> என் ராஜபாட்டை : joke

.....

.
Showing posts with label joke. Show all posts
Showing posts with label joke. Show all posts

Thursday, January 23, 2014

சிரிக்கலாம் வாங்க .






உங்கள் மனம் விட்டு சிரிக்க சில நகைசுவை துணுக்குகள் உங்களுக்காக . படித்து விட்டு பிடித்துள்ளதா என சொல்லுங்கள் . 


=========================================================================
ஜெராக்ஸ் எடுக்க கடைக்கு போயிருந்தேன்.
இதை ஒரு 15காப்பி ஜெராக்ஸ்
போட்டு குடுங்கனு சொன்னேன்.
ஒயிட் சீட் ஒன்னு தான் இருக்கு . ஜெராக்ஸ்
போட முடியாது . வாங்கிட்டு வரணும்
கொஞ்சம் வெய்ட் பண்ண சொன்னாங்க.
அதுக்கு நான் சொன்னேன், அந்த ஒயிட்
பேப்பரை 20காப்பி ஜெராக்ஸ்
போடுங்கள்.அப்புறம்
எனக்கு இதை 15காப்பி ஜெராக்ஸ்
போட்டுதாங்கனு சொன்னேன் ஃப்ரெண்ட்ஸ் .

இதுக்கு போயி என்னை திட்டிட்டாங்க...


========================================================================

காதலை கண்டுபிடித்தவன்­ சைனாக்காரனா இருப்பானோ. கேரண்டியும் இல்லே. வாரண்டியும் இல்லே....

===================================================================


மகன் : குட்டிப் பாப்பா எப்படி உருவாகுதுப்பா ?

அப்பா : ஒரு தேவதை இரவு வந்து உங்க அம்மா வயத்துல பாப்பாவ
வச்சிட்டு போய்டும்பா. !
மகன் : அப்ப நீ டம்மி பீசாப்பா. ?

அப்பா : ?????????????


=========================================================================

ஆண்களுக்கு ஆறுதலான விசயம் -
இரும்பினால் செய்யப்படுவதில்லை
பூரிகட்டைகள்..


========================================================================


என் தாத்தா தூங்கும் போதே இறந்து போனார்.
நல்ல சாவு, 

-
-
-
-
-
-
-
-


ஆனா அவர் ஓட்டிட்டு போன கார்ல இருந்த அஞ்சு பேரும் அலறிகிட்டே செத்தாய்ங்க.....

அவ்வ்வ்வ்வ்வ்வ்
 
 
 

========================================================================

மொபைல்க்கும் Wifeக்கும் என்ன வித்தியாசம்னா!
ஒரு வித்தியாசதாங்க.

இரண்டுமே வந்ததுக்கு அப்பரந்தான் யொசிப்போம்,

கொஞ்ச நாள் Wait பன்னிருந்தா, நல்ல மாடல்லா கெடச்சிருக்குமே!


======================================================================


2 சொட்டு போட்டா அது போலியோ.

4 சொட்டு போட்டா அது உஜாலா

2880 சொட்டு போட்டா அது குவாட்டர்

இதுதான் இன்னிக்கு மேட்டர்.


=======================================================================

man1: டேய் மாப்ள "I don't Know" அப்படின்னா என்னடா?"

man 2: "எனக்குத் தெரியாது" மாம்ஸ்

man 1: "என்னடா இது யாரக் கேட்டாலும் "எனக்குத்
தெரியாது" -ன்னு சொல்றீங்க... அதென்ன அவ்வளவு கஷ்டமான வார்த்தையா...?"

man 2:??? ???


======================================================================
கடைசியா ஒரு தத்துவம் :

பூக்கள் தூவப்பட்ட பாதையின் மேல் மட்டுமே,
நடக்க விரும்பாதீர்கள் !!
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
அது முடியுமிடம் சுடுகாடாகவும் இருக்கலாம் !!


=====================================================================     

டிஸ்கி : இவையனைத்தும் முகநூலில் ரசித்தவை  

Thursday, November 21, 2013

சிரிக்க சில குறும்படங்கள்



குறும்படங்கள் பலவகை படும் . குறைந்த நேரத்தில் சிறிய கதையை எல்லாரும் ரசிக்கும் படி எடுப்பது என்பது சவாலானது . அதிலும் காமெடி கதை என்பது ரொம்ப கஷ்டம் . ஒருவரை அழ கூட வைத்துவிடலாம் . ஆனால் மனம் விட்டு சிரிக்க வைப்பது மிகக்கடினம் . அப்படி பட்ட கடின வேலையை மிக அழகாக செய்த சில குறும்படங்கள் உங்கள் பார்வைக்கு . இவையனைத்தும் நான் ரசித்தவை உங்களுக்கும் பிடிக்கும் என்ற நம்பிக்கையில் வழங்குகிறேன் .


