> என் ராஜபாட்டை : April 2014

.....

.

Wednesday, April 30, 2014

"தல" தினம்






நாளை மே 1 உழைப்பாளர் தினம் ஆனால் பல லட்ச ரசிகர்களுக்கு அது தல தினம் . ஆம் கோடானகோடி ரசிகர்களை தன்வசம் வைத்துள்ள தல என்கின்ற அஜித்குமாரின் பிறந்தநாள் அன்றுதான் . ஏன் இவருக்கு இவ்வளவு ரசிகர்கள் ? இவர் தொடர்ந்து பல வெற்றிப்படங்கள் கொடுத்ததில்லை ஆனாலும் ரசிகர் கூட்டம் குறையவில்லை ஏன் ?



  •  ரசிகர் மன்றங்களை கலைத்தபின்பும்  ரசிகர்கள் இவர்பின்னே தான் இருக்கிறார்கள் .

  • இவர் முன்னேற இவர் குடும்பத்தில் உள்ள யாரும் முக்கியபங்கு (அதாவது திரையுலகில் ) ஆற்றவில்லை .
  • சாதாரண மெக்கானிக்காக இருந்தவர் இந்த அளவு முன்னேற காரணம் உழைப்பு என்பதை தன ரசிகர்களுக்கு புரியவைத்தவர் .
  • சினிமா உலகில் விமானம் ஓட்ட உரிமம் வைத்துள்ள ஒரே நடிகர் .
  • சினிமா மட்டும் இன்றி கார் பந்தயத்தில் கலக்குபவர் . நாலு அடி உயரத்தில் இருந்துவிழுத்தால் ஏதாவது ஆகிவிடும் என டுப் போடும் நடிகர்களுக்கு மத்தியில் உயிரை பணயம் வைத்து கார் ஓட்டியவர் .
  • செய்த உதவிகளை ஊர் முழுவதும் தம்பட்டம் அடிக்காதவர் . பலருக்கு இவர்தான் உதவி செய்தார் என்பதே தெரியாது .
  • தன்னை அளட்சியபடுத்திய நபர்களுக்கு , அவர்கள் கஷ்டகாலத்தில் உதவி செய்து அவர்களை அரவணைத்தவர் . உதாரணம் : கொவ்தம் மெனேன் .
  • ஆங்கில நடிகர்கள் உண்மையான கெட்டப்பில் நடிக்கும் போது நாம் மட்டும் ஏன் மேக்கப் போடவேண்டும் என சொல்லி வெள்ளை தலையுடன் நடிக்கிறார் .
  • தான் ஒரு பிரபலம் என்பதை பயன்படுத்தி எந்த சலுகையும் பெற விரும்பாதவர் . 
  • தமிழகத்தில் சரியாக வருமானவரிகட்டும் நடிகர்களில் கமலுக்கு அடுத்து அஜித்தான் .
  • தன் படத்தின் எந்த புரோமோஷன் விழாவிலும் கலந்துகொள்ளமாட்டார் . படத்தை பற்றி மக்கள்தான் பேசவேண்டும் , நாமே பேசகூடாது என்பதில் உறுதியாக உள்ளார் .


அஜித்தின் சன்  டிவி பேட்டி :    


Wednesday, April 23, 2014

தயவு செய்து ஓட்டு போடாதிங்க !!





என்னடா எல்லாரும் , எல்லா ஊடகமும் மறக்காம நாளை ஓட்டு போடுங்கனு கத்திக்கிட்டு இருக்கு நீ ஓட்டு போடாதிங்கனு சொல்ற என்ன ஆச்சு உனக்குன்னு பார்கின்றிர்களா ? மேலே படியுங்கள் ..


தயவு செய்து ஓட்டு போடாதிங்க !!

  •  நம்ம சாதி , மதத்தை சார்த்தவர்னு சொல்லி யாருக்கும் தயவு செய்து ஓட்டு போடாதிங்க !!
 
  • கட்சிமேல் பாசம் இருக்கட்டும் , அதுக்காக அந்த கட்சி எவ்வளவு ஊழல் செய்தாலும் பரவாயில்லை அவனுக்கு தான் என் ஓட்டு என எண்ணி தயவு செய்து ஓட்டு போடாதிங்க !!
 
  • கடவுள் இருக்குனு சொல்றவனை நம்பலாம் , இல்லைன்னு சொல்றவனையும் நம்பலாம் , அதுபோல தான் மதமும் . இந்த மதசார்பின்மையை பேசி ஒரு குறிபிட்ட மதத்திற்கு ஜால்ரா அடிக்கும் கட்சிக்கு தயவு செய்து ஓட்டு போடாதிங்க !!
 
