> என் ராஜபாட்டை : 2009

.....

.

Sunday, July 26, 2009

நடிகர்கள் டாக்டர் பட்டம் பெறுவது எப்படி..!!!

கஷ்டப்பட்டு படிச்சு டாக்டர் பட்டம் வாங்கினது எல்லாம் அந்தக் காலம். வர்றவன் போறவன்.. கிழிஞ்சது கிழியாதது... பட்டன் வச்சது வைக்காதது.. தோலான் துருத்திக்கு எல்லாம் தேடிப் பிடிச்சு டாக்டர் பட்டம் கொடுக்குறதுதான் இப்போதைய லேட்டஸ்ட் பேஷன். சாதாரண ஆளுங்களே டாக்டர் பட்டம் வாங்கறப்போ, நம்ம நடிகர்கள்.. நாளைக்கு நம்ம நாட்டை ஆளப் போற புண்ணியாத்மாக்கள்..(அந்த நெனப்புல தாண்ணே பல பேரு ஊருக்குள்ள சுத்திக்கிட்டு இருக்காய்ங்க.. ) அவங்க டாக்டர் பட்டம் வாங்க வேண்டாமா? ஒரு நடிகர் எப்படி பிரபலமாகி டாக்டர் பட்டம் வாங்கலாம்னு சொல்லத்தான் இந்த இடுகை..
-->உங்க அப்பா ஒரு இயக்குனராவோ, தயாரிப்பாளராவோ இருந்தா ரொம்ப நல்லது. அப்பத்தான் உங்களோட அத்தனை படமும் தொடர்ச்சியா ஊத்தினாலும் மறுபடியும் உங்களை வச்சு படம் எடுப்பாங்க. அப்படி இயக்குனர் அப்பா இல்லாதவங்க யாராவது ஒரு இளிச்சவாயனா பார்த்து தத்து எடுத்துக்கோங்க..
-->கதை இருக்கோ இல்லையோ.. கதாநாயகிய பார்த்து செலக்ட் பண்ணுங்க. ஏன்னா கண்டிப்பா உங்களுக்காக ஓடலைன்னாலும் படம் நாயகியோட கவர்ச்சிக்காகவாவது ஓடும்.
-->படத்துல நீங்களே ஒரு பாட்டு பாடுறது ரொம்ப அவசியம். கொத்து புரோட்டா, சால்னா, கோடு, ரோடு, பூரி, பிஸ்கோத்துன்னு எல்லாம் தமிழ் இலக்கிய வார்த்தைகளா போட்டு பாடுங்க. பாட்டுக்கு நடுவுல "இந்தப் பாடலை பாடிக் கொண்டிருப்பது.." அப்படின்னு விளம்பரம் பண்ணனும். (விளம்பரம் முக்கியம் அமைச்சரே..)
-->நீங்க தொடர்ந்து முயற்சி பண்ணினா, கண்டிப்பா நடுவில யாராவது ஒரு நல்ல இயக்குனர் கிட்ட தெரியாத்தனமா சிக்கி, ஏதாவது ஒரு நல்ல படத்துல நடிச்சுருவீங்க. இனிமேல்தான் ரொம்ப முக்கியமான நேரம். வளர்ந்து வர இன்னொரு நடிகன் எவனையாவது செலக்ட் பண்ணி இவன்தாண்டா எனக்கு போட்டின்னு சொல்லிறனும். உங்களோட எல்லாப் படத்துலயும் அவனத் திட்டி வசனமும், பாட்டும் இருக்கணும்.
