> என் ராஜபாட்டை : 2014

.....

.
Showing posts with label 2014. Show all posts
Showing posts with label 2014. Show all posts

Wednesday, January 1, 2014

சந்தோஷம்





 
புத்தாண்டின் முதல் நாள் உங்கள் மனமும் உங்கள் குடும்பத்தினர் மனமும் சந்தோஷமாக இருக்க வாழ்த்துக்கள் . சந்தோஷம் என்றால் என்ன அது எப்படி எப்போது வரும் ? சந்தோஷத்தை அனுபவிப்பது எப்படி ? அடுத்தவரை சந்தோஷபடுத்துவது எப்படி ?


ü  முதலில் வீட்டில் உள்ள மனைவி , குழந்தைகளுடன் நேரத்தை செலவிடுங்கள் . உங்கள் அலுவலக கோபதாபங்களை அவர்களிடம் காட்டாதீர்கள் . உங்கள் மனதை மாற்றும் அற்புத மருந்து குடும்பம் .


ü  குழந்தைகளுடன் விளையாடுங்கள் . அந்த சமயத்தில் உங்களை புத்திசாலியாக நினைக்காமல் நீங்களும் ஒரு குழந்தையாக மாறுங்கள் . சந்தோசம் பொங்கும் .


ü  வாழ்க்கைக்கு தேவையான பொருள்களை மட்டும் வாங்குங்கள் . அடுத்தவரை பார்த்து தேவையில்லாத பொருளை வாங்கி கடனாளியாகாதீர் .


ü  கோவில் செலும் போது உண்டியலில் பணம் போடுவதுக்கு பதில் அங்கு உள்ள ஏழைக்கு போடுங்கள் . அவர்கள் உங்களை தெய்வமாக பார்ப்பார்கள் .


ü  பழைய , பள்ளி, கல்லூரி கால நண்பர்களுடன் அடிகடி தொடரில் இருங்கள் . ஒரு போன் , மெசேஜ் அனுப்புவதால் உறவுகள் தொடரும் .


ü  நண்பர்களின், உறவினர்களின் பிறந்த தேதியை குறித்துவைத்து கொள்ளுங்கள் . அன்று முடிந்தால் போன் அல்லது மெசேஜ் செய்யுங்கள் . அன்று அவர்கள் அடையும் ஆனந்தம் , மகிஷ்சிக்கு அளவே இருக்காது .


ü  குறைந்தபட்சம் மாதம் ஒரு புத்தகமாவது படியுங்கள் . அது உங்களை புத்துணர்வு பெற செய்யும் . சுஜாதா “தினமும் பத்து பக்கமாவது படியுங்கள் “ என சொல்கிறார் .


ü  சிரித்த முகத்துடன் இருங்கள் . முகத்தை பார்த்தே பலர் அடுத்தவர்களை எடை போடுகிறார்கள் .


ü  அடுத்தவர் குறைகளை மென்மையாக சுட்டிகாட்டுங்கள் . வீண் விவாதம் சண்டையில் அல்லது பிரிவில்தான் முடியும் .


ü  நல்ல நகைசுவையான நிகழ்சிகளை பாருங்கள் . கண்டிப்பா சீரியல் பார்க்காதீங்க . நீங்கள் ரசித்த நகைசுவைகளை நண்பர்களுடன் , குடும்பத்துடன் பகிர்ந்துகொள்ளுங்கள் .


2013 இல்  நடந்த நல்லவைகளை விட அதிகமான நல்லவைகள் ங்கள் குடும்பத்தில் நடக்க எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.



HAPPY NEW YEAR 2014