> என் ராஜபாட்டை : அப்பா

.....

.

Saturday, January 9, 2010

அப்பா

அப்பா
இன்று உன் பிறந்தநாள் !
என் பிறந்தநாளை நினைவில் கொள்ள
தெரிந்த உனக்கு
உன் பிறந்த நாளை நினைவில் கொள்ள
ஏன் தெரியவில்லை ?
எனக்கு புத்தாடை அணிந்து ரசிக்கும் நீ
என்றுமே கதராடையில் மட்டுமே இருப்பாய்!
நான் அனுபவித்த சுகங்கள் அனைத்துமே
உன்னை வருத்தி நான் பெற்றதுதான்
அதற்காக என்னை மன்னித்துவிடு !
ஆனால் அத்தகு வேளையிலும் நீ
என்னை கடிந்து பேசியதே இல்லை !
இன்னொரு பிறவி என்று ஒன்று இருந்தால்
அதில் நான் உன் மகளாக பிறக்க கூடாது
நீ என் மகனாக பிறக்க வேண்டும்
அப்போதுதான் நான் உனக்கு கொடுத்த
வேதனைகளின் வலி எனக்கு புரியும் !!

நன்றி :
malinihariprasad in மாலினியின் உணர்வுகள்

2 comments:

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...