.

எளியமுறை

விரைவானமுறை

வழிமுறைகள் :

START => ALL PROGRAM=> ACCESSORIES=> SYSTEM TOOLS=> SYSTEM RESTORE
















  இப்படி செய்ததன் மூலம் கணினி முன்பு இருந்த நிலைக்கு மாறுகிறது. இதனால் கணினியில் பிரச்சனைகள் தானாகவே தீர்ந்து விடுகிறது. எனது கணினியும் அப்படி மாறிவிட்டது . இப்பொது அதில் எந்த பிரச்சனியும் இல்லை. நீங்களும் செய்து பாருங்கள்.


Tuesday, September 8, 2015

காணாமல் போன ஆண்ட்ராய்ட் போனை கண்டுபிடிக்க எளிய வழி


         ஆண்ட்ராய்ட் போன் பயன்படுத்தும் அனைவருக்கும் உள்ள ஒரு பிரச்சனை போன் தொலைந்து போவதுதான். போனில் பலதரபட்ட தகவல்களை சேமித்து வைத்திருப்போம். அவை மற்றவர்களிடம் சென்றால் பல தவறுகள் நடக்க வாய்ப்புண்டு. இது போன்ற நிலையில் நமது போன் தொலைந்தால் எப்படி கண்டுபிடிப்பது அல்லது தகவல்களை அழிப்பது என பார்ப்போம்..

நன்மைகள் :

உங்கள் போன் இருக்கும் இடத்தை google map மூலம் அறியலா.

உங்கள் மொபைல் வீட்டில் ஏதேனும் இடத்தில் மறைத்திருந்தால் அது சைலன்ட் மோடில் இருந்தாலும் ரிங் செய்ய வைக்கலாம்.

உங்கள் போனின் தகவல்களை , போனை கண்டெடுத்தவர் பார்க்காமல் அழிக்கலாம்.

போனுக்கு புது பாஸ்வோர்ட் செட் செய்யலாம்.

உங்கள் போனில் செய்யவேண்டியவை:


போனில் GOOGLE SETTING செல்லவும்.(போனில் உள்ள செட்டிங் மெனு இல்லை.


 Security. ஆப்ஷனை தெரிவு செய்யவும்.


 "Android Device Manager,"  என்ற ஆப்ஷனுக்கு கிழே 

 Remotely locate this device ஆப்ஷனை டிக் செய்யவும், 

Allow remote lock and factory reset  கிளிக் செயவும்.

அதில் கிழே  உள்ளது போல ஒரு விண்டோ வரும்.




ஆக்டிவேட் என்ற பட்டனை கிளிக் செய்யவும்.

அவ்வளவுதான்....



கணினியில் ...

www.google.com/android/devicemanager  என்ற தளத்துக்கு செல்லவும். (உங்கள் போனில் இணைய இணைப்பு இருக்க வேண்டும். ) 

உங்கள் GMAIL ID மூலம் உள்நுழையவும்.

உங்கள் இருப்பிடம் GOOGLE MAP இல் தெரியும்.







இதில் RING  என்ற ஆப்ஷனை கிளிக் செய்தால் உங்கள் போன் அலாரம் அடிக்கும்.(சைலன்ட் மோடில் இருந்தாலும்)

LOCK & ERASE  மூலம் காணாமல் போன போனில் உள்ள தகவைகளை அழிக்கலாம். அல்லது போனை லாக் செய்யலாம்.

GOOGLE MAP மூலம் தற்போது போன் இருந்க்கும் ஏரியாவையும் அறியலாம்.


ஒரு முக்கியமான இணையதளத்தை காண இங்கே கிளிக் செய்யவும்.

Saturday, September 5, 2015

ANDROID போன் மூலம் கணினியை கட்டுபடுத்துவது எப்படி?



          

          இன்றைய அறிவியல் உலகமே நம் கையில் ஆண்ட்ராய்ட் போன் வடிவில் வந்துள்ளது. இதன் மூலம் பல நன்மைகள் உள்ளது. நமது வீட்டில் உள்ள கணினியை ஆண்ட்ராய்ட் போன் மூலம் எப்படி கட்டுபடுத்துவது என்பதை இன்றைய பதிவில் பார்க்கலாம்.

நன்மைகள் :

உங்கள் கணினியை உலகில் எந்த மூலையில் இருந்தும் இயக்கலாம்.
உங்கள் கணினியில் என்ன நடக்கிறது என்பதை கண்காணிக்கலாம்.
போன் மூலம் கணினியை நிறுத்தலாம்.
மென்பொருள்களை நிறுவலாம், அழிக்கலாம்.

வழிமுறை :

முதலில் உங்கள் கணினியில் GOOGLE CHROME WEB BROWSER திறந்துகொள்ளவும்.



அந்த விண்டோவில் இடது பக்கத்தில் APPS  என்ற ஆப்ஷனை தெரிவு செய்யவும்.


அதில் WEB STORE  என்ற ஆப்ஷனை தெரிவு செய்யவும்.


அதில் வரும் விண்டோவில் இடதுபக்கம் உள்ள SEARCH BOX இல் CHROME REMOTE DESKTOP என தேடவும்.


