> என் ராஜபாட்டை : தமிழ்க் சினிமா

.....

.
Showing posts with label தமிழ்க் சினிமா. Show all posts
Showing posts with label தமிழ்க் சினிமா. Show all posts

Saturday, January 16, 2016

ரஜினி முருகன் - சினிமா விமர்சனம்





                      சில பசங்க விழுந்து விழுந்து படிப்பாங்க ஆனா மார்க் வராது ஆனால் சிலர் சாதாரணமா படிப்பாங்க ஆனா செமையா மார்க் வரும். சிவா இதில் இரண்டாம் வகை. கஷ்டபட்டு உடம்பை குறைக்கவோ, ஏற்றவோ இல்லை, புதுசா எதையும் ட்ரை செய்யல ஆனாலும் படம் செம . 

                      லிங்குசாமி தயாரிப்பில், பொன்ராம் இயக்கத்தில் சிவா, சூரி, கீர்த்தி சுரேஷ் , ஜான சம்பந்தம் மற்றும் பலர் நடிப்பில் பொங்கலுக்கு வந்த (போன வருடமே வரவேண்டிய ) படம்தான் ரஜினி முருகன்.

கதை :

  தமிழ் சினிமா வழக்கப்படி ஊரை சுற்றும் ஹீரோ , சின்ன வயசில் இருந்தே இவதான் உனக்குன்னு சொல்லி வளர்க்கபட்ட ஹீரோயினை காதலிக்க , குடும்ப பிரச்சனையில் பிரிந்த காதல் மீண்டும் இணைந்ததா ? இடையே புதுசா முளைத்த வில்லனின் கதி என்ன என சிரிக்க சிரிக்க சொல்லிருக்கங்க.




சிவா :

 படத்தின் முழுபலமே சிவாதான். ரஜினி விஜய்க்கு அடுத்து ஒரு ஹீரோ காமெடியில் கலக்குவது, குழுந்தைகளுக்கு பிடித்தாற்போல் இருப்பது சிவாதான். சூரியும் சிவாவும் பேசும் வசங்கள் பல இன்றைய இளம் வயதினர் பேசுவதுபோலவே இருப்பது சிறப்பு. நடனத்தில் சிம்புக்கும், விஜய்க்கும் போட்டியாக இருக்கிறார். சில காட்சிகளில் மட்டும் ஒரே மாதிரி அல்லது விஜய் மாதிரி எக்ஸ்பிரஷன் கொடுப்பது கடுப்பு.

பொன்ராம் - இயக்குனர்.

         வித்தியாசமா எடுக்குறேன் பேர்வழினு யாருக்கும் புரியாதமாதிரி எடுப்பது, அழகான ஹிரோவை பிசாசு போல காட்டுவது , தெருபுல்லா பெயின்ட் அடிச்சு புரடீயுசர் வயிற்றில் அடிப்பது என எந்த ரிஸ்க்கும் எடுக்காமல் மக்களையும் , தயாரிப்பாளரையும், வாங்கி விற்றவரையும் சந்தோஷமா கொண்டாட வைத்த இயக்குனரை பாராட்டியே ஆகவேண்டும்.


+ பாயின்ட் :

* சிவாவின் நடிப்பு

* சிவா சூரி காம்பினேஷன்.

* ஆச்சர்யமாக சூரி கத்தாம நடிச்சது 

* பாடல்கள் 

* படம் முழுக்க சிரிக்கவச்சது 

* தண்ணி , தம் அடிக்காத ஹீரோ (தண்ணி போட்டு பாடுவது போல வரும் ஆனால் தண்ணி அடிக்கும் காட்சி இல்லை.)



- பாயின்ட்

* ஹீரோயின் ஏனோ மனசில் ஒட்டவே இல்லை.

* சமுத்திரக்கனியின் பாத்திரப்படைப்பு 

* அடுத்து என்ன நடக்கும் என தெரியவைக்கும் திரைகதை 

* சப்ப காரனத்துக்கான நண்பர்கள் பிரிவது 


கடைசியா ...

பொங்கலுக்கு குடும்பத்துடன் சிரித்துவிட்டு வர ஒரு நல்ல பேமலி என்டர்டைனர் இந்த ரஜினி முருகன்.

இதையும் பார்க்கலாமே :


Best Tamil Keyboard apk for android




Tuesday, December 24, 2013

அஜித் , விஜய் , ரஜினி ரசிகர்களை கேவலமாக பேசிய சீமான்






நாம் தமிழர் இயக்க தலைவரும் இயக்குனருமான சீமான் பேசிய வீடியோ ஒன்று இப்போது பலத்த சர்சையை கிளப்பிவிட்டு உள்ளது . அதில் தமிழ் சினிமா ரசிகர்களை மிக மிக கேவலமாக பேசியுள்ளார் . சமிபத்தில் ஹிந்து கடவுள் ராமனை கிண்டல் செய்து விட்டு “என்னை கேட்டக ராமன்த்ஹான் வரவேண்டும் ஹிந்துக்கள் ஏன்டா வர்ரிங்க ?” என புத்திசாலித்தனமாக கேட்டார் .

அஜித் :
   தல ரசிகர்கள் என சொல்லிக்கொண்டு ஒரு கூட்டம் திரியுது . எல்லாம் தருதலைங்க . . .


விஜய் :
  இவனுங்க எந்த படைக்கு தளபதியா இருந்தானுங்கனு இவனுக்கு தளபதின்னு பட்டம் . 


விஜயகாந்த் :
  எங்கள் இன தலைவர் பிரபாகரனே கேப்டன் என போட்டுகொண்டது இல்லை இவ எப்படி கேப்டன் ?


