> என் ராஜபாட்டை : science

.....

.
Showing posts with label science. Show all posts
Showing posts with label science. Show all posts

Saturday, September 5, 2015

ANDROID போன் மூலம் கணினியை கட்டுபடுத்துவது எப்படி?



          

          இன்றைய அறிவியல் உலகமே நம் கையில் ஆண்ட்ராய்ட் போன் வடிவில் வந்துள்ளது. இதன் மூலம் பல நன்மைகள் உள்ளது. நமது வீட்டில் உள்ள கணினியை ஆண்ட்ராய்ட் போன் மூலம் எப்படி கட்டுபடுத்துவது என்பதை இன்றைய பதிவில் பார்க்கலாம்.

நன்மைகள் :

உங்கள் கணினியை உலகில் எந்த மூலையில் இருந்தும் இயக்கலாம்.
உங்கள் கணினியில் என்ன நடக்கிறது என்பதை கண்காணிக்கலாம்.
போன் மூலம் கணினியை நிறுத்தலாம்.
மென்பொருள்களை நிறுவலாம், அழிக்கலாம்.

வழிமுறை :

முதலில் உங்கள் கணினியில் GOOGLE CHROME WEB BROWSER திறந்துகொள்ளவும்.



அந்த விண்டோவில் இடது பக்கத்தில் APPS  என்ற ஆப்ஷனை தெரிவு செய்யவும்.


அதில் WEB STORE  என்ற ஆப்ஷனை தெரிவு செய்யவும்.


அதில் வரும் விண்டோவில் இடதுபக்கம் உள்ள SEARCH BOX இல் CHROME REMOTE DESKTOP என தேடவும்.


வரும் விண்டோவில் முதலில் உள்ள AD-ON CHROME REMOTE DESKTOP என்ற AD-ON ஐ கிளிக் செய்யவும். இது முழுவதும் இன்ஸ்டால் ஆகும் வரை காத்திருக்கவும்.(ADD APP என்பதை கிளிக் செய்யவும் )


இப்போது CHROME விண்டோவில் CHROME REMOTE DESKTOP என்ற ஐகான் புதிதாக இணைந்திருக்கும். அதனை கிளிக் செய்யவும். 





அதில் MY COMPUTER என்ற ஆப்ஷனுக்கு கீழே GET STARTED என்பதை கிளிக் செய்யவும்.



அதில் ENABLE REMOTE CONNECTION என்ற பட்டனை கிளிக் செய்யவும்.

மேலே உள்ளது போல ஒரு விண்டோ வரும் . CHROME INSTALLER என்ற கோப்பு தரவிறக்கம் ஆகும்.



இன்ஸ்டால் ஆனதும் PIN NUMBER கேட்கும். ஏதேனும் ஆறு இலக்க எண்ணை கொடுக்கவும்.(EX: 123456 )


இப்பொது ஒகே பட்டனை கிளிக் செய்யவும். 


திரையில் உங்கள் கணினியின் பெயர்  வந்திருக்கும். 

ஆண்ட்ராய்ட் போனில் செய்ய வேண்டியவை "


உங்கள் மொபைல் போனில் PLY STORE இல் CHROME REMOTE DESKTOP என்ற அப்ளிகேஷனை தரவிறக்கி இன்ஸ்டால் செய்யவும்.





அதில் நீங்கள் CHROME இல் LOGIN செய்த மெயில் ஐடியிலேயே இந்த ஆப்ளிகேஷனிலும் LOG IN செய்யவும்.



இப்போது திரையில் உங்கள் கணினியின் பெயர் தெரியும்.(உங்கள் கணினியில் பெயர் தெரிய MYCOMPUTER இல் RIGHT MOUSE CLICK செய்து PROPERTIES சென்று பார்க்கவும்.)





நீங்கள் முன்பு கொடுத்த PIN NUMBER (EX: 123456) ஐ கொடுக்கவும்.
இப்பொது உங்கள் கணினியும் மொபைலும் இணைந்து விடும். கணினியில் நடப்பதை போனில் பார்க்கலாம். போன் மூலம் கணினியை இயக்கலாம்.


மேலும் விவரத்திற்கு இந்த வீடியோவை பார்க்கவும்.



