> என் ராஜபாட்டை : அகரத்தில் ராமாயணம் - தெரியுமா உங்களுக்கு ?

.....

.

Monday, October 1, 2012

அகரத்தில் ராமாயணம் - தெரியுமா உங்களுக்கு ?


ராமாயண கதை முழுதும் ''  என்று ஆரம்பிக்கும் வார்த்தைகளால் வடிவமைக்கப் பட்டுள்ளது.
அனந்தனே அசுரர்களை அழித்து, அன்பர்களுக்கு அருள அயோத்தி அரசனாக அவதரித்தான்.
அப்போது அரிக்கு அரணாக அரசனின் அம்சமாக அனுமனும் அவதரித்ததாக அறிகிறோம்.அன்று அஞ்சனை அவனிக்கு அளித்த அன்பளிப்பு அல்லவா அனுமன் ?
http://devotionalonly.com/wp-content/uploads/2010/04/anjaneya.jpg
அவனே அறிவழகன்,அன்பழகன்,அன்பர்களை அரவணைத்து அருளும் அருட்செல்வன்!
அயோத்தி அடலேறு,அம்மிதிலை அரசவையில் அரசனின் அரிய வில்லை அடக்கி, அன்பும் அடக்கமும் அங்கங்களாக அமைந்த அழகியை
அடைந்தான் .
http://sphotos-a.xx.fbcdn.net/hphotos-snc6/284319_10150383514614148_508402_n.jpg
அரியணையில் அமரும் அருகதை அண்ணனாகிய அனந்த ராமனுக்கே!அப்படியிருக்க அந்தோ !
அக்கைகேயி அசூயையால் அயோத்தி அரசனுக்கும் அடங்காமல் அநியாயமாக அவனை அரண்யத்துக்கு அனுப்பினாள்.
http://sphotos-b.xx.fbcdn.net/hphotos-snc6/268748_10150384442754148_7080197_n.jpg
அங்கேயும் அபாயம்!அரக்கர்களின் அரசன் ,  அன்னையின் அழகால் அறிவிழந்து அபலையை அபகரித்தான்
http://sphotos-a.xx.fbcdn.net/hphotos-snc6/184059_10150395679214148_3475116_n.jpg
அத்தசமுகனின் அக்கிரமங்களுக்கு, அட்டூழியங்களுக்கு அளவேயில்லை. அயோத்தி அண்ணல் , அன்னை அங்கிருந்து அகன்றதால் அடைந்த அவதிக்கும்  அளவில்லை.
அத்தருணத்தில் அனுமனும், அனைவரும் அரியை அடிபணிந்து, அவனையே அடைக்கலமாக அடைந்தனர்.
http://sphotos-a.xx.fbcdn.net/hphotos-ash4/228902_10150399681504148_5731314_n.jpg
அந்த அடியார்களில் அருகதையுள்ள அன்பனை அரசனாக அரியணையில் அமர்த்தினர்.
 அடுத்து அன்னைக்காக அவ்வானரர் அனைவரும் அவனியில் அங்குமிங்கும் அலைந்தனர், அலசினர். அனுமன், அலைகடலை அலட்சியமாக அடியெடுத்து அளந்து அக்கரையைஅடைந்தான்.
http://sphotos-b.xx.fbcdn.net/hphotos-ash4/283911_10150401626304148_1749733_n.jpg
அசோகமரத்தின் அடியில் ,அரக்கிகள் அயர்ந்திருக்க அன்னையை அடி பணிந்து அண்ணலின் அடையாளமாகிய அக்கணையாழியை அவளிடம் அளித்தான்
http://sphotos-b.xx.fbcdn.net/hphotos-snc6/284247_10150401626269148_8227419_n.jpg
அன்னை அனுபவித்த அளவற்ற அவதிகள் அநேகமாக அணைந்தன.அன்னையின் அன்பையும் அருளாசியையும் அக்கணமே அடைந்தான் அனுமன்.
அடுத்து, அரக்கர்களை அலறடித்து , அவர்களின் அரண்களை , அகந்தைகளை அடியோடு அக்கினியால் அழித்த அனுமனின் அட்டகாசம் , அசாத்தியமான அதிசாகசம்.
http://sphotos-a.xx.fbcdn.net/hphotos-ash4/205921_10150402882534148_4497382_n.jpg
அனந்தராமன் அலைகடலின் அதிபதியை அடக்கி ,அதிசயமான அணையை அமைத்து,அக்கரையை அடைந்தான்.
 http://sphotos-a.xx.fbcdn.net/hphotos-snc6/252019_10150401626534148_3877536_n.jpg
 அரக்கன் அத்தசமுகனை அமரில் அயனின் அஸ்திரத்தால் அழித்தான்.
http://sphotos-b.xx.fbcdn.net/hphotos-ash4/301268_10150405827299148_7382688_n.jpg
அக்கினியில் அயராமல் அர்பணித்த அன்னை அவள் அதி அற்புதமாய் அண்ணலை அடைந்தாள்.
http://sphotos-b.xx.fbcdn.net/hphotos-ash4/294157_10150407768814148_4366885_n.jpg
அன்னையுடன் அயோத்தியை அடைந்து அரியணையில் அமர்ந்து அருளினான்
http://sphotos-b.xx.fbcdn.net/hphotos-ash4/301077_10150407794024148_7014848_n.jpg
அண்ணல் . அனந்த ராமனின் அவதார அருங்கதை அகரத்திலேய அடுக்கடுக்காக அமைந்ததும் அனுமனின் அருளாலே.
http://sphotos-b.xx.fbcdn.net/hphotos-snc6/198740_10150402841664148_310657_n.jpg

  டிஸ்கி : நமக்கு ராமாயணம் எல்லாம் தூரம்  .. நண்பன் அனுப்பிய மெயில் இது 


இதையும்  படிக்கலாமே :


இணையத்தில் சம்பாதிப்பது எப்படி ?

 

2 comments:

  1. அருமையிலும் அருமை !..மெய் சிலிர்க்கின்றது அகரத்தில் தொடங்கி
    அழகாய் சொல்லி முடித்த ராமாயணம் !!!!!!............வாழ்த்துக்கள் இதை
    எழுதியவருக்கும் பகிர்ந்துகொண்ட உங்களுக்கும் சகோ .மிக்க நன்றி பகிர்வுக்கு .

    ReplyDelete
  2. அருமை... நண்பருக்கும், பகிர்ந்த உங்களுக்கும் நன்றி...

    படங்கள் எதுவும் வரவில்லை... கவனிக்கவும்...

    ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...