1. மாமா டவுசர் கிழிச்சுடு  !!!

      ஒரு கவுன்சிலர் பெண்ணை ரூட் விடும் மூன்று ஐடி கம்பெனி ஆண்கள் அவர்களுடன் ஒரு மலையாளி டிரைவர் . இவரிகளில் யார் காதல் செய்தது , கவுன்சிலர் யாரை அடிபின்னினார் என நீங்களே பாருங்கள் .




2. முகபுத்தகம் 

 இன்றைய சினிமா நாயகம் சிவகார்த்திகேயன் நடித்த குறும்படம் . அனைவராலும் பாராட்டபட்ட , ரசிக்கபட்ட படம் இது .நீங்களும் ரசியுங்கள் .



3 . சொம்பு :

    நான் மிகவும் ரசித்த படம் இது . இணையத்தில் 2,00000 ஹிட்ஸ் அடித்த இந்த படமும் உங்களுக்கு பிடிக்கும் பாருங்கள் .



4. ஓபன் பண்ணினா ..

  சூது கவ்வும் புகழ் நடிகர் நடித்த படம் . இதுவும் இணையத்தில் சக்கைபோடு போட்டது . இதுவரை 4,00,000 ஹிட்ஸ் அடித்த குறும்படம் இது . கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் ஒரு படம் எடுக்க கடை ரெடி செய்யும் கதை தான் இது .





இதையும் படிக்கலாமே ??

இலவசமாக திரைப்படங்கள் DOWNLOAD செய்ய சிறந்த தளங்கள்

 

for facebook tricks : www.kingraja.com

Wednesday, October 9, 2013

திருமணம் ஆகாத ஆண்களுக்கு ...





சோதிட முறையின் மூலம் உங்கள் எதிர்கால மனைவியின் பெயரை அறிய வேண்டுமா சூப்பர் மேட்டருங்க. மணமாகாத ஆண்களுக்கு ஒரு அறிவிப்பு...
  உங்கள் எதிர்கால மனைவியின் பெயரை ஓர் புராதன எண் சோதிட முறையின் மூலம் அறிய ...இதோ...(மணமான ஆண்கள் மனைவியின் பெயரையும் கண்டுபிடிக்கலாம். மணமான பெண்கள் தங்கள் பெயர் தான் தங்கள் கணவனின் பெயருக்கு கிடைக்கிறதா எனவும் பரீட்சித்துக் கொள்ளலாம்.) முதலில் இந்த அட்டவணையை கவனிக்க...

தொகுதி 1

A-20 B-30 C-42 D-64 E-74 F-54 G-22 H-32 I-44 


J-56 K-60 L-34 M-24 N-46 O-58 P-68 Q-36 R-48

S-26 T-62 U-50 V-70 W-66 X-38 Y-28 Z-98


மேற்படி அட்டவணையின் உதவியோடு உங்கள்
பெயரில் காணப்படும் எழுத்துக்கள்
ஒவ்வொன்றையும் வகைக் குறிக்க. (கூட்ட
வேண்டாம்..).(உதாரணமாக...Kannan - 60 20 46 46  20 46 )
பின்னர் உங்கள் பெயரின் எண்களின் முன்னால்
24 48 26 என்ற எண்களை சேருங்கள்.

பின்னர் பெற்ற எண்  தொகுதியை அப்படியே இரண்டு இரண்டு எண்க வகுக்குக.

பின்னர் பெற்ற எண் தொகுதியில் உள்ள எண்களை  வகைக்குறிக்கும் எழுத்துக்களை கீழே காணப்படும் தொகுதியிலிருந்து பெறுக.உங்கள் மனைவியின் பெயரை பெறுவீர்கள்.100 சதவீதம் உண்மையானது...


A-10 B-15 C-21 D-32 E-37 F-27 G-11 H-16 I-22


J-28 K-30 L-17 M-12 N-23 O-29 P-34 Q-18 R-24


S-13 T-31 U-25 V-35 W-33 X-19 Y-14 Z-49



நானும் சோதித்துப் பார்த்தேன்.அப்படியே ஷாக் ஆயிட்டன்.

