> என் ராஜபாட்டை

.....

.

Monday, June 13, 2011

சிறந்த பொழுதுபோக்கு வலைத்தளம் - விருது



இந்த மாதத்திற்கான சிறந்த பொழுதுபோக்கு விருதை நமது நண்பர் சி .பி . செந்தில்குமார் அவர்களின் "அட்ரா சக்க " தளம் பெறுகின்றது .

எழுதும் முறையில் , நடையில் , செய்தியில் என அனைத்திலும் அருமையான  மற்றும் நகைசுவையுடன் எழுதி படிபவரின் மனதை லேசாக மாற்றும் அதிசய நபர்.


இந்த சிறியவனின் விருதை அவர் ஏற்று கொள்ளுவர் என எண்ணுகின்றேன் .



 



Saturday, June 11, 2011

Free Internet from Airtel

இது ஒரு மீள் பதிவு (To.. . .R.K.SATHISHKUMAR ) 

 
இலவசமாக  INTERNET வேண்டுமா ?( only airtel)


1. OPEN WWW. AIRTELGURU.COM
2. download OM4.2 AG2011  software
3. Install to your mobile
4. Keeb  balance < 30 paisa


Friday, June 10, 2011

எந்த ராசிக்காரர் காதலில் அதிக ஆர்வம் உடையவர்களாக இருப்பார்கள

ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன் பதில்:


ஜோதிடத்தைப் பொறுத்தவரை ஒவ்வொரு ராசிக்கும் தனி சிறப்பம்சம் உண்டு என்று கூறியிருந்தீர்கள். மனிதர்களின் பழக்க வழக்கம் கூட ராசியின் அடிப்படையில் வேறுபடும் என்றும், ஒருவர் உணவு சாப்பிடும் முறை, பிடித்த உணவு வகைகளைக் கூட ராசியைக் கொண்டு தெரிவிக்க முடியும் என்றும் சமீபத்திய கட்டுரை ஒன்றில் கூறியிருந்தீர்கள். அந்த வகையில் எந்த ராசிக்காரர் காதலில் அதிக ஆர்வம் உடையவராக இருப்பார் என்று விரிவாக் கூறுங்கள்?



பதில்: ரிஷபம், கடகம், கன்னி, தனுசு, மீனம் ஆகிய ராசிக்காரர்கள் காதலில் ஈடுபாடு உள்ளவர்களாக இருப்பார்கள். இதில் ரிஷப ராசிக்காரர்கள் காதலித்தவர்களையே கைபிடிப்பதில் உறுதியாக நிற்பார்கள் என்று கூறலாம். கன்னி ராசிக்காரர்கள் எப்போதுமே காதலித்துக் கொண்டிருப்பவர்கள்.



காதலிப்பார்கள், காதலில் ஈடுபாடு இருக்கும், காதலர்களை சேர்த்து வைப்பார்கள் என்று மேற்குறிப்பிட்ட 4 ராசிக்காரர்களையும் குறிப்பிடலாம். ஆனால் காதலில் வெற்றி பெறுவார்களா? காதலித்தவரை கைபிடிப்பார்களா? என்பதை அவர்களின் சொந்த ஜாதகத்தை வைத்தே கணிக்க முடியும்.



ஒருவரின் ஜாதகத்தில் சுக்கிரன் நன்றாக இருந்தால் அந்த ஜாதகர், தான்காதலித்தவரையே திருமணம் செய்து கொள்வார். சுக்கிரன் மோசமாக இருந்தால் காதலில் தோல்வி, திருமணத்திற்கு பின் குறுகிய காலத்தில் பிரிவு போன்ற சம்பவங்கள் ஏற்படும்.



பொதுவாக எந்த லக்னம்/ராசியாக இருந்தாலும், களத்திர ஸ்தானம் என்றழைக்கப்படும் 7, 8ஆம் வீடுகளைக் கொண்டே எந்த வகையான திருமணம் அமையும் எனக் கூற வேண்டும். ஒருவருக்கு 7, 8ஆம் அதிபதி நல்ல நிலையில் இருந்து பாவ கிரகங்களின் பார்வை/சேர்க்கை இல்லாமல் இருந்தால் அவருக்கு பெற்றோர் பார்க்கும் வரன் துணைவராக அமைவார்.



களஸ்திர ஸ்தானமும், பூர்வ புண்ணிய ஸ்தானமும் வலுவாக இருந்தால் நெருங்கிய உறவிலேயே (அத்தை, மாமன் முறையில்) திருமணம் நடைபெறும்.

