> என் ராஜபாட்டை : August 2012

.....

.

Friday, August 31, 2012

வெற்றி மேல் வெற்றி





வெற்றி இந்த வார்த்தைக்கு அடிமையாகாத மனிதனே இல்லை . ஒரு சிறு பூச்சி கூட எதிரியிடம் வெற்றி பெற வேண்டும் என போராடும் . வெற்றி என்ற வார்த்தை சொல்ல எளிதாக இருக்கலாம் ஆனால் அதை அடைவது மிக கடினம் .

வெற்றி என்பது எளிதில் கிட்டிவிட கூடியது அல்ல. தோல்வி , மனத்தளர்ச்சி , நம்பிக்கை துரோகம் , பொருள் இழப்பு , அவமானம் , வாக்கு தவறுதல் போன்ற தோல்வி படிகளை கடந்து ஒருவன் வெற்றி பெரும் போது அது  வெறும் வெற்றியாக இல்லாமல் சாதனையாக மாறுகிறது .

-          கவிஞ்ர் கவிதாசன்

வெற்றி பெற என்ன செய்ய வேண்டும் ?

  1. முதலில் நான் கண்டிப்பாக வெற்றி பெறுவோம் என நம்ம வேண்டும் .
  2. உங்கள் இலக்கை நிர்ணயித்து கொள்ளுங்கள் . முதலில் எளிதான இலக்கை நிருனையுங்கள். அதில் பெரும் வெற்றி உங்கள் தன்னம்பிக்கையை அதிகரிக்கும் .
  3. இலக்கை அடைய என்ன செய்ய வேண்டும் என திட்டமிடுங்கள் .
  4. வெறும் திட்டம் மட்டும் வெற்றியடைய உதவாது , திட்டமிட்டதை செய்ய வேண்டும் .
  5. கனவு காணுங்கள் , நீங்கள் வெற்றி அடைவதுபோலவும் , அனைவரும் உங்களை பாராட்டுவது போலவும் (இது பகல் கனவாக இருக்க கூடாது )
  6. நீங்கள் வெற்றி பெருவிர்கள் என நம்பும் , சொல்லும்  நண்பர்களுடன் மட்டும் சேருங்கள் . உங்கள் மன உறுதியை கெடுக்கும் நண்பர்களை தவிருங்கள் .
  7. உங்கள் இலக்கை அடைய நீங்கள் செய்த முயற்சிகளையும் , அதில் நீங்கள் அடைந்த முன்னேட்ரேம் பற்றியும் அடிகடி சிந்தியுங்கள் .
  8. உங்களை போல ஒரு இலக்கை வைத்து வெற்றி பெற்றவர்களிடம் ஆலோசனை கேளுங்கள் .
  9. இலக்கை அடைய முடியாமல் தோல்வி அடைந்தவரின் தவறுக்கு என்ன காரணம் என யோசியுங்கள் , அந்த தவறு உங்களுக்கும் வராமல் இருக்க என்ன வழி என சிந்தியுங்கள் .
  10. வெற்றி பெற்றால் அமைதியாக இருங்கள் , தோல்வி அடைந்தால் மீண்டும் முயற்சி செய்யுங்கள் , மனம் தளராதிர்கள் .


எந்த வேலையையும் இதய பூர்வமாகவும் , அன்புடனும் செய்தால் அது முக்கியமானதாகவும் , அழகாகவும் , எளிதானதாகவும் மாறிவிடும் . அதுவே வெற்றி பெறும் மனநிலையை உருவாக்கும்

-          மாதா அமிர்தானந்தா மயி

உன்னால் முடியாது என நினைத்த செயலை எங்கோ யாரோ ஒருவன் செய்து கொண்டு இருக்கிறான்

-          யாரோ

வெற்றி என்பது பிகர் போல எப்ப எப்படி யாருக்கு மடங்கும்னு தெரியாது . திட்டம் போட்டு கட்டம் போட்டால் எந்த பிகரையும் மடக்கிடலாம்

           - சி .பி ரசிகர் மன்ற தலைவர் ( ஹி .. ஹி .. நான்தான் )

Wednesday, August 29, 2012

வாங்க கலர் பார்க்கலாம்



உங்களுக்கு என்ன வண்ணம் பிடிக்கும் ? பல வண்ணங்கள் பற்றி வாருங்கள் தெரிந்து கொள்ளுவோம் .