  • எவ்வளவு பணம் கொடுத்தாலும் வாங்கிகொள்ளுங்கள் ஆனா அவர்களுக்கு தயவு செய்து ஓட்டு போடாதிங்க !!
 
  • முன்பே உங்கள் தொகுதில் வெற்றிபெற்றவராக இருந்தால் அவர் செய்த நன்மைகளை எண்ணிப்பாருங்கள் , அப்படி ஒண்ணுமே செய்யலைனா அவருக்கு தயவு செய்து ஓட்டு போடாதிங்க !!
 
  • தன் சாதனைகளை சொல்லி ஓட்டு கேட்காமல் அடுத்தவரை குறைசொல்லியே ஒட்டுகேட்கும் , கேட்ட கட்சிகளுக்கு தயவு செய்து ஓட்டு போடாதிங்க !!
 
  • நமக்கு பிடிக்காத முடிவு என்றாலும் அதில் உறுதியா உள்ள கட்சியை நம்புங்கள் , ஆனா டெல்லியில் ஒரு முடிவு , இங்கே வந்தா பல்டி என இருக்கும் கட்சிகளுக்கு தயவு செய்து ஓட்டு போடாதிங்க !!
 
  • நமது தொகுதியில் நிற்பவர் யாரும் சரியில்லை என எண்ணி நோட்டாவுக்கு தயவு செய்து ஓட்டு போடாதிங்க !!
 
  • நோட்டாவுக்கு பதில் சுயேட்சைக்கு போடுங்கள் , இரண்டுமே வீணாகத்தான் போகும் , ஆனால் சரியில்லாத வேட்பாளர்க்கும் மட்டும் தயவு செய்து ஓட்டு போடாதிங்க !!
 

நமது ஓட்டை நல்லவர்களுக்கு போட்டு நாட்டை நல்வழி படுத்துவோம் . மறக்காமல் ஓட்டு போடுங்கள் .

Monday, April 21, 2014

ரசிகர்களை ஏமாற்றிய சிவகார்த்திகேயன்





           நேற்று மாலை மயிலாடுதுறையில் உள்ள கென் பிரிட்ஸ் பள்ளி ஆண்டுவிழாவின் சிறப்பு விருந்தினராக நடிகர் சிவகார்த்திகேயன் கலந்துகொண்டார் . அவர் இப்போது வளரும் நடிகராகவும் , மாஸ் நடிகர் பட்டியலில் முக்கியமானவராகவும் இருப்பதாலும் , கல்லூரி மாணவ, மாணவியர் முதல் குழந்தைகள் வரை பலதரபட்ட ரசிகர்கள் இருப்பதாலும் கூட்டம் அதிகம் வரும் என கணிக்கபட்டது .

ஐந்து மணிக்கு துவங்க ஆரம்பித்தது விழா சிவா இல்லாமல் . அப்போதே பயங்கர கூட்டம் . என் வாழ்க்கையில் இவ்வளவு கூட்டத்தை பார்த்ததில்லை . வண்டியை நிறுத்த இடம் இல்லாமல் வயலில் நிறுத்தினோம் .

மாணவிகள் கலை  நிகழ்ச்சி ,தலைமையுரை என மேடையில் பேச அதை யாரும் கவனித்தது போல தெரியவில்லை . சிவாவுக்காகதான் வெய்டிங் . அவர் வர ஒரு பாதை அமைத்து இருந்தனர். இருபக்கமும் செம கூட்டம் , அவர் அதில் நடந்து வர வாய்பில்லை என தெரிந்தது . எப்படி அழைத்து வர போகிறார்கள் என ஆவலுடன் காத்திருந்தோம் .


திடிரென ஒரு கார் கூட்டத்திற்குள் வந்தது , அனைவரும் ஓடிபோய் அந்த காரை சூழ்ந்து கொண்டார்கள் . காரில் இருந்து மெதுவாக ஒருவர் இறங்கினார் . அவர் யாரோ தெரியவில்லை , கூட்டம் ஏமாற்றத்தில் திரும்ப , மேடையில் பார்த்தால் சிவா. இங்கு ஒரு காரை காட்டி ஏமாற்றிவிட்டு அவரை வேறு காரில் மேடைக்கு அழைத்து சென்றுவிட்டனர் .

ஏமாற்றிய சிவா பேச்சு :

மேடையில் சிவா பேசியது ..

