> என் ராஜபாட்டை : May 2012

.....

.

Thursday, May 31, 2012

தமிழர் வரலாற்றை மறைக்கும் மத்திய அரசு - பூம்புகாரின் உண்மை வரலாறு என்ன ?



பூம்புகாரின் ஆய்வுகளின் நம்பகத் தன்மை:

1. இங்கிலாந்து நாட்டு ஆழ்கடல் ஆய்வாளர், ஏற்கனவே உலகின் பல பகுதிகளை ஆய்வு செய்தவராவார்.

2. இவர் கண்டறிந்த உண்மையை டர்ஹாம் பல்கலைக்கழகம் உறுதி செய்துள்ளது.

3. புவியியல் ஆய்வாளர் பேராசிரியர் கிளன் மில்னே, உலகப் புகழ்பெற்ற ஆய்வாளர் ஆவார்.

4. ஆழ்கடலைப் படம்பிடிக்கும் துல்லியமான படப்பிடிப்புக் கருவிகள் பயன்படுத்தப்பட்டன.

5. இந்த அகழ்வாய்வின் சிறப்பையுணர்ந்த அமெரிக்க, ஆங்கிலேயத் தொலைக்காட்சி நிறுவனங்கள் - இதற்கான பண உதவிகளைச் செய்தன.

6. படமெடுக்கப்பட்டவை அமெரிக்கத் தொலைக்காட்சிகளில் ஓளிபரப்பப்பட்டன.

7. இந்த அகழ்வாய்வை ஆய்வாளர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். இதுவரையில் மறுப்புகள் எவையும் தெரிவிக்கப்படவில்லை.

ஆய்வுகள் குறித்த ஐயப்பாடுகள்:

1. தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் தொடர்பான செய்திகள், தமிழ்நாட்டில் முறையாக அறிவிக்கப்படவில்லை.

2. 1993 ஆம் ஆண்டில், இந்தியக் கடல் ஆய்வு நிறுவனம் (கோவா) மேற்கொண்ட முதல்கட்ட ஆய்வுகளிலேயே, பூம்புகார் நகரின் சிறப்பு வெளிப்பட்டது.

3. இந்திய அரசின் நிறுவனங்களில் பணியாற்றும் சில தமிழ்ப் பகைவர்களால், இந்த ஆய்வுகள் நிறுத்தப்பட்டன. பணப் பற்றாற்குறை என்ற கரணியம் பொய்யாகச் சொல்லப்பட்டது. 1990களில், குசராத்தில் உள்ள துவாரகையை அகழ்வாய்வு செய்ய, இந்திய அரசு பல கோடிகளைச் செலவிட்டது. அப்போதெல்லாம் பற்றாக்குறை பற்றிய பேச்சு எழவில்லை. துவாரகையில் எதிர்பார்த்த சான்றுகள் கிடைக்கவில்லை.

4. சிந்துவெளிக்கு முந்திய நகரம் துவாரகை (கண்ணன் வாழ்ந்திருந்ததாகச் சொல்லப்படும் நகரம்) என அறிவிக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் வெற்றி பெறவில்லை.

5. இந்நிலையில் பூம்புகாரின் ஆய்வுகள் தமிழர்களின் தொன்மையை வெளிப்படுத்தி விடும் என்று சிலர் கருதியதின் விளைவாகவே, ஆய்வுப் பணிகள் நிறுத்தப்பட்டன.

6. தமிழகத்தில் ஆய்வு செய்து எடுக்கப்பட்ட படங்கள் தமிழகத்தில் வெளியிடப் படவில்லை. மாறாக, பெங்களுரில் ஒருநாள் மட்டும் கண்காட்சியில் காட்டப்பட்டது. இப்படங்களும், ஊடகங்களில் வெளியிடப்படாமல் தடுக்கப்பட்டன.

7. இந்தியத் தொலைக்காட்சிகளில், இந்த ஆய்வுப் படங்களைக் காட்ட அனுமதி வழங்கப்படவில்லை.

8. தங்களது ஆய்வு முடிவுகளை இந்தியாவில் வெளியிட இயலாமற் போனதால். இங்கிலாந்து நாட்டு ஆய்வாளர்கள் நொந்து போனார்கள்.

9. பின்னர் அமெரிக்க ஆங்கிலத் தொலைக்காட்சிகளில் இவை ஒளிபரப்பப்பட்டன.

10. இந்தியக் கடல் அகழ்வாய்வு நிறுவனம், தமிழருக்கெதிரான நிலைபாட்டை மேற்கொண்டது.

11.இதுவரையிலும் கூட. பூம்புகார் அகழ்வாய்வுத் தொடர்பான செய்திகள் தமிழர்களுக்கு அறிவிக்கப்படவில்லை.

12. நூலாசிரியரால், பலமுறை எழுதப்பட்ட மடல்களுக்கு, கோவாவிலுள்ள இந்தியக் கடல் ஆய்வு நிறுவனம் உரிய பதிலைத் தரவில்லை.

13. தமிழரின் வரலாற்றை இருட்டடிப்பு செய்வதற்கான வேலைகளில், சில ஆதிக்க சக்திகள் முன்னின்று செயல்படுவதைத் தடுத்து நிறுத்த எவரும் முன்வரவில்லை.

14. தமிழ் நாட்டரசு, உரிய நடவடிக்கைகளை இதுவரையிலும் மேற்கொள்ளவில்லை.

15. மேற்கொண்டு எந்த வெளிநாட்டு நிறுவனமும், இந்தக் கடல் பகுதிகளில் அகழ்வாய்வு மேற்கொள்ள அனுமதிக்கபடவில்லை.