உலகில் அதிக மக்கள் விரும்பும் வண்ணம்  

-          சிவப்பு

மனதிற்கு அமைதி அளிக்கும் வண்ணம்

-          நீலம்

கண்ணுக்கு இதம தரும் வண்ணம்
         
-          பச்சை

கருங்கடலின் வண்ணம்
                   
-          நீலம்

வெட்டு கிளியின் ரத்தத்தின் நிறம்

-          வெண்மை

குறிஞ்சி பூவின் வண்ணம்
         
                   -ஊதா

செவ்வாய் கிரகத்தின் வண்ணம்

-          சிவப்பு
பாதரச சல்பைடின் நிறம் 

-          கருப்பு

கழுகு முட்டையின் நிறம்

-          செம் பழுப்பு

எகிப்தின் துக்க நிறம்

-          மஞ்சள்

நத்தையின் ரத்தத்தின் நிறம்

-          நீலம்


விமானத்தில் உள்ள கருப்பு பெட்டியின் நிறம்

                   - ஆரஞ்சு
இறுதியாக ........


உங்கள் உள்ளம கவர்ந்த , அகில உலக புகழ் , ஒபாமாவே பாராட்டிய குழந்தை பதிவர் ராஜா வின் மனது நிறம்

-          வெண்மை


(யாருப்பா அது அடிக்க கல்லு எடுக்குறது ???)

Monday, August 27, 2012

இந்த பதிவர்கள் தொல்லை தாங்கலப்பா ....



கோவிலில் ...

மனோ :கடவுளே கடந்த 5 வருடமா எனக்கு லாட்டரி டிக்கெட்ல
        ஒரு கோடி விழனும்னு வேண்டுறேன் ஆனா நீ   
        செய்யமாட்ற .. ஏன் ? நான் உனக்கு என்ன பண்ணனுனா  
        பரிசு விழ வைப்ப ?

கடவுள் : வெண்ணெய் .... எனக்கு ஒன்னும் பண்ண வேண்டாம்
         முதலில் நீ லாட்டரி டிக்கெட் வாங்கு .
==========================================================================

கடவுள் : பக்தா உனக்கு என்ன வரம் வேண்டும் ?

மனசாட்சி : பூமியில் இருந்து சொர்க்கத்துக்கு ரோடு வேண்டும் .

கடவுள் : அதற்க்கு வாய்ப்பே இல்லை வேறு எதாவது கேள் .

மனசாட்சி : வீடு சுரேஷ் , தனுஷ் போல ஒல்லியா ஆகணும்

கடவுள் : சொர்க்கத்துக்கு எப்படி சிங்கிள் ரோடா ? அல்லது டபுள் ரோடா ?
========================================================================
காதலி : அன்பே ஒரு கவிதை சொல்லுங்கள் ..

கவிதை வீதி சௌந்தர் : அன்பே உன்னை பார்த்தேன் உலகை
                           மறந்தேன் .

காதலி : அருமை .. மேலே சொல்லுங்க

கவிதை வீதி சௌந்தர் : உன் தங்கையை பார்த்தேன் உன்னை
                           மறந்தேன் .

=================================================================
வேடந்தாங்கல் கருண் வகுப்பில் பாடம் நடத்தும் போது வகுப்புக்கு வெளியே ஒரு நாய் கத்தி கொண்டு இருக்கிறது . அதனால் இவர் பாடம் நடத்துவதை நிறுத்தி வைக்கிறார் .

மாணவன் : சார் அது கத்துவதை நிறுத்திவிட்டது , நீங்க
            ஆரம்பியுங்கள்
===========================================================================

விக்கி : சி பி ஒரு தத்துவம் சொல்லுங்க .

சி பி : மனசுக்குள்ள பிகர் வந்தாலும்
         உடம்புல சுகர் வந்தாலும்
         தொல்லைதான்
================================================================

சி பி : நேற்று ஜேம்ஸ் பாண்ட நடித்த படம் பார்த்தேன்
கவிதைகள் பிரேம் : என்ன படம் ?

சி பி : காண்டம் பார் சேல்ஸ்

கவிதைகள் பிரேம் : யோவ் !!! அது குவாண்டம் ஆப் சோலிஸ்

சி .பி ; அப்படியா ? அப்புறம் குங்கும பூ போண்டா என்று ஒரு படம் பார்த்தேன் ..