Try to Read 


Saturday, July 27, 2013

கதம்பம் 27/07/13




அன்பு நண்பர்களே , கதம்பம் என்ற பல்சுவை தொகுப்பை மிக நீண்ட நாளாக எழுத முடியவில்லை . இனி மாதம் ஒரு முறையாவது எழுத முயற்சிக்கிறேன் .

நண்பர்கள் :

கடந்த செவ்வாய் அன்று சென்னை செல்ல வேண்டிய வேலை இருந்தது . அங்கு சென்ற பின் பதிவுலக நண்பர்கள் சிலரை பார்க்க நினைத்தேன் . ஆனால் நண்பருக்காக போனதால் முடியவில்லை . கரை சேரா அலைகள் அரசன் அவர்களுக்கு போன் செய்தேன் . பின்பு மெட்ராஸ்பவன் சிவகுமாருக்கு போன் செய்தேன் . அலுவலகம் கிளம்பு போகிறேன் என சொன்னவர் , திடிரென இருங்கள் செந்தில் வருகிறார் , அவருடன் நீங்கள் இருக்கும் இடத்திற்கு வருகிறேன் என சொன்னார் .





சிவாவும் , KRP செந்திலும் வந்தார்கள் . சுமார்  ஒரு மணிநேரம் பேசினோம் . மிக ஜாலியாக இருந்தது . இருவரும் என்னமோ நீண்ட நாள் நண்பர்கள் போல பேசினார்கள் . நேரமின்மையால் அதிகம் பேச முடியவில்லை . பதிவர் சந்திப்பில் அந்த குறை தீரும் என எண்ணுகிறேன் .
====================================================================


அரசியல் :

மோடிக்க விசா தரகூடாது என அமெரிக்காவுக்கு 29 MP கள் கடிதம் .

# அதுவும் போர்ஜரியா பலர் கையெழுத்தை யாரோ போட்டுருக்காங்க .

# ராஜபக்ஷே இந்தியா வந்தப்ப இவர்கலாம் என்ன பண்ணிகிட்டு இருந்தாங்க ???



28 ரூபாய்க்கு மேல் செலவு செய்தால் அவர்கள் வறுமை கோட்டுக்கு மேல் உள்ளார்கள் என அர்த்தம் .:  திட்ட கமிஷன்

# சென்னையில் வசந்த பவனில் 2 இட்லி 42 ரூபாய் .
# இந்த வீணா போன கிமிஷன் இருக்கும் இடத்தில் பாத்ரும் கட்ட செலவு 27 லட்சம்


ரசித்த ஜோக் :

வகுப்பில் காப்பி அடித்த மாணவனை இனி காப்பி அடிக்க மாட்டேன்னு 100 தடவை இம்போசிஷன் எழுத சொன்னார் ஆசிரியர் . அந்த மாணவன் எழுதியது கிழே ..

#include
void main( )
{
int i;
for(i=1;i<=100;i++)
{
printf(இனி காப்பி அடிக்கமாட்டேன் );
}
}


முகபுத்தகத்தில் எனது STATUS

ஒருவரை பிடிக்கா விட்டால் உடனே விலகிவிடு . இல்லையெனில் இறுதியில் அவமானமே மிச்சம் இருக்கும் .


இதுவரை S.P.பாலசுப்ரமணியம் குரல்தான் உலகிலேயே அழகு என்று இருந்தான் , என் மகன் சரணின் அப்பா என்ற குரலை போனில் கேட்கும் வரை .

உலகிலேயே மிகவும் அதிர்ஷ்டசாலி
நல்ல நண்பர்களை பெற்றவர்களே .



 இது உண்மையா ?


Wednesday, October 24, 2012

இயந்திரன் பார்ட் 2

மனிதனை விலங்கில் இருந்து வேறுபடுத்தி காட்டுவது சிரிப்புதான் . அதனால்  உங்களை  சிரிக்க வைக்க சில படங்கள் இங்கே ...



இவன்  உண்மையில் டாக்டரா ?

 பெட்ரோல் விலை ஏறி போச்சு அதான் ....


 சின்ன துப்பாக்கி பெரிய துப்பாக்கி ...(!!!!!!!!!!)



என்ன  நடை ...என்ன  நடை ...


