உணர்ந்தறிதல்
வெருண்டு உருண்டு
கண்கள் மருண்டு
காற்றும் நீருமாய்
நாசி நடுநடுங்க..
காது விரைக்கக்
கழுத்து அதிர்ந்து..
கால்கள் துவண்டு
கன்னங்கள் கிட்டித்து..
உடம்பு கிடுகிடுக்க
உள்ளுக்குள் வெடிவெடிக்க..
பெருமுச்சுக் குவியலில்
உயிர்முச்சுக் கலகலத்து..
இதுவரை கேட்டறியா
விதங்களில் கதறலிட்டு…
முன்னுடம்பு குறுக்கி
பின்னுடம்பு பிதுக்கி…
பூமிப்பந்தை ஒரு நிமிடம்
புதிதாகப் பிறக்கவிட்டு..
கன்று ஈன்று நாக்கிட்ட
காராம் பசு பார்த்து,
உடலெல்லாம் சிர்ப்போடி
உள்ளம் வியர்த்து
நின்றேன்
வீட்டில்
கர்ப்பிணியாய்
மனைவி !
(மனிதனுக்கு ஒரு பிறவிதான் ஆனால் பிரசவத்தின் பொழுது மறுபிறவி எடுக்கும் எல்லா பெண்களும் தெய்வம்தான்)
டிஸ்கி 1: இது கடந்த வாரம் ஆனந்தவிகடனில் ராஜ திருமகன் என்பவர்
எழுதிய கவிதை.
டிஸ்கி 2: என் மனைவியின் வளைகாப்பிற்க்கு வந்தவர் கையில் இருந்த
விகடனில் படித்தது.
டிஸ்கி 3: இது பிடிக்க என்ன காரணம் என சொல்லிதெரியவேண்டியதில்லை.
நாளை :
நமது பதிவை காப்பி செய்யாமல் தடுப்பது எப்படி ?
( இப்ப என் பதிவை காப்பி பண்ணி பாருங்க )
====================================================
நேற்று :
என்ன நடக்குது நம்ம பதிவுலகில் ?
நமது பதிவை காப்பி செய்யாமல் தடுப்பது எப்படி ?
( இப்ப என் பதிவை காப்பி பண்ணி பாருங்க )
====================================================
நேற்று :
என்ன நடக்குது நம்ம பதிவுலகில் ?