கவிதைகள் பிரேம் :கடவுளே .. அது குங்பூ பாண்டா


===============================================================



Friday, August 24, 2012

வாங்க கடவுளுடன் பேசலாம் - i God





  
நமக்கு முக்கிய பொழுதுபோக்கே அடுத்தவருடன் அரட்டை அடிப்பதுதான். வீடு, அலுவலகம், தெரு என அனைத்திலும் நமக்கு நண்பர்கள் இருப்பார்கள். நமது சுக, துக்கங்களை அவர்களுடன் பகிர்ந்துகொள்ளுவோம். இனையத்திலும் அரட்டை அடிக்க பல தளங்கள் உள்ளது.

நம்து சொந்த விஷயத்தை யாரிடமாவது சொல்ல தோனும்,ஆனால் பாதுகாப்பு கருதி சொல்லமாட்டோம். சில சமயம் யாரிடமாவது பேச தோனும் ஆனால் யாரும் இருக்க மாட்டார்கள். சில விஷயங்களை கடவுளிடம் சொன்னால் தேவலாம் என தோனும், இது போன்ற சமயங்களில் உங்களுக்கு உதவ ஒரு கடவுள் இருக்கின்றார். அவர்தான் iGod.

இது ஒரு artificial intelligence software site , இதில் நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் வரும், உங்களுடன் உன்மையாகவே ஒருவர் உரையாடுவதுபோல் உள்ளதுதான் இதன் சிறப்பு.

  •  www.titane.caஇந்த லிங்க்கை கிளிக் செய்யவும்.

 
மேலே உள்ள விண்டோ வரும். அதில் உள்ள Enter பட்டனை கிளிக் செய்யவும்.

  • அடுத்து வரும் விண்டோவில் Skin Select செய்யவும்.
 பின்பு ..


  • மேலே உள்ள விண்டோவில் உள்ள Textbox இல் உங்கள் வார்த்தையை டைப் செய்து Enter ஐ அழுத்தவும்.


இனி நீங்களும் கடவுளும் ஜாலியாக உரையாடலாம்.



இந்த பதிவு பிடித்திருந்தால் Facebook, Twitter , g + இல் Share பண்னவும். மறக்காமல் இண்டிலி, தமில் 10, உடான்ஸ் போன்றவற்றில் ஒட்டு போடவும்.





Wednesday, August 22, 2012

தேவதையை கரம்பிடித்து இரண்டு வருடம் ஓடிவிட்டதா !!!




22-08-2010 அன்று தான் அந்த சம்பவம் நடந்தது. ஆம் இந்த அப்பாவியின் பிரமசாரி பட்டம் தொலைந்து சம்சாரி ஆனா நாள் அது. என் அழகான தேவதையை திருச்சியில் கண்டுபிடித்தேன். அங்குதான் அவர் கரம் பிடித்தேன் .

இந்த இரண்டு வருடத்தில் இதுவரை நாங்கள் சண்டையே போட்டதில்லை .(வீட்டு செலவு , விசேஷத்திற்கு துணி எடுப்பது , உறவினர் இல்லத்திற்கு செல்வது , குடும்பத்தில் முக்கிய முடிவை எடுப்பது போன்ற சின்ன விஷயத்தை எல்லாம் அவள் பார்த்து கொள்ளுவாள் . இந்தியா பாகிஸ்தான் பிரச்னை , ஈழ பிரச்னை , விக்கிலிக்ஸ் பிரச்னை போன்ற பெரிய விஷயங்களை நான் பார்த்துகொள்ளுவேன்)


என்னை மாற்றினாள் :

சரியான நேரத்தில் உணவு , செல்லும் இடத்திற்கு ஏற்ப உடை அணியும் பழக்கத்தை கற்றுகொடுத்தாள் .

வீட்டுக்கு தேவையானதை செய்ய கற்றுகொடுத்தாள் .

செலவு செய்தால் அதை குறித்து வைத்துக்கொள்ள , அதில் எது வீண் செலவு என கண்டுபிடிக்க கற்றுகொடுத்தாள் .

பதிவுகளை எழுதி முடித்தபின் அதை திருத்தும் , வாசிக்கும் பழக்கத்தையும் , பிழைகளை திருத்தவும் கற்றுகொடுத்தாள் .

வேலை செய்யும் இடத்தில் உள்ள பிரச்சனைகளை வாசலில் செருப்புடன் விட்டு விட்டு வர வேண்டும் என கற்றுகொடுத்தாள் .

நான் ஊருக்கு தான் ஆசிரியர் அவள் தான் எனக்கு  ஆசிரியர் .