-->உங்களுக்குன்னு ஒரு ரசிகர் க்ரூப்ப செட் பண்ணிக்கோங்க. உங்களோட படம் பாடாவதியா இருந்தாலும் ரிலீஸ் ஆகுற தியேட்டர்ல எல்லாம் போய் பாட்டுக்கு ஒன்ஸ்மோர் கேக்குறது, திரைய கிழிக்கிறது.. இதுதான் இவங்க வேலையே. அப்படியே உங்களோட எதிரியோட படம் வந்தா, முதல் ரோவுல உக்கார்ந்துக்கிட்டு, இது வெளங்காது.. படம் தேறாதுன்னு எல்லாம் பரப்பணும். ரசிகர்கள் அடிச்சிக்கிட்டு சாவாய்ங்க. நீங்க ஜாலியா வேடிக்கை பார்க்கலாம்.
-->வேற யாராவது ஒரு நடிகர் வளர்ந்து வர மாதிரி தெரிஞ்சா.. இருக்கவே இருக்காரு உங்க அப்பா இயக்குனரு. அவரை விட்டு வளரும் நடிகனுக்கு ஒரு படம் எடுக்க சொல்லுங்க. நீங்களும் கெஸ்ட் ரோல் பண்ணலாம். அதுக்கு அப்புறமும் அவன் சினி பீல்டுல இருக்க முடியுமா என்ன?
-->கெட்டப் மாத்துறேன்னு எல்லாம் சிரமப்பட்டு நடிக்கக் கூடாது. ஏன்னு கேட்டா மக்களுக்கு அதுதான் பிடிச்சு இருக்குன்னு சொல்லணும். அதிகபட்சம் சுண்டு விரல் பக்கத்துல ஒரு சின்ன விரல ஒட்ட வச்சுக்கோங்க. அதுக்கே மக்கள் பின்னாடி "தீ" வச்ச மாதிரி தெறிச்சு ஓடுவாய்ங்க..
-->நாம ரொம்ப நல்லவரு, அமைதி.. அப்படின்னு எல்லாம் சீன போடணும். அதனால்.. முடிஞ்ச அளவுக்கு நிருபர்கள் கூட்டுற பிரஸ் கான்பெரன்ஸ்ல கலந்துக்காதீங்க.. அப்புறம்.. சைலன்ஸ்.. பேசிக்கிட்டு இருக்கோம்ல.. இதுதான் நடக்கும்..
-->படம் சரியா ஓட மாட்டேங்குதா.. இருக்கவே இருக்கு.. அரசியல். வருவேன்.. ஆனா வர மாட்டேன்னு சொல்லிக்கிட்டே.. இளிச்சவா ரசிகர்களை ஏமாத்துங்க. உண்ணாவிரதம், நற்பணி இயக்கம்னு எதையாவது கொளுத்திப் போட்டுகிஇடே இருந்தாப் போதும். ரசிகனும் ஆன்னு வாயப் பொளந்துக்கிட்டு உங்களுக்காக தோரணம் கட்டுறது, ஆடுறது, பாடுறது எல்லாம் செய்வான்.