 தண்ணிர் தாகம் அதான் இப்படி ..


 இயந்திரன் பார்ட் 2



ஒரு வாழ பழம்  இங்க இருக்கு இன்னொன்னு எங்கே ?


உதவலாமே :

இலங்கையின் மனித உரிமை மீறலுக்கு எதிராக ஒரு தமிழனாக உங்கள் உணர்வுகளை பதிவு செயுங்கள் .. உடனே 8067006666 என்ற எண்ணுக்கு missed Call குடுங்கள் ..

# உங்கள் பக்கங்களில் பகிரவும் ..

Tuesday, May 15, 2012

ஒரு வீடு இரு திருடர்கள்


அது அவர்களுடைய தொழில்.
கொள்ளையடிப்பதும் கொலை செய்வதும்.
நாய்களுக்கு சிறுநீரால் ஆன எல்லைக்கோடு போல
அவர்களுக்கு தொழில் தர்மம்.
ஒருவர் தொழிலில் மற்றவர் குறுக்கிட்டால்
குறுக்கிடும் தொழில் தர்மம்.

ஒரு வீட்டின் புறவாசல் வழியே ஒருவனும்,
கூரை வழியே ஒருவனும் தொழில் செய்யப் போனார்கள்.
அந்தோ பரிதாபம் குறுக்கிட்டது தொழில் தர்மம்.
யார் தொழில் செய்வது?
யார் பின்வாங்குவது?
முடிவு காண முடியவில்லை திருடர்களால்.

முதல் திருடன் சொன்னான்,
‘மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு’.
இரண்டாம் திருடன் சொன்னான்
‘திருடுவது நம் உரிமை
அதைத் தீர்மானிப்பது வீட்டுக்காரனின் கடமை’.

ஆகவே, எழுப்பப்பட்டான் அந்த வீட்டுக்காரன்.
அவன் முன் வாக்குப்பெட்டி.
யார் திருட வேண்டுமெனத் தீர்மானிக்கும்படி
வீட்டுக்காரன் வேண்டப்பட்டான்.

அவனுக்கு ஜனநாயக முறை பற்றிய
அறிவு புகட்டப்பட்டது.
இங்கு திருடர்களுக்கு வீட்டுக்காரனே எஜமானன்.

அவன் சொல்லும் நபரே திருட முடியும்.
கடைசியில் ஜனநாயகம் வென்றது.

ஆம்- வீட்டுக்காரனைப் புதைத்தார்கள்.


பின்குறிப்பு: கவிதையில் ‘திருடர்கள்’ என்கிற வார்த்தை
‘திருடர்கள்’ என்ற பொருளில் மட்டும்தான் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
அதை ‘அரசியல்வாதிகள்’ என்று யாராவது பொருள் கொண்டால்
அது என்  தவறல்ல.

Wednesday, November 9, 2011

விஜய் ரசிகர்கள் – சிரியுங்கள் ஆனால் சீரியஸா எடுத்துகாதீர்கள்




இது முழக்க முழுக்க கிண்டல் மட்டுமே

விஜய் : ͌பேஸ்புக்கில் என்னை கிண்டல் செய்து வருவதாக எனக்கு தகவல் வந்துள்ளது. அந்த புத்தகம் மட்டும் என் கையில் கிடைத்தால் அதை சுக்கு நூறாக கிழித்து எறிவேன் என கூறிகொள்கிறேன்.



மேனேஜர் : சார் உங்க அடுத்த படத்துல “நடிகை நிலா” வை புக் பன்னிருக்கோம்.

விஜய் : அய்யயோ அவங்க வேண்டாம்

மேனேஜர் :ஏன் சார் ?

விஜய் : அப்புறம் அம்மா “நிலா அபகரிப்பு”னு என் மேல வழக்கு போட்டுட போறங்க..




விஜய் : நிறைய ரீமேக் படத்துல நான் நடிச்சது உண்மைதான் , அதுக்குனு “நண்பன்” படம்         “͌பிரண்ட்ஸ்” படத்தின் ரீமேக்கானு கேட்குறது ரொம்ப ஓவர்.



விஜய் : எனக்கு டாக்டர் பட்டம் கிடைத்துள்ளதால் இனி என்னிடம் ஆப்ரேஷன் செய்துகொள்பவர்கள் மட்டுமே என் ரசிகர் மன்றத்தில் சேரமுடியும் என தெரிவித்துகொள்கிறேன்.


