> என் ராஜபாட்டை : January 2013

.....

.

Monday, January 28, 2013

விஸ்வருபம் தடை சரியா ? தவறா ? மாபெரும் கருத்து கணிப்பு



நண்பர்களே பதிவிற்குள் போகும் முன் உங்கள் கருத்தை (VOTE)SIDE இல் உள்ள ஓட்டு படையில் செலுத்தவும் .

விஸ்வருபம் படத்தை பற்றிதான்கடந்த இரண்டு நாளாக இணையத்திலும் , வெளியிலும் அதிகம் விவாதிக்கபடுகிறது . முஸ்லிம் நண்பர்கள் இந்த படம் தங்களை , தங்கள் மதத்தை கேவலபடுத்துகிறது எனவும் அதனால் இதை தடை செய்தது சரி எனவும் வாதிடுகிறனர் .

மற்றவர்கள் (பல முஸ்லிம் நண்பர்களையும் சேர்த்து ) இந்த படத்துக்கு தடை விதிப்பது சரியல்ல . இது கருத்து சுததிரகுத்தை பறிப்பது எனவும் அதனால் இதை தடை செய்தது தவறு எனவும் கூறுகின்றனர் .

பொதுவான சிலர்( படத்தை பார்த்து விட்டு) இதில் முஸ்லிம் நண்பர்கள் ஆட்சேபம் செய்யும் அளவுக்கு ஒன்றும் இல்லை என சொல்கின்றனர் . படம் அருமை அல்லது மொக்கை என சொல்லும் நண்பர்கள் இதில் அடக்கம் .

படம் எடுக்க எத்தனையோ கதை இருக்க இதை என் எடுக்க வேண்டும் என சிலரும் , தாலிபானை தடை செய்ய சொல்லி போராடாமல் படத்தை தடை செய்ய சொல்வது நியாயமா என கேட்கின்றனர் .

எனது ( நமது ) வருத்தம் எல்லாம் நண்பர்களாக , அண்ணன் தம்பியாக பழகிய நாம் ஒரு படத்தால்  எதிர் எதிர் துருவமாக மாறுவது வருத்தமாக உள்ளது . படம் சாதரணமாக வந்திருந்தாள் இவ்வளவு விளம்பரம் கிடைத்திருக்காது . பார்ப்போம் நாளை கோர்ட் என்ன சொல்கிறது என்று .


Tuesday, January 22, 2013

அழகாக இருக்க சில எளிய குறிப்புகள் (TEEN AGE BOYS & GIRLS MUST READ)





நீங்கள், தினமும் ஐந்து விதமான பழங்களையும், சில காய்கறிகளையும் உணவாக எடுத்துக் கொள்பவரா..? ஆம் என்றால்... ஆரோக்கியமும் அழகும் எப்போதும் உங்க
பக்கம்தான்!

முஸ்கி : நண்பன் அனுப்பிய மெயிலில் இருந்து ஒரு பகுதி இது



முஸ்கி : முதல் பகுதியை படிக்க : CLICK HERE


===============================================================
 தினமும் ஒரு டம்ளர் மாதுளை ஜூஸ் குடிப்பது... உடலில் ரத்த அழுத்தம், கொழுப்பு, நச்சுத்தன்மை என பல  ரச்னைகளுக்குத் தீர்வாக இருக்கும்.



மனநலக் கோளாறு மற்றும் மூளை நரம்புகளில் பாதிப்பு உள்ளவர்களின் தினசரி உணவில் தர்பூசணி துண்டுகள் அவசியம். மன அழுத்தம், பயம் போன்ற பாதிப்புகளை தகர்க்கும் விட்டமின் பி-6 தர்பூசணியில் அதிகம்.

===============================================================

ஆப்பிள் தோலில் பெக்டின் என்ற வேதிப்பொருள் கணிசமாக இருப்பதால், தோலோடு சாப்பிட வேண்டும். பெக்டின் நம் உடலின் நச்சுக்களை நீக்குவதில் எக்ஸ்பர்ட்.

===============================================================
 பூண்டு சாப்பிட்டீர்களென்றால்... உங்கள் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி வெகுவாக அதிகரிக்கும். வெள்ளை அணுக்கள் அதிகம் உற்பத்தியாவதோடு, கேன்சர் செல்கள் உருவாகாமலும் தடுக்கும்.


===============================================================

சிவப்பணு உற்பத்திக்கு புடலங்காய், பீட்ரூட், முருங்கைக்கீரை, அவரை, பச்சைநிறக் காய்கள், உளுந்து, துவரை, கம்பு, சோளம்,
கேழ்வரகு, பசலைக்கீரை போன்றவற்றை அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும்.