இந்த ஜென்மம் மற்றும் அல்ல எத்தனை ஜென்மம் எடுத்தாலும் தொடரவேண்டும் இந்த உறவு ..


உங்கள் வாழ்த்துகளை எதிர்நோக்கும் ..

K.ராஜா சக்தி பிரியதர்ஷினி
செல்வன் R.S.சரண்

Friday, August 17, 2012

இந்த செய்திகள் கண்டிப்பாக உங்களுக்கு தெரிய வாய்ப்பில்லை ...





நண்பர்களே கிழே சில செய்திகள் உள்ளன. அவைகளை இதுவரை நீங்கள் கேள்விபட்டு இருக்க வாய்ப்பில்லை. எந்த ஒரு செய்தியாவது நீங்கள் படிக்கும் போது அட இது நமக்கு தெரியுமே என தோன்றினால் கூட நான் பதிவு எழுதுவதையே நிறுத்தி விடுகிறேன் .

  1. மன்புழுவுக்கு கண் இல்லை என்பது தெரியும் ஆனால் அதுக்கு வாயும் கிடையாது தெரியுமா ?

  2. கணினியின் தந்தை சார்லஸ் பாப் பேஜ் என தெரியும் , அவரின் தந்தை பெயர் பேஜ் டி . மரியோ என்பது தெரியுமா ?


  3. ஷேக்ஸ்பியர் பிறந்த நாளும் , இறந்த நாளும் ஒன்றுதான் (23-04-1564/ 23/4/1616) என்பது தெரியும் இதுப்போல புகழ் பெற்றவர்கள் வால்ட் டிசினி மற்றும் சர் . சி .வி ராமன் என்பது தெரியுமா ?


  4. சாம்பல் நிற அணில் சரணாலயம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ளது எனபது தெரியும் , ஆணில்களுக்காக தனி கோவில் கேரளாவில் உள்ளது எனபது தெரியுமா ?


  5. மனித ரத்தத்தின் நிறம் சிவப்பு என தெரியும் , நத்தையின் ரத்த நிறம் கருப்பு என்பது தெரியுமா ?


  6. கருவுறுதல் நடைபெறாமல் பழங்கள் உருவாகும் முறைக்கு பாரத்தினே கார்பி என்று பெயர் எனபது தெரியும் , இலைகளே இல்லாமல் செடி உருவாக்கும் முறைக்கு லிப்ளினா டிமரப்பா என்று தெரியுமா ?


  7. இந்தியாவின் உயரிய விருது பாரத ரத்னா என்பது தெரியும் , அதை முதலில் பெற்றவர் காமராஜர் எனபது தெரியுமா ?


  8. இதுவரை மேலே படித்தவற்றில் தெரியும் என முடியும் அனைத்தும் உண்மை , ( சிவப்பு வண்ணத்தில் உள்ள  அனைத்தும்) தெரியுமா என முடியும் அனைத்தும் என் கற்பனை என்பது தெரியுமா ?





Wednesday, August 15, 2012

TOP 10


கடந்த மாதத்தில் அதிகம் வாசிக்க பட்ட பதிவுகள் உங்கள் பார்வைக்கு ..
இவை அனைத்தும் மே 7 முதல் ஜூன் 5 வரை வாங்கிய ஹிட்ஸ் அடிப்படையில் தொகுக்கபட்டது .












 டிஸ்கி : அப்பாடி ஒரு பதிவு தேத்தியாசு ...

Monday, August 13, 2012

நட்பு நீடிக்க ...





உலகில் எது இல்லாமல் வேண்டுமானாலும் ஒருவன் இருக்கலாம் ஆனால் நண்பர்கள் இல்லாமல் யாரும் இருக்க முடியாது . நல்ல நண்பர்களை பெற்றவன் எப்பொழுதும் மகிழ்ச்சியாகவே இருப்பான் காரணம் அவன் நண்பர்கள் அவன் கஷ்ட படுவதை பார்த்துகொண்டு இருக்க மாட்டார்கள் . அப்படிபட்ட நட்பு நீண்ட நாள் நீடிக்க என்ன செய்ய வேண்டும் என ஆராய்வதே இந்த பதிவு ...