16. திட்டமிட்டே தமிழரின் வரலாறு மறைக்கப்படுகின்றது என்பதற்கு. கடந்த கால நிகழ்வுகள் சான்றுகளாக உள்ளன.
பூம்புகாரில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள்.

17. நம்பகத்தன்மையுடையவையல்ல என்ற ஒரு தலைப் பக்கமான செய்திகளையும் சிலர் திட்டமிட்டே பரப்பி வருகின்றனர். எவ்வாறு அவை நம்பகத்தன்மையற்றவைகளாவுள்ளன என்ற விளக்கத்தை எவரும் அளிக்க முன்வரவில்லை.

18. இந்திய எண்ணெய் எரிவாயு நிறுவனத்தின் துரப்பணப் பணிகளின் போது, குசராத் கடல் பகுதிகளில் கண்டெடுக்கப்பட்ட ஒரு பொருளை, ஒரு தமிழ் பொறியாளர் முயற்சியால் டெல்லிக்கு எடுத்துச் சென்று ஆய்வுக்கூடத்தில் (சகானி ஆய்வுக்கூடம், டெல்லி) ஒப்படைத்தார். இம்முயற்சிக்கும் அந்த நிறுவனம் பல இடையூறுகள்செய்தது. இறுதியில், சகானி ஆய்வு நிறுவனம், அந்த பொருள், உடைந்து போன மரக்கலத்தின் ஒரு பகுதியே என்றும். அதன் அகவை கி.மு. 7500 என்றும் அறிவித்தது. இதன் பிறகே, இந்திய அரசு, சிந்துவெளி நாகரிகத்தின் காலம். கி.மு. 7500 ஆண்டுகளுக்கு முற்பட்டது என அறிவித்தது. (The New Indian Express, Chennai. 17.1.2002).

19. இந்த அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர் முரளி மனோகர் ஜோஷியிடம், செய்தியாளர்கள், சிந்துவெளி நாகரிகம் ஆரிய நாகரிகமா, தமிழர் நாகரிகமா எனக் கேட்டதற்கு, அதற்கு அமைச்சர், அது இந்திய நாகரிகம் எனத் திரும்பத் திரும்ப அதே பதிலைக் கூறினார். ஆரிய நாகரிகம் எனக் கூறச் சான்றுகள் இல்லாததாலும், தமிழர் நாகரிகம் என்று கூற மனம் இல்லாததாலும், அது இந்திய நாகரிகமே என்று மழுப்பலாகச் சொன்னார். இந்த நிகழ்ச்சியும், செய்தித்தாளில் தெளிவாகச் சொல்லப்பட்டிருந்தது.

(ம.சோ. விக்டர். குமரிக்கண்டம். நல்லேர் பதிப்பகம். சென்னை-4. மு.ப. 2007. பக். 115-122)
( இக்கட்டுரையை எழுதியவர் மலையமான்: நன்றி முகம் மாதஇதழ் ஏப்ரல் 2010)

இவ்வாறு திட்டமிட்டு மறைக்கப்பட்டு வரும் தமிழரின். தமிழ் மொழியின் சிறப்புகள் அண்மைக்கால ஆய்வுகளின்வழி வெளிவந்த வண்ணம் இருக்கின்றன.

துவாரகைக்குக் கொடுக்கப்படும் சிறப்பு தமிழரின் தொன்மையை வெளிப்படுத்தும் பூம்புகாருக்கோ. சிந்துவெளிக்கோ உரிய அளவில் இந்திய அரசாங்கத்தால் கொடுக்கப்படாமல் இருட்டடிப்பு செய்யப்படுவது இன்று வரை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மறைந்த முன்னாள் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி காலத்தில் நடந்த காலப் பெட்டகம் (Time Capsule) என்ற ஒன்றை நாம் மறக்க முடியாது. ஆரியர்தாம் இந்தியாவின் மண்ணின் மைந்தர் என்பதைப் போல் தவறாக எழுதி தயாரிக்கப்பட்ட செப்புப் பட்டயங்கள் வைக்கப்பட்ட பெட்டகம், மொரார்ஜி தேசாய் எழுப்பிய கேள்வியால் தோண்டியெடுக்கப்பட்ட போது பொய் வரலாறு அம்பலமானது.

ஆரியர்கள் தமக்கு இல்லாத நாகரிகப் பழமையை பொய்யாக உருவாக்கப் பெரும்பாடுபட்டு வருகின்றனர்.

ஆனால், தமிழர்களின் பழமையான பண்பாட்டுச் சிறப்பை வெளிப்படுத்துகின்ற பூம்புகாரோ இந்திய அரசால் இன்று வரை உரிய கவனம் செலுத்தப்படாமல் இருப்பதோடு வெளிநாட்டார் இது குறித்து செய்த ஆய்வுகள் தமிழருக்கு மிகச் சிறப்பைக் கொடுக்கின்றது என்ற ஒரே காரணத்திற்காக இருட்டடிப்பு செய்து வருவது எவ்வளவு கொடிய நிலை.

மறைந்து கிடக்கும் தமிழின், தமிழரின் மாண்புகளை, தொன்மைச் சிறப்புகளை உலகிற்கு எடுத்துக்காட்ட ஆய்வாளர்கள் பலர் எழும்ப வேண்டியது காலத்தின் கட்டாயமாக உள்ளது.

(கட்டுரை: 'தமிழர் சமயம்' - மார்ச் 2011 இதழில் வெளிவந்தது)

பூம்புகாரின் ஒரு பகுதி கடலடியில் முழ்கியுள்ளது. இதன் கடற்கரையிலிருந்து 3 கி.மீ. தூரத்தில் 75 அடி ஆழத்தில் கிரகாம் ஹான்காக் என்ற ஆழ்கடல் ஆய்வாளர் 200102ல் ஆய்வு மேற்கொண்டார்.

