> என் ராஜபாட்டை : August 2013

.....

.

Tuesday, August 27, 2013

பதிவர் திருவிழாவில் தனித்திறமை காட்டபோகும் பதிவர்கள் விவரம்







இரண்டாவது வருடமாக தொடர்ந்து சிறப்பாக நடக்க உள்ளது பதிவர்கள் திருவிழா . இதில் வெறும் பதிவர்கள் சந்திப்பு மட்டும் இல்லாமல் பல முக்கியநிகழ்சிகள் நடைபெற யுள்ளது . 

1. புத்தகவெளியிடு 
2. பதிவர்களின் தனித்திறன் காட்டும் நிகழ்ச்சி 
3. சிறப்பு விருந்தினர் பேச்சு 

பதிவர்களின் தனித்திறன் காட்டும் நிகழ்ச்சி :

இதில் பல பதிவர்கள் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிபடுத்தயுள்ளனர் . அவர்கள் என்ன செய்ய போகிறார்கள் என்பது ரகசியமாக வைத்திருந்தனர் . ஆனால் சில நல்ல உள்ளங்களால் அது இப்போது தெரிந்துவிட்டது அவர்கள் கலந்து கொள்ளும் நிகழ்சிகள் உங்களுக்காக இதோ ..


"பிலாசபி பிரபா "



          இவர் தலைமையில் அழகில் சிறந்தவள்  காஜலா ? ந்ஸ்ரியாவா ? என்ற பட்டிமன்றம் நடைபெற போகிறது . இதில் சிறப்பு என்ன வென்றால் இருவர் சார்பாகவும் இவரே பேசுவார் . நடுவர் கூட இவர்தான் .


"மெட்ராஸ் பவன் " சிவா , கவிதைவிதி சௌந்தர் , கேபிள் சங்கர் :


            "மெட்ராஸ் பவன் " சிவாகேபிள் சங்கர் நடத்தும் கையேந்திபவனில் சாப்பிட்டுவிட்டு காசு கொடுக்காமல் சண்டை போட அங்கு "மாமூலாக " சாப்பிட வரும் போலீஸ்கார் (!!!) சௌந்தர் என்ன செய்கிறார் எனபதே நிகழ்ச்சி .


"மயிலிறகு " மயிலன் :

          தன்னை பார்க்கவரும் பேஷண்டுகளுக்கு கவிதை சொல்லியே குணபடுத்த முயற்ச்சி செய்யும் மயிலன் காதல் தோல்வியில் தற்கொலை முயற்சியில் தோற்ற ஒருவருக்கு கவிதை சொல்கிறார் .

           " அருகம்புல் போல
            நாம் வளர்த்த - காதலை
           உன் அப்பன்
          எருமை மாடு போல
         மேய்ந்துவிட்டான் "

( அந்த பேஷன்ட் அவுட் என்பது தனி கதை )



 "காணாமல் போன கனவுகள் " ராஜி :

          வீட்டில் தான் சமைப்பதில்லை என்ற உண்மையை பதிவர்களிடம் இருந்து மறைக்க "வெந்நீர் " போடுவது எப்படி என சொல்லிதர போகிறார் . இதற்காக இவர் கடந்த சில மாதங்களாக பயிற்சி எடுத்துவருகிறார் என்பது சிறப்பு செய்தி .

"கரை சேரா அலைகள் " அரசன் மற்றும் தீவிரவாதி "சதீஷ் " :

                இருவரும் பாட்ஷா படத்தில் வரும் காட்சியை நக்கல் செய்ய போகிறார்கள் . "என் பேரு அரசன் , எனக்கு இன்னொரு பேரு இருக்கு ..." என அதிரடி டயலாக் விடபோகிறார் . அவர் ஒத்திகை பார்க்கும் போது எடுத்த படம் தான் கீழே உள்ளது .