"இங்கு உள்ள அனைவருக்கும் , பள்ளி நிருவாகம், ஆசிரியர்கள் அனைவருக்கும் வணக்கம் . நான் இவ்வளவு கூட்டத்தை எதிர்பார்க்கவில்லை . நான் இந்த அளவு வளர நீங்கள்தான் காரணம் . எனக்கு மாயவரம் புதிதில்லை . எனது உறவினர்கள் இங்குதான் உள்ளார்கள் . இங்கு உள்ள விஜயா, ரத்னா தியட்டரில்தான் அடிகடி படம் பார்ப்பேன் .

முன்பு கொஞ்சம் உறவினர்கள் இருந்தார்கள் . இபோது உங்களையும் சேர்த்து எனக்கு நெறைய உறவினர்கள் . என் வளர்ச்சிக்கு உங்கள் கைதட்டல்தான் காரணம் . நிறைய பேசவேண்டும் என நினைத்தேன் . ஆனால் முடியவில்லை .

வருத்தபடாத வாலிபர் சங்கத்தில் இருந்து முதல் பாடலை நாலு வரி பாடுகிறேன் நீங்களும் பாடுங்கள் .(பாடுகிறார் ). அனைவருக்கும் நன்றி ."


சிவா பலகுரல் மன்னன் என்பது அனைவருக்கும் தெரியும், அதுமட்டுமல்ல நகைசுவையாக பேசுவதில் வல்லவர் . நேற்று அவரிடம் இதைதான் பலர் எதிர்பார்த்தார் . குறைந்த பட்சம் அரைமணி நேரமாவது பேசுவார் என மக்கள் நினைத்தார்கள் ஆனால் ஐந்து நிமிடத்தில் முடித்துவிட்டார் . மற்றும் அவர் பேசும் போது நேரடி ஒளிபரப்பும் வேலை செய்யாததால் பலர் அவரை சரியாக பார்க்க முடியவில்லை . எதோ எட்ட இருந்து பார்த்ததே போதும் என பலர் உடனே கிளம்பிவிட்டனர் . 


மொத்தத்தில் அவர் ரசிகர்களுக்கு கொஞ்சம் சந்தோசம் , கொஞ்சம் கஷ்டம் , நெறைய ஏமாற்றம் .

Friday, April 18, 2014

மயிலாடுதுறை M.L.A வும் FACEBOOK க்கும் ...







கடந்த வருடம் நடந்தசம்பவம் இது . மயிலாடுதுறையின் சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் தே .மு .தி .கவைசேர்ந்த திரு . அருள்செல்வம் அவர்கள் .  அவரும் முகநூளில் இருக்கிறார். இருவரும் நண்பர்களாக இருக்கிறோம் (முகநூலில் தான் ).

அப்போது அவர் தனது பக்கத்தில் டெங்கு காய்ச்சல் பற்றி ஒரு கட்டுரையை பகிர்ந்து இருந்தார் . வழக்கம் போல காலை பள்ளி வந்ததும் முகநூலை நோண்டும் போது அதை பார்த்தேன் . அப்போது பள்ளிக்கு அருகே ஒரு நாய் செத்து கிடந்ததால் செம நாற்றம் .

என் கை சும்மா இருக்காமல் அவர் கட்டுரையில் "இங்கு ஒரு நாய் இறந்து போய் நாறுகிறது , நகராட்சியில் யாரும் கண்டுகொள்ளவில்லை . இப்படி இருந்தால் எப்படி டெங்குவை கட்டுபடுத்தமுடியும் ?" என கமென்ட் போட்டேன் . பின்பு இருந்த வேளையில் அதை மறந்துவிட்டேன் .

மாலை 5 மணி இருக்கும் போது , நான் மாடியில்இருந்தேன் . "யார் இங்க ராஜா"னு யாரோ கேட்பது காதில் விழ , எட்டி பார்த்தால் தே .மு .தி .க கட்சி வெட்டிய கட்டிய சிலரும் , கூட டிப்டாபாக்க சிலரும் . போச்சுடா இன்னைக்கு எதோ பிரச்சனைதான் வரபோகுது , நாம வேற வெள்ளை கர்சிப் எடுத்துவரலை என்ற எண்ணம் மனதில் ஓடியது .

பார்ப்போம் ரொம்ப பிரச்சனை வந்தால் பொத்துன்னு காலில்விழுதுடலாம் என தைரியத்தை (!!!) வரவழைத்து கொண்டு கிழே சென்றேன் . 