  1. நண்பர்களிடம் சாதி மதம் பார்க்காதிர்கள் , எக்காரணம் கொண்டும் அவர்கள் சாதி மதத்தை அவர்கள் முன் கிண்டல் செய்தீர்கள் .
  2. நண்பர்களின் பிறந்த நாள் , திருமண நாள் போன்றவற்றிற்கு முடிந்தவரை நேர்ல லாது தொலைபேசியில் வாழ்த்து சொல்லுங்கள் . இல்லாவிட்டால் ஒரு SMS அனுப்புங்கள் .
  3. நல்ல காரியங்களுக்கு செல்கிறோமோ இல்லையோ நண்பர்களின் வீடுகளில் நடக்கும் துக்க காரியங்களுக்கு செல்லுங்கள் . அப்பொழுதுதான் சோகத்திலும் நண்பன் கூட  இருக்கிறான் என்ற ஆறுதல் இருக்கும்
  4. நண்பர்களின் உடலை அல்லது அவர்களின் பழக்க வழக்கங்களை போது இடத்தில் கிண்டல் செய்யாதிர்கள் (முக்கியமாக பெண்கள் இருக்கும் போது )
  5. விசேஷ நாட்களில் அவர்கள் வீட்டிற்கும் , அவர்களை உங்கள் வீட்டிற்கும் அழையுங்கள் .
  6. கூடுமான வரை நண்பர்களிடம் கடன் வாங்காதீர்கள் , பல நட்புகள் பிரிய கடந்தான் முக்கிய காரணம் .
  7. நண்பர்களின் தவறுகளை எடுத்து கூறுங்கள் ஆனால் எப்பொழுதும் குறை சொல்லிக்கொண்டே இருக்காதீர்கள் .
  8. நண்பர்கள் பேசுவதை கவனியுங்கள் நாம் பேசுவதை அவர்கள் கவனிக்க வேண்டும் என நாம் ஆசை படுவதை போல அவர்களும் ஆசை படுவார்கள் அல்லவா ?
  9. நண்பர்களிடம் பொய் சொல்லாதீர்கள் அது பின்பு உங்களுக்கே பிரச்சனையாக வரலாம் .
  10. பெண்கள் தங்கள் தோழிகளிடம் நகைகள் கடன் வாங்காதீர்கள் .


இவை கொஞ்சம் தான் இன்னும் இன்னும் பல விஷயங்கள்  உள்ளது .பதிவின் நீளம் கருதி எழுதவில்லை . உங்களுக்கு தோன்றும் கருத்தை சொல்லுங்கள் .

இந்த பதிவை தொழிற்களம் வலையிலும் காணலாம் 

Saturday, August 11, 2012

TESO மானமுள்ள தமிழன் கவனத்திற்கு

ஈழ மக்கள் சிங்கள அரசால் பல கொடுமைக்கு ஆளான நேரம் பதுங்கு குழியே வாழ்கை என இருந்த நேரம் ....




தமிழின தலைவன் என சொல்லிகொள்ளும் இவர் அவர்களை காப்பதை விட தன குடும்பத்தை காப்பதிலும் , அமைச்சர் பதவி பெறுவதிலும் ஆர்வமாக இருந்தார்


போரில் மக்கள் கொத்து கொத்தாக செத்து மடிந்த போது தனது குடும்பத்தை சேர்த்து விழா எடுத்து கொண்டாடினார்


தமிழன் குடும்பன் அழியும் போது இவர் குடும்பம் சந்தோஷத்தில் மிதந்தது

மக்கள் மனதை மாற்ற இல்லை இல்லை ஏமாற்ற 15  நிமிடம் உண்ணா விருதம் என்ற நாடகத்தை நடத்தினார்


இவரின் சுயருபம் புரிந்த மக்கள் இவரை ஆட்சியில் இருந்து தூக்கி எறிந்தனர் ..
இழந்த செல்வாக்கையும் , வாக்கு வங்கியையும் திரும்ப பெற என்ன செய்வது என யோசித்தார் 


பிரபாகரனின் தாயாரை கூட நாம அனுமதிக்க வில்லையே , மான முல்லா எந்த தமிழன்னும் நம்மை மதிக்க மாட்டானே என நினைத்தார்


அந்த கணத்தில் அவர் சிந்தையில் உதித்ததுதான் டெசோ ... இதைவைத்து மக்களை எளிதில் ஏமாற்றலாம் என முடிவு செய்தார்
போகிற போக்கை பார்த்தால் டெசோ சிறப்பு விருந்தினராக ராஜ பக்ஷே கூட வரலாம் ...


இந்த தமிழ் இன தலைவனை நம்புங்கள் கண்டிப்பா ஈழம் கிடைக்கும் ....( போங்கயா போய் புள்ளை குட்டிகளை படிக்க வையுங்கள் )