> என் ராஜபாட்டை : April 2012

.....

.

Sunday, April 29, 2012

அஜித் : தல போல வருமா ?




இன்று தமிழ் சினிமாவின் முக்கிய எதிர்பார்ப்பு எது என்றால் அது கண்டிப்பாக பில்லா 2 தான். அஜித்தின் முந்தய பில்லா , மங்காத்தா இரண்டின் பிரமாண்ட வெற்றிக்கு பின் திரைக்கு வர இருக்கின்றது. நாம் இப்போது பார்க்கபோவது படத்தை பற்றி அல்ல அஜித்தின் உண்மையான சில குணங்களை ..

தினமும் காலயில் கடவுளைள வேண்டும் போது  என் ரசிகர்களு க்காகவும் வேண்டிக்கிறன். நான் இன்னைக்கு சினிமாவில் இருப்பேன் நாளைக்கு இல்லா மல்  போவன் . ஆனா, ஒரூ அண்ணனா என் ரசிகர்களுக்கு ஒரூ  வேண்டுகோள் .  உங்க தன்மானத்தை  யாரூக்கா கவும் விட்டுக்கொடுக்காதீங்க . உங்க வேலைய 100 சதவிகிதம் ரசிச்சு  செய்யுங்க. நல்லாப் படிங்க . நான் பத்தாவது  வைரக்கும்தான் படிச்சேன் . வாழ்க்கையில்கஷ்டப்பட்டுத்தான் பல விஷயங்கைளக் கத்துக்கிட்டேன் . ஆனா, படிச்சிரூந்தா இவ்வளவு  அடிபட்டு  வந்திரூக்க வேண்டிய அவசியம் இரூந்திருக்காதே . அதனால நல்லாப் படிங்க. யாரையும் கண்முடித்தனமா நம்பாதீங்க. யார் பின்னாடியும் போகாதீங்க . மத்தவன் கால மிதிச்சு முன்னேறாதீங்க. சிம்பிளா சொல்ரேன்... வாழு... வாழவிடு ..

இது கடந்த வாரம் விகடனில் வந்த அஜித்தின் பேட்டி. உங்களுக்காக நான் இருக்கின்றேன் , உங்களை கைவிட மாட்டேன் , உங்களுக்காக உயிரையும் குடுப்பேன் என வசனம் பேசும் நடிகர்கள் மத்தியில் யாரையும் கண்முடித்தனமா நம்பாதீங்க என உண்மையை பேசும் தைரியம் ரஜினிக்கு பின் அஜித்துக்கு மட்டும்தான்.

சினிமா மட்டும் இன்றி விளையாட்டுத்துறையிலும் ஆர்வம உள்ளவர் அஜித். இவர் ஒரு கார் ரேஸ் பிரியர் என்பது அனைவருக்கும் தெரியும். ஹெலிகாப்டர் ஓட்ட உரிமம் வைத்துள்ள முதல் தமிழ் நடிகர் இவர்தான். விருது வழங்கும் விழாவுக்கு மட்டும் மனைவிகளை அழைத்து வரும் நடிகர்கள் மத்தியில் , தன மனைவியில் விளையாட்டு ஆர்வத்தை ஊக்குவிக்குவிதமாக அவரை பூபந்தாட்டத்தில் கலந்து கொள்ள செய்தார்.

ஒரு டப்பா படத்தில் நடித்தாலே அது என்னமோ உலக பட ரேஞ்சுக்கு இருக்குனு பில்டப் குடுப்பது நமது பல ஹீரோக்களின் பழக்கம். படம் வந்த அன்றே ஏதாவது டிவி சன்னலில் இப்படி நடிச்சேன் , அப்படி நடிச்சேன் , பயங்கர ஹிட்னு கதைவிட்டு பேட்டி கொடுப்பார்கள் .(ஆனா படம் இரண்டு நாள்ல காணாம போய்டும் ). ஆனால் தன படங்களை மக்கள் மட்டும்தான் பார்த்து கருத்து சொல்ல வேண்டும் , நான் எந்த மீடியாவிலும் பேசமாட்டேன் , தன படம் சம்பந்த பட்ட எந்த விழாவிலும் கலந்து கொள்ள மாட்டேன் என்ற கருத்தில் தீவிரமாக உள்ளவர் தல.

இறுதியாக எந்த நடிகனும் செய்ய துணியாத செயல் , தனது ரசிகர் மன்றங்களை கலைத்தது. நீ ரசிகனாக இரு ஆனால் முதலில் உன் குடும்பத்திற்கு நல்ல பிள்ளையாக இரு அதுதான் முக்கியம் என மன்றதை கலைத்த பெருமை தலைக்குதான் உண்டு.



டிஸ்கி : இளையதளபதி ரசிகர்கள் கூட மேலே உள்ள கருத்தை ஒத்துகொள்வார்கள் என நம்புகின்றேன்.


இதையும் படிக்கலாமே :

அஜித் , விஜய்க்கு போட்டியாக களமிறங்கும் புதிய ஹீரோ

 

விஜய் மற்றும் அஜித் இணைந்து வழங்கும்…..