அங்குக் கடலடி நகரம் ஒன்றைக் கண்டார். அது 11 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது என்று சொன்னார். அவருடைய கருத்தை டர்காம் பல்கலைக்கழகப் பேராசிரியர் கிளன் மில்னே உறுதி செய்தார்.

பூம்புகார் நாகரிகம் சிந்துவெளி நாகரிகத்தைவிட மேம்பட்டது என்றும் ஹான்காக் தெரிவித்தார். அமெரிக்கத் தொலைக்காட்சி ஒன்று, “அன்டர்வோர்ல்டு’ என்ற தலைப்பில், அவர் எடுத்த நிழற்படங்களை ஒளிபரப்பியது. அவருடைய ஆராய்ச்சி, Flooded Kingdom under the High Seas என்ற பெயரில் நூலாக வெளிவந்தது. (திரு நடன காசிநாதன் பூம்புகாரில் கடலடி ஆய்வு மேற்கொண்டார். சில காரணங்களால் அது தொடர்ந்து நடைபெறவில்லை).

மாமல்லபுரத்தின் கடலடியில், சில கோயில் கோபுரங்களின் உச்சிப் பகுதிகள் தெரிவதாக, மீனவர்கள் தெரிவிக்கின்றனர். எனவே அங்கும் ஆழ் கடலடி நகரம் ஒன்று உள்ளது என்பது தெரிகிறது. ஐரோப்பாவில் அட்லாண்டா என்ற நகரம் கடலுக்குள் மூழ்கி விட்டது. இச்செய்தி கட்டுக் கதை என்றே பேசப்பட்டு வந்தது.

ஆனால், அண்மையில் கடலடியிலுள்ள அந்த நகரம் கண்டுபிடிக்கப்பட்டது.அதை போல், பூம்புகார், மாமல்லபுரக் கடலடி நகரங்கள் பற்றிய ஆழ்கடல் ஆய்வு நடத்தப்பட வேண்டும் இதுநிறைவேறினால் தொல் தமிழரின் எல்லை விரிந்த பெருமை சொல் கடந்து விளங்கும்.

Tuesday, May 29, 2012

நடிகர் விஜய்யை கிண்டல் செய்து வம்பில் மாட்டிய விஜய் டிவி



விஜய் டிவியின் லொள்ளு சபா அனைவராலும் ரசிக்கப்பட்ட ஒரு நகைசுவை நிகழ்ச்சி . அவர்கள் பல படங்களை கிண்டல் செய்துள்ளனர் . சமயம் விஜய் டிவி நிகழ்சிகளையே கிண்டல் செய்வார்கள் . இப்போ கலக்கும் காமெடியன் சந்தானம் இங்கேருந்து வந்தவர்தான் . இந்த நிகழ்ச்சியில் வந்த ஒரு படம் நடிகர் விஜய் ரசிகர்களின் பெருத்த எதிர்ப்பை பெற்றது . இந்த எதிர்ப்பிற்கு பின் லொள்ளு சபா நிகழ்ச்சியே நிறுத்தப்பட்டது .
பலத்த எதிர்ப்பை பெற்ற போக்கிரி பட உல்டாவான பேக்கிரி 



இரண்டாம் பகுதி 




 
பயங்கர கண்டனத்துக்குள்ளான  நீயா நானா 

டிஸ்கி 1 : இந்த காரணத்துக்காக நிகழ்ச்சி நிறுத்தப்பட்டது சரியா ?தவறா ? 
                     என பின்னுட்டத்தில் சொல்லுங்கள் .


டிஸ்கி 2 : கடந்த வாரம் நடந்த நீயா ? நானா வில் பவர் ஸ்டார்  
                    கேவலபடுத்த பட்ட நிகழ்ச்சியும் நடந்துள்ளது .

இதையும் படிக்கலாமே :

தயவு செய்து இளகிய மனம் படைத்தோர் இதை பார்க்காதீர்கள்

நண்பன் படமும் அஜித் ரசிகர்களும்

கேமரா இல்லாமல் போட்டோ எடுக்கும் அதிசய சாப்ட்வேர்(ராஜபாட்டை ஸ்பெஷல் )

 

Monday, May 28, 2012

தயவு செய்து இளகிய மனம் படைத்தோர் இதை பார்க்காதீர்கள்

பின்வரும் சில புகைப்படங்களை கர்ப்பிணிகள் , இதயம் பலவினமானவர்கள் , குழந்தைகள் , என்னை போல உள்ள நல்லவர்கள் பார்ப்பதை தவிர்க்கவும் .
படங்களை பார்த்து ஏதாவது ஆனால் நிர்வாகம் பொறுப்பல்ல ..


தல மன்னிச்சு ..

 அடுத்த ஆஸ்கர் ரெடி 
 இதுக்கு பா .ம .க ஒன்னும் சொல்ல மாட்டாங்களா ?
 அடுத்த CSK தலைதான் 
 ரசிகைகள் முத்தமிட்டதால் வந்த வடு ..
 5 வேடங்களில் ...
 இச கார்ட் விளம்பர துதுவராக ..

 சூர்யாவுக்கு போட்டியாக சிங்கம் 3 இல் ..
 டைடானிக் 7D இல் 
 எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன் ..

டிஸ்கி  : உலகெங்கும் வாழும் கோடிகணக்கான பவர் ஸ்டார் ரசிகர்கள் இதை கோவ படாமல் பார்த்து ரசிக்கும் படி வேண்டுகின்றோம் .


