> என் ராஜபாட்டை : October 2012

.....

.

Friday, October 26, 2012

Facebook Account Hack செய்யப்பட்டால் மீட்பது எப்படி?


4,00,000 ஹிட்ஸ்அடைய உதவிய நண்பர்களுக்கு நன்றி


நம்மில் பெரும்பாலோனோர் இணையத்துக்கு வருவதே பேஸ்புக்கை பயன்படுத்த தான் என்ற அளவுக்கு அனைவருக்கும் அதன் மீது மோகம். நம்முடைய தனிப்பட்ட தகவல்கள் பல பேஸ்புக்கில் உள்ளது, இந்த நிலையில் நமது அக்கௌன்ட்டை யாரேனும் ஹாக் செய்து விட்டால்? உங்களுக்கு பெரிய அதிர்ச்சியான செய்தி அது, ஹாக்கர் உங்கள் Account மூலம் நிறைய விசயங்களை செய்து விட வாய்ப்பு உள்ளது. இந்த நிலையில் ஹாக் செய்யப்பட்ட பேஸ்புக் கணக்கை திரும்பப் பெறுவது எப்படி என்று பார்ப்போம்.

1. முதலில் www.facebook.com என்று உங்கள் அட்ரஸ் பாரில் டைப் செய்து பேஸ்புக்கை ஓபன் செய்யவும்.

2. ஒரு முறை உங்கள் தகவல்களை கொடுத்து லாக்-இன் செய்ய முயற்சி செய்யவும்.

3. லாக்-இன் ஆகாவிட்டால் இந்த இணைப்புக்கு சென்று "My Account Is Compromised" என்பதை கிளிக் செய்து அடுத்த பக்கத்திற்கு வரவும். அதில் கேட்கப்பட்டுள்ள தகவல்களில் ஏதேனும் ஒன்றை தரவும்.
https://www.facebook.com/login/reauth.php?next=https%3A%2F%2Fwww.facebook.com%2Fcheckpoint%2Fcheckpointme%3Ff%3D113194692112762%26r%3Dweb_hacked

4. இதில் முதல் பகுதியை பயன்படுத்தி மீட்க தான் பெரும்பாலும் வாய்ப்பு அதிகம்.

Email -sign in செய்ய பயன்படுத்தும் மின்னஞ்சல்


Phone - நீங்கள் பேஸ்புக்கில் கொடுத்துள்ள போன் நம்பர்

Facebook username: உங்கள் Profile பக்கத்தில் நீங்கள் பார்க்கலாம். உங்கள் User Name உங்களுக்கு தெரியாவிட்டால் நண்பர்களிடம் சொல்லி கேட்கலாம். அவர் உங்கள் Profile-ஐ பார்த்தால் தெரியும். ]

நண்பர் பெயர் கொடுத்து தேடுவது கொஞ்சம் கடினமான தேடல்.


5.இப்போது நீங்கள் கொடுத்த தகவல்படி உங்கள் பேஸ்புக் கணக்கு காட்டப்படும். [இதில் வரவில்லை என்றால் Step-7 க்கு செல்லவும்]

6.உங்கள் இப்போதைய பாஸ்வேர்ட் கொடுத்து உள்ளே செல்லலாம், அல்லது பழைய பாஸ்வேர்ட் கொடுத்து Password Reset செய்ய முயற்சி செய்யலாம். பழைய பாஸ்வேர்ட் என்றால் உங்கள் ஈமெயில் கணக்கை நீங்கள் ஓபன் செய்யும் நிலையில் இருக்க வேண்டும். அதில் உங்களுக்கு ஒரு code வரும் அதை நீங்கள் கொடுத்தால் உங்கள் பேஸ்புக் கணக்கை ஓபன் செய்ய முடியும்.
தகவல்  உதவி : தொழில்நுட்பம் facebook page

Wednesday, October 24, 2012

இயந்திரன் பார்ட் 2

மனிதனை விலங்கில் இருந்து வேறுபடுத்தி காட்டுவது சிரிப்புதான் . அதனால்  உங்களை  சிரிக்க வைக்க சில படங்கள் இங்கே ...



இவன்  உண்மையில் டாக்டரா ?

 பெட்ரோல் விலை ஏறி போச்சு அதான் ....


 சின்ன துப்பாக்கி பெரிய துப்பாக்கி ...(!!!!!!!!!!)