நன்றி: webduniya.com


Wednesday, June 8, 2011

சோனா - அரசியலுக்கு வந்த சோதனை

எதையும் தாங்கும் இதயம் உள்ளவர்கள் தமிழர்கள் என்பதற்காக இப்படியா? நடிகை சோனா விஜய்யின் அரசியல் செயல்பாட்டில் பங்கெடுக்கப் போகிறாராம். இது சோனாவின் பிறந்த நாள் செய்தி.

FILE
சீனாவை‌த் தெ‌ரியாதவர்களுக்கும் சோனாவை‌த் தெ‌ரியும். இருந்தாலும் ஒரு அறிமுகம். குசேலன் படத்தில் வடிவேலு பார்த்து நிற்க டைட்டான உடையில் கவர்ச்சியாக உடற்பயிற்சி செய்வாரே அவர்தான் இந்த சோனா. வெளுத்த தோல், கும்மென்ற உடல்வாகு. இவைதான் அவ‌ரின் சினிமா முதலீடு. அர‌சிய‌ல்வா‌திக‌ளி‌ன் குடு‌ம்ப‌த்‌தின‌ர் ஊரை அடித்து உலையில் போடும் ஆபாசத்துடன் ஒப்பிடுகையில் சோனாவின் முதலீடு எவ்வளவோ கௌரவமானது.

சோனாவுக்கு நேற்று பிறந்தநாளாம். நடிகர் விஜய் ரசிகர்களின் பிள்ளைகளை அழைத்து வந்து கேக் வெட்டியிருக்கிறார். விஜய்யை எனக்குப் பிடிக்கும் அதனால் அவரது ரசிகர்களின் பிள்ளைகளுடன் பிறந்தநாளை கொண்டாடினே‌ன் என்றார் சோனா. அவர் யாருடன் வேண்டுமானாலும் பிறந்தநாள் கொண்டாடட்டும். அது அவ‌ரின் சுதந்திரம். அடுத்து சொன்னதுதான் கவனிக்க வேண்டியது. விஜய்யை பிடிக்கும் என்பதால் அவரது அரசியல் செயல்பாட்டிலும் பங்கெடுக்கப் போகிறாராம். அதாவது அரசியலுக்கு வரப் போகிறாராம் சோனா.

விஜய்யின் அரசியல் செயல்பாடு... அதுதான் வேடிக்கை. அடுத்த முதல்வர் ஆசையில் காய் நகர்த்திக் கொண்டிருப்பவர் விஜய் என்பது ஊருக்கே தெ‌ரியும். முதல்வர் ஆக வேண்டும் என்றால் குறைந்தபட்சம் நாட்டுப் பிரச்சனையில் ஆர்வம் இருப்பது போல் நடிக்கவாவது வேண்டும். ஈழப் பிரச்சனையா... ரசிகர்களே பிரதமருக்கு தந்தி குடுங்க, தண்ணிப் பிரச்சனையா... ரசிகர்களே முதல்வருக்கு கார்டு போடுங்க, விலைவாசிப் பிரச்சனையா... வெள்ளையனுக்கு எஸ்எம்எஸ அனுப்புங்க. இதுதான் இளையதளபதியின் அதிகபட்ச அரசியல் செயல்பாடு.

WD
காவலன் படத்துக்கு நெருக்கடி என்றதும் எதிர்தரப்பை பயமுறுத்துவதற்காக நாகப்பட்டினத்தில் மீனவர்களுக்கு ஆதரவாக என்று கூறி உண்ணாவிரதம் இருந்தார். எனக்கு இவ்வளவு ஆட்கள் இருக்காங்க, சும்மா எங்கிட்ட விளையாடாதீங்க என்று திமுக தரப்பை பயமுறுத்தி தனது பாதுகாப்பை உறுதி செய்வதற்காக நாகப்பட்டினத்தில் கூட்டத்தை கூட்டிவிட்டு, மீனவர்கள் பாதுகாப்புக்காக என்று வெட்கமே இல்லாமல் புளுகினார்கள். திமுக இருந்தால் தொழில் செய்ய முடியாது என்று அதிமுக-வுக்கு ஆதரவு அளித்ததில் சுயநலமில்லாமல் வேறென்ன அரசியல் செயல்பாடு இருக்கிறது?