இதையும்  படிக்கலாமே :


நெஞ்சை தொ(சு )ட்ட கவிதை

துப்பாக்கி Vs பில்லா 2

கடந்த மாதத்தில் அதிகம் வாசிக்கபட்ட 5 பதிவுகள்

 

Thursday, May 24, 2012

நெஞ்சை தொ(சு )ட்ட கவிதை

முதியோர் இல்லத்து முதியவரின் முற்றிய வலிகள்...!!!

தவமிருந்துதான் பெற்றோம்

உன்னை,
தடுமாறி வாழ்கை நடத்தியபோதும்
தனித்தன்மையாய் வளர்த்தோம்,

உன் எச்சில் பட்ட
என் கண்ணங்கள்
இன்னும் குளிருதாடா..!மகனே...

உன் மழலை புன்னகையை
பிச்சை கேட்டு
பல நாட்கள் உன்னிடம்
மண்டியிட்டிருக்கிறேன் ,
என் செல்ல மகனே...,

உன் பால் வாசத்தில்
என் பாசம் உணர்ந்தேன்,

நீ கடித்து காயபடுத்திய
என் கன்னத்து தழும்பை
இன்னமும் முத்தமிடுகிறாள்
உன் அம்மா...!

என் கிழிந்த வேட்டியை
மறைத்து,மடித்து கட்டி
வேட்டி வாங்கும்
பணத்தில் வாங்கியதுதான்
உன் வெள்ளி பாலாடை...!
என் அன்பு மகனே..!

முதல் முறை
நீ பள்ளி செல்லும்போது
உன்னை மருத்துவனாகதான்
பார்த்தேன் இந்த பாவி..,

கல்லூரி செல்லும்போது
கர்வத்தோடு பார்த்தேன்...,

மணக்கோலத்தில் உன்னை
பார்த்தபோதுதான்,
உயிருடன் மோட்சமான
முதல் மனிதனானேன்..,

என் கடமை முடிந்தது
என் அன்பு மகனே...!

ஓர் இரவு,
வீட்டில் படுத்துவிட்டு
விழித்து பார்த்தால்,
நானும் உன் தாயும்
கிடந்தது
"முதியோர் இல்ல" வாசலில்...,

பேர பிள்ளைகள்
உதைக்க காத்திருந்த
மார்பில்,
நீ உதைத்ததெப்படி..?
என் செல்ல மகனே..!
என் மகன் இப்படி ஆனதெப்படி..?

உன் தாய்
கொடுத்த பால்
விஷமானதெப்படி..?

என் மேல் சிந்திய
உன் எச்சில்
அமிலம் ஆனதெப்படி..?

போதும் மகனே போதும்..!

உயிரை கொல்பவன் மட்டும்
கொலைகாரன் அல்ல...
உணர்வை கொல்பவனும்தான்..,

நீ கொலைகாரன் ஆனதெப்படி...?

நீ செய்ததை
என் உடல் தாங்கும்...
என் உள்ளம் தாங்காது..

நான் தாங்குவேன்
உன் தாய்
தாங்கமாட்டாள்...!
பாலூட்டியவளாயிற்றே...!!!

மகனே..!
வாரம் ஒருமுறை
என் பேரப்பிள்ளைகளை
கூட்டி வா..,
இவர்கள்தான் "தாத்தா பாட்டி"என்று
அறிமுகம் செய்,

"தாத்தா பாட்டி சாமிகிட்ட போய்டாங்க",
என்று கூறி எங்களை
உயிரோடு எரிக்காதே...!

எங்கள் நிலை பார்த்து
உன் பிள்ளைகள்
வளர்ந்தால்தான்,
நீ எங்கள் நிலைக்கு
வராமல் இருப்பாய்..!!!

நீ மிகவும் நல்லவன்
என் செல்ல மகனே..!!!
அனாதையாக எங்களை
விட்டுவிடாமல்,
முதியோர் இல்லத்தில்...
சேர்த்தாயே...!!!

நன்றி மகனே

என் மகன் நல்லவன்...!!!


- இளையபாரதி



டிஸ்கி     1    :முக புத்தக நண்பர் இளையபாரதி எழுதிய கவிதை 

டிஸ்கி 2 : காதல் கவிதைகளை பகிரும் தோழர்களே இதையும் பகிருங்கள்..!!!


இதையும் படிக்கலாமே  :


யார் தெய்வம் ?

துப்பாக்கி Vs பில்லா 2

தமிழ் சினிமா வரலாற்றில் முதல் முறையாக ...

 

 

Wednesday, May 23, 2012

இலவசமாக தமிழ் படங்கள் வேண்டுமா ?


இன்று டிக்கெட் விற்கின்ற விலையில் திரையரங்கம் சென்று படம் பார்ப்பது என்பது இயலாத காரியம் . இப்போதெல்லாம் பலர் வீட்டில் கணினியும் , இனைய வசதியும் உள்ளது .( இல்லையனில் வேலைபார்க்கும் இடத்தில் இருக்கும் . அதுவும் நம்ம வீடு போலதானே ..) . 

எந்த படம் ரீலிஸ் ஆனாலும் அடுத்தநாளே இணையத்தில் வந்துவிடுகின்றது . நாம் கஷ்டப்பட்டு , தியட்டர் போய் படம்பார்த்துவிட்டு வந்தால் நண்பர்கள் இணையத்தில் தரவிறக்கம் செய்து எளிதாக பார்த்துவிடுகின்றனர் . நாமும் பார்க்கணும் , தரவிறக்கம் செய்யணும் என ஆசைபடும் நன்பார்களுக்காக இந்த பதிவு . 