 

அஜித் : THE REAL HERO

 

 

Friday, April 27, 2012

நெல்லை : பதிவர்கள் செய்த கலக்கல்கள்







அன்பு நண்பர் யானைகுட்டியுடன் உங்கள் தலைவர் (ஹீ ஹீ நான்தான் )- பெயர்தான் யானை குட்டி ஆனால் ஆளு பூனைக்குட்டி போல பொறுமை .



நண்பர் சௌந்தர் , துபாய் ராஜாவுடன் , சிபி


GPRS இல்லாத மொபைல்ல கூட போஸ்ட் போடுற சி பி இன் திறமையை கண்டு வியக்கும் நக்கீரன் , விட்டா போதும் என இருக்கும் சம்பத்


பிகரை பார்த்ததும் கண்ணாடி போட்டுதான் போஸ் குடுப்பேன் என அடம்பிடித்த மனோ , சி பி , இவர்களுடன் பச்சகுழந்தைகள் கூடல் பாலா மற்றும் நான் .


நண்பேண்டா ...


இந்த தண்டவாளத்துல சரக்கு ரயில் வருமா என ஆவலுடன் பார்க்கும் நக்கீரன் .

ஒரு  கல்யாணத்துக்கு போய்ட்டு வந்து இவனுங்க பண்ணற அழும்பு தாங்கலா ....


டிஸ்கி : நாங்கள் சிலர் மட்டும் கலந்து கொண்டாலும் பரிசு பொருளில் தமிழ் பிளாக்கர்ஸ் என்றுதான் போட்டோம் .

 

Thursday, April 26, 2012

நெல்லை - பதிவர்கள் செய்த அழும்புகள்

நேற்று நெல்லையில் உணவு உலகம் ஆபிசர் அவர்களின் இல்ல திருமணம் . அதற்க்கு வந்த நம் பதிவர்களின் கொண்டாடகளில் சில ...

மணமக்கள் பல்லாண்டு வாழ்க ..

போனே வரவில்லை என்றாலும் போனில் பேசும் சி.பி , அதையும் ஆவலுடன் பார்க்கும் நக்கீரன் .


கல்யாண விட்டில் மணமக்களை விட அதிக புகைபடன் எடுத்து கொண்ட (கொன்ற ) சி பி  , மனோ


மனோவில் அழகான குழந்தையுடன் கருண , சௌந்தர் மற்றும் சி பி


கூடன்குள்த்தை பத்தி நாங்க கேட்க வேண்டும் எனில் போடோக்கு போஸ் குடுக்கணும் எனமிரட்டி எடுத்த போட்டோ


டிஸ்கி : இன்னும் பல படங்கள் உள்ளது விரைவில் .

டிஸ்கி : இதில் நீங்கள்  ஆவலுடன் எதிர்பார்த்த , உலக புகழ் , ஒபாமாவே  
             புழந்த , இந்தியாவில் விடி வெள்ளி ராஜாவின் புகைப்படம்  
           அடுத்த   பதிவில் ..


Monday, April 23, 2012

கொஞ்சம் சிந்தியுங்கள் நண்பர்களே ...


இலவசமாக அரசு கொடுக்க வேண்டியது கல்வியும், மருத்துவமும் தான் .......

ஆனால்

அரசு கொடுப்பதுவோ

  • ரேஷன் அரிசி 
  • வறுமை ஒழிப்பு திட்டத்தின் கீழ் ஆடுகள்
  • இலவச மிக்சி
  • இலவச கிரைண்டர்
  • இலவச பேன்
  • இலவச காஸ் அடுப்பு
  • இலவச சிலிண்டர்
  • இலவச சீமெண்ணெய்(மண்ணெண்ணெய் )
  • தேசிய ஊரக உழைப்பாளிகள் திட்டத்தில் மாதம் கமிசன் போக 115 ரூபாய்
  • இலவச மின்சாரம் ஒற்றை பல்பு
  • விலை குறைப்பு செயப்பட்ட கோதுமை, பாமாயில்,சர்க்கரை, மைதா, துவரம் பருப்பு.

இதில் உச்சகட்டம் ஓட்டுக்கு 200ரூபாய் முதல் 5000  ரூபாய் வரை .

இதனால் ஏற்படும் பாதிப்புகள்

உழைக்கும் மக்கள் வேளைக்கு செல்லாமல் சோம்பேறிகள் ஆக்குவது
செயற்கை மின்சார தட்டுப்பாடு ( இலவச கிரைண்டர், மிக்சி, தொலைகாட்சி, பேன் )

ஊரக வேலைவாய்பு திட்டத்தின் கீழ் வேலைபாக்க கூலிஆட்கள் செல்வதால் விவசாயம் நடக்காமல் மனமொடிந்து விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளுதல்

விவசாயத்திற்கு ஆள் கிடைக்காமல் விவசாய நிலங்கள் அடுக்குமாடி குடியிருப்பாக மாறுதல்.