ஆத்தாடி ஆத்தா.. இவ்ளோ செஞ்ச பின்னாடி உங்களுக்கு டாக்டர் பட்டம் கிடைக்காமலா போய்டும்..? எவனாவது ஒரு கேனப்பய யுனிவர்சிடி உங்களைக் கூப்பிட்டு குடுப்பான்.. என்சாய்....
டிஸ்கி: இந்தப் இடுகை யாரையும் குறிப்பிடுவது அல்ல.. யார் மனசையும் நோகடிக்கிரதுக்காக கிடையாது.. அப்படின்னு சொன்னா என்ன நம்பவா போறீங்க..

Thanks: ponniyinselvan-mkp.blogspot.com

Tuesday, June 2, 2009

செல்போன் காது கேட்கும் திறனைப் பாதிக்குமா?

செல்போன் காது கேட்கும் திறனைப் பாதிக்குமா?
டாக்டர் ரவி ராமலிங்கம்.

காது, மூக்கு, தொண்டை மருத்துவ நிபுணர், சென்னை

''செல்போன் பயன்படுத்துவதால் எத்தகைய பாதிப்புகள் ஏற்படும் என்று அறுதியிட்டு கூற முடியாது. காரணம் அது குறித்த ஆய்வுகள் எதுவும் இன்னும் முழுமையடையவில்லை. ஆனால், நடந்து கொண்டிருக்கும் ஆய்வுகளை வைத்து, செல்போனால் சில பிரச்னைகள் வர வாய்ப்பு இருப்பதாக கணித்திருக்கிறார்கள்.காது ஒரு நுட்பமான உறுப்பு. சாதாரணமாக 70 முதல் 75 டெசிபல் வரையுள்ள சத்தங்களைத்தான் நம் காதுகள் கேட்க வேண்டும். அதிகபட்சமாக 90 டெசிபல் வரை உள்ள சத்தங்களை கேட்கலாம்.. ஒரு நாளுக்கு அதிக பட்சம் நான்கு மணி நேரம் அப்படிக் கேட்டால் பரவாயில்லை.

அதுவும் விட்டு விட்டுத்தான் கேட்க வேண்டும். தொடர்ச்சியாக கேட்கக் கூடாது. அப்படி கேட்பதால் காதின் கேட்கும் திறனில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.ஆனால், செல்போன் உபயோகிக்கும் போது என்ன நிகழ்கிறது தெரியுமா? சாதாரணமாகவே செல்போன் வழியாக 90 முதல் 100 டெசிபல் வரையுள்ள சத்தத் தைக் கேட்க வேண்டியுள்ளது. நம் காதுகளால் கேட்கக் கூடிய அதிகபட்ச ஒலி அளவை விட இது அதிகம். அதனால் காதுகளின் கேட்கும் திறன் நாளடைவில் குறையவும் வாய்ப்பு இருக்கிறது.

செல்போனில் 15 முதல் 20 நிமிடங்கள் வரை பேசினால் அவ்வளவாக பாதிப்பு இருக்காது. ஆனால், தொடர்ச்சியாக அரை மணி நேரம், ஒரு மணி நேரம் என்று பேசுவதால் கண்டிப்பாக பாதிப்பு ஏற்படும்.தவிர, செல்போனில் இருந்து வெப்பமும் வெப்ப கதிர்வீச்சும் வெளிப்படுகிறது. நாம் செல்போனை காதுக்கு மிக அருகில் வைத்துப் பேசுவதால், இந்த வெப்பமும் கதிர்வீச்சும் நம் காதுக்கு உள்ளே இருக்கும் மிக நுண்ணிய நரம்புகளை பாதிக்க வாய்ப்புள்ளது.

அதேபோல செல்போனில் விட்டு விட்டு சிக்னல் கிடைப்பதால், கதிர்வீச்சின் அளவில் ஏற்ற இறக்கம் ஏற்படும். இந்த மாற்றத்தாலும் காது நரம்புகள் பாதிப்பு அடையலாம். நாளடைவில் தூரத்தில் ஹாரன் ஒலிப்பது, காற்றில் காலண்டர் அசைவது, பேனா கீழே விழுவது போன்ற சிறிய சத்தங்களைக் கூட கேட்க முடியாமல் போய்விடலாம்.செல்போனை நேரடியாக காதுக்கு அருகில் வைத்துப் பேசாமல் ஹேண்ட்ஸ் ஃப்ரீ உபயோகித்துப் பேசுவதன் மூலம் பாதிப்பை ஓரளவு தவிர்க்கலாம்.''

Monday, June 1, 2009

Just Fun........

*என் உடைந்த வளையல் துண்டுகளையும், வாடிய கூந்தல் பூக்களையும், குடித்தெறிந்த வாட்டர் பாக்கெட்டுகளையும் நீ சேமிக்கிறாய் என்று கேள்விப்பட்டேன். இத்தனை நாட்களாக என்னிடம் மறைத்துவிட்டாயே, என்னுடன் படித்துக்கொண்டே, பார்ட் டைமாகக் குப்பை பொறுக்கும் தொழில் செய்வதை!