ரஜினி :
   இவருக்கு உடம்பு சரியிள்ளனதும் 2000 லூசுங்க மொட்டை போடுறானுங்க . “தலைவா வா தமிழ்நாடு காத்திருக்கு “னு போஸ்டர் அடிக்குறான் . அப்ப நாங்கெல்லாம் என்ன சட்டமன்றத்தை கூட்டி , கழுவவா இருக்கோம் .


அந்த கேவலமான பேச்சின் வீடியோ :



  • நடிகரை விமர்சனம் செய்வது தனி . ஆனால் ரசிகர்களை விமர்சிக்க இவர் யார் ?
 
  • மக்களாக கொடுத்தால் மரியாதை . நாமாக கேட்டால் அது பிச்சை 
 .
  • விஜயை கிண்டல் செய்யும் இவர் ஏன் அவர் கால்ஷிட்க்கு (பகலவன்னு படம் பேரு கூட சொன்னார் ) அலைந்தார் .
 
  • இவர் படங்களில் நடித்தவர்கள் அனைவரும் தமிழர்கள் தானா ?
 
  • இலங்கையில் இருந்து சுற்றுலா வந்த அப்பாவிகளை அடித்த இவர் கட்சிகாரர்கள் இலங்கை நடிகையை  (பூஜா – தம்பி படம் ) வைத்து படம் எடுத்த இவரை எதால் அடிப்பார்கள் ?

டிஸ்கி : உங்கள் கருத்துகளை கண்டிப்பாக சொல்லவும் .

Thursday, May 24, 2012

நெஞ்சை தொ(சு )ட்ட கவிதை

முதியோர் இல்லத்து முதியவரின் முற்றிய வலிகள்...!!!

தவமிருந்துதான் பெற்றோம்

உன்னை,
தடுமாறி வாழ்கை நடத்தியபோதும்
தனித்தன்மையாய் வளர்த்தோம்,

உன் எச்சில் பட்ட
என் கண்ணங்கள்
இன்னும் குளிருதாடா..!மகனே...

உன் மழலை புன்னகையை
பிச்சை கேட்டு
பல நாட்கள் உன்னிடம்
மண்டியிட்டிருக்கிறேன் ,
என் செல்ல மகனே...,

உன் பால் வாசத்தில்
என் பாசம் உணர்ந்தேன்,

நீ கடித்து காயபடுத்திய
என் கன்னத்து தழும்பை
இன்னமும் முத்தமிடுகிறாள்
உன் அம்மா...!

என் கிழிந்த வேட்டியை
மறைத்து,மடித்து கட்டி
வேட்டி வாங்கும்
பணத்தில் வாங்கியதுதான்
உன் வெள்ளி பாலாடை...!
என் அன்பு மகனே..!

முதல் முறை
நீ பள்ளி செல்லும்போது
உன்னை மருத்துவனாகதான்
பார்த்தேன் இந்த பாவி..,

கல்லூரி செல்லும்போது
கர்வத்தோடு பார்த்தேன்...,

மணக்கோலத்தில் உன்னை
பார்த்தபோதுதான்,
உயிருடன் மோட்சமான
முதல் மனிதனானேன்..,

என் கடமை முடிந்தது
என் அன்பு மகனே...!

ஓர் இரவு,
வீட்டில் படுத்துவிட்டு
விழித்து பார்த்தால்,
நானும் உன் தாயும்
கிடந்தது
"முதியோர் இல்ல" வாசலில்...,

பேர பிள்ளைகள்
உதைக்க காத்திருந்த
மார்பில்,
நீ உதைத்ததெப்படி..?
என் செல்ல மகனே..!
என் மகன் இப்படி ஆனதெப்படி..?

உன் தாய்
கொடுத்த பால்
விஷமானதெப்படி..?

என் மேல் சிந்திய
உன் எச்சில்
அமிலம் ஆனதெப்படி..?

போதும் மகனே போதும்..!

உயிரை கொல்பவன் மட்டும்
கொலைகாரன் அல்ல...
உணர்வை கொல்பவனும்தான்..,

நீ கொலைகாரன் ஆனதெப்படி...?

நீ செய்ததை
என் உடல் தாங்கும்...
என் உள்ளம் தாங்காது..

நான் தாங்குவேன்
உன் தாய்
தாங்கமாட்டாள்...!
பாலூட்டியவளாயிற்றே...!!!

மகனே..!
வாரம் ஒருமுறை
என் பேரப்பிள்ளைகளை
கூட்டி வா..,
இவர்கள்தான் "தாத்தா பாட்டி"என்று
அறிமுகம் செய்,

"தாத்தா பாட்டி சாமிகிட்ட போய்டாங்க",
என்று கூறி எங்களை
உயிரோடு எரிக்காதே...!

எங்கள் நிலை பார்த்து
உன் பிள்ளைகள்
வளர்ந்தால்தான்,
நீ எங்கள் நிலைக்கு
வராமல் இருப்பாய்..!!!

நீ மிகவும் நல்லவன்
என் செல்ல மகனே..!!!
அனாதையாக எங்களை
விட்டுவிடாமல்,
முதியோர் இல்லத்தில்...
சேர்த்தாயே...!!!

நன்றி மகனே

என் மகன் நல்லவன்...!!!


- இளையபாரதி



டிஸ்கி     1    :முக புத்தக நண்பர் இளையபாரதி எழுதிய கவிதை 

டிஸ்கி 2 : காதல் கவிதைகளை பகிரும் தோழர்களே இதையும் பகிருங்கள்..!!!


இதையும் படிக்கலாமே  :


யார் தெய்வம் ?

துப்பாக்கி Vs பில்லா 2

தமிழ் சினிமா வரலாற்றில் முதல் முறையாக ...