ஆரூர் மூனா  செந்தில் :

            இவர் ஒரு திறமையான (!!!!) குச்சிபிடி நடன கலைஞ்சர் . "தகிட திகட தந்தான " என்ற கமலின் பாடலுக்கு நடனமாட போகிறார் . ஆடுவதற்கு சரியான குச்சி கிடைக்காமல் தடுமாறுவதாக கேள்வி . அல்லது சிக்கு புக்கு ரயிலே பாடலுக்கு ஆடலாமா என குழப்பத்தில் உள்ளார் .








சீனு மற்றும் மதுமதி :

சீனு ஹீரோவாக நடிக்க போகும் "தலைவா " பார்ட் II க்கு பாடல் எழுத நம்ம மதுமதியை அழைக்கிறார்கள் . சீனுவை பார்த்ததும் பாட்டு எழுத முடியாது வேண்டுமாலாம் ஒப்பாரி எழுதுறேன் என சொல்ல , சீனு கோவமாக (கெஞ்சோ கெஞ்சுன்னு கெஞ்சி ) கேட்டதால் அவர் பாடல் எழுதுகிறார் . படத்தின் துவக்க பாடலாக இது உள்ளது .

"சீனுனா சும்மா இல்லடா
அவன் இல்லாம இந்த கூட்டம் இல்லடா

கண்ணாடி போட்டவண்டா - பல
கன்னி பெண்களை கட்டி போட்டவண்டா

அடிச்சா அதிரடி
கடிச்சா வெறி கடி

............."

 


இறுதியாக திரு நக்ஸ் அவர்களும் பன்னிகுட்டி அவர்களும் :

              இருவரும் விஜய் நடித்த சுறா படத்தை பார்த்துவிட்டு மயக்கத்தில் இருக்கு, போது கஷ்டமர் கேரில் இருந்து வரும் போனுக்கு எப்படி பதில் அளிக்க வேண்டும் என மக்ஸ் பண்ணிகுட்டிக்கு ட்ரைனிங் தரும் நிகழ்ச்சி .





டிஸ்கி : இது முற்றிலும் நகைசுவைகாகவே (!!!!) . சிரிப்பு வராட்டியும் சிரிச்சுடுங்க ஆனா கோவபடாதிங்க ..


Monday, August 26, 2013

ரசித்து பார்க்க வேண்டிய குறும்படங்கள்



கிரிகெட்டில் 20-20 போல அதிரடியான பார்முலாவில் வெளிவருபவை குறும்படங்கள் . சின்ன ஆனால் ஆழமான கதை அல்லது மெல்லிய நகைசுவை உணர்வுடன் கூடிய கதை , எதிர்பாராத கிளைமாக்ஸ் என சில பார்முலவுடன் வருபவை இந்த குறும்படங்கள் . கலைகர் டிவி செய்யத ஒரே நல்ல விஷயம் நாளைய இயக்குனர் என்ற ஒரு நல்ல நிகஷ்சி மூலம் பல நல்ல இளம் இயக்குனர்களை அடையாலபடுத்தியமைதான் .

அப்படி நமது கவனத்தைமிகவும் கவர்ந்த சில குடும்படங்கள் உங்கள் பார்வைக்கு .


1. பேய் செத்துபோச்சு ..

         தலைப்பை போலவே காமெடியான கதை . இதில் சின்ன சின்ன விஷயங்களில் கூட இயக்குனர் கவனம் செளுத்தியிருப்பார் . உதாரணமாக பேய் படிக்கும் பத்திரிக்கையின் பெயர் " THE DEVIL EXPRESS"

படம் பார்க்க :




2. புதியவன் :

            இதுவும் காமெடி குறும்படம் தான் .இதுவும் நாளைய இயக்குனர் நிகழ்சியில் வந்து விருது பெற்ற படம் . நகைசுவை மட்டுமல்லாமல் நல்ல கருத்தும் உள்ள படம் இது .

படம் பார்க்க :



3. சரியாய் ஒரு தவறு :

               இது பெண்களே இயக்கி பெண்களே நடித்த படம் . படத்தின் முடிவு மிகவும் சர்சைக்குள்ளானது . இன்றைய நவநாகரிக பெண்கள் பணத்திற்காக எடுக்கும் சில தவறான பாதை அவர்களை எங்கு கொண்டு செல்லும் என்பதை சொல்லியுள்ளனர் . கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் .