************************************************************ *

நண்பா... நீ புத்திசாலிடா! ஒரே கல்லுல ரெண்டு மாங்கா அடிச்சுட்டியேடா... ஊர்ல கடன்காரங்க தொல்லையில இருந்து தப்பிச்ச மாதிரியும் ஆச்சு, உன் காதலிக்கு வாழ்வு கொடுத்த மாதிரியும் ஆச்சு! நீ நாளைக்கு அவகூட ஓடப்போறதைச் சொல்றேண்டா... ************************************************************ *

கஜினி முகமது பதினேழு முறை படையெடுத்ததால இந்தியாவே காலியாயிடுச்சு. நீ நேத்து நாயர் கடையில பதினெட்டு முறை வடை எடுத்ததால, என்னோட பர்ஸே காலியாயிடுச்சுடா! ************************************************************ *

அறிவுக்கொழுந்தே... உனக்கெல்லாம் எவண்டா செல்போன் வாங்கிக் கொடுத்தான்? உடனடியாக மீண்டும் சார்ஜ் செய்யவும்Õனு போன்ல வாய்ஸ் கேட்டதும், ரீசார்ஜ் கூப்பன் வாங்காம... சார்ஜரை எடுக்கிறியேடா?! ************************************************************

‘‘ஒடி வர்ற... நிக்கற...

நெளியிற... புன்னகை பூக்கற...

இத்தனை நவரசம் காட்றியேடா சிங்கிள் டீக்கு! ************************************************************* *

புது செல்லு...

புது நம்பரு...

கொழப்பறே சந்துரு!

அடிக்கடி நம்பர் மாத்தி, இம்சை கொடுக்கறதை நிறுத்துடா! ************************************************************ *

பங்காளி... நீ உன் மனைவியை 'நின்னா குத்துவிளக்கு... உட்கார்ந்தா நெய்விளக்கு... அசைஞ்சா அகல்விளக்கு... அண்ணாந்தா காமாட்சி விளக்கு... பார்த்தா விடிவிளக்கு'னு புகழறியாமே... ஏன் சொல்ல மாட்டே? உன் மாமனார், நீ கேட்டதெல்லாம் கொடுக்கிற அலாவுதீன் விளக்காச்சே! ************************************************************

‘‘டியர்,

என்னை உன்னுடைய உதடுகளை முத்தமிட விடு...

உன்னுடைய பற்களைத் தொட விடு...

உன்னுடைய நாக்கைச் சுவைக்க விடு...

நான்தாண்டா உன் நண்பன் டூத் பேஸ்ட்!” ************************************************************

"காலைல பசியே எடுக்கலைடா செல்லம்... உன்னோட நெனைப்பு தான்டா... மத்தியான சாப்பாடு சுத்தமா இறங்கலைப்பா..! உன் நெனைப்புதான்... ராத்திரி முழுக்கத் தூக்கமே வரலைப்பா..! காரணம் உன் நெனைப்பில்லே... அகோரப்பசி." *************************************************************************************"மாமூல்னா கப்பம் மதியவெயிலோ வெப்பம் மகாபலிபுரத்திலே சிற்பம் ஆத்துலே மிதக்கும் தெப்பம் இளமைக்கு காயகல்பம் எலேய்... நீ அக்மார்க் அல்பம்!" *************************************************************************************‘‘உன்கிட்டே ஒரே ஒரு வேண்டுகோள்... நீ என்னோட பழகுற மாதிரியே என் எதிரி பிரகாஷ்கிட்டேயும் பழகணும்... அவனைப் பழிவாங்க வேறே வழியே தெரியலைடா, அறுவை மன்னா!" *************************************************************************************"அளவு குறைஞ்சா ரேஷன் ஆடை குறைஞ்சா பேஷன் எதை எதையோ குறைச்சு எசகுபிசகாய் உன்னையும் படைச்சானே... ஈசன்" *************************************************************************************"நண்பா, ஒலிம்பிக்ல இந்தியா சாதிக்காததை நீ சாதிச்சுட்டே. பின்னே, உன் மாமனாரை ஏமாத்தி இதுவரை முப்பத்தஞ்சு சவரன் தங்கம் வாங்கியிருக்கியே!"