இலவசங்கள் கொடுக்கலாம் , கொடுக்க வேண்டியது

  • அனைத்து தனியார் கல்வி நிறுவனங்களையும் அரசுடைமையாக்கி மருத்துவம் , பொறியியல் , சட்டம் , கலை அறிவியல் படிப்புகளை மாணவர்களுக்கு இலவசமாக தரலாம்
  • அனைத்து தனியார் மருத்துவ நிறுவங்களையும் அரசுடைமையாக்கி இலவச மருத்துவம் தரலாம்
  • விவசாயிகளுக்கு இலவச நிலம் , இலவச மின்சாரம் அளித்து ஒரு பசுமை புரட்சியை உண்டாக்கலாம்

அனால் இதெலாம் இந்த ஜென்மத்தில் நடக்காது ...காரணம் தெரியுமா ?
இதெல்லாம் சட்டமாக கொண்டு வர அதிகாரம் படைத்த சட்டமன்ற , நாடாளமன்ற உறுபினர்கள் பலர் தனியார் கல்வி , மருத்துவ , ரியல் எஸ்டேட் ஓனர்கள் ஆவர் ........

பின்ன எப்டி இந்தியா உருப்படும் ???

இதற்கு காரணம் "ஓட்டுரிமையை சரியாக பயன்படுத்த தெரியாதா நாம்"

இதை பகிர்ந்து (share) மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்.


டிஸ்கி : Facebook  ல படித்தது ... 

இதையும்  படிக்கலாமே :


கதம்பம் 19-04-2012

 

உங்களுக்கு வயதாகிவிட்டதா ? ஒரு டெஸ்ட்

 


Thursday, April 19, 2012

கதம்பம் 19-04-2012




ரசித்த சினிமா

ஓகே ஓகே படம் பார்த்தேன் , மிக நீண்ட இடைவெளிக்கு பின் திரையரங்கம் நிரம்பி வழிந்தது. பெரும்பாலும் கல்லுரி மாணவ மாணவிகள். எனது முன்னாள் மாணவிகள் பலர் ஒரு குருப்பாக வந்திருந்தனர். இரண்டாவது முறையாக பார்கின்றார்கலாம். உதயநிதியை விட சந்தானத்திர்க்கு கைதட்டலும் , வரவேற்பும் அதிகம் . பார்க்கிங் 50 படத்திற்கு 200  என சென்னையில் பிடிக்குவது போல இல்லாமல் வெறும் 50 மற்றும் 30 ரூபாயில் டிக்கெட் கிடைப்பதும் கூட்டத்திற்கு ஒரு காரணம் . மனசுவிட்டு சிரிக்க விரும்புவர்கள் கண்டிப்பாக இந்த படத்தை பாருங்கள் .

படித்த புத்தகம்

எழுத்தாளர் சுஜாதா அவர்களின் சிறுகதை தொகுப்பு அனுமதி படித்தேன் . மிக பழைய கதைகள் ஆனாலும் மிக சுவாரசியம் . அதிலும் அறிவியல் புனைகதைகள் மிக அருமை . மொத்தம் 12  கதைகள் உள்ளது .
பதிப்பகம் : விசா பப்ளிகேஷன்  
விலை  : 60

எரிச்சல் :

இந்திரா , மற்றும் ராஜீவ் காந்தி பிறந்த நாள் விழாவுக்கு விளம்பரம் செய்ய மத்திய அரசு செய்த செலவு 6.25 கோடியாம் . யார் அப்பன் வீட்டு காசு ? ஒரு வேலை உணவில்லாமல் எத்தனையோ மக்கள் தவிக்கும் போது இது தேவையா ? இவனுகளுக்கு ஆப்பு வைக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை .

ரசித்த ஜோக்

சபரி : நான் சந்திர மண்டலத்துல நாலு ஏக்கர் நிலம்
       வாங்கலாம்னு இருக்கேன் .

சரண் : ஐயோ !! அங்கே கரண்ட் , ரோடுலாம் இருக்காதே ?

சபரி : போடா .... இங்க மட்டும் அதெல்லாம் இருக்கா ?

ரசித்த வார்த்தை :

ஈரம் இருக்கும் வரை
இலைகள் உதிர்வதில்லை

நம்பிக்கை இருக்கும் வரை
நாம் தோற்பதில்லை .

    ( மேலையூரில் உள்ள START SYSTEM COMPUTER CENTER இல் ஓட்டபட்டு இருத்த போஸ்டரில் இருந்தது )

ரசித்த புகைப்படம் :


இதையும் படிக்கலாமே :

ரஜினி - தமிழ்த் திரைப்பட ரசிகர்களின் மூன்றெழுத்து மந்திரம்

 

அஜித் , விஜய்க்கு போட்டியாக களமிறங்கும் புதிய ஹீரோ

 

உலக பிரபலங்கள் பற்றிய சில சுவையான தகவல்கள்.