என்ன  நடை ...என்ன  நடை ...


 தண்ணிர் தாகம் அதான் இப்படி ..


 இயந்திரன் பார்ட் 2



ஒரு வாழ பழம்  இங்க இருக்கு இன்னொன்னு எங்கே ?


உதவலாமே :

இலங்கையின் மனித உரிமை மீறலுக்கு எதிராக ஒரு தமிழனாக உங்கள் உணர்வுகளை பதிவு செயுங்கள் .. உடனே 8067006666 என்ற எண்ணுக்கு missed Call குடுங்கள் ..

# உங்கள் பக்கங்களில் பகிரவும் ..

Monday, October 22, 2012

அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்



இணையத்தில் ஏராளமான பயன்படக்கூடிய தளங்கள் இருந்தாலும் இலவசமானதும்,சிக்கல் அற்ற இலகுவானதுமான தளங்களை காண்பது மிக கடினம்.நிங்கள் சிலவேளைகளில் அறிந்திருக்காத ஆனால் அறிந்து இருக்கவேண்டிய ஒன்பது தளங்களை கீழே பார்ப்போம்.

1 . http://www.printwhatyoulike.com/

நீங்கள் சில வலைப்பக்கங்களை பிரிண்ட் எடுக்க வேண்டி வரும். அப்படியான சந்தர்ப்பங்களில் உங்களுக்கு தேவையான வ
ிஷயங்கள் மட்டு மன்றி உங்களுக்கு தேவையற்ற அப்பக்கத்தில் உள்ள விளம்பரங்கள், வெற்று இடம் என்பனவும் பிரிண்ட் ஆகும்.ஆனால் சில செக்கன்களில்(SECTION) உங்களுக்கு வேண்டியதை மட்டும் பிரிண்ட் பண்ணி எடுத்துக் கொள்ள ஏற்றவாறு அந்த பக்கத்தை மாற்றி உங்களுக்கு இந்த தளம் உதவி செய்யும்.

2 . http://www.alertful.com/

உங்களுக்கு வேண்டிய ஒன்றை நினைவூட்ட வேண்டுமா?உதாரணமாக ஒருவரின் பிறந்த நாள்.நீங்கள் செய்ய வேண்டியது இது தான். இந்த தளத்துக்கு சென்று உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் உங்களுக்கு நினைப்பூட்ட வேண்டிய விபரத்தையும் வழங்கினீர்கள் என்றால் அது உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு எப்போது உங்களுக்கு நினைப்பூட்ட வேண்டுமோ அந்த நேரம் நினைவூட்டலை வழங்கும்

3 . http://www.pdfunlock.com/

சில PDF files களை நீங்கள் பார்த்தால் சில கட்டுப்பாடுகள் கொண்டதாக இருக்கும்.உதாரணமாக கொப்பி, பிரிண்ட், எடிட் பண்ண முடியாதிருக்கும் .கவலையை விடுங்கள் இந்த தளத்துக்கு சென்று குறித்த PDF file ஐ கொடுத்தால் எல்லா கட்டுப்பாடுகளையும் உடைத்து உங்களுக்கு விரும் பியவாறு அதாவது உங்கள் கோப்பு போன்று எப்படி வேண்டுமானாலும் மாற்றி கொள்ளலாம்.

4 . http://www.daileez.com/

இது ஒரு நினைவுக்குறிப்பு போன்றது.அதாவது இன்றைய நாள் முடிவில் நீங்கள் செய்ததை டயரி இல் எழுதுவீர்கள். அதை ஒரு ஒரு சின்னமாக அதாவது Icon ஆக காட்டினால் எப்படி இருக்கும். இத்தளம் மூலம் அதை நீங்கள் செய்து கொள்ள முடியும்.உங்கள் செயலை நீங்கள் எழுத நினைப் பதை காட்டக்கூடிய அந்த Icon இக்கு விரும்பினால் ஒரு சிறிய விளக் கத்தையும் சேர்த்துக்கொள்ள முடியும்

5 . http://isitraining.in/

இந்த கணம் ஒரு குறிப்பிட்ட நகரம்(பெரிய) ஒன்றில் மழை பெய்கிறதா என நீங்கள் கண்டு பிடிக்க வேண்டுமா.இந்த தளத்துக்கு சென்று அந்நகரத்தின் பெயரை வழங்கினால் நீங்கள் அறிந்து கொள்ளலாம். அதுமட்டுமல்ல நீங்கள் வழங்கிய நகரத்தின் இக்கண weather conditions களையும் அறிந்து கொள்ள முடியும். இந்த தளம் உலக வானிலை அறிக்கையே உங்கள் காலடியில் கொண்டு வந்து சேர்க்கும்.