சில கடிதங்கள்

சில கடிதங்கள்

Infosys, Bangalore : An employee applied for leave as follows:

"Since I have to go to my village to sell my land along with my wife, please sanction me one-week leave." ·

Another gem from CDAC. Leave-letter from an employee who was performing his daughter's wedding:

"as I am marrying my daughter, please grant a week's leave.."·

From H.A.L. Administration Dept:

"As my mother-in-law has expired and I am only one responsible for it, please grant me 10 days leave."·

An incident of a leave letter:

"I am suffering from fever, please declare one-day holiday."·

A leave letter to the headmaster:"As I am studying in this school I am suffering from headache. I request you to leave me today"·

Another leave letter written to the headmaster:

"As my headache is paining, please grant me leave for the day."·

Covering note:"I am enclosed herewith..."·

Another one:"Dear Sir: with reference to the above, please refer to my below..."·

Actual letter written for application of leave:"My wife is suffering from sickness and as I am her only husband at home I may be granted leave".·

Letter writing:-"I am well here and hope you are also in the same well."·

A candidate's job application:"This has reference to your advertisement calling for a ' Typist and an Accountant - Male or Female'... As I am both(!! )for the past several years and I can handle both with good experience, I am applying for the post."

நன்றி : yosinga.blogspot.com

Saturday, May 30, 2009

ஹீ ... ஹீ ... ( அட ஜோக் பா ....)

வரும்போது என்னத்தைக் கொண்டு வந்தோம். போகும்போதுஎன்னத்தைக்கொண்டு போகப் போறோம்?னு நீ டயலாக் விடும்போது, எல்லாரும் உன்மூஞ்சியைப் பார்த்தாங்க. நான் மட்டும்தான் உன் காலைப் பார்த்தேன். எங்கேயிருந்துடா சுட்டே அந்த புது செருப்பை!

-------------------

ராம்: நான் கலெக்டர் ஆகணும்!

சீதா: நான் டாக்டர் ஆவேன்!

ப்ரீத்தி: நான் நல்ல அம்மா ஆவேன்!

கார்த்தி: ப்ரீத்திக்கு நான் கியாரண்டி!

----------- என்னைப் படைக்கறதுக்கு முன்னே கடவுள் அப்துல் கலாமை ஏன் படைச்சார் தெரியுமா..? ஏன்னா... மாஸ்டர் பீஸ் தயாரிக்கறதுக்கு முன்னே அவர் ஒரு சாம்பிள் பீஸ் பண்ணிப் பார்த்தார் மச்சான்!

------------------

உனக்கென இருப்பேன்... உயிரையும் கொடுப்பேன் என்னை நீ பிரிந்தால்... குவார்ட்டர் உட்டுட்டு குப்புறப் படுப்பேன்!

----------------

ஏன் கங்குலி ரன்னே அடிக்க மாட்டேங்கிறே? நான் அடிக்கலாம்னு பேட்டை தூக்கினேன். அப்போ எதிர் டீம்காரன் ஒருத்தன் சொன்னான்... டேய்... நாம எப்படி பந்தைப் போட்டாலும் இவன் அடிக்கவே மாட்றான். இவன் ரொம்ப நல்லவன்டா!னு சொன்னான்... அதான்!

---------------

ஐஸ்க்ரீமை ஸ்பூன்ல எடுத்துச் சாப்பிடணும்

நூடூல்ஸை ஃபோர்க்குல எடுத்துச் சாப்பிடணும்

பீட்ஸாவை நைஃப்ல எடுத்துச் சாப்பிடணும்.

சாதத்தை கையால் எடுத்துச் சாப்பிடணும்.

ஆனா... இதெல்லாம் தேவையே இல்லை.

நான் எதையுமே பிச்சை எடுத்துதான் சாப்பிடுவேன்னு அடம்பிடிக்கிறியே! ============================

என்ன மாமூ... புதுசுபுதுசா தினுசுதினுசா இவ்வளவு பர்ஸ்-வெச்சிருக்கே. ஒருவேளை கண்டதும் சுட உத்தரவு-னு பேப்பர்ல போட்டிருந்த செய்தியை நீ தப்பாப் புரிஞ்சுக்கிட்டியா என்ன?!