 

 

Tuesday, April 17, 2012

ரஜினி - தமிழ்த் திரைப்பட ரசிகர்களின் மூன்றெழுத்து மந்திரம்


ரஜினி - தமிழ்த் திரைப்பட ரசிகர்களின் மூன்றெழுத்து மந்திரம். தனது இளமை காலத்தில் பல இன்னல்களைச் சந்தித்தவர்; கணக்கிலடங்கா போராட்டங்களை கடந்து வெற்றியை நிலை நாட்டியவர். ஆரம்பத்தில் பஸ் கண்டக்டராக வாழ்க்கையை ஆரம்பித்த ரஜினி, நடிப்புத் துறையில் கால் பதித்து, அதில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி, உடல் வருத்தி உழைத்து, இன்று 'சூப்பர் ஸ்டார்’ என்கிற பெருமையோடு இருக்கிறார்.
ஜினி என்கிற தனி மனிதனிடம் இருக்கும் குணாதிசயங்கள் வெற்றிகரமான வாழ்க்கைக்கு உதவும் வெற்றிச் சூத்திரங்கள். இந்த சக்ஸஸ்ஃபுல் ஃபார்முலாக்கள் பங்குச் சந்தை முதலீட்டுக்கும்  பொருந்தி வரும். ரஜினியின் குணாதிசயங்களை முதலீட்டாளர்கள் கற்றுக் கொண்டு, பின்பற்றுவதன் மூலம் எப்படி வெற்றிகரமாக லாபம் ஈட்ட முடியும் என்பதை சொல்கிறார் பங்குச் சந்தை நிபுணர் வி.நாகப்பன்.
நிதானித்து முடிவெடுங்கள்..!
'கண்ணா நா(ன்) யோசிக்காம எதையும் சொல்றது இல்ல. சொன்ன பின்னால யோசிக்கறதில்ல...’ - ரஜினியின் பாப்புலர் டயலாக் இது. எதைப் பற்றியும் ஆழ்ந்து யோசித்து தீர்க்கமான முடிவை எடுக்கக்கூடிய ஒரு உன்னதமான மனிதர் ரஜினி.
உதாரணத்துக்கு, ஒரு படத்தில் முழுமையாக நடித்து முடித்துவிட்டாலும் சரி, புதிதாக ஒரு படத்தில் நடிக்கப் போகிறார் என்றாலும் சரி, தன்னை அமைதிபடுத்திக் கொள்ள இமயமலைக்குப் போவார். தெளிவான மனநிலையுடன் திரும்புவார். பதற்றமில்லாத,  தெளிவான இந்த மனோபாவம் முதலீட்டாளர்களுக்கு கட்டாயம் தேவை.
'முதலீட்டை ஆரம்பிக்க  பணம் இருந்தால் போதும்,  மனோபாவம் எதற்கு?’ என்று சிலர் கேட்கலாம். வெற்றிகரமான முதலீட்டிற்குப் பணம் மட்டுமல்ல, அமைதியான, தெளிவான மனநிலையும் அவசியம் வேண்டும். அப்போதுதான் சரியான பங்குகளை தேர்வு செய்து சிறப்பானதொரு முதலீட்டை ஆரம்பிக்க முடியும். பதற்றமான மனநிலையில் எடுக்கும் முடிவு பெரும்பாலும் சரியாக இருக்காது.  
எளிமை அவசியம்!
KISS  -  Keep It Simple -Silly என ஆங்கிலத்தில் சொல்வார்கள்; அதாவது, நம் செய்கைகள் எல்லோருக்கும் புரியும் வகையில் எளிமையாக இருக்க வேண்டும். ரஜினி படங்களின் கதை அமைப்பைப் பாருங்கள்; எந்த படமும் தலையை பிய்த்துக் கொள்கிற மாதிரி இருக்காது. அவரது படங்கள் மட்டுமல்ல, தனிப்பட்ட வாழ்க்கையிலும் ரஜினி எளிமைதான். சாதாரண ஜிப்பாதான் போட்டுக் கொள்வார். சாதாரண நோக்கியா போன்தான் அவரிடம் இருக்கும்.  
பங்குகளில் முதலீடு செய்யும் போதும் எளிமையாக, நமக்கு புரியும்படியான பங்குகளில் பணத்தைப் போடுவது நல்லது. அப்போதுதான் அதில் நம்மால் ஈடுபாட்டுடன் செயல்பட்டு அந்த பங்கை கண்காணித்து நல்ல வருமானத்தை ஈட்ட முடியும். என்ன தொழில் செய்கிறார்கள் என்பதைகூட புரிந்துகொள்ள முடியாத நிறுவனங்களில் பணம் போட்டு பின்னர் வருத்தப்படுவதைவிட,  பிஸ்கெட், சர்க்கரை, டீ போன்ற உணவுப் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்களில் முதலீடு செய்யலாம். இதற்கொரு உதாரணம், ஐ.டி.சி.  
நேரத்தைக் கடைப்பிடியுங்கள்!
'எப்ப வருவேன் எப்புடி வருவேன்னு யாருக்கும் தெரியாது; ஆனா, வரவேண்டிய நேரத்துல கரெக்டா வருவேன்’. இது படத்திற்காக ரஜினி சொன்ன பஞ்ச் டயலாக் அல்ல. அவரது சொந்த வாழ்க்கையிலும் பின்பற்றி வரும் நடைமுறை.  ஷூட்டிங் ஸ்பாட்டாக இருந்தாலும் சரி, விழா மேடையாக இருந்தாலும் சரி,  'இத்தனை மணிக்கு நீங்க வந்துடணும்’ என்று சொன்னாலும், 'இத்தனை மணிக்கு வரேன்’ என்று சொன்னாலும், சொன்ன நேரத்தில் சொன்னபடி இருப்பார்.
அதுபோல பங்குச் சந்தையிலும் நாம் நேரத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். 'டைமிங் தி மார்க்கெட்’ என்பார்கள். அதாவது, சரியான தருணத்தில் நுழைவதும் சரியான நேரத்தில் வெளியேறுவதும் சந்தையில் முக்கியம். நீண்ட நாள் முதலீட்டாளர்களைவிட  டே டிரேடர்களுக்கு இது மிக முக்கியம்.  