6 . http://www.typingweb.com/

இது ஒரு ஆன்லைன் தட்டச்சு பயிற்சி வழங்கும் இலவச தளமாகும். பலவகை திறன் மட்டங்களை கொண்டவர்களுக்கும் வெவ்வேறு மட்டங் களில் பயற்சி வழங்கக்கூடிய தளமாக இது அமைந்தது உள்ளது.இன்றைய யுகத்தில் விரைவான டைப்பிங் திறமையும் பல வேலைவாய்ப்புகளை தீர்மானிக்கும் ஒரு தகுதியாக இருப்பதால் இத்தளம் நிச்சயம் அப்படிபட்ட வர்களுக்கு ஒரு நல்ல ஒரு வாய்ப்பாக அமைகிறது.

7 . http://www.gedoo.com/

இந்த தளம் ஒரு தேடல் தளமாக அதாவது கூகுல் போன்று உங்களுக்கு விரும்பிய ஒன்றை பற்றி தேடு தளமாக உள்ளது.நீங்கள் ஒன்றை பற்றி தேடினால் அது தானாக கூகுல் இல்ருந்து தேடி தரும். ஆனால் நிங்கள் 4300 தேடு தளங்களில் ஒன்றை தெரிவு செய்து அதிலிருந்து தேடி தருமாறு செய்யலாம்.இந்த தளம் 4300 தேடு தளங்களில் உங்களுக்கு பிடித்ததில் தேடி தரும். அதவாது புரோக்கர் போல.ஹிஹிஹி

8 . http://www.cvmaker.in/

வேலை ஒன்றுக்கு அப்ளை பண்ணும் பொது தரமான Cv ஒன்றை ரெடி பண்ணுவது மிக முக்கியம்.எல்லா தகவல்கள் தகமைகள் இருந்தும் அதை எப்படி வடிவமைப்பது என மூளையை கசக்கி பிழிந்து கொண்டு இருப் பீர்கள்.இக்கவலை போக்க இத்தளம் உதவி செய்கிறது.சில நிமிடங்களில் ஒரு அழகான professional ஆன Cv ஐ ரெடி பண்ணி கையில் தரும்.

9 . http://www.zoom.it/

இணையதளங்களில் உள்ள சில படங்கள் குறிப்பாக google search படங்களின் URL இனை இந்த தளத்துக்கு வழங்கினால் நீங்கள் வழங்கிய படத்தை மிக மிக தரமான ஒரு படமாக மாற்றி தரும்.அது மட்டுமல்ல மாற்றப்பட்ட படத்துக்குரிய ஒரு url முகவரியையும் தரும் . நீங்கள் அதை பயன்படுத்தி கொள்ள முடியும். எனவே ஒரு சாதாரணமான படத்தை மாறுப்பட்ட ஒரு அனுபவத்தை தரும் படமாக மாற்றும்

இதையும் படிக்கலாமே :

இணையத்தில் சம்பாதிப்பது எப்படி ?



நன்றி : தகவல் தொழில்நுட்பம் facebook page

Friday, October 19, 2012

சிவாஜிராவ் முதல் சிவாஜி வரை : ரசித்து படிக்க வேண்டிய புத்தகங்கள் பகுதி 3





ரஜினி , இது ஒரு மந்திர வார்த்தை . இதை உச்சரிக்காத தமிழனே இருக்க முடியாது . குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் ரசிக்கும் ஸ்டையில் மன்னன . சாதாரண பேருந்து நடத்துனராக துவங்கி , துணை நடிகராக மாறி , பின் வில்லனாக நடித்து அதில் பெயர் பெற்று பின்பு உலகம் போற்றும் சூப்பர் ஸ்டார் ஆனவர் . மொழியே புரியாத ஜப்பானில் கூட இவருக்கு ரசிகர்கள் உண்டு என்பதே இவர் சிறப்பு .