=======================

நேத்து நான் சச்சின் டெண்டுல்கர்கிட்ட போன்ல பேசினேன்.

சூப்பர்! என்ன சொன்னார்?

ஸாரி, ராங் நம்பர்ன்னார்!

===================================================

படித்ததில் பிடித்தது

படித்ததில் பிடித்தது

எங்கோ... தூரத்தில்

ஒரு சொட்டு மழை வீழ்ந்தவுடன்

பரவி வருகிறதே.. மணம்...

அது போலத்தான் உன் நினைவும்

நினைக்கும்போதே நெஞ்சில் பரவும்

ஆயிரம் பேர் கூடி நின்றாலும்

அரை நொடியில் உனை அறிவேன்

அலுவலகப் பணிமுடிந்து

பின்னிரவில் என் வீடு கடந்துபோகும்

உன் வாகனச் சத்தம்கேட்க...

ராட்சசியாய் விழித்திருப்பேன்

தடதடவென்ற வண்டியின்சத்தத்தோடு

என் இதயமும்போட்டி போடும்,

நீ கடந்து போகும்ஒரு நொடிக்காக..

காத்திருப்பேன்ஒரு நாள் முழுக்க...

இதோ..

உன் வண்டிச் சத்தம்..

அழைப்பு மணியின் அலறல்..

தூக்கக் கலக்கத்தில் சோர்வோடு..

கதவு திறக்கிறேன்..

நாம் காதலித்துக் கொண்டே இருந்திருக்கலாம்

என் காதல் கணவனே..

நன்றி :எஸ்.விஜயா செல்வராஜ்

Tuesday, May 19, 2009

IPLலில் மொள்ளமாரித்தனம்

நான் கிரிக்கெட்டே பாக்குறது இல்லைங்க. எனக்கு புடிக்காது. ஏன்னா எனக்குப் புரியாது. இப்போ சியர் கேர்ல்ஸ் வர்றதுனாலயும், ஷாருக்கான் ஏதோ காமெடி பண்றாருனு முரளிகண்ணன் சொல்றதாலயும், ப்ரீத்தி ஜிந்தா எல்லாருக்கும் கட்டிப்புடி வைத்தியம் பண்றாங்கனு கேள்விப்பட்டதாலயும் ஒரே ஒரு நாள் பாத்தேன்.

எது இண்டியன் டீம், எது அமெரிக்கன் டீம்னு கூட எனக்கு கண்டுபுடிக்க தெரியல. நான் பரவாயில்ல.. என் கூட குப்ப கொட்டுற பிரகஸ்பதிங்களுக்கு எது ஸ்டெம்ப், எது பேட்னு கூட தெரியல. ஆனாலும் நாங்க கண்டுபுடிச்ச சில உண்மைகளை உங்க முன்னால போட்டு உடைக்கிறதுனு முடிவு பண்ணிட்டேன்.

மொள்ளமாரித்தனங்கள்:

1) கைல ball வச்சுகிட்டே No ballனு சொல்றாங்க

2) Overனு சொல்லிட்டு ஓவர் மேல ஓவரா போட்டுகிட்டே இருக்காங்க

3) All outனு சொன்னாங்க. ஆனா பத்து பேரு தான் அவுட் ஆனாங்க.

4) ஒரு ஓவருக்கு ஆறு பந்துனு சொன்னாங்க. ஆனா ஒரே பந்தை தான் வச்சிருந்தாங்க. (ஸ்பான்ஸர்ஸ் கவனிக்க)

5) ஒரு பேட்ஸ் மேன் அவுட்னா அம்பயர் ஒரு கையைத் தூக்குறாங்க. அப்போ ரெண்டு கையை தூக்கினா ரெண்டு பேட்ஸ் மேனும் அவுட் தான? ஆனா சிக்ஸ்னு சொல்றாங்க.உங்களுக்கும் எங்களைப் போல ரத்தமெல்லாம் கொதிக்குதா?