காலத்திற்கேற்ற மாற்றம்!

'லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வருவேன்!’ - ரஜினியின் இன்னொரு பஞ்ச் டயலாக் இது. இந்த விஷயத்தில் வாரன் பஃபெட்டும் ரஜினியும் ஒரேமாதிரிதான். ஐ.டி. துறை பற்றி தனக்கு ஒன்றும் தெரியாது என்பதால் அதில் முதலீடு செய்யாமலே இருந்தார் வாரன் பஃபெட். பிற்பாடு ஐ.டி. நல்ல வளர்ச்சி கண்டபோது தன் கருத்தை மாற்றிக் கொண்டு முதலீடு செய்தார்.    
இதே கோட்பாட்டை ரஜினி தனது நடிப்பிலும்  பின்பற்றி வருகிறார். அறுபது வயதானபிறகும் காலத்திற் கேற்றார்போல இளமைத் துள்ளலோடு நடிக்கிறார். இதற்கு சமீபத்திய உதாரணம், எந்திரனில் ரோபோவாக நடித்தது.
இந்த பாலிசியை முதலீட்டாளர்களும் பின்பற்ற வேண்டும். சிறிது காலம் டெலிகாம் துறை பங்குகள் நல்ல வருமானம் கொடுக்கும்; அடுத்த சில காலம் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் பங்குகள் நல்ல வருமானத்தைக் கொடுக்கும். காலத்திற்குத் தகுந்தாற்போல நம் முதலீட்டு முறைகளை மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும். எப்போதும் லேட்டஸ்ட்-ஆக இருக்க வேண்டும்.  
என் வழி தனி வழி!
சிஷீஸீtக்ஷீணீக்ஷீவீணீஸீ ணீஜீஜீக்ஷீஷீணீநீலீ என சொல்வார்கள்; சந்தையில் எல்லோரும் செய்வதைப் போலில்லாமல், அதற்கு நேர்மாறாகச் செயல்பட்டு லாபம் பார்ப்பது ஒரு யுக்தி. சென்ற வருடம் பங்குச் சந்தை சரிந்த சமயம், இன்ஃபோசிஸ், விப்ரோ மற்றும் டி.சி.எஸ். ஆகிய மூன்று பங்குகள் ஏற்றத்தில் இருந்தன. காரணம், டாலரின் மதிப்பு ஏற்றத்தில் இருந்தது. ஆனால், இன்று சந்தை  ஏற்றத்தில் இருக்கிறது. ஆனால், இந்த மூன்று பங்குகள் இறக்கத்தில் இருக்கின்றன. காரணம், டாலரின் மதிப்பு குறைந்து வருகிறது. ஏற்றமோ, இறக்கமோ தெளிவான சிந்தனையுடன் தனித்திருந்து முதலீடு செய்வது  புத்திசாலித்தனம்.
தெரியாததைச் செய்யக்கூடாது!
தெரியாத விஷயம் எதுவாக இருந்தாலும் ரஜினி அதில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள மாட்டார். இதற்கு ஒரு சின்ன உதாரணம் இயக்குநர்களின் நாற்பதாவது ஆண்டு விழா மேடையில் இயக்குநர் பாலசந்தருக்கும், ரஜினிக்கும் இடையேயான உரையாடல். அந்த உரையாடலில் பாலசந்தர், ரஜினியிடம் 'நீ இவ்ளோ பிரமாதமா நடிக்கிறியே, உன்னால ஒரு படத்தை டைரக்ட் பண்ண முடியுமா?’ என்றதற்கு, ''டைரக்ஷன் என்பது எனக்குத் தெரியாத விஷயம். அதனால் நான் அதைச் செய்ய மாட்டேன்'' என்றார்.
இதுபோல, சில பங்குகள் பற்றி நமக்கு எதுவுமே தெரியாத போது அவற்றில் முதலீடு செய்யக் கூடாது. மற்றவர்கள் சொல்கிறார்கள், செய்கிறார்கள் என்பதால் ஆட்டு மந்தை மாதிரி நாமும் ஒரு பங்கை வாங்கி முதலீடு செய்யக்கூடாது.  