Sunday, August 14, 2011

இணையதளத் தாக்குதல்கள்


‘Imperva’பாதுகாப்பு நிறுவன ஆய்வின்படி, சராசரியாக ஒரு மணித்தியாலத்தில் 27 தாக்குதல்கள் அல்லது இரண்டு நிமிடங்களுக்கு ஒரு தாக்குதல் இணையத்தளங்களில் நடைபெறுகின்றன. இந்நிறுவனம் நடத்திய ஆய்வில் கடந்த வருடம் டிசம்பரிலிருந்து இந்த வருடம் மே வரை 10 மில்லியன் தாக்குதல்கள் 30 பல்வேறுபட்ட நிறுவனங்களது இணையத்தளங்களையும் அரசின் இணையத்தளங்களையும் இலக்குவைத்து நடத்தப்பட்டுள்ளன.
இத்தாக்குதல்கள், பெரும்பாலும் இணையத்தளங்களின் பலவீனமான பகுதியை நோக்கியே பயணிப்பதாகத் தெரியவருகின்றது. இருப்பினும் இத்தாக்குதல் நிகழ்ச்சி நிரற்படுத்தப்பட்டுள்ளதால் மணிக்கு 25,000 ஆக, அதாவது விநாடிக்கு 7 தாக்குதல்கள் எனும்படி உயரக்கூடிய சாத்தியம் உள்ளதென Imperva  கூறுகின்றது.
இத்தாக்குதல் பெரும்பாலானவை எங்கிருந்து அனுப்பப்படுகின்றன?
இவற்றில் 61 வீதத் தாக்குதல்களும் அமெரிக்காவிலுள்ள தன்னியக்க மென்பொருள்களினாலேயே உருவாக்கப்படுகின்றன. எனினும், இவை எங்கிருந்து கட்டுப்படுத்தப்படுகின்றன என்பது தெரியவில்லை.
பெரும்பாலான தாக்குதலாளர்கள் ஒன்லைனில் தங்களை மறைத்தே வைத்திருக்கின்றார்கள். தங்களது இணைய இணைப்பினை ஒரு மாற்று இணையத்தினூடாகவே (proxy)  முதலில் வெளிப்படுத்துவர். இவை புகழ்பெற்ற அனாமதேய Onion Router அல்லது TOR  இன்மூலம் செய்யப்பப்படும்.
அமெரிக்காவின் பின்னர், சுவீடன் மற்றும் பிரான்சைத் தொடர்ந்து, சீனா தமது நாட்டில் 10 வீதத் தாக்குதல் நடந்ததெனக் கூறியுள்ளது. ஆகையால் இந்த இடங்களிலுள்ள கணினிகளால் தான் பெருமளவு தாக்குதல்கள் உருவாக்கப்படுகின்றனவாயினும், இந்தக் கணினிகள் யாரோ ஒருவரால் தொலைதூரத்தில் வைத்துக் கட்டுப்படுத்தப்படும் ஒரு வைரசினால் (அல்லது கணினி தன்னியக்க றொபோவால்) மட்டுமே பாதிக்கப்படலாம்.
இந்த நபர் உலகின் ஏதோவொரு மூலையில் இருப்பவராகவும் அனாமதேய வழி ஒன்றினூடாகத் தத்தமக்கென இணைய நெரிசலை ஏற்படுத்திக் கொண்டிருப்பவராகவும் இருப்பார்.
தாக்குதல்கள் தன்னியக்கமாகவே உருவாக்கப்படலாம் என்ற உண்மையை மனதிற்கொள்ளவேண்டும். இதனால்தான் தாக்குதல்கள் அதிகளவில் வெளிப்படுகின்றன. Imperva  முதன்மைத் தொழிநுட்ப அதிகாரி அமிச்சாய் ஷல்மான் கூறுகையில், ‘மென்பொருள் திருடர்கள் நிகழ்ச்சிநிரற்படுத்தலைத் தமக்கு அனுகூலமாக்கிய முறைதான், குற்றவியல் வரலாற்றில் குறிப்பிடத்தக்க கண்டுபிடிப்புகளில் ஒன்றாக உள்ளது.
கார் அல்லது பணக் களவுகளை ஒருவரால் நிகழ்ச்சிநிரற்படுத்த முடியாது. ஆனால் தரவுக் களவை நிகழ்ச்சிநிரற்படுத்த முடியும். நிதித்தாக்க முறைகளில், கணினிக் குற்றங்கள் மூலம் பொருட்குற்றங்களை அதிகரிக்கும் மூலகாரணமாக நிகழ்ச்சிநிரற்;படுத்தலே உள்ளது.

நன்றி : vanakkamnet.com