நானும் என்னோட நண்பர்களும் ரெண்டு அங்குல நீளத்துல ஒரு பேட் வாங்கி வச்சிருக்கோம். அதுல எங்க ஊர் நாட்டாமை உட்பட எல்லாரும் கையெழுத்து போட்டு வச்சிருக்கோம்.

நீங்களும் இந்த வேள்வியில் பங்கெடுக்க விரும்பினா வந்து கையெழுத்து போடலாம். மேலையூர் வரைக்கும் வரமுடியாதேனு வருத்தப்படுறவங்க, பின்னூட்டத்துல உங்க பேரை வடை அல்லது அடைமொழியோட சொல்லிட்டு போங்க. உங்க கையெழுத்தை நானே போட்டுடுறேன்.

Saturday, May 16, 2009

Sunday, May 10, 2009

சிரிக்க மட்டும்

சிரிக்க மட்டும்

விஜய் தன் மகனிடம்: தம்பி! நீ ஒழுங்கா சாப்பிட்டா, உன்னை வில்லு படத்துக்குக் கூட்டிட்டு போவேன்.

மனைவி சங்கீதா: பெத்த புள்ளைய கொல்லப் பாக்குறியே! நீயெல்லாம் ஒரு மனுஷனா?

விஜய் ரசிகர்கள்(என்று யாராவது இருந்தால்) தயவுசெய்து கோபித்துக் கொள்ளாமல், முறையே அஜித், மகள், ஏகன், ஷாலினி என்று எடிட் செய்து படித்துக் கொள்ளவும்.

Monday, April 20, 2009

கருப்பு பெட்டி:


நம்மவீட்டில் உள்ள பெட்டிகள் எல்லாம் துருபிடித்து கருப்பாகதான் இருக்கிறது ஆனால் அதில் என்ன இருக்கிறது? துணிகள் தானே! பிறகு என்ன இதில் ஆச்சர்யம்! இருக்கு நண்பரே, நம்மவூட்டு பெட்டி இல்ல இது, விமானத்தில் இருக்கும் ஒரு பெட்டிதான் இது ,இதனை "பிளாக் பாக்ஸ்" என்று தான் அழைப்பார்கள். விமானம் கண்டுபிடிப்புக்குபின் பல வகையான விமான சேவைகள் தொடங்கி பல பயணிகள் அதில் பயணித்தார்கள். இதில் சில விமானங்கள் விபத்துக்கு உள்ளாயின இதனால் விமானங்களின் சிதறிய பாகங்கள் மட்டுமே கிடைத்தன, ஆகையால் விமான விபத்தின் காரணம் என்னவென்று தெறியாமல் போனது, எனவே சில மறைமுக கேமிராக்களை வைத்தார்கள் அதுவும் பயனளிக்கவில்லை ஏனென்றால் விபத்தின் போது அவைகள் எரிந்துவிடுகின்றன.இதனை கருத்தில் கொண்டுதான் கருப்புபெட்டியை வடிவமைத்தார்கள் நீங்கள் நினைப்பது போல இது "கருப்பு நிறத்தில்:" இருக்காது இது பெரும்பாலும் மஞ்சல் மற்றும் ஆரஞ்சு நிறத்தை கொண்டது. இது எளிதில் எரிந்து போகாத கடினமான இரும்பினால் ஆனது, இந்த பெட்டிக்குள் தான் பல எலக்ரானிக் மீட்டர்களும்,கேமிராக்களும் இருக்கும் இது அவ்வப்போது விமானத்தின் வேகம், உயரம், விமான ஓட்டிகளின் உரையாடல் ஆகியவை பதிவாகும் விமானம் விபத்தில் சிக்கும்பட்சத்தில் இவை மட்டும் பாதுகாப்பாக இருக்கும் பிறகு இதனை கண்டெடுத்து விபத்திற்கான காரணத்தை கண்டுபிடிப்பார்கள்.எதிர்காலத்தில் இதுபோன்ற விமான விபத்துகளை தவிர்ப்பதற்காக பயன்படுவதே இதன் முக்கிய நோக்கம்

Saturday, February 14, 2009

Saturday, February 7, 2009