இப்படி செய்வது தவறுதான் இருந்தாலும் ஒரு G.K  


     
    இங்கு அனைத்து தமிழ் படங்களும் நல்ல தரத்துடன் கிடைக்கும் .
   
    தரவிறக்கம் செய்ய : Click Here


        வலைதளத்தின் பெயரே ஒரு வெப் சைட் தான் . இங்கு படங்கள் மட்டும் இன்றி தொலைகாட்சி நிகஷ்சிகளும் கிடைக்கும் .

    தரவிறக்கம் செய்ய : Click Here 



      இங்கு அனைத்து தமிழ் மறம் டப்பின்க் படங்களும் கிடைக்கும் . அதுபோல தொலைகாட்சி தொடர்களும் கிடைக்கும் . ஆண் லைனில் பார்க்கும் வசதியும் உண்டு .

    தரவிறக்கம் செய்ய : Click Here 


       பெயரை பார்த்து ஏமாறாதிர்கள் . இங்கு அனைத்து விதமான படம் மறம் மென்பொருள்கள் கிடைக்கும் லிங்க் பற்றிய தூக்கு உள்ளது .

    தரவிறக்கம் செய்ய : Click Here 



     அனைத்து புதிய படங்களும் கிடைக்கும் .

    தரவிறக்கம் செய்ய : Click Here 


டிஸ்கி : காசு குடுத்து படம் பார்ப்பதுதான் நல்ல புள்ளைக்கு அழகு .                   ( நாங்கலாம் நல்ல புள்ளைன்னு எவன் சொன்னான் ?)

இதையும்  படிக்கலாமே :


மாணவர்கள் மற்றும் பெற்றோர் கவனத்திற்கு

யார் தெய்வம் ?


சீரியசான பிரச்சனை ..

 

 

Sunday, May 20, 2012

மாணவர்கள் மற்றும் பெற்றோர் கவனத்திற்கு



+2 தேர்வு முடிவுகள் செவ்வாய் அன்று வருகின்றது. நன்றாக படிக்கும் மாணவன் முதல் , பாஸ் பண்ணினா போதுன் என நினைக்கும் மாணவன் வரை அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர். இவர்களை விட அதிக ஆவலுடன் மற்றும் எதிர்பார்ப்புடன் இருப்பவர்கள் பெற்றோர்கள். தன மகனை அடுத்து என்ன சேர்ப்பது , எங்கே சேர்ப்பது என கனவு கண்டுகொண்டு இருப்பவர்கள். இவர்கள் இருவார்க்கும் சில வார்த்தைகள் ....

மாணவர்களே ...

நல்ல மதிப்பெண் பெற்றால் அல்லது எதிர்பார்த்ததை விட அதிக மதிப்பெண் வந்தால் எவ்வளவு சந்தொஷமடைகிரோமோ அது போல மதிப்பெண் குறைந்தால் கவலைபடாதீர்கள் . சிலர் ஒரு மார்க் குறைந்ததுக்கு பல நாட்கள் அழுது பார்த்துள்ளேன்.

மதிப்பெண் குறைந்தாலோ அல்லது தேர்வில் தோல்வி  வெற்றியை தவரவிட்டாலோ மனதை தளரவிடவேண்டாம். தேர்வு முடிவு வந்த அடுத்த 15  நாட்களில் மீண்டும் தேர்வு எழுதி வெற்றி பெறலாம. வெற்றி தள்ளி போய் உள்ளதே தவிர கிடைக்காமல் போகாது.

தப்பி தவறி கூட தற்கொலை என்ற முட்டாள் தனமான , தவறான முடிவை எடுக்காதிர்கள். இந்த தேர்வில் தோற்றால் மறுபடியும் வெற்றி பெற வாய்ப்புண்டு ஆனால் உயிர் போனால் மீண்டும் வராது. உங்கள் மேல் பாசம் வைத்து உங்களையே உலகமாக நினைத்து வாழும் பெற்றோரை  ஒரு நிமிடம் நினைத்து பாருங்கள், வாழ்வில் மதிப்பெண் மட்டுமே முக்கியமில்லை. படிக்ககாத , தேர்வில் பாஸ் ஆகாத பலர் வாழ்கையில் முன்னேறிஉள்ளனர் ( தோணி B.Com ல இன்னும் பாஸ் செய்ய முடியலை, டெண்டுல்கர் 10 வகுப்புடன் நிறுத்திவிட்டார் )

பெற்றோருக்கு ..

பையன் நல்ல மதிப்பெண் பெற்றால் என் மகன் என பாசம் காடும் நீங்கள் அவன் மார்க் குறைந்தாலோ அல்லது பெயில் ஆனாலோ அதே பாசத்தை காட்டுங்கள். உங்கள் பாசத்தைவிட உங்கள் அரவணைப்பை விட அவனை தேற்றும் சக்தி வேறு இல்லை. உங்கள் ஒரு தவறான , அல்லது கோபமான சொல் அவன் வாழ்க்கை பாதையையே மாற்றிவிடும்.