படம் பார்க்க :



டிஸ்கி : இவை நான் ரசித்த படங்கள் . உங்களுக்கும் பிடிக்கும் என நினைக்கிறேன் . விரைவில் இதுபோல் சிறந்த சில குறும்படங்களை பார்க்கலாம் .


இதையும் படிக்கலாமே :


கதம்பம் 14-08-13

 

தலைவா : திரைவிமர்சனம் 

 


இலவசமாக SMS அனுப்ப வேண்டுமா ?

 

Thursday, August 22, 2013

வாழ்த்துங்கள்


2010 ஆகஸ்டு இல்  இதே நாளில் தான் அந்தசம்பவம் நடந்தது . எனது வாழ்க்கையையே புரட்டிபோட்ட நிகழ்ச்சி அது . அதுதான் என்னை நானே உணரவைத்த நிகழ்ச்சி . என்னையும் இந்த உலகில் ஒரு பெரிய மனிதனாக மாற்றிய நிகழ்வு நடந்த நாள் இன்று .



என்னடா ஓவரா பில்டப் குடுக்குரானே ஏதாவது விருது கிருது வாங்க்கிய நாளா அல்லது ஏதாவது சாதனை செய்த நாளா என என்னிகின்றிர்களா ? ஆம் ஒரு அருமையான விருது கிடைத்த நாள் தான் . என்ன விருது தெரியுமா ?? சக்தி பிரியதர்ஷினி என்ற என் தேவதை கிடைத்த நாள் இன்று .



ஆம் இன்றுடன் திருமண வாழ்வில் அடியெடுத்து வைத்து மூன்று வருடங்கள் முடிந்து விட்டது . நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நாங்கள் எல்லா வளமும் பெற உங்கள் வாழ்த்துகளும் ஆசிர்வாதங்களும் தேவை . நான் நன்றாக இருக்கவேண்டும் என நினைப்பதில் பெரும் பங்கு என் நண்பர்களாகிய உங்களுக்கு உண்டு அதான் உங்களிடம் வாழ்த்துக்கள் கேட்கிறேன் .


வாழ்த்துங்கள் வளர்கிறேன் ...





என் அப்பா அம்மாவை வாழ்த்திய அனைவருக்கும் நன்றி :


Wednesday, August 14, 2013

கதம்பம் 14-08-13




நடிகர் விஜய் செய்தது சரியா ?



தலைவா படம் பல தடங்கல்களால் தமிழ் நாட்டில் வெளிவரமுடியாமல் தவிக்கிறது . இதுக்கு முக்கியகாரணம் விஜயின் அப்பா சொன்ன ஒருவார்த்தை தான் காரணம் . "நான் அண்ணா விஜய் M.G.R ". இதனால் பல த டைகள் வந்து படம் முடங்கி யுள்ளது . இந்த நிலையில் விஜய் விட்ட ஒரு அறிக்கை அவரின் ஹீரோ இமேஜ்அய் பதம் பார்த்துள்ளது .

"புரட்சி தலைவி அம்மா மிக சிறப்பான ஆட்சி தருகிறார் என துவங்கி அவரை பயங்கரமாக புகழ்ந்து ஒரு அறிக்கை தந்துள்ளார் . வடிவேலுக்கு ஒத்து போல ஒரு நிலைமை ஏற்பட்டபோது ,ஏன் இன்னும்  சினிமாவில் அவரின் எதிர்காலமே கேள்வி குறி ஆகும்போதும் கூட அவர் தனது நிலையை மாற்றி முதல்வருக்கு ஜால்ரா அடிக்கவில்லை .

