> என் ராஜபாட்டை : ஹீ ... ஹீ ... ( அட ஜோக் பா ....)

.....

.

Saturday, May 30, 2009

ஹீ ... ஹீ ... ( அட ஜோக் பா ....)

வரும்போது என்னத்தைக் கொண்டு வந்தோம். போகும்போதுஎன்னத்தைக்கொண்டு போகப் போறோம்?னு நீ டயலாக் விடும்போது, எல்லாரும் உன்மூஞ்சியைப் பார்த்தாங்க. நான் மட்டும்தான் உன் காலைப் பார்த்தேன். எங்கேயிருந்துடா சுட்டே அந்த புது செருப்பை!

-------------------

ராம்: நான் கலெக்டர் ஆகணும்!

சீதா: நான் டாக்டர் ஆவேன்!

ப்ரீத்தி: நான் நல்ல அம்மா ஆவேன்!

கார்த்தி: ப்ரீத்திக்கு நான் கியாரண்டி!

----------- என்னைப் படைக்கறதுக்கு முன்னே கடவுள் அப்துல் கலாமை ஏன் படைச்சார் தெரியுமா..? ஏன்னா... மாஸ்டர் பீஸ் தயாரிக்கறதுக்கு முன்னே அவர் ஒரு சாம்பிள் பீஸ் பண்ணிப் பார்த்தார் மச்சான்!

------------------

உனக்கென இருப்பேன்... உயிரையும் கொடுப்பேன் என்னை நீ பிரிந்தால்... குவார்ட்டர் உட்டுட்டு குப்புறப் படுப்பேன்!

----------------

ஏன் கங்குலி ரன்னே அடிக்க மாட்டேங்கிறே? நான் அடிக்கலாம்னு பேட்டை தூக்கினேன். அப்போ எதிர் டீம்காரன் ஒருத்தன் சொன்னான்... டேய்... நாம எப்படி பந்தைப் போட்டாலும் இவன் அடிக்கவே மாட்றான். இவன் ரொம்ப நல்லவன்டா!னு சொன்னான்... அதான்!

---------------

ஐஸ்க்ரீமை ஸ்பூன்ல எடுத்துச் சாப்பிடணும்

நூடூல்ஸை ஃபோர்க்குல எடுத்துச் சாப்பிடணும்

பீட்ஸாவை நைஃப்ல எடுத்துச் சாப்பிடணும்.

சாதத்தை கையால் எடுத்துச் சாப்பிடணும்.

ஆனா... இதெல்லாம் தேவையே இல்லை.

நான் எதையுமே பிச்சை எடுத்துதான் சாப்பிடுவேன்னு அடம்பிடிக்கிறியே! ============================

என்ன மாமூ... புதுசுபுதுசா தினுசுதினுசா இவ்வளவு பர்ஸ்-வெச்சிருக்கே. ஒருவேளை கண்டதும் சுட உத்தரவு-னு பேப்பர்ல போட்டிருந்த செய்தியை நீ தப்பாப் புரிஞ்சுக்கிட்டியா என்ன?!

=======================

நேத்து நான் சச்சின் டெண்டுல்கர்கிட்ட போன்ல பேசினேன்.

சூப்பர்! என்ன சொன்னார்?

ஸாரி, ராங் நம்பர்ன்னார்!

===================================================

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...