என் கல்வி அனுபவத்தில் DISTRICT FIRST, SCHOOL FIRST எடுத்தவன் என்ன ஆனான் என்றே தெரியவில்லை அல்லது இன்னும் வேலை தேடிக்கொண்டு இருக்கின்றான். ஆனால் சாதரணமாக படித்தவன் , குறைவான மதிப்பெண் எடுத்தவன் இன்று பல உயர் பதவியில் உள்ளனர். (சாதாரண மார்க் எடுத்த என் மாணவன் இப்போது கப்பற்படையில் உயர் பதவியில் உள்ளான். )

மகனை மதிப்பெண் பெரும் இயந்திரமாக பார்க்காதீர்கள் . முக்கியமாக அடுத்த மாணவருடன் அல்லது மாணவியுடன் ஒப்பிட்டு பேசாதீர்கள். அவன் உங்களை அடுத்த குழந்தையின் அப்பாவுடன் ஒப்பிட்டு பேசினால் உங்களுக்கு எப்படி இருக்கும் ?
கடைசியாக , அவன் மதிப்பெண் குறைய அவன் மட்டுமே காரணம் இல்லை என்பதை புரிந்துகொள்ளுங்கள்.


டிஸ்கி : தேர்வு முடிவுகளை பார்க்க








Friday, May 18, 2012

காற்றில் மின்சாரம் - தமிழக வாலிபரின் சாதனை


இன்று  தமிழகத்தின் மிக பெரிய பிரச்னை (யாருப்ப அது கருணாநிதி , ஜெயலலிதானு  சொல்றது பிசுபுடுவேன் .. பிச்சு ) மின்சாரம் தான் . மின்சாரம் கண்டுபிடிக்க பல வழிகளில் முயற்சிகள் நடக்கின்றன . ஆனால் சத்தமில்லாமல் ஒரு தமிழர் காற்றில் இருந்து மின்சாரம் தயாரித்துள்ளார் .


பரமக்குடியை சேர்ந்த வாலிபர் ஒருவர் காற்றில் இருந்து மின்சாரம் தயார் செய்து அதன்மூலம் செல்போனை சார்ஜ் ஏற்றி வருகிறார். ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி பொன்னையாபுரத்தைச்சேர்ந்தவர் பிலவேந்திரன் மகன் பீட்டர்ஜான். எலக்ட்ரிகல் பணி செய்து வரும் இவருக்கு புது கண்டிபிடிப்புகளை தயார் செய்வதில் தனி ஆர்வம். தற்போது அவர் காற்றிலிருந்த மின்சாரம் உருவாக்கி அதன்மூலம் செல்போன் சார்ஜ் செய்யும் கருவியை கண்டுபிடித்துள்ளார்.

இந்த செல்போன் சார்ஜர் கருவியை பயணத்தின்போது ஜன்னல் ஓரம் வைத்தால் போதும். ஜன்னல் வழியாக வரும் காற்று, செல்போன் சார்ஜரில் உள்ள விசிறியை சுற்றும். அந்த விசிறி மின்சாரம் உற்பத்தி செய்யும் டைனமோவை சுற்றும். டைனமோ சுற்றுவதால் ஏசி மின்சாரம் உற்பத்தியாகிறது. செல்போனை டிசி மின்சாரம் மூலமே சார்ஜ் செய்யமுடியும். இதையடுத்து கிடைக்கும் ஏசி மின்சாரத்தை டிசி மின்சாரமாக மாற்ற சிறிய டையோடு பயன்படுத்தப்பட்டுள்ளது.

காற்றின் வேகம் அதிகரிக்கும்போது இதனுடன் இணைத்துள்ள செல்போன் சார்ஜ் ஆகிறது. இதற்கு தயார்செய்ய அதிகபட்சமாக ரூ.350 வரை செலவாகிறது. சைக்கிள் டைனமோ(6 வோல்ட்), தகடால் ஆன விசிறி, டையோடு(4007), வயர், சிறிய பெட்டி ஆகிய பொருட்களை கொண்டு இதை தயாரிக்கலாம். பஸ், ஆட்டோ, கார், பைக் கோன்ற வாகனங்களில் நெடுந்து£ரம் பயணம் செய்யும் பயணிகளுக்கு இது ஒரு வரப்பிரசாதமாக அமையும் என அவர் கூறினார்.
நமக்கென்ன என்று இல்லாமல் ஒரு தமிழனின் சாதனையை உலகுக்கு எடுத்துரைப்போம் "SHARE "செய்து !!!


நன்றி : Facebook இல் பகிந்த நண்பனுக்கு


இதையும் படிக்கலாமே :

Wednesday, May 16, 2012

சீரியசான பிரச்சனை ..




கடந்த இரண்டு வாரமாக விடுமுறையாக இருப்பதால் நூலகம் (நான் நல்லபிள்ளை ) அல்லது டிவி அல்லது சரண் என பொழுது போகின்றது . இந்த நேரத்தில் வீட்டில் சில சீரியல் பார்த்தார்கள். வேறு வழியில்லாமல் பார்க்க வேண்டி இருந்தது. அப்படி பார்த்ததன் விளைவுதான் இந்த பதிவு .இந்த சீரியல்கள் பார்க்கும் போது தோன்றிய சந்தேகங்கள் , ஆத்திரங்கள் , கோவங்கள் ,வெறுப்புகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.