கமல் தனது பிரச்சனையை மீடியா மற்றும்மக்களிடம் சொன்னார் . ஆனால் சினிமாவில் எல்லாரையும் எதிர்த்து பெயர் வாங்கிய அடுத்த முதல்வர் கனவில் உள்ள விஜய் இப்படி அறிக்கை விட்டது கஷ்டமாக உள்ளது . ஆனால் சினிமாவில் உள்ள பலர் இது போன்ற பிரச்னைகளுக்கு குரல் குடுப்பதில்லையே ஏன் ?

========================================================================

எனது முக புத்தகத்தில் இருந்து ..

கேக்குறவன் கேன பயலா இருந்தா கேஸ்ட்ரால் கம்பெனி ஓனர் ஃபிடல் கேஸ்ட்ரோனு சொல்வானுங்க. . . .

‪#‎மொக்கை‬ 2013


====================================================================
தெரியுமா??

TITMOUSE என்பது ஒரு வகை பறவை.

PRAIRIE DOG என்பது ஒரு வகை அணில்.
  

========================================================================

தல அஜித்தின் அடுத்த பட தலைப்பு "VEERAM ":

- செய்தி.

அய்யயோ !! V ல ஆரம்பிச்சாலே பிரச்சனை வருமே??
(VIJAYKANTH, VIJAY, VADIVELU , VISWARUPAM. . . .),


===================================================================

"V" ல ஆரம்பிக்கும் நடிகர்களுக்கும் , அம்மாக்கும் ஒத்து போகாதோ??

VIJAY KANTH
VADIVEL

இப்போ. . .

VIJAY. . .

எதுக்கும் விக்ரம் கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்கட்டும். . .

=================================================================

நீங்கள் சொல்லும் அணைத்து கருத்துகளுக்கும் யாருமே எதிர்ப்பு தெரிவிப்பது இல்லை என்றால் எல்லாரும் உங்களுக்கு ஜால்ரா அடிக்கிறார்கள் என அர்த்தம்.
 

===================================================================

ரசித்த சிறுகதை :

ஓர் இரவுநேரம் ஒருவன் தன் மூன்று வயது மகன்
தூங்கிக்கொண்டிருக்கும் போது தன்
மனைவியின் மேல்உள்ள கோபத்தில் அவளைக்
கொன்று யாருக்கும் தெரியாமல்
பினத்தை புதைத்து விடுகிறான்.
மறுநாள் காலை மகன் எழுந்து அம்மாவைப்
பற்றி கேட்டால் என்ன
சொல்லி சமாளிப்பது என்று ஆலோசனை செய்கி
ஆனால் மகன் அம்மாவைப்பற்றி கேட்க வில்லை.
இரண்டாம் நாளாவது கேட்பான் என
நினைத்தான்.ஆனாலும் கேட்கவில்லை.வழக்கம்
போல மகன் சந்தோசமாக இருந்தான்.
மூன்றாம் நாள் மெதுவாக மகனிடம்
பேச்சு கொடுத்தான்.
"உனக்கு நம்ம வீட்ல எதாவது மாற்றம்
தெரியுதா? எங்கிட்ட ஏதாவது கேக்கனும் போல
இருந்தா கேளு"
மகன் மெல்லக்கேட்டான்:
"மூனுநாளா அம்மா ஏன் உங்க
பின்னாடியே நிக்கிறாங்கப்பா?"



==================================================================

அதிர்ச்சி :


மயிலாடுதுறையை கூட பெரிய சிட்டியா மதிச்சு தாக்குதல் நடத்த திட்டம் போட்டவன் கண்டிப்பா தீவிரவாதியா இருக்கமாட்டான்.



=================================================================

     
 ரசித்த புகைப்படம் :





 
இன்றைய தத்துவம் :



இதையும் படிக்கலாமே :


தலைவா : திரைவிமர்சனம் 

 


இலவசமாக SMS அனுப்ப வேண்டுமா ?
 