நன்றி : விகடன்

இதையும் படிக்கலாமே :

உங்களுக்கு குழந்தைகளை பிடிக்குமா ? அப்ப இது உங்களுக்கு தான்

 

கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டியவை ..(புத்தாண்டு ஸ்பெஷல் )

 

உங்கள் குழந்தையை நல்லவனாக, வல்லவனாக, புத்திசாலியாக வளர்ப்பது எப்படி ?

 

 

Saturday, April 14, 2012

உங்களுக்கு குழந்தைகளை பிடிக்குமா ? அப்ப இது உங்களுக்கு தான்



 
குழந்தைக்கு ஆறு மாதம் வரை தாய்பால் மட்டுமே கொடுக்க வேண்டும்


ஒரு நாளைக்கு ஆறு முறை சிறுநீர் கழித்தால் குழந்தைக்கு போதுமான தாய் பால் கிடைக்கின்றது என அர்த்தம்

ஊரல்மருந்து , உறமருந்து , போனிசான் , கிரப்வாட்டர் , குளுகோஸ் தண்ணீர் , டப்பா பால் தேன் இவைகளை கொடுக்க கூடாது

தாய் முருங்கைகாய் , முள்ளங்கி  , அவரைக்காய், கொத்தவரங்காய் , மாங்காய் , மாம்பழம் இவைகளை சாப்பிட கூடாது .

தொப்புள்கொடி விழுந்த பின் அந்த இடத்தில் துணி வைத்து கட்டவோ , பவுடர் வைத்து அழுத்தவோ கூடாது .

பேபி சோப்பைவிட பயித்தமாவு தேய்த்து குளிப்பாட்டுவது நல்லது

தலைக்கு நல்ல தேங்காய் எண்ணெய் பயன்படுத்துங்கள் , பேபி ஆயில் வேண்டாம் 

ஆறு மாதத்திற்கு பின் வீட்டில் தயாரித்த திட உணவுகள் கொடுக்கலாம்

எக்காரணம் கொண்டும் குழந்தைக்கு சுய வைத்தியம் செய்யாதீர்கள்


டிஸ்கி : இந்த பதிவில் உள்ள படங்கள் முதல் மூன்றும்  என் மகன் சரண் , மீதி உள்ளவை என் தங்கை மகள் ஸ்ரீ தர்ஷினி

இதையும் படிக்கலாமே :

கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டியவை ..(புத்தாண்டு ஸ்பெஷல் )

அஜித் , விஜய்க்கு போட்டியாக களமிறங்கும் புதிய ஹீரோ

 

உங்கள் குழந்தையை நல்லவனாக, வல்லவனாக, புத்திசாலியாக வளர்ப்பது எப்படி ?

 

 



Friday, April 13, 2012

கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டியவை ..(புத்தாண்டு ஸ்பெஷல் )

அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்


அடுத்தவனுக்கு கருணை காட்ட மறுப்பவனுக்கு இறைவனும் கருணை காட்டமாட்டார்.

-         நபிகள்

ஒழுக்கமுடன் இருக்கும் நல்லவனுக்கு எந்த கடவுளை பற்றியும் கவலை இல்லை .

-         கன்பூஷியஸ்

அறிவுள்ள மனிதன் தன்னை திருத்தி கொள்வதில் கவனத்தை செலுத்துகின்றான் .

-         ஜேம்ஸ் ஆலன்

எதிர்பார்ப்பு இல்லை என்றால் ஏமாற்றம் இல்லை

-         யாரோ .

நூறு அசடுகளுக்கு தலைவனாக இருப்பதை விட ஒரு அறிவாளிக்கு அடிமையாக இருக்கலாம் .

-         ஸ்டோன்சிமித்

செயலில் கவனக்குறைவுதான்
தோல்விகளை சந்திக்க காரணமாக இருக்கின்றது

-         பிராங்களின்

குடுக்க குடுக்க குறையாத செல்வம் அன்பு , கல்வி .

-         யாரோ

உலகில் கலப்படம் இல்லாத ஒரே பொருள் தாய் பால்
உலகில் எதையும் எதிர்பார்க்காதது தாய் அன்பு
                     
                     -வருங்கால வைரமுத்து ராஜபாட்டை ராஜா


இதையும்  படிக்கலாமே :

என்ன அழகு... எத்தனை அழகு !

பயமுறுத்தும் பன்றிக்காய்ச்சல் நோய்

கதம்பம் 04/04/2012

 

 


Tuesday, April 10, 2012

என்ன அழகு... எத்தனை அழகு !