"நான்தான் ராஜா , நீங்க ??"


"நீங்கதான் FACEBOOK இல் எழுதியதா ?"- ஒரு கரைவேட்டி .

"ஆமாம் "

" இதோ MLA உங்ககிட்ட பேசணுமாம் ", என சொல்லி செல்போன்னை நீட்டினார் .

"வணக்கம் சார் .."- நான் 

"வணக்கம் சார் , எதோ நாய் செத்துகிடக்குனு போட்டுருந்திங்க , நான் இப்போ திருப்பதியில் இருக்கேன் . அதான் நகராட்சி ஆபீசர்களுக்கு சொன்னேன் . அவர்கள் இடன் தெரியாம தேடுறாங்க . எங்கே செத்துகிடக்குனு சொன்ன சுத்தம் பண்ண வசதியா இருக்கும் .." - MLA

"சாரி சார் , நாத்தம் அதிகமா வந்ததால எங்க வாட்ச்மேன்கொஞ்ச நேரத்துக்கு முன்தான் புதைத்தார் "

"ஓ !!.. நல்ல விஷயம் பன்னிருகிங்க .."- MLA

"சாரி FACEBOOK ல போட்டேன்னு தப்ப நெனைக்காதிங்க "- நான் 

"அய்யயோ , அதுலாம் தப்பில்லை சார் , இப்படி நீங்கலாம் சொன்னாதான் எங்களுக்கு தெரியும் . உங்கள் குறையை போக்கதானே என்னை தெரிவு செய்திர்கள் , இதுபோல எதுவா இருந்தாலும் தயங்காம சொல்லுங்க " என்றார் .

  • ஒரு சாதாரண முகநூல் கமேண்ட்க்காக திருப்பதியில் இருந்து மயிலைக்கு போன் செய்து நகராட்சி ஊழியரை பணிசெய்யவைத்தது 
 
  • ஊழியரை மட்டும் அனுப்பினால் வேலை நடக்காதோ என எண்ணி தன் கட்சி ஆட்களை கூட அனுப்பி வேலை முடியும் வரை பார்த்துக்கொள்ள சொன்னது .
 
  • மேல்தட்டு மக்கள் மட்டும்தான் அணுகமுடியும் என பல MLA கள் இருக்க சாமானியனின் குறைகளையும் கேட்பேன் என இருப்பது ,
 
  • ஐந்து நிமிட சாகும்வரை உண்ணாவிருதம் , அரைமணி நேர உன்னைருதம் என அரசியல் ஸ்டான்ட் அடிக்காமல் மக்களுக்காக போராடுவது 
 
  • கட்சிக்காரன் , சாதிக்காரன் என பார்க்காமல் இருப்பது .
 
இவை அனைத்தும் திரு அருன்செல்வன் பிடித்து போக காரணங்கள் .



இவரின் முகநூல் பக்கம் :   https://www.facebook.com/arulselvanarasur


Wednesday, April 16, 2014

கதம்பம் 16-04-14









12 தேர்வு சதவிதமும் சில உண்மைகளும் :

வருடா வருடம் தேர்வு சதவிதம் உயர்வதாக அரசு சொல்கிறது . நாமும் மாணவர்கள் நன்றாக படிக்க ஆரம்பித்துவிட்டார்கள் என நெனைகிறோம் . ஆனால் அது உண்மையல்ல எனபது இந்த வருடம் பேப்பர் திருத்த சென்றபோது தெரிந்தது . மாணவன் என்ன எழுதினாலும் பரவாயில்லை முடிந்த அளவு அவனை பெயில் ஆக்காமல் மார்க் போடுங்கள் என சொல்லுகிறார்கள் . இப்படி பாஸ் போட்டால் எப்படி கல்விதரம் உயரும் என தெரியவில்லை .

இதிலும் பெயில் ஆகும் மாணவர்கள் பலர் உள்ளனர் . 15 மார்க் எடுத்தால் பாஸ் என்றால் அவன் எழுதுவதே 10 மார்க்குதான் எப்படி அவனை பாஸ் போடுவது ? 
இன்னுன் சிலர் திருத்தும் ஆசிரியர்க்கு என தொடக்கி ஒரு சோகமான கடிதத்தை கடைசி பக்கத்தில் எழுதுகிறான் . 

வாழ்க கல்வி துறை / முறை .


=========================================================================

ஆழ்துளை கிணறும் சீழ் பிடித்த சமூகமும் .