இவரை பற்றி பல புத்தகங்கள் வந்துள்ளது ஆனால் இந்த புத்தகம் கொஞ்சம் வித்தியசமானது . அவரி பற்றி யாருக்கும் தெரியாத பல தகவல்கள் இதில் உள்ளது . அவரின் ஆரம்பகால வாழ்கை முதல் இப்போ உள்ளது வரை விரிவாக அலசபட்டு உள்ளது


உங்களுக்குகாக சில வரிகள் :


ரஜினி என்றால் இருட்டு , மஞ்சள் , மங்கலன் என பொருள் .


ரஜினிகாந்த் என்றால் இரவின் நாயகன் என பொருள்


ஆரம்பகால விலாசம் : புதுபேட்டை கார்டன்
இப்போ              : போயஸ் கார்டன்



ஆரம்பல்கால வீட்டு வடக்கை : 115


ரஜினியின் 100 வது படம் ராகவேந்திரர் . இது ரஜினி விரும்பி கேட்டதால் எடுக்கபட்டது .


கமல் , ரஜினி நட்பு ஆழமாக ஆரம்பித்தது நினைத்தாலே இனிக்கும் படம் எடுக்கும் போதுதான் .



ரஜினியின் மானசீக குரூ பாலசந்தர்





டிஸ்கி : இந்த புத்தகத்தை DOWNLOAD செய்வதில் ஏதேனும் பிரச்னை இருந்தால் rrajja.mlr@gmail.com க்கு  Mail பண்ணவும். .E-Book  விரைவில் அனுப்பப்படும் .




Tuesday, October 16, 2012

மாற்றான் : விமர்சனம்






முன்குறிப்பு : இதுதான் என் முதல் விமர்சனம்




தான் ஒரு மசாலா இயக்குனர் என்பதை மீண்டும் நிருப்பித்து உள்ளார் கே .வி ஆனந்த் . இந்தமுறையும் இவருக்கு துணை நின்றது எழுத்தாளர்கள் சுபா . கொஞ்சம் சஸ்பென்ஸ் , கொஞ்சம் காமெடி , கொஞ்சம் சென்டிமென்ட் , கொஞ்சம் அக்ஷன் , சில பாடல் என்ற கலவையில் படம் இருக்கிறது .

ஒட்டி பிறந்த இரட்டையர்கள் அகிலம் , முகிலன் . இவர் தந்தை குழந்தைகள் குடிக்கும் பால் பவுடர் தயாரிக்கும் முன்னணி நிறுவனம் நடத்துகிறார் . அதில் நடக்கும் முறைகேடுகளை கண்டுபிடிக்கும் உளவாளி கொல்லபட அதை தெரிந்த காரணத்தால் அகிலன் கொல்லப்பட ஒரு சூர்யா மட்டும் இருக்கிறார் . இவர் எப்படி அந்த முறை கேடுகளை கண்டுபிடித்தார் , வில்லனை எப்படி கொன்றார் என்பதை (தில் இருந்தா ) வெள்ளி திரையில் பார்க்கவும் .


முதல் பாதி விறுவிறுப்பாக செல்கின்றது . இரருவரும் சேர்ந்து செய்யும் ரகளை . காஜல் அகர்வாலை இருவரும் கரக்ட் செய்ய முயல்வது , ஒருவர் தண்ணி அடித்தல் இருவருக்கும் கிக் ஏறுவது என ரகளையாகவும் , பால் பவுடர் சீக்ரட் பற்றி உள்ள பென்டிரைவரை கைபற்ற நடக்கும் சண்டை எனவும் விறுவிறுப்பாக நகரும் படம் இரண்டாம் பாதியில் அண்ணா ஹசாரே போராட்டம் போல தடுமாறுகிறது .

லாஜிக் என்ற ஒன்றை மறந்து விட்டுதான் படம் பார்க்க வர வேண்டும் என ஒரு விளம்பரம் கொடுத்தால் நன்றாக இருக்கும் . இதயமாற்று அறுவை சிகிச்சை முடித்தவர் எவ்வளவு வேகமாக ஓட , சண்டை போடா முடியுமா ?

காஜல் தான் காதலித்த சூரிய இறந்ததும் எந்த வருத்தமும் இன்றி அடுத்த சூர்யாவுடன் டுயட் படுவது எப்படி ?