===============================================================

 பச்சைப் பயறு, மோர், உளுந்துவடை, பனங்கற்கண்டு, வெங்காயம், சுரைக்காய், நெல்லிக்காய், வெந்தயக்கீரை, மாதுளம் பழம், நாவற்பழம், கோவைக்காய், இளநீர் போன்றவை உடலின் அதிகப்படியான சூட்டைத் தணிக்கும்.

===============================================================

சுண்டைக்காயை உணவில் சேர்த்தால்... நாக்குப்பூச்சித் தொல்லை, வயிற்றுப்பூச்சித் தொல்லை தூர ஓடிவிடும்.

===============================================================

வெங்காயம், பூண்டு, சிறுகீரை, வேப்பிலை, மிளகு, மஞ்சள், சீரகம்,
கருப்பட்டி, வெல்லம், சுண்டைக்காய் வற்றல், செவ்விளநீர், அரைக்கீரை, எலுமிச்சை போன்றவை உடலில் உள்ள நச்சுத்தன்மை நீக்கும் உணவுகள்.


===============================================================

 பொன்னாங்கண்ணிக் கீரையைத் துவட்டல் செய்து சாப்பிட்டு வந்தால், மூல நோய் தணியும். இந்தக் கீரையின் தைலத்தை தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால்... கண் நோய்கள் நெருங்காது.

===============================================================

 சமையலுக்குக் கைக்குத்தல் அரிசியைப் பயன்படுத்துவது மிக மிக நல்லது. கைக்குத்தல் அரிசியில் நார்ச் சத்துக்கள் நிறைந்துள்ளன.

===============================================================

சைக்கிள் கேப்பில் எல்லாம் ஸ்நாக்ஸ் சாப்பிடுவதை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாக தானியங்கள், முளைகட்டிய பயறு போன்றவற்றைச்
சாப்பிடலாம்.

===============================================================

 பப்பாளிப் பழங்கள் மிகவும் சத்து மிகுந்தவை. வாரம் ஒருமுறை பப்பாளிப் பழம் வாங்கிச் சாப்பிடுங்கள். கண்களுக்கும் நல்லது.

===============================================================

அதிக நாட்கள் உணவை ஃப்ரிட்ஜில் வைத்து சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.  அப்படி வைக்கப்பட்ட உணவுகளில் சத்துக்கள் குறைந்து விடுவதோடு, உடல் ஆரோக்கியத்துக்கும் தீங்கினை ஏற்படுத்தும்.

===============================================================

 தினசரி சிறு துண்டு பைனாப்பிளை தேனில் ஊற வைத்து, அந்தத் தேனை இரண்டு வாரம் சாப்பிட்டால் கல்லீரல் ஆரோக்கியமாக இருக்கும்.

===============================================================

 பலமான விருந்து காரணமாக ஜீரணக் கோளாறா? புதினா, தேன், எலுமிச்சைச் சாறு...இவற்றில் ஒவ்வொரு ஸ்பூன் கலந்து சாப்பிட்டால் போதும். கல்லும் கரைந்துவிடும்.

===============================================================

கேன்சர் செல்களைத் தகர்க்கும் சக்தி திராட்சையின் தோலில் இருக்கிறது. திராட்சை கொட்டைகளிலிருந்து பெறப்படும் மருந்துப் பொருட்கள், வைரஸ் எதிர்ப்புச் சக்தியை பெரிதும் தூண்டுகின்றன.


Saturday, January 19, 2013

அஜித் Vs ஆர்யா மற்றும் சன் டிவி



ஒவ்வொரு 8 மாதத்திற்குள்ளும் ஒரு படத்தை முடித்துவிட்டு, அடுத்த படத்திற்கு செல்லவேண்டும் என்று அஜீத் முடிவு செய்துள்ளார். இந்த முடிவை அவர் மங்காத்தாவில் இருந்தே பின்பற்றி வருகிறார். மங்காத்தாவில் நடித்துக் கொண்டிருக்கும்போதே, பில்லா 2விலும் நடித்தார். தற்போது விஷ்ணுவர்தன் இயக்கத்தில் நடிக்கும் படமும் முடியும் தருவாயில் உள்ளது. இதன்பிறகு சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். விருதுகள் வாங்கி குவிப்பதில் ஆசை இல்லை எனவும், ரசிகர்களின் பாராட்டுகள் கிடைத்தாலே போதும் எனவும் அஜீத் கூறியுள்ளார்.

============================================================


அஜித்துக்கும், ஆர்யாவுக்கும் உக்கிரமான சண்டை
எல்லோருமே கேள்விப்பட்டிருக்கலாம். சமீபத்துல அஜித்தும், ஆர்யாவும் சண்டை போடற சீன் ஒன்றை விஷ்ணுவர்தன் எடுத்ததை. அப்போதான் நடந்தது இந்த சம்பவம்.