விஜய் : என் கட்சியில் கொள்கை பரப்பு செயளாலர் இல்லை என்பதால் கொள்கையே இல்லை என எதிர்கட்சிகள் சொல்வதை வன்மையாக கண்டிக்கிறேன்.



விஜய் : இந்த இந்தியா- வெஸ்ட் இண்டிஸ் கிரிக்கெட் மேட்ச்சைதான்  டி.வியிலே காட்டுகின்றார்களே, பின்பு எதுக்காக பிடிவாதமாக சேப்பாக்கம் மைதானத்திலும் ஆட வேண்டும் என்பதே இன் கேள்வி..?


விஜய் : என் அடுத்த படம் பயங்கர சஸ்பென்ஸா இருக்கும்.

ரசிகர் : எப்படி?

விஜய் : எந்த படத்தில் இருந்து சுட்டோம்னு யாரும் கண்டுபிடிக்க முடியாது.

ஆசிரியர் : software னா என்னா? Hardware னா என்னா?

விஜய் : செடிய புடுங்கினா இருப்பது soft-வேர், மரத்தை புடுங்கினா இருப்பது Hard- வேர்.

ஆசிரியர் : நீ சரியான …………!

விஜய் : இந்தியா கிரிக்கெட் அணியின் தோல்வியை ஆராய ஏன் சி.பி.ஐ (CBI) வாராங்க ?

மேனேஜர் : கடவுளே அது பி.சி.சி.ஐ (BCCI)


Tuesday, October 25, 2011

இந்த திபாவளிக்கு இலவசமாக வெடி வேண்டுமா?.





இந்த திபாவளிக்கு சந்தையில் பல புதிய வெடிகளை அறிமுகபடுத்த திட்டமிட்டுள்ளேன். கிழே உள்ளவற்றில் எது பிடித்துள்ளது என சொல்லுங்கள் அதை உங்களுக்கு இலவசமாக அனுப்பிவைக்கிறேன்.


1.         பிரபுதேவா வெடி.

இந்த வெடிக்கு இரண்டு பக்கமும் இரு வெடி வைக்கவேண்டும். ஓன்று பழய வெடி, மற்றொன்று புது வெடி. ஆனால் எது கூட சேர்ந்து வெடிக்கும் என யாருக்கும் தெரியாது.

2.      சிபி வெடி :

இந்த வெடிக்கு மேல எதாவது கவர்ச்சி படம் ஒட்டுனாதான் வெடிக்கும்.

3.      விக்கி வெடி:

இந்த வெடியை விடியோக்கு பக்கத்தில் வைத்து வெடிக்க வேண்டும்.

4.      விஜய்காந்த் ராக்கெட்:

குவாட்டர் பாட்டில் உள்ளே வைத்துதான் விட வேண்டும். விடும் முன்பு அதன் தலையில் நன்றாக தட்ட வேண்டும்

5.      அஜித் வெடி:

பற்ற வைத்த பின் அரை கிலோ மீட்டர் நடத்து போய்தான் வெடிக்கும்.

6.      அழகிரி வெடி :

இது வெடிக்கும் மும்பு பயங்கர சத்தம் வரும், ஆனா பத்தவைத்தால் புஷ்னு போய்டும்.

7.       2G வெடி

இது எப்ப வெடிக்கும், எப்படி வெடிக்கும், வெடிக்குமானு தெரியாம ஒரே சஸ்பென்சா இருக்கும்.

8.      விஜய் வெடி

பத்தவைத்த பின் ஒரு பன்ச் டயலாக் சொல்லிட்டுதான் வெடிக்கும்( சில சமயம் புஷ்னு போகும்)

9.      பண்னிகுட்டி அனுகுண்டு :

வெடிக்கும் போது பயடேட்டா சொல்லிகிட்டே வெடிக்கும். ஒரு மலையை(நான் மலைனு சொன்னது தமிழ் மணம்னு நிங்கள் நினைத்தால் நான் பொறுப்பல்ல) கூட சரித்துவிடும்.

10.     கருணாநிதி வெடி

இந்த வெடியை குடும்பத்துடன்  மட்டும்தான் கொலுத்த வேண்டும். வெடி சத்தம் கூட அந்த அந்த குடுப்பத்திற்க்கு மட்டும்தான் கேட்கும்.



டிஸ்கி ; இது போல உங்களிடம் எதாவது வெடி இருந்தால் சொல்லுங்கள்,
   எங்கள் கம்பெனி வாங்கிகொள்ளும்.