  1. நல்ல நண்பனாக பழகி விட்டு அவனை அவன் மனைவியிடன் இருந்து பிரிக்க முயற்சிக்கும் ஒரு பெண் . நாளை எந்த பெண்ணாவது தனது கணவனின் தோழியை பார்த்ததால் சந்தேகம் வராதா ?
  2. பெற்ற மகனை கெடுக்க அனைத்து வழியிலும் முயலும் தம்பி மற்றும் அம்மா . ( ஒருவேளை இயக்குனர் அம்மா அப்படியோ அல்லது அவர் அண்ணனை இப்படிதான் கெடுக்க நினைகின்ராரோ ?) 
  3. கொழுந்தியாலை கொலை செய்யும் வில்லன் (யாருக்காது கொழுந்தியாலை கொல்ல மனம் வருமா ஹீ .. ஹீ )
  4. தன மகனும் மருமகளும் சேரக்கூடாது என மருமகள் இருக்கும் அறையை இரவில் பூட்டி வைக்கும் தாய் ( அப்ப பகலுல சேர்ந்துட்டா ?)
  5. கணவனை சந்தேகப்படும் மனைவி , மனைவியை சந்தேகப்படும் கணவன் .
  6. நிறைய தொடர்களில் கதாநாயகிக்கு இரண்டு கணவன் அல்லது ஏற்கனவே திர்மனமானவரின் மனைவியாக கதாநாயகி .
  7. ஏன் எல்லா சிரியாலும் பெண்களை மையமாக வைத்து வருகின்றது ?( நாதஸ்வரம் விதிவிலக்கு )
  8. ஏன் ஆண்கள் பெயரில் சிரியல் எடுத்தா ஓடாதா ?
  9. சினிமாவில் மட்டும் பார்த்த கற்பழிப்பு காட்சிகள் சீரியலிலும் ( செல்லமே மற்றும் நாதஸ்வரத்தில் )
  10. பச்ச குழந்தையை பெரிய மனுஷி போல பேச வைப்பது


சினிமாவுக்கு இருப்பது போல தொலைக்காட்சிக்கும் சென்சார் வேண்டும் ( ஹ்ம்ம் .. சினிமா சென்சார் மட்டும் பெருசா என்னத்த கிழிசாங்க ..). வீட்டில் உள்ள வர்களை கொஞ்ச கொஞ்ச மாக மனநிலை பாதிப்புக்கு உள்ளாக்குகின்றது இது . தயவு செய்து சிரியல் பார்ப்பதை குறையுங்கள்.



மாற்று வழிகள் :

  1. காமெடி நிகழ்ச்சிகள் பாருங்கள் ( ஜெயா நியுஸ் , கலைகர் நியுஸ் போல )
  2. கார்டுன் நெட்வொர்க் பாருங்கள்
  3. ஆன்மிக சேன்னல் பாருங்கள் ( நித்தியானதா வகை அல்ல )
  4. ஆங்கில காமெடி சேன்னல் பாருங்கள் ( பாராளுமன்ற நேரடி ஒளிபரப்பு பாருங்கள் )
  5. எதுமே இல்லையா ஏன் ராஜபாட்டை பிளாக் படியுங்கள் .

Tuesday, May 15, 2012

ஒரு வீடு இரு திருடர்கள்


அது அவர்களுடைய தொழில்.
கொள்ளையடிப்பதும் கொலை செய்வதும்.
நாய்களுக்கு சிறுநீரால் ஆன எல்லைக்கோடு போல
அவர்களுக்கு தொழில் தர்மம்.
ஒருவர் தொழிலில் மற்றவர் குறுக்கிட்டால்
குறுக்கிடும் தொழில் தர்மம்.

ஒரு வீட்டின் புறவாசல் வழியே ஒருவனும்,
கூரை வழியே ஒருவனும் தொழில் செய்யப் போனார்கள்.
அந்தோ பரிதாபம் குறுக்கிட்டது தொழில் தர்மம்.
யார் தொழில் செய்வது?
யார் பின்வாங்குவது?
முடிவு காண முடியவில்லை திருடர்களால்.

முதல் திருடன் சொன்னான்,
‘மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு’.
இரண்டாம் திருடன் சொன்னான்
‘திருடுவது நம் உரிமை
அதைத் தீர்மானிப்பது வீட்டுக்காரனின் கடமை’.

ஆகவே, எழுப்பப்பட்டான் அந்த வீட்டுக்காரன்.
அவன் முன் வாக்குப்பெட்டி.
யார் திருட வேண்டுமெனத் தீர்மானிக்கும்படி
வீட்டுக்காரன் வேண்டப்பட்டான்.

அவனுக்கு ஜனநாயக முறை பற்றிய
அறிவு புகட்டப்பட்டது.
இங்கு திருடர்களுக்கு வீட்டுக்காரனே எஜமானன்.

அவன் சொல்லும் நபரே திருட முடியும்.
கடைசியில் ஜனநாயகம் வென்றது.

ஆம்- வீட்டுக்காரனைப் புதைத்தார்கள்.


பின்குறிப்பு: கவிதையில் ‘திருடர்கள்’ என்கிற வார்த்தை
‘திருடர்கள்’ என்ற பொருளில் மட்டும்தான் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
அதை ‘அரசியல்வாதிகள்’ என்று யாராவது பொருள் கொண்டால்
அது என்  தவறல்ல.

Sunday, May 13, 2012

யார் தெய்வம் ?




இந்த உலகை படைத்தவன் இறைவன் என நாம் நம்புகின்றோம். ஒரு உயிரை படைக்கும் எவரும் இறைவன் தான். அதுபோல நம்மை படைத்த தாய் கூட ஒரு தெய்வம்தான். கண்ணில் தெரியா தெய்வத்துக்கு ஏதேதோ செய்யும் நாம் , நம் கண்ணிதேரில் வாழும் தெய்வத்திற்கு என்ன செய்கின்றோம் ?

உலகில் கலப்பிடம் இல்லாத இரண்டு பொருள் :
  1. தாய் அன்பு
  2. தாய் பால்

நேர்முக தேர்வு சென்று வந்தேன்
அப்பா கேட்டார் வேளை கிடைக்குமா ?
தங்கை கேட்டால்  எவ்வளவு சம்பளம் ?
அண்ணன் கேட்டான் பர்மனேநட் வேலையா ?
தம்பி கேட்டான் எப்ப வேளையில் சேரனும் ?

ஆனால்

அம்மா கேட்டால் மதியம் சாப்பிடியா ?