 




Friday, August 9, 2013

தலைவா : திரைவிமர்சனம்







இளைய தளபதி விஜய் , அமலாபால் மற்றும்காமெடி சூப்பர் ஸ்டார் சந்தானம் ,சத்தியராஜ் மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் "தலைவா " இயக்குனர் தெய்வமகன் "விஜய் ". படத்தை வெளியிட்டு இருப்பவர் வேந்தன் மூவிஸ் .ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புடனும் , விஜய்யின் அரசியல் நகர்வுக்கு அடித்தளம் அமைக்க போகும் படம் என்ற எதிர்பார்ப்பும் இணைந்து எல்லா தரப்பு மக்களும் எதிர்பார்த்த படம் எப்படி இருந்தது என பார்ப்போம் .

கதை :






ஆஸ்திரேலியவில் நடன குழு வைத்து நடத்துபவர் விஜய் . அவரின் நண்பர் சந்தானம் . அவரிடம் நடம கற்று கொள்ள வருபவர் அமலா பால் . இந்தியாவில் , மும்பையில் ஏழைகளின் பாதுகவலாரக , ஒரு டானாக வாழ்ந்துவருபவர் சத்தியராஜ் . சத்தியராஜின் மகன்தான் விஜய் .

சில சதிகரர்களால் சத்தியராஜ் கொல்லப்பட , அப்பாவின் வேண்டுகோளுக்கிணங்க (!!) அவரின் இடத்தில் இருந்து மக்களுக்கு எப்படி நல்லது செய்கிறார் , தனது அப்பாவை கொன்றவர்களை எப்படி பழி வாங்குகிறார் , அமலா பால் யார் ? கடைசியில் இருவரும் ஒன்று சேர்ந்தார்களா என்பதை தைரியம் இருந்தா வெள்ளி திரையில் காணுங்கள்



+ பாயிண்ட்ஸ் :







  1. விஜயின் நடனம் . வழக்கம போல விஜய் நடத்தில் கலக்கி உள்ளார் .
  2. சண்டைகாட்சிகள் அருமை
  3. ஒளிப்பதிவு அருமை . சண்டை காட்சிகளை நன்றாக படமாக்கி யுள்ளனர் .
  4. சந்தானத்தின் காமெடி .
  5. வாங்கன்னா , வணக்கமன்ன பாடல் .
  6. ரசிகர்களை விசிலடிக்க வைக்கும் சில வசனங்கள் .







- பாயிண்ட்ஸ் :








  1. அருதபழசான கதை .
  2. பல படங்களில் இருந்து உருவபட்ட காட்சிகள் .
  3. சந்தானத்தை முழுமையாக பயன்படுத்தாதது . கடந்த பல படங்களில் வெற்றிக்கு சந்தானமே முக்கியகாரணம் .
  4. இடைவேளைக்கு பின் இழுவையான கதை .
  5. நல்ல நடிகர் சத்தியராஜை வீணடித்தது .
  6. இது விஜய் அரசியலுக்கு அடிஎடுத்து வைக்க போகும் படம் என பில்டப் கொடுத்தது .





ஆகமொத்தத்தில் :







விஜய் ரசிகர்கள் விஜய்க்காக ஒரு முறை பார்க்கலாம் . இனி விஜய் SAC மற்றும் இயக்குனர் விஜய் பேச்சை கேட்காமல் ஒழுங்கா துப்பாக்கிபோல நல்ல படத்தில் நடித்தால் ரஜினி இடத்தை பிடிக்கலாம் .





ஆனந்தவிகடன் மார்க் : 42

குமுதம் ரேட்டிங்  : பார்க்கலாம்

ராஜபாட்டை  ரேட்டிங்  : 5 / 10




டிஸ்கி : வெளிநாட்டில் வசிக்கும் தீவிர விஜய் ரசிகர் (எனது நண்பர் ) சொன்னதன் அடிப்படையில் எழுதபட்டது .


இதையும் படிக்கலாமே :



தமிழ் சினிமா வரலாற்றில் முதல் முறையாக ...

இலவசமாக SMS அனுப்ப வேண்டுமா ?

