> என் ராஜபாட்டை : விவேகானந்தர் – இந்திய மறுமலர்ச்சி நாயகன் : நூல் விமர்சனம்

.....

.

Friday, December 19, 2014

விவேகானந்தர் – இந்திய மறுமலர்ச்சி நாயகன் : நூல் விமர்சனம்




                      “நூறு இளைஞர்களை தாருங்கள் , இந்தியாவை மாற்றி காட்டுகிறேன் “ என சொன்ன அறத்துறவி “விவேகானந்தர்  “ பற்றிய தொகுப்புகள்தான் இந்த நூல்.

ஆசிரியர் :

 நூலின் ஆசிரியர் பலரும் அறிந்த ரஞ்சனி நாராயணன் அவர்கள். இவரின் முதல் நூல் இது . வலைதளங்களிலும் , பத்திரிக்கைகளிலும் எழுதிவரும் அருமையான எழுத்தாளர் .

நூலை பற்றி :

 பாரதியாரின் வார்த்தைகளுடன் இந்த நூல் துவங்குகிறது. விவேகானந்தர் பிறந்த நாள் முதல் அவர் எப்பொழுது ராமகிருஷ்ணரை சந்தித்தார் , அவரிடம் எப்படி சீடனாக சேர்ந்தார் , அதானால் அவர் வாழ்வில் ஏற்பட்ட மாற்றங்கள் என்ன என்ன , ராமகிருஷ்னா மிஷன் எப்போது , எப்படி துவங்கபட்டது என முதல் 43  பக்கங்கள் ஓடிவிடுகிறது .பின்னர் அவரின் சுற்றுபயணங்கள் பற்றிய விவரங்கள் வருகிறது. பயண கட்டுரைகள் எப்போதும் போர் அடிக்கும் ஆனால் இங்கு இடையிடையே நமக்கு அதிகம் தெரியாத சில தகவல்கள் வருவதால் போரடிக்கவில்லை .

 உதாரணம் :

சுவாமிஜியின் முதல் சீடர் பெயர் “சரத் சந்திர குப்தர் “

பவஹாரி என்றால் காற்றை சாப்பிடுபவர் என அர்த்தம் .

சிக்காகோவில் பயணத்தில் சுவாமிஜி தங்க உதவியவர் மிஸ் கேத்ரின் ஆப்ட் சேன்பான் .

பட்டினியில் கிடக்கும் ஒருவனிடம் மதத்தை பற்றி பேசுவது அவனை அவமதிப்பது போல – சுவாமிஜி

நல்லவர்களை எதிர்க்க கண்டிப்பா நாட்டில் நாலுபேராவது இருப்பாங்க , அதுபோல சுவாமிஜியை எதிர்த்து “வங்கவாஸி “ என்ற பத்திரிகை எழுதுவதை வழக்கமாக கொண்டிருந்தது .

அவரின் வாழ்கையை பத்து அத்தியாயங்களாக பிரித்து எழுதியுள்ளார். இந்த வருடம் அவரின் 151 வது வருடம்.

 “அனைத்துப் பரிமாணத்திலும் மனிதனின் ஒட்டுமொத்த வளர்ச்சியே விவேகானந்தரின் செய்தி “ என்ற ரவீந்தரநாத் தாகூரின் வரிகளுடன் நூல் முடிகிறது .

சிறப்புகள் :

மறைந்த நபர்களை பற்றி எழுதும் போது அனைவரும் அறிந்த செய்திகள்தான் அதிகம் கிடைக்கும். ஆனால் இந்த நூலில் பல விஷயங்கள் புதிதாக உள்ளன. அதனால் படிக்க ஆர்வம் ஏற்படுகிறது .

மழுப்பாமல் சில விஷயங்கள் நேரிடையாக சொல்லபடுகிறது. உதாரணமாக கிருஸ்துவ மிஷன்கள் இந்துக்களை மதம் மாற செய்த செயல்கள் பற்றிய விவரம்.

விவேகானந்தர் சென்ற இடங்களை பற்றி வரிசையாக எழுதியது.