சம்பவம், சம்பவம்னா ஏதோ சீரியஸ் சம்பவம்னு நினைச்சு பதற்றப்பட வேண்டாம். அஜித்துக்கும், ஆர்யாவுக்கும் உக்கிரமான சண்டையை ஸ்டன்ட் மாஸ்டர் கிரியேட் பண்ணியிருக்கார். அதுல அஜித்தை, ஆர்யா அடிக்கிற மாதிரியும் சீன் இருக்காம்.

ஆனா அஜித் ரசிகர்கள் என்ன சொல்வாங்களோன்னு ஆர்யா தயங்க, “அதெல்லாம் என் ரசிகர்களை நான் சமாதானப் படுத்திக்கிறேன். நீ தயங்காம நடி. அப்பதான் சீன் நல்லா வரும்..!”ன்னு அஜித் தைரியம் கொடுத்திருக்கார்.

அதேபோல அடுத்து ஆர்யாவை அஜித் வெளுக்கிற சீன். அப்போ ஆர்யாகிட்ட அஜித், “உங்க ரசிகர்கள் இதை எப்படி எடுத்துப்பாங்க..?”ன்னு கேட்க, “அது ஒரு நாலு பேர்தான் சார்… நான் சொல்லிக்கிறேன்..!”ன்னதுல அஜித்தே சிரிச்சுட்டாராம்.

‘தல’ யையே சிரிக்க வச்ச தயாளன் ஆர்யா..!

தல யை பெருமைபடுத்திய சன்   டிவி


நன்றி : Thala always amarkalam FACEBOOK PAGE

Thursday, January 17, 2013

பெண்களுக்காக..


படித்து விட்டிர்களா ?

அஜித் Vs அரசியல்வாதிகள்


====================================================
சமிபத்தில் நண்பர் ஒருவர் 100 மருத்துவ குறிப்புகள் அடங்கிய மெயில் ஒன்றை அனுப்பினார் . அதை ஒரே பதிவாக போட்டால் மிக நீண்ட பதிவாக போய் விடும் என்பதால் பிரித்து போடுகிறேன் . முதலில் பெண்களுக்கு தேவையான சில மருத்துவ குறிப்புகள் இந்த பதிவில் . அடுத்தாடுத்த பதிவுகளில் மற்ற குறிப்புகள் வரும் .


 
  1.   இளவயதில் தினமும் ஒரு கப் பால் குடிப்பது, எலும்புகளை வலுவாக்கி கால்சியம் சத்தை அதிகரிக்கும்.
  2.   முட்டைகோஸில் ஈஸ்ட்ரோஜன் அதிகமென்பதால் மார்பக புற்று வரமல் தடுக்க கோதுமை உணவுடன் கோஸ் சேர்த்து உண்ணலாம்.
  3.   மார்பக புற்று உள்ளிட்ட பல்வேறு புற்று நோய்கள் வராமல் தடுக்க ஆப்பிள் உதவுகிறது.  13.மாதவிடாய்க் கால மன அழுத்தம், பயம், பதற்றம் ஆகியவற்றால் தொந்தரவா? அந்த நாட்களில் கார்ன்ஃபிளாக்ஸை காலை உணவாக்குங்கள்.