அதுவும் வெளிப்படையாக ஆதரவை தெ‌ரிவிக்க இளைய தளபதிக்கு பயம். எதிர்ப்பு அலையையும் மீறி திமுக ஆட்சிக்கு வந்தால் ஆப்பாகிவிடுமே என்று தனயனுக்குப் பதில் தந்தை வாய்ஸ் கொடுத்தார். அதுவும் எப்படி? யாருக்கு ஓட்டுப் போடணும்னு விஜய் ரசிகர்களுக்கு தெ‌ரியும், அவங்க ச‌ரியா போடுவாங்க என்று செப்பிடு வித்தைக்காரன் போல் பூசி மெழுகத்தான் முடிந்தது. அட.. யாருக்கு ஆதரவுன்னு வெளிப்படையா சொல்ல முடியாத இந்த புடலங்காய் அரசியல் செயல்பாட்டில்தான் நமது கவர்ச்சிக் கன்னி பங்கெடுத்துக் கொள்ளப் போகிறாராம்.

சோனாவால அரசியல்ல என்ன செய்ய முடியும். இதுக்கெல்லாம் எதிர்வினையா என்று பாராமுகமாக இருந்துவிட முடியாதபடி கேவலமாகப் போய்க் கொண்டிருக்கிறது தமிழக அரசியல். இவரைப் போன்ற செல்லாக் காசுகள்தான், இந்தத் தோல்வி திமுக-வின் தோல்வியல்ல மக்களின் தோல்வி என்று மீடியாக்களின் முன் உளறிக் கொண்டிருக்கிறார்கள்.

நாராயணா... என்ன கொடுமை இது. 
Thanks: Webduniya 

Tuesday, June 7, 2011

இறைவனு‌க்கு 16 ப‌ணி‌விடைக‌ள் (ஆன்மிகம் )



திருமணமுடித்தவர்களை வாழ்த்தும் போது பதினாறும் பெற்று பெறு வாழ்வு வாழ்க என்று வாழ்த்துவோம்.

அதாவது கல்வி, மகிழ்ச்சி, செல்வம் உள்ளிட்ட பதினாறு செல்வங்களைப் பெற்று வாழ்க என்பது அதன் பொருள்.

அது போல இறைவனை உபசரிப்பதிலும் 16 பணிவிடைகள் உள்ளன.

அதாவது வீட்டிற்கு வரும் இறைவனை விருந்தினரைப் போல பாவித்து எவ்வாறு எல்லாம் உபசரிப்பது என்பதுதான் இந்த 16 பணிவிடை.

முதலில் இறைவனை வரவேற்று அமருவதற்கு ஆசனம் அளிக்க வேண்டும்.

அவரது கால்களை கழுவ நீர் தர வேண்டும். அதனை பாத்யம் என்பர்.

கை கழுவ நீர் அளிப்பதை அர்க்யம் என்பார்கள்.

தூய்மை அடைந்ததும் குடிப்பதற்கு நீர் வழங்க வேண்டும். இதனை ஆசமநீயம் என்பார்கள்.

உடலை தூய்மைப்படுத்த அபிஷேகம் செய்வார்கள். அதாவது திருமுழுக்கு.

அணிந்து கொள்ள ஆடைகள் அளிக்க வேண்டும். உடலை நறுமணத்துடன் வைக்க நறுமணப் பொருட்கள் அளிக்க வேண்டும்.

மலர் மாலைகளைச் சூட்டி அழகூட்ட வேண்டும்.

அவர்களைச் சுற்றி நறுமணம் வீச நறுமணப் பொருட்களை புகையிடுதல் வேண்டும். அதாவது ஊதுபத்தி, சாம்பிராணி போன்றவற்றை தூபம் போடுதல்.

இறைவன் அருகில் ஒளி விளக்குகளை ஏற்றி அவரை மும்முறை சுற்றி வருதல் அல்லது வலம் வருதல்.

அவர் வாயிறாற உண்ண நைவேத்யம் செய்தல், உணவுப் பொருட்களைப் படைத்தல்.

கற்பூரம் கொளுத்திக் காட்டி இறைவனை வணங்குதல்.

இறைவனை சுற்றி எவ்வித தொல்லையும் இல்லாத வண்ணம் சாமரம் வீசி விட வேண்டும்.

காற்று வர விசிறி கொண்டு வீசுதலும் செய்தல் நலம்.

இறைவனுக்கு குடை கவித்தல் வேண்டும். இதனை சத்ரம் என்பார்கள்.

அவருக்கு கண்ணாடி காட்டி தான் இருக்கும் கோலத்தை காண்பிப்பது தர்ப்பணம் என்பார்கள்.
thanks: webduniya