        
             கோடை வந்து விட்டால்... சருமப் பாதுகாப்புக்கு பெண்கள் ரொம்பவே மெனெக்கெடுவார்கள். நிறைய தண்ணீர்,  பழங்கள்... இவைதான் கோடைக்குக் கவசம் என்பதை எப்போதும் மறந்து விடாதீர்கள். குறிப்பாக, பழங்கள் முகப்பொலிவுக்கு சிறந்த உபகரணம். கிவி, பப்பாளி, மாம்பழம் என்று சீஸன் பழங்களை வைத்தே சருமப் பாதுகாப்பு பெறலாம். கோடையில் மலிவாக கிடைக்கும் மாம்பழத்தைக் 
கொண்டே முகப்பொலிவைப் பெறுவது பற்றி இங்கே பார்ப்போமா!
வைட்டமின் 'ஏ’ மற்றும் பவர்ஃபுல் ஆன்டி ஆக்ஸிடன்ட் இருப்பதால், கோடை வெயிலில் இருந்து சருமத்தைக் காத்து, பூரண புதுப்பொலிவு கொடுக்கும் ஆற்றல் மாம்பழத்துக்கு உண்டு. அதுமட்டுமல்லாமல், சருமத்தில் எண்ணெய்ப் பசையை சமன் செய்வதோடு, முகத்தில் வறட்சியை விரட்டும் வித்தையும் அதனிடம் உண்டு.
இத்தனை அம்சங்கள் கொண்ட மாம்பழத்தைப் பயன்படுத்தி, ஐந்து ஸ்டெப் கொண்ட 'மேங்கோ சம்மர் ஸ்கின் கேர் ட்ரீட்மென்ட்’ செய்து கொள்வது... கோடையிலும் உங்களை குதூகலத்துடன் வைத்திருக்கும்.
இதற்கென இருக்கும் ஸ்பெஷல் க்ரீம்களுடன் மாம்பழத்துண்டுகளையும் பயன்படுத்தித்தான் இந்த ஐந்து ஸ்டெப்பையும் மாடல் சந்தனாவுக்கு இங்கே செய்யப் போகிறோம்.
முதல் ஸ்டெப், மேங்கோ ஃபேஸ் க்ளென்ஸர்: மாம்பழத்துண்டுகள் மற்றும் மேங்கோ ஃபேஸ் க்ளென்ஸர் க்ரீமைக் கொண்டு, 5 நிமிடங்கள் முகத்தில் ஃபேஷியல் செய்தால், கோடை வெயிலால் கறுப்பாக மாறும் முகம், தன் இயல்பான நிறத்துக்கு மாறும்!
இரண்டாவது ஸ்டெப், மேங்கோ ஃபேஸ் ஸ்க்ரப்: இதற்கென இருக்கும் மேங்கோ ஃபேஸ் ஸ்க்ரப் க்ரீம் மற்றும் மாம்பழத்துண்டுகளைச் சேர்த்து, முகத்தில் ஃபேஷியல் செய்து, இரண்டு முதல் மூன்று நிமிடங்கள் வரை அப்படியே இருக்க வேண்டும். இது, முகத்தின் தோலில் இறந்து போயிருக்கும் செல்களை அகற்றி, புது செல்களை உருவாக்கும். சருமத்தையும் புத்துணர்ச்சி அடையச் செய்யும்!
மூன்றாவது ஸ்டெப், ஸ்டீமிங்: இரண்டாவது ஸ்டெப்பை முடித்ததும், இரண்டு நிமிடங்களுக்கு இதைச் செய்தால்... நீராவி மூலமாக சருமத் துவாரங்கள் திறந்து அழுக்குகள் வெளியேற்றப்படும். இந்த முயற்சியை அடிக்கடி மேற்கொள்ளும்போது... பிளாக் ஹெட்ஸ், வொயிட் ஹெட்ஸ்கள் நாளடைவில் நீங்கிவிடும்.
நான்காவது ஸ்டெப், மேங்கோ ஃபேஸ் மசாஜ்: தோல் வறண்டு போகாமல் பார்த்துக் கொள்வதற்காகவே இந்த ஸ்டெப். மேங்கோ ஃபேஸ் மசாஜ் க்ரீம் கொண்டு மசாஜ் செய்வதால், முகம் மிருதுவாகவே இருக்கும். அதேபோல முகத்தின் ஈரப்பதத்தையும் சம அளவில் இது பராமரிக்கும். சுமார் 15-20 நிமிடங்கள் வரை இதைச் செய்யலாம். பொதுவாக பருக்கள் இருக்கும் இடத்தில் மசாஜ் செய்வதைத் தவிர்த்துவிட வேண்டும். இதற்கு முன்பாக செய்த ஸ்டீமிங் காரணமாக திறந்திருக்கும் சருமத் துவாரங்கள் வழியாக மேங்கோ ஃபேஸ் மசாஜ் க்ரீம் உள் இறங்குவதால்... நல்ல ரிசல்ட் கிடைக்கும். மாம்பழத்திலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட் மூலமாக, கண் புருவங்களில் கருவளையங்கள் வராமல் தடுக்கப்படும்.
ஐந்தாவது ஸ்டெப், மேங்கோ ஃபேஸ் பேக்: மாம்பழத் துண்டுகளோடு... மேங்கோ ஃபேஸ் பேக் கிரீமை முகத்தில் அப்ளை செய்து 10 முதல் 15 நிமிடங்கள் வைத்திருந்து, பிறகு வெதுவெதுப்பான நீரில் அலசினால்... பிரமாதமாக முகம் ஜொலிக்கும்! முகத்தின் தோலை ஃப்ரெஷ்ஷாக மாற்றி வைப்பதோடு, பகலில் வெளியில் போகும்போதும்கூட கறுப்பாக மாறாமல் தடுக்க இந்த ஸ்டெப் உதவும். கோடை வெயிலால் ஏற்படுகின்ற வறட்சியை பேலன்ஸ் செய்வதற்காக ஃபைனல் டச்-அப் என்கிற வகையிலும் இந்த ஃபேஸ் பேக் பயன்படும்.
35 வயதைக் கடந்த பெண்கள், தோலின் கடினத்தன்மை மற்றும் முதிர்ச்சி போன்ற காரணங்களுக்காக கூடுதலாக,  ஃபேஸ் பேக் ஸ்டெப்பை இரண்டு தடவை செய்துகொள்வது கூடுதல் பலன் கொடுக்கும்!
இதையெல்லாம் மாடல் சந்தனாவுக்கு செய்து முடித்த பிறகு, ''வாவ்... இட்ஸ் ட்ரூ!'' என்று தன் முகத்தைப் பார்த்து தானே ஏக பரவசமானார்!
இந்த ஃபேஷியலை வீட்டிலேயே செய்துகொள்ள நினைப்பவர்கள்... மாம்பழத் துண்டுகளுடன் தேவைக்கேற்ப தேன், பால், சர்க்கரை, ஆல்மண்ட் ஆயில் கலந்து க்ரீமைத் தயாரித்துக்கொள்ள வேண்டும். பிறகு,     ஸ்டெப்பை ஸ்டெப்பாக அதைப் பயன் படுத்தலாம்.
இந்த 'மேங்கோ சம்மர் ஸ்கின் கேர் ட்ரீட்மென்ட்’டை கோடை முடியும் வரை பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை செய்து வந்தால்.. கொளுத்தும் வெயிலுக்கு 'டோன்ட் கேர்’ சொல்லிவிடலாம். கூடவே, ஜூலை மலர்களைப் போல புத்துணர்வாகவே இருப்பீர்கள்... அக்னி நட்சத்திரத்திலும்!