Monday, August 5, 2013

கதம்பம் 05-08-13


கடந்த மாத கதம்பம் பதிவுக்கு ஆதரவளித்த  நல்ல உள்ளங்களுக்கு நன்றி . இதோ இந்த வாரமும் . ( அடிகடி தொடரும் கொஞ்சம் சகித்துக்கொள்ளவும் )


இது சரியா ? தவறா ? 


இயக்குனர் சேரனின் மகள் காதல் விஷயத்தில் பலர் பல்வேறு விதமாக பேசுகின்றனர் . படங்களில் காதலை வாழவைத்தவர் தனது குடுப்பத்தில் எதிர்ப்பது சரியா என்று . இது சரியான வாதமாக படவில்லை . தொடர் கொலைகளை படமாக எடுப்பவர் கொலை செய்தால் தப்பில்லை என்பது போல உள்ளது . 

சேரன் தன மகள் காதலிக்கும் காதலன் சரியில்லை என தான் சொல்கிறார் . காதலை எதிர்க்கவில்லை . ஒரு அப்பா தன மகளின் வாழ்கையை நல்ல படியாக அமைத்து கொடுக்க வேண்டும் என விரும்புவது தவறா ? காரணமே இல்லாமல் அல்லது சாதியை , மதத்தை காட்டி எதிர்த்தால் அதை தவறு என சொல்லலாம் .

ஆந்திர சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் மகள் இது போல சென்று இப்போது படும் பாடு  நாடறிந்தது . காதல் எதிர்காலத்தை பார்க்காது . "குழோ , கஞ்சியோ எதுவானாலும் நான் தயார் என சொல்லும் பக்குவம் திருமணம் முடிந்து தொடரும் என சொல்லமுடியாது .


========================================================================

முக நூலில் பலர் பல விஷயங்களை பகிர்கின்றனர் . அது காமெடியாக இருக்கலாம் ,தத்துவங்களாக இருக்கலாம் .கலை இலக்கியம் , அரசியல் சம்பத்தபட்டதாக கூட இருக்கலாம் . ஆனால் சிலர் எழுதும் பதிவுகள் நம்மை யோசிக்க வைக்கும் , சிரிக்க வைக்கும் அப்படிபட்ட பதிவுகள் சில உங்களுக்காக ...

பள்ளிக்கூடம் படிக்கையில கேட்ட ஜோக் இது... இப்பவும் சுத்திக்கிட்டு இருக்கு...

மழை பெய்வதை யார் யார் எப்படி சொல்வார்கள் ..?

இரும்பு வியாபாரி – கனமா பெய்யுது
கரும்பு வியாபாரி – சக்கைப்போடு போடுது
சலவைக்காரர் – வெளுத்துக் கட்டுதுங்க
டாக்டர் – தினமும் மூணு வேளை
நர்ஸ் – நார்மலாத்தான்
பஞ்சு வியாபாரி – லேசா பெய்யுது
போலீஸ்காரர் – மாமூலா பெய்யுது
வேலைக்காரி – பிசு பிசுன்னு
அட்டை – விடாம பெய்யுது
ஆமை- வெளியே தலை காட்டா முடியலை
குயில் – அது ‘பாட்டு’க்கு பெய்யுது
தேள் – கொட்டு கொட்டுன்னு
நண்டு – பிடி பிடின்னு
 
==============
தமிழ் சினிமாவின் விதிகள்

1.ரேப் ஸீனுக்கு புலி, மானைக் காட்டுறது. முதலிரவு ஸீனுக்கு ஒரு குறிப்பிட்ட நேரத்துக்கப்பறம் லைட்டை ஆஃப் செஞ்சிடறது. மேக்ஸிமம் ரேப் ஸினுக்கு நம்ம ஹீரோயின் சேலைதான் கட்டியிருப்பாங்க...

2.பனி பொழியுற நாட்டுப் பாடல் காட்சிகள்ல, ஹீரோ மட்டும் கோட்டு, சூட்டு, கிளவுஸ் எல்லாம் போட்ருப்பாரு, ஆனா ஹீரோயின் அம்மணிக்கு மட்டும் டூபீஸ்....சே...என்னமாதிரி சமுகத்தில் வாழ்கிறோம் நாம்..?