இதயத்தை மாற்றினால் ஒருவனின் நினைவுகள் மற்றவர்களுக்கு வந்து விடுமா ?

நினைவுகள் இதயத்தில் store ஆகுமா அல்லது மூளைல store ஆகுமா ?

பல படங்களில் பயன்படுத்திய அதே பின்னணி இசையை இதற்கும் படன்படுத்துவது ஏன் ? ( சூர்யா அடிபட்டு ஆஸ்பத்திரி செல்லும் போது வரும் இசை நண்பன் படத்தில் ஜீவா அடிபட்டு ஆஸ்பத்திரி செல்லும் வழியில் வரும் இசை போலவே உள்ளது )


படம் முழு மொக்கை என ஒதுக்க முடியாது . அருமையான படம் என தலையில் தூகி வைத்து கொண்டாட முடியாது . ஒருதடவை பார்க்கலாம் .


டிஸ்கி : ஆனந்த விகடன் மார்க் போடா நான் ஒன்னும் சிபி
         இல்லை

டிஸ்கி : கதாநாயகி பற்றி வர்ணிக்கவில்லை காரணம் காஜால்
        ரசிகர்மன்ற தலைவர்கள் பிரபா மற்றும் மயிலன்
        வருத்தப்பட கூடாது என்று .



Tuesday, October 9, 2012

அஜித் , சிம்பு இணையும் தர்மத்தின் தலைவன் ரீ - மேக்




தமிழ் சினிமாவில் சில நடிகர்களை மட்டும் தான் பிற நடிகர்கள் தங்கள் படங்களில் அவர்களின் ரசிகர்கள் என சொல்லி கொண்டாடுவார்கள் . அவர்களில் முதன்மையானவர் ரஜினி . அடுத்த இடத்தை பிடிப்பவர் நமது தா அஜித் தான் . பல படங்களில் பல நடிகர்கள் அஜித் ரசிகராக நடித்துள்ளனர் , இதில் பலர் நிஜமாகவே அவர் ரசிகர்கள் கூட . இப்படிபட்ட நடிகர்களில் முக்கியமானவர் , முதன்மையானவர் சிம்பு . இவர் அஜித்தின் ரசிகர் என்பதை விட வெறியர் என சொல்லலாம் . நண்பன் படத்தில் நடிக்க வந்த வாய்ப்பை அஜித் ரசிகர்களுக்காக வேண்டாம் என உதறிதள்ளியவர் .








இவர் அஜித்துடன் இணைந்து ஒரு படம் நடிக்க போகிறார் என்பதுதான் இப்போதைய ஹாட் நியூஸ் . அஜித் தற்பொழுது விஷ்ணு வர்த்தனுடன் பெயரிடப்படாத ஒரு படத்தில் நடித்து வருகிறார் . அது முடிந்த உடன் இந்த படத்தில் நடிக்கலாம் என தெரிகிறது .

ஏற்கனவே ரஜினி நடித்த பில்லா படத்தின் ரீ மேக் இல் அஜித் நடித்து அது பெறும் வெற்றி பெற்றதால் மீண்டும் ஒரு ரஜினி படத்தை ரீ மேக்  பண்ணலாம் என சிம்பு நினைப்பதாக தகவல் . இதனால் ரஜினி பிரபு இணைந்து நடித்து பெறும் வெற்றி பெற்ற தர்மத்தின் தலைவன் படத்தை எடுக்கலாம் என முடிவு செய்துள்ளதாக கேள்வி.







சிம்பு கூட தனது டுவிட்டரில் நாங்கள் இணைந்து நடிப்போம் என சொல்லியுள்ளார் . இப்படத்தை சிறுத்தை பட இயக்குனர் சிவா இயக்க உள்ளார் என புதிய தலைமுறை செய்தி சேனல சொல்லியுள்ளது .
இன்னும் சில நாட்களில் முழு விவரம் வரும் என எதிர்பார்க்கிறோம் .





டிஸ்கி : பி . வாசு இயக்கத்தில் சந்திரமுகி இரண்டாம் பாகத்தில் நடிக்க அஜித்துடன் பேச்சு வார்த்தை நடப்பதாக ஆனந்த விகடன் செய்தி வெளியிட்டு உள்ளது .


 இதையும் படிக்கலாமே :


இணையத்தில் சம்பாதிப்பது எப்படி ?