அதிக அத்தியாயங்கள் இழுக்காமல் சுருக்கமாக முடித்தது .

குறைகள் :

(குறை சொல்லும் அளவுக்கு நான் பெரிய ஆள் இல்லை , ஒரு வாசகனாக சில பரிந்துரைகள்/ ஆசைகள் ) ....

வெறும் வார்த்தைகளாக இல்லாமல் விவேகானந்தரின் மாறுபட்ட படங்களை இடையிடையே போட்டிருக்கலாம் .

ஒவ்வொரு அத்தியாயம் ஆரம்பத்திலும் , இறுதியிலும் அவரின் பிரபலமான / முக்கியமான வரிகளை சேர்த்திருக்கலாம் .

துன்பம் அதிகமானதால் தான் அவர் காளியை ஏற்றுகொண்டார் என்பது போல உள்ளது இது சரியா என தெரியவில்லை .

பதிப்பகத்துக்கு :

ஒவ்வொரு நூலிலும் ஆசிரியரை பற்றி , அவர் எழுதிய பிற நூல்களை பற்றி ஒரு பக்கம் எழுதினால் நன்றாக இருக்கும் என நினைக்கிறன் ,

மொத்தத்தில் மாணவர்கள் மட்டுமல்ல அனைவரும் படிக்க வேண்டிய நூல் இது என்பதில் சந்தேகம் இல்லை .


குறிப்பு : இது மதிப்புரை.காம் தளத்தில் நான் எழுதிய பதிவு .

ஆன்லைனில் வாங்க: https://www.nhm.in/shop/978-97-5135-166-5.html
போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் 94459 01234

10 comments:

  1. சிறப்பான நூல் அறிமுகம்!! பகிர்வுக்கு நன்றி சகோ!!

    ReplyDelete
  2. நூலின் ஆசிரியர் பலரும் அறிந்த ரஞ்சனி நாராயணன் அவர்கள். இவரின் முதல் நூல் இது . வலைதளங்களிலும் , பத்திரிக்கைகளிலும் எழுதிவரும் அருமையான எழுத்தாளர்
    விமர்சனம் அருமை

    ReplyDelete

  3. குழலின்னிசை இசைக்கும் 2015 புத்தாண்டு வாழ்த்துக்கள்

    வாழ்க வளமுடன்!
    திகழ்க நலமுடன்
    நன்றியுடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
  4. சகோதரி ரஞ்சனி நாராயணன் அருமையான எழுத்தாளர் என்பதில் எந்த ஐயமும் இல்லை!

    நூல் விமர்சனம் அருமை நண்பரே!

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எங்கள் இதயம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    அன்புடனும், நட்புடனும்

    துளசிதரன், கீதா

    ReplyDelete
  5. "அன்பும் பண்பும் அழகுற இணைந்து
    துன்பம் நீங்கி சுகத்தினை பெறுக!"

    வலைப் பூ நண்பரே / சகோதரியே!

    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் (2015)

    நட்புடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.fr

    ReplyDelete
  6. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருகும் எங்கள் இனிய மனம் கனிந்த புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!

    அன்புடனும், நட்புடனும்

    துளசிதரன், கீதா

    ReplyDelete
  8. தைமகள் வருகை புரிந்திடல் வேண்டும்
    கைகளைக் கூப்பி வணங்கிடல் வேண்டும்
    தையலை உயர்வு செய்திடல் வேண்டும்
    பைந்தமிழ் பூமி செழித்திடல் வேண்டும்

    தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும்
    எனது மனம் நிறைந்த
    இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.fr

    ReplyDelete
  9. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும், சுற்றத்தாருக்கும் எங்கள் மனமார்ந்த இனிய தமிழர்/உழவர் திருநாள்!

    ReplyDelete
  10. "இனிய குடியரசு தின நல் வாழ்த்துக்கள்!"
    ஜெய் ஹிந்த்!
    நன்றியுடன்,
    புதுவை வேலு
    (இன்றைய எனது பதிவு
    "இந்திய குடியரசு தினம்" கவிதை
    காண வாருங்களேன்)

    ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...