3.படத்தோட உச்சக்கட்டமா வில்லன் எங்கேயாவது பாம் வச்சுடுவான். அதை டிஃப்யூஸ் பண்ண வர்ற ஹீரோ எந்த கலர் வயர வெட்டுறது அப்படின்னு டென்ஷனாகி செவப்பா நீலமான்னு மாத்தி மாத்தி யோசிப்பார். ஆனா அவர் கவலையே பட வேண்டாம். ஏன்னா அவர் எந்த வயர வெட்டினாலும் பாம் அமந்து போகும். (தக்காளி ..நீ புடுங்குற எல்லாமே தேவையில்லாத ஆணிதான்..)

4.நல்லதொரு ரேப் சீனை நாசமாக்க வரும்நம்ம ஹீரோ, வந்ததும் மொதோ வேலையா தன்னோட சட்டையையோ ஜெர்கினையோ கழட்டி பொண்ணு மேல போர்த்துவார்.(அடேய் உன்ன யார்ர இங்க வரச்சொன்னது ச்சே )

5.ஹீரோ ரெட்டைப்புள்ளையா இருந்தா அதுல ஒருத்தர் கண்டிப்பா ரொம்பக் கெட்டவனா இருப்பாரு. ஆனா கிளைமாக்ஸ்ல“நான் ஏன் அப்படி இருந்தேன் தெரியுமா”ன்னு ஒரு பாடாவதி டயலாக் பேசி நல்லவனா மாறிடுவார்..
 
======================================================================================
 தற்பொழுது படித்த புத்தகம் ;

நண்பர் பிலாசபிபிரபா சில நாட்களுக்கு (மாதங்களுக்கு ???) முன் வாங்கி தந்த சுஜாதா நாவலில் ஒன்று  டாக்டர் நரேந்திரனின் வினோத வழக்கு . நண்பர் ஒருவர் வாங்கி சென்றுநேட்று தான் தந்தார் . அருமையான கதை .  வாசிக்க விரும்பும் நண்பர்களுக்கு E-BOOK LINK  இதோ :


டாக்டர் நரேந்திரனின் வினோத வழக்கு
 
 ==========================================================================================
 
ரசித்த புகைப்படம் :
 
 

Friday, August 2, 2013

தமிழ் சினிமா வரலாற்றில் முதல் முறையாக ...




நமது மிக பெரிய பொழுது போக்கு சினிமாதான். என்னை போல பல பதிவர்களுக்கு பதிவு எழுத விஷயம் தருவதே சினிமா தான் இன்று நான் பார்க்க போவது தமிழ் சினிமா வரலாற்றில் முதல் முறையாக நிகழ்ந்த சில சம்பவங்களை
 ...
வாங்க பார்க்கலாம் ..

தமிழில் முதல் .பேசும்படம்  : காளிதாஸ்

தமிழில் முதல் சமுக படம் மேனகா

தமிழில் முதல் நகைசுவைபடம் : சபாபதி

தமிழில் முதல் சான்றிதழ் பெற்ற படம் : மர்மயோகி

தமிழில் முதல் வட்டார மொழி படம் : மக்களை பெற்ற மகராசி

தமிழில் முதல் பாடல்கள் இல்லாத படம் : அந்த நாள்

தமிழில் முதல் கலர் படம் : அலிபாபாவும் நாற்பது திருடர்களும்   (தமிழ்நாட்டின் மொத்த பாராளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை 40 # சும்மா GK)


ஊர்வசி விருது பெற்ற முதல் தமிழ் நடிகை : சுகாசினி

செவாலியர் விருது பெற்ற முதல் தமிழ் நடிகர் : சிவாஜி

தமிழில் முதலில் கதாநாயகன் இல்லாத படம் :
ஒளவையார்


டிஸ்கி : இது ஒரு மீள் பதிவு

இதையும் படிக்கலாமே :


அஜித் , விஜய்க்கு போட்டியாக களமிறங்கும் புதிய ஹீரோ...