நேற்றுதான் ஒரு குழந்தையை காப்பற்றினார்கள் , அதுக்குள் இன்று மற்றொரு குழந்தை ஆழ்துளை கிணற்றில் விழுந்துவிட்டது . கடுமையான தண்டனைகள் இல்லாததே இதுக்கு காரணம் . குழந்தை மீண்டால் கொலை முயற்சி வழக்கும் , ஏதாவது ஆனால் (ஆக கூடாது ..) கொலை வழக்கும் பதியபட்டல் தான் திருந்துவார்கள் .

 
 ======================================================================

எது மதசார்பின்மை ?

நமக்கு பிடிக்குதோ இல்லையோ ஒரு குறிப்பிட்ட கட்சி மட்டும் ஊருக்குள் ஓட்டு கேட்க வரகூடாதுனு சொல்வது சரியா? நாளை ஒருவேளை அந்த கட்சி ஜெய்த்தால் எங்கள் ஏரியாவுக்கு எதும் செய்யாதீர்கள்னு சொல்வார்களா?

எதிரியே வீட்டுக்கு வந்தாலும் வரவேற்பதுதான் பண்பாடுனு எல்லா மதமும் சொல்லுது. ஓட்டு கேட்பது அவர்கள் இஷ்டம் போடுவதும், போடாததும் உங்கள் உரிமை. ஊருக்குள் வரகூடாதுனு சொல்லி நீங்களே ஊரைவிட்டு தனித்து போவதுபோல் தோன்றுகிறது.

#மாற்று கருத்துகள் வரவேற்க்கபடுகிறது.. . .


========================================================================
IPL திருவிழா :


பலரை கவர்ந்த , ஊழலை அதிகரித்த IPL இன்று துவங்குகிறது . இனி பல வீட்டில் சண்டைதான் . சீரியலா ? மேட்சா ? என ..

ஒரு வீட்டில் கனவன் ஆதிக்கமா? மனைவி ஆதிக்கமா? என தெரியவேண்டுமா? நாளை இரவு 8 மணிக்கு IPL ஓடினா கனவன் ஆதிக்கம், அப்பவும் சீரியல் ஓடினா( எல்லா வீடு போல) மனைவி ஆதிக்கம் தான். . .


===================================================================

உலகம் உருண்டை :

போன தேர்தலில் :
 
கலைஞர் டிவியில், விஜயகாந்தை கிண்டல் செய்யும் காட்சிகள் மற்றும் வடிவேலுவின் பேட்டிகள் ஓடியது.

இப்போ :

ஜெயா டிவியில் விஜயகாந்தை கிண்டல் செய்யும் காட்சிகள், வடிவேலு பேட்டி ஓடுது.

#உலகம் உருண்டைனு நிருபித்துவிட்டார்கள்!!!
   

Friday, April 11, 2014

ANDROID மொபைல் காணாமல் போனால் எளிதில் கண்டுபிடிக்க உதவும் APPLICATION .




 


இன்று பெரும்பாலான மக்களிடம் இருக்கும் ஒன்று மொபைல். செல் இல்லாத மனிதன் அரைமனிதன் எனும் நிலை வந்துவிட்டது . அதிலும் சுமார்ட் போன் வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை இப்போது அதிகரித்துக்கொண்டே வருகிறது . இன்னொரு பக்கம் மொபைல் திருட்டு போவது அல்லது தவற விடுவதும் அதிகமாகிறது .

இவ்வாறு திருட்டு / காணாமல் போன உங்கள் மொபைலை எளிதில் கண்டுபிடிக்க ஒரு அப்ளிகேஷன் உள்ளது . அதுதான் 360 SECURITY,


  • இதை GOOGLE PLAY STORE இல் அல்லது இங்கே கிளிக் செய்து தரவிரக்கிகொள்ளவும் .
  • இதை உங்கள் போனில் நிறுவிக்கொள்ளவும் .
  • அதில் உள்ள மெனுவில் ANTI-THEFT என்ற ஆப்ஷனை தெரிவு செய்யவும் .
  • அதில் உங்கள் விருப்பமான கடவு சொல்லை (PASSWORD) அமைக்கவும் . இதுக்கு ANTI-THEFT CODE என பெயர்.
  • ENABLE ANTI-THEFT என்ற பட்டனை கிளிக் செய்யவும் .
  • உங்கள் மொபைல்லில் சிம் மாற்றபட்டால் எந்த எண்ணுக்கு SMS வரவேண்டும் என செட் செய்யவும் .( உங்கள் வீட்டு எண்ணை அல்லது நண்பர்கள் என்னை கொடுக்கவும் ).