Monday, April 9, 2012

உங்களுக்கு வயதாகிவிட்டதா ? ஒரு டெஸ்ட்.






கீழே உள்ள கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள். இறுதியில் மதிப்பென்னை கனக்கிட்டு கொள்ளுங்கள்.  நீங்கள் தெரிவு செய்யும் பதில் அ எனில் 10 மதிபெண்  ஆ எனில் 5 மதிபெண் இ எனில் 1 மதிபெண்

1 . ஆன்/ பெண் இனைந்து சாலையில் நடக்கும் போது உங்களுக்கு 
    தோனுவது.

   அ) கடுப்பு                            ஆ) சந்தோஷம்                           இ) ஏதுமில்லை

2. நீங்கள் விரும்பும் படம்

   அ) காதல்                    ஆ) சண்டை                       இ) ஏதுமில்லை

3. “அந்த காலத்துல நான்கலாம்….” என அடிக்கடி சொல்விர்கலா?

   அ) ஆம்                            ஆ) இல்லை                       இ) எப்போழுதாவது

4. ஓடும் பஸில் ஏறுவிர்களா ?

   அ) ஆம்                            ஆ) இல்லை                       இ) எப்போழுதாவது

5. அடிக்கடி கோவம் வருமா ?

   அ) ஆம்                            ஆ) இல்லை                       இ) எப்போழுதாவது

6. காதல் கவிதைகள் படிக்க விருப்பமா?

   அ) ஆம்                            ஆ) இல்லை                       இ) எப்போழுதாவது

7. உடை விஷயத்தில் அலட்சியமாக இருப்பிர்களா?

   அ) ஆம்                            ஆ) இல்லை                       இ) எப்போழுதாவது

8. மொபைல் பயன் படுத்துபவர்களை கண்டால் கோவம் வருகிறதா ?

   அ) ஆம்                            ஆ) இல்லை                       இ) எப்போழுதாவது




நீங்கள் தெரிவு செய்யும் பதில்

அ எனில் 10 மதிபெண்  

ஆ எனில் 5 மதிபெண்

இ எனில் 1 மதிபெண்

மதிப்பெண் கண்டுபிடித்துவிட்டிற்களா ?

முடிவு :

எனக்கு இன்னும் வயசு ஆகவில்லை, நான் என்றும் இளமைதான் என நினைப்பவர்கள் யாரும் இந்த டெஸ்டில் கலந்துகொண்டிருக்க மாட்டார்கள். வயசானா போல பீலிங் உள்ளவங்கதான் மார்க் என்னனு தேடுவிங்க..  நான் என்றுமே யூத்துதான்