வரும் விண்டோவில் முதலில் உள்ள AD-ON CHROME REMOTE DESKTOP என்ற AD-ON ஐ கிளிக் செய்யவும். இது முழுவதும் இன்ஸ்டால் ஆகும் வரை காத்திருக்கவும்.(ADD APP என்பதை கிளிக் செய்யவும் )


இப்போது CHROME விண்டோவில் CHROME REMOTE DESKTOP என்ற ஐகான் புதிதாக இணைந்திருக்கும். அதனை கிளிக் செய்யவும். 





அதில் MY COMPUTER என்ற ஆப்ஷனுக்கு கீழே GET STARTED என்பதை கிளிக் செய்யவும்.



அதில் ENABLE REMOTE CONNECTION என்ற பட்டனை கிளிக் செய்யவும்.

மேலே உள்ளது போல ஒரு விண்டோ வரும் . CHROME INSTALLER என்ற கோப்பு தரவிறக்கம் ஆகும்.



இன்ஸ்டால் ஆனதும் PIN NUMBER கேட்கும். ஏதேனும் ஆறு இலக்க எண்ணை கொடுக்கவும்.(EX: 123456 )


இப்பொது ஒகே பட்டனை கிளிக் செய்யவும். 


திரையில் உங்கள் கணினியின் பெயர்  வந்திருக்கும். 

ஆண்ட்ராய்ட் போனில் செய்ய வேண்டியவை "


உங்கள் மொபைல் போனில் PLY STORE இல் CHROME REMOTE DESKTOP என்ற அப்ளிகேஷனை தரவிறக்கி இன்ஸ்டால் செய்யவும்.





அதில் நீங்கள் CHROME இல் LOGIN செய்த மெயில் ஐடியிலேயே இந்த ஆப்ளிகேஷனிலும் LOG IN செய்யவும்.



இப்போது திரையில் உங்கள் கணினியின் பெயர் தெரியும்.(உங்கள் கணினியில் பெயர் தெரிய MYCOMPUTER இல் RIGHT MOUSE CLICK செய்து PROPERTIES சென்று பார்க்கவும்.)





நீங்கள் முன்பு கொடுத்த PIN NUMBER (EX: 123456) ஐ கொடுக்கவும்.
இப்பொது உங்கள் கணினியும் மொபைலும் இணைந்து விடும். கணினியில் நடப்பதை போனில் பார்க்கலாம். போன் மூலம் கணினியை இயக்கலாம்.


மேலும் விவரத்திற்கு இந்த வீடியோவை பார்க்கவும்.



Wednesday, September 2, 2015

புதன் ஸ்தலம் (திருவெண்காடு ) : ஒரு சிறப்பு பார்வை






நவ கிரகங்களில் இரண்டு எங்கள் ஊர் அருகிலேயே உள்ளது . பலமுறை சென்று இருந்தாலும் ஏனோ அதைப்பற்றி எழுதவேண்டும் என்ற எண்ணம வந்ததில்லை . சென்ற வாரம் புதன் ஸ்தலம் சென்றேன் . அதைபற்றிய பதிவே இது .


நாகை மாவட்டம் , சீர்காழி வட்டத்தில் உள்ளது திருவெண்காடு . மயிலாடுதுறையில் இருந்து 25 KM , சீர்காழியில் இருந்து 13 KM தூரமும் உள்ளது இந்த கோவில் .சுவேதாரண்யா சுவாமிகள் கோவிலுடன் இணைந்து இந்த ஸ்தலம் உள்ளது .


திருமதி வித்யாம்பாள் சன்னதியின் அருகில் உள்ளது புதன் ஸ்தலம் . மூன்று களங்கள் உள்ள ஒரு சில கோவில்களில் இதுவும் ஒன்று .

பலன்கள் :

  • கல்வியில் மேன்மை
  • உடல்நலம்
  • குடும்ப சந்தோசம் அதிகரிப்பு
  • செல்வம் பெருக
  • தொழில் வளர்ச்சி


வழிப்பாட்டு முறைகள் :


  • அகல்விளக்கு வைத்து வழிபடலாம்
  • வில்வ இலையால் பூஜை
  • துளசி வழிபாடு



பார்க்கவேண்டியவை :

நீங்கள் எங்கு நின்று பார்த்தாலும் ரயில் உங்களை நோக்கி வருவதுபோல வரையபட்ட ஓவியம



வாயிலில் உள்ள நந்தி



சந்திர தீர்த்தம் (புதன் ஸ்தலம் எதிரே உள்ளது )



திருமதி வித்யாம்பாள் சன்னதி




ஆனந்த தாண்டவம் ஓவியம்


சுவேதார்ணய சுவாமிகள் ஆலயம்


பிரகாரம்





சகித்து கொள்ளமுடியாத விஷயம் :


புதனுக்கு அர்ச்சனை செய்ய டிக்கெட் 15 ரூபாய் என்று வாங்குகின்றனர் .ஆனால் டிக்கெட் விலை 5  மட்டுமே , மீதி 10 க்கு கொஞ்சம் வில்வ இலையை கொடுக்கின்றனர் . இந்த 10 ரூபாய் எந்த கணக்கில்வரும் , யார் யார்க்கு போகும் , இது அரசு அனுமதியுடன் நடக்கிறது என்பது அந்த புதனுக்கே வெளிச்சம் .


இதையும் படிக்கலாமே :