அவ்வளவுதான் , இனி உங்கள் மொபைல் காணாமல் போய் யாராவது அதில் வேறு சிம் கார்ட் போட்டால் அந்த என்னில் இருந்து நீங்கள் செட் செய்த எண்ணிற்கு ஒரு SMS வரும் . இதன் மூலம் யார் உங்கள் போனை பயன்படுத்துகிறார்கள் என கண்டுபிடிக்கலாம் .

இதன் பயன்கள் :


·         நீங்கள் SMS மூலம் உங்கள் போனில் உள்ள தகவல்களை உடனே அழிக்கலாம் .
·         SMS மூலம் போனை லாக் செய்யலாம் .
·         GOOGLE MAP மூலம் போனின் இடத்தை கண்டுபிடிக்கலாம் .
·         போனில் அலாரத்தை உடனே செயல்படவைக்கலாம் . இதனால் எடுத்தவர்கள் அருகே இருந்தால் எளிதில் கண்டுபிடிக்கலாம் .
·         இதில் தேவையில்லாத கால் , SMS பிளாக் செய்யமுடியும் .
·         வைரஸ் எதிர்ப்பு புரகிராம் உள்ளடங்கியது .
·         தேவையில்லாத JUNK FILE, TEMP FILE ஆகியவற்றை அழிக்க வசதி உண்டு .
·         போனின் வேகத்தை அதிகரிக்க உதவுகிறது .

குறிப்பு : நீங்களே ஏதாவது காரணத்தால் சிம் மாற்ற வேண்டி இருந்தால் ANTI-THEFTDISABLE செய்துவிட்டு மாற்றவும் . இல்லை எனில் நீங்கள் போடும் சிம்மில் இருந்தும் SMS போகும் . SMS க்கு காசும் போகும் ..


Wednesday, April 2, 2014

ஒரு வீடு இரு திருடர்கள்- தேர்தல் ஸ்பெஷல்


அது அவர்களுடைய தொழில்.
கொள்ளையடிப்பதும் கொலை செய்வதும்.
நாய்களுக்கு சிறுநீரால் ஆன எல்லைக்கோடு போல
அவர்களுக்கு தொழில் தர்மம்.
ஒருவர் தொழிலில் மற்றவர் குறுக்கிட்டால்
குறுக்கிடும் தொழில் தர்மம்.

ஒரு வீட்டின் புறவாசல் வழியே ஒருவனும்,
கூரை வழியே ஒருவனும் தொழில் செய்யப் போனார்கள்.
அந்தோ பரிதாபம் குறுக்கிட்டது தொழில் தர்மம்.
யார் தொழில் செய்வது?
யார் பின்வாங்குவது?
முடிவு காண முடியவில்லை திருடர்களால்.

முதல் திருடன் சொன்னான்,
‘மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு’.
இரண்டாம் திருடன் சொன்னான்
‘திருடுவது நம் உரிமை
அதைத் தீர்மானிப்பது வீட்டுக்காரனின் கடமை’.

ஆகவே, எழுப்பப்பட்டான் அந்த வீட்டுக்காரன்.
அவன் முன் வாக்குப்பெட்டி.
யார் திருட வேண்டுமெனத் தீர்மானிக்கும்படி
வீட்டுக்காரன் வேண்டப்பட்டான்.

அவனுக்கு ஜனநாயக முறை பற்றிய
அறிவு புகட்டப்பட்டது.
இங்கு திருடர்களுக்கு வீட்டுக்காரனே எஜமானன்.

அவன் சொல்லும் நபரே திருட முடியும்.
கடைசியில் ஜனநாயகம் வென்றது.

ஆம்- வீட்டுக்காரனைப் புதைத்தார்கள்.


பின்குறிப்பு: கவிதையில் ‘திருடர்கள்’ என்கிற வார்த்தை
‘திருடர்கள்’ என்ற பொருளில் மட்டும்தான் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
அதை ‘அரசியல்வாதிகள்’ என்று யாராவது பொருள் கொண்டால்
அது என்  தவறல்ல.

இதை மெயிலில் அனுப்பிய நண்பனுக்கு நன்றி :

இது ஒரு மீள் பதிவு 



===========================================================================
இதையும்  படிக்கலாமே :

யார் தெய்வம் ?

 

விஜய் அஜித் இணைந்து நடிக்க கதை தயார் : அம்புலி 3D பட இயக்குனர் ஹரீஷ் நாராயண் Exclusive பேட்டி பகுதி - 2