Friday, October 21, 2011

நாஞ்சில் மனோவை கலாய்ப்போர் சங்கம்




இந்த பதிவு முழுவதும் நம்ம அண்ணன், தலைவர், சகலகலா(யார் அந்த கலானு கேட்ககூடாது) வல்லவர், “பார்” புகழும் தங்க(சரி ..முறைக்காதீங்க,  பித்தளை) மகன் மனோ அவர்களை கலாய்த்து எழுதப்பட்டது.

மனோ பள்ளியில் படிக்கும் போது..:

ஆசிரியர் : ஏண்டா பிளம்பர்(plumber) கூப்பிட்டுகிட்டு வந்துருக்க?

மனோ : Qestion Paper லீக் ஆகுதானு செக் பன்ன..

( ஆசிரியர் அவுட்)

…………………………………………………………………………………….

ஆசிரியர் : முதல் மாசம் பிப்ரவரினா, 10 வது மாசம் என்ன ?

மனோ : டெலிவரி

………………………………………………………………………………….

ஆசிரியர் : உனக்கு எது மிகவும் பிடிக்கும் ? தமிழ் மொழியா? ஆங்கில மொழியா?

மனோ : இரண்டும் இல்லை.

ஆசிரியர் : பின்பு?

மனோ : உங்க பொண்னு கனிமொழியை தான் பிடிக்கும்

------------------------------------------------------------

மனோ தனது விடைதாளில் அணைத்து பதில்களுக்கும் ||||||||||||||||| என போட்டிருந்தார் அதன் கீழே அவர் எழுதினார்..

“ விடைகளை சுரண்டி தெரிந்து கொள்ளவும்”

…………………………………………………………………………..

காட்டில் சிபியும் மனோவும் சுற்றிபார்க்கும் போது ஒரு சிங்கம்( நான் இல்லப்பா..) வந்தது,

சிபி : மனோ Shoot பன்னு.. Shoot பன்னு..

மனோ : இருப்பா .. இப்பதான் கேமராவில் பேட்டரி போடுறேன்.

(மனோ புத்திசாலி)

…………………………………………………………………………….

மனோவின் மகன்: அப்பா 5 + 3 எத்தனை ?

மனோ : முட்டாள் பய மகனே, அறிவில்லதவனே, இந்த சின்ன கணக்கு கூட தெரியில்ல நி படிச்சு என்ன கிழிக்க போற? இதுகூட தெரியாத நீ கருன் போல வாத்தியாராதான் போவ சரி .. சரி போய் Calculator எடுத்துவா போட்டுகாட்டுறேன்.

………………………………………………………………………………..

மனோவின் மகன்: அப்பா.. முட்டாள் என்றால் யார்ப்பா?

மனோ : ஒரு விஷயத்தை மிக எளிதாக சரியான விளக்கத்துடன் எடுத்து கூறி ஒரு குழந்தை கூட  புரிந்து கொள்ளும் விதத்தில் சொல்ல வேண்டும். அப்படி புரியவைக்க முடியாதவந்தான் முட்டாள் .. புரிந்ததா?

மனோவின் மகன்: ஒன்னுமே புரியவில்லை


விக்கி : அந்த சைனீஷ் பொண்னுகிட்ட I Love You  சொன்னியே என்ன ஆச்சு ?

மனோ : வேஸ்ட்.. அவ ஏற்கனவே இரண்டு பேர லவ் பண்றா போலிறுக்கு..


விக்கி : எப்படி சொல்லுற?

மனோ : I Love You too( 2) னு சொன்னாலே..


மனோ , விக்கி, சசிகுமார் மூவரும் ஒரு வங்கிக்கு செல்கின்றனர். எதிர்பாராதவிதமாக அங்கு கொள்ளை நட்க்கின்றது. கொள்ளைகாரனில் ஒருவன் விக்கியிடம்..

கொள்ளைகாரன் : இந்த கொள்ளையை நீ பாத்தியா?

விக்கி : ஆமா( டூமில்.. விக்கி காலி)

கொள்ளைகாரன்( மனோ விடம்) : இந்த கொள்ளையை நீ பாத்தியா?

மனோ : இல்லை.. ஆனா சசி பார்த்தார்.

( என்ன ஒரு கொலைவெறி)
 ஒரு குருப்பாத்தான் இருக்கோம்