தான் சாப்பிட்டாலும் சாப்பிடாவிட்டாலும் நம்மை சாப்டாயா ? என அன்புடன் கேட்பவள் தாய் ..

உங்கள் மனசாட்சியை கேளுங்கள் ...:

  1. திபாவளி , பொங்கல் போன்ற விசேஷ நாட்களில் எந்தனை பேர் அவர் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குகின்றோம் ?
  2. அவர் பிறந்த நாள் தெரியுமா ?
  3. அவருக்கு பிடித்த நிறம் , உணவு எது ?
  4. உங்கள் பிறந்த நாள் அன்று அவரிடம் ஆசிர்வாதம் வாங்கி இருகின்றிர்களா ?
  5. கடந்த வாரத்தில் எத்தனை முறை அவரிடம் சாப்ப்ட்டியாமா ? என கேட்டுஉள்ளிர்கள் ?
  6. கடைசியாக அவர்களுக்கு என்ன வாங்கி குடுத்திர்கள் ?
  7. அவரின் மிக பெரிய ஆசை என்ன ?


யோசித்து பாருங்கள் , மேலே உள்ள அனைத்துக்கும் நமக்கு பதில் தெரியுமா என்று .. சந்தேகம் தான் . எதையும் எதிர்பாராமல் பாசம் வைக்கும் அன்னையை இன்று மட்டுமல்ல என்றுமே கொண்டாடுவோம் .


தான் படிக்க முடியவில்லை என்பதால் கஷ்டபட்டு என்னை படிக்க வைத்து , நான் வாங்கிய கோல்ட் மெடலை அனைவரிடமும் காட்டி சந்தோசபட்ட ...

இதுவரை உன் சம்பளம் என்ன என்று கேட்காத ..

ஏன் பையில் பணத்தை பார்த்தாலும் தம்பி பஸ்க்கு காசு வேணுமா ? என பாசத்துடன் கேட்க்கும் ...

டீ கடையில் தான் சம்பாதித்த பணத்தில் நகை வாங்கி கொண்டு இது ஏன் பையன் வாங்கியது .. என பெருமையாக சொல்லும் ..

என் அன்பு அம்மாவுக்கு

  இனிய அன்னையர் தின வாழ்த்துகள்


Saturday, May 12, 2012

விஜய்யை எதிர்க்கும் பா.ம .க




இளைய தளபதி என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் விஜய்யின் அடுத்த படம் துப்பாக்கி. A.R.முருகதாஸ் இயக்கத்தில் வெளிவர இருக்கும் படம் இது. நண்பன் வெற்றியை தொடர்ந்து இந்த படம் வருவதால் பலத்த எதிர்பார்ப்பு உள்ளது . இந்நிலையில் சமிபத்தில் இந்த படத்தின் ஒரு புகைப்படம் வெளியிடப்பட்டது . இதில் விஜய் புகைபிடிப்பது போல இருந்தது . இதை பார்த்ததும் பா .ம .க வின் ரத்தம் கொதித்து இந்த புகைப்படம் வெளியிடக்கூடாது , படத்தில் அந்த காட்சி இருக்க கூடாது என கண்டன அறிக்கைகள் வெளியிட்டது .

என்னை போல சாதாரண ரசிகனுக்கு , சாதாரண குடிமகனுக்கு தோன்றும் சில சந்தேகங்கள்.

  1. மங்காத்தா படத்தில் பல காட்சியில் அஜித் குடிப்பது போலவும் , புகைபிடிப்பது போலவும் உள்ளது . அந்த படம் வந்த சமயத்தில் பா .ம. க என்னசெய்த்து கொண்டிருந்தது.?

  1. அஜித் அரசியலுக்கு வரமாட்டேன் என சொல்லி விட்டதால் அவரை எதிர்ப்பது தேவையில்லாதது . அவரால் பா .ம .க ஓட்டு பிரிய வாய்ப்பில்லை என எதிர்க்க வில்லையா ?


  1. விஜய் ரசிகர்களில் பலர் இளைஜ்ர்கள் . இவர்கள் விஜயின் கட்சிக்கு சென்று விட்டால் ஏற்கனவே ஓடிங்கி போய் இருக்கும் கட்சியின் தொண்டர் எண்ணிக்கை இன்னும் குறையும் என்ற பயமா ?

  1. விஜய் படங்கள் தவிர சமிபத்தில் வந்த எந்த படத்திலும் யாரும் புகைபிடிக்கவில்லையா ?


  1. புகைபிடிக்கும் , குடிக்கும் யாரும் பா .ம .க வில் உறுப்பினராக இருக்க கூடாது என சொல்ல தைரியம் உண்டா ? ( அப்படி சொல்லிட்டா தொண்டர்களே இல்லாதே கட்சியா மாறிடும் )

  1. பல தொலைகாட்சி தொடர்களிலே புகை , மது பயன்படுத்தும் காட்சிகள் வருது அதை எதிர்பதில்லையே ஏன் ?

ஏற்கனவே விஜயகாந்தை சீண்டி விட்டு அவரை எதிர்கட்சி தலைவராக மாற்றி விட்டிர்கள் , இப்ப விஜய், இவரை என்னவாக மாற்ற போகின்றிகள் ?

இதையும் படிக்கலாமே :

விஜய் அஜித் இணைந்து நடிக்க கதைதயார் : அம்புலி 3D பட இயக்குனர்ஹரீஷ் நாராயண் Exclusive பேட்டிபகுதி - 2

 

கண்றாவி கவுண்டவுன் – சிரிப்புக்கு நான் கேரண்டி

 

"A" - Jokes