                                                      
கர்ப்பக் கால கவனிப்பு
  1.   கர்ப்பிணிகள், நாவல்பழம் சாப்பிட்டால் வயிற்றில் உள்ள குழந்தை கறுப்பாகப் பிறக்கும் என்பதும், குங்குமப்பூ சாப்பிட்டால் சிவப்பாகப் பிறக்கும் என்பதும் மூட நம்பிக்கையே. தோலின் நிறத்தை நிர்ணயிப்பவை 'மெலனின்' எனப்படும் நிறமிகளே!
  2.   கர்ப்பிணிகள், இரும்புச்சத்து மாத்திரை சாப்பிட்டால், உடல் லேசாக கறுத்து, பிறகு பழைய நிறத்துக்கு வந்துவிடும். இதை வைத்தே, குழந்தையும் கறுப்பாக பிறக்கும் என்று சிலர் பயப்படுவார்கள். அது தேவையற்றது.
  3.   கர்ப்பிணி பெண்கள், காலையில் சீக்கிரம் சாப்பிட வேண்டும். இதனால்
  4. ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையாமலிருக்கும். அடிக்கடி மயக்கமும் வராது.
  5.   வயிற்றில் குழந்தை வளர வளர, குடல் ஒரு பக்கம் தள்ளும். அப்போது அதிகமாக சாப்பிட முடியாது. சீக்கிரமும் பசிக்காது. அந்த நேரங்களில் ஜூஸ், முளைகட்டிய தானியங்கள் போன்றவற்றை, பல வேளைகளாகப் பிரித்துச் சாப்பிட வேண்டும்.
  6. . பிரசவ காலத்துக்குப் பின் வயிற்று தசைகள் வலுப்பெற உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும்.
  7.   கர்ப்பிணிகளின் உடலுக்கு இயற்கையான குளிர்ச்சியைத் தருகிறது வாழைப்பழம். உடல் காரணங்களால் மட்டுமல்ல... உணர்ச்சி வசப்படுவதாலும் உடலைப் பாதிக்கும் சூட்டை வாழைப்பழம் நீக்குகிறது. தாய்லாந்தில் தாயாகப் போகிறவரின் தினசரி உணவில் வாழை ரெசிபிக்கள் விதவிதமாக இருக்கும்.
  8.   கர்ப்பக் காலத்தில் சிலருக்கு கால்கள் வீங்குவது வழக்கமான ஒன்று. அதிகமாக தண்ணீர் குடிப்பதால்தான் இப்படி என்று சொல்வது தவறு.
  9.   கர்ப்பக் காலத்தில் மலச்சிக்கல் பிரச்னை வரும். அதைத் தவிர்க்க அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும்.
  10.   பிரசவம் முடிந்த சில நாட்களில், வயிறு சுருங்க வேண்டும் என்பதற்காக பெரிய துணியை வயிற்றில் கட்டிவிடுவார்கள். அது தவறு. இதனால் கருப்பை கீழிறங்கிட வாய்ப்பு உண்டு. இருமல் அல்லது தும்மலின்போது சிலருக்கு சிறுநீர் வெளியாவதற்கு காரணம் இதுதான். பிரசவம் முடிந்து ஆறு வாரம் கழித்து, அதற்கான பெல்ட்டை அணியலாம்.
  11.   தைராய்டு, சுகர் போன்ற பிரச்னைகள் உள்ள பெண்கள், கர்ப்பக் காலத்தில்
  12. அதற்கான மருந்துகளைக் கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும். அது, குழந்தையைப் பாதிக்காது.
  13.   பிறந்த குழந்தைக்கு பழைய துணியை முதலில் அணிவிப்பது சம்பிரதாயமாக இருக்கிறது. நீண்டநாள் பெட்டியில் வைத்திருந்த துணியை அப்படியே எடுத்துப் போடக் கூடாது. அதில் தொற்றுக் கிருமிகள் இருக்கலாம். துவைத்து, காய வைத்த பிறகே அணிவிக்க வேண்டும்.
  14.   சில கிராமங்களில் பிறந்த குழந்தையின் நாக்கில் தேன், சர்க்கரை, கழுதைப் பால் போன்றவற்றைத் தடவும் பழக்கம் உள்ளது. நாள்பட்ட தேனாக இருந்தால் அதிலிருக்கும் ஒரு வகை நச்சுக்கிருமி, இளம்பிள்ளைவாதத்தைக்கூட கொண்டு வரக்கூடும்.
  15.   வாழைப்பழத்தில் இருக்கும் பொட்டாசியம் குழந்தைகளின் மூளைத்திறனைத் தூண்டுகிறது.
  16.   குழந்தைகள் விளையாடச் செல்வதற்கு முன்பு நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். விளையாடும்போது வியர்வையாக வெளியேறும் நீரை, அது ஈடு செய்யும்.
  17.   தாய்ப்பாலைச் சேமித்துக் கொடுப்பது நல்லதல்ல. தவிர்க்கமுடியாத பட்சத்தில், சுத்தமான பாத்திரத்தில் சேகரித்துக் கொடுக்கலாம். சாதாரண அறை வெப்பத்தில் 6 மணி நேரம் வரை கெடாமல் இருக்கும்.
  18.   தயிர் சாப்பிட்டால் குழந்தைகளுக்குச் சளி பிடிக்கும் என்பது தவறு.
  19. குழந்தைக்குத் தயிர் மிகவும் நல்ல உணவு. தயிரில் புரொபயோட்டிக் எனும் சத்து அதிகம். அது குடலுக்கு மிக நல்லது. குழந்தைக்கு அலர்ஜி வராமல் தடுக்கும்.
  20.   குழந்தைகள் உணவில் மாவுச் சத்துக்களே அதிகமிருப்பதால்... வாழைப்பழம் அவசியம் கொடுக்க வேண்டும். இது மலச்சிக்கலைப் போக்கும். வாழைப்பழம் சாப்பிட்டால் சளி பிடிக்கும் என்பது தவறு.
  21.   குழந்தைகள் குண்டாக இருக்க வேண்டும் என்று அளவுக்கு அதிகமாக உணவு கொடுத்து உடலை பருமனாக்காதீர்கள். 60 வயதில் வர வேண்டிய பி.பி., சுகர் போன்றவை 30 வயதிலேயே வந்துவிடும். குழந்தைகளை சீரான உடல்வாகுடன் வளர்க்கப் பாருங்கள்.

 இன்றைய தத்துவம் :