> என் ராஜபாட்டை : சில நொடி சினேகம் : குறும்பட விமர்சனம்

.....

.

Tuesday, November 4, 2014

சில நொடி சினேகம் : குறும்பட விமர்சனம்




கடந்த வாரம் மதுரையில் நடந்த பதிவர் சந்திப்பில் நண்பர் குடந்தை சரவணன் அவர்களால் இயக்கத்தில் எடுத்த “சில நொடி சிநேகம் “ என்ற குறும்படம் வெளியிடப்பட்டது. 

பிரபல பதிவர் , கவிதை மன்னன் அரசன் , கன்னி பெண்களின் அண்ணன் சாரி கண்ணன் “கோவை ஆவி” மற்றும் பதிவுலக மார்கேண்டயன் துளசிதரன் அய்யா நடித்துள்ளனர் . இயக்கம் குடந்தை மண்ணின் மைந்தர் R.V.சரவணன் அவர்கள் .


கதை :

கதை மிக சிறியதுதான் . (சின்ன கதைய எடுத்தாதாம் அது குறும்படம் , பெரிய கதைனா அது பெரும்படம் !!!). ஆட்டோவில் ஒனன்றாக வரும் இருவர் ஐந்து ரூபாய் சில்லறை பாக்கியில் நண்பர்களாகின்றனர். உறவினர் காரில் வந்ததால் தான் நண்பனையும் அழைத்து செல்ல தேடும் ஒருவரும் , பஸ்ஸில் கஷ்டபட்டு ஏறி நண்பருக்காக சீட்டு போட்டு காத்திருக்கும் ஒருவர் என சில நொடிகளில் ஏற்பட்ட நட்பு எப்படி ஆழமாக மாறியது என்பதுதான் கதை .


+ பாயிண்ட்ஸ்


இயக்கம் மிக அருமை , முதல் படம் போலவே இல்லை .


அன்றாடம் நம் வாழ்வில் நடக்கும் / கடக்கும் சம்பவத்தை எடுத்தது 


மிக குறைவான கதாபாத்திரங்கள் .


மூவரின் அருமையான நடிப்பு .


மிக இயல்பான வசனங்கள் .


- பாயின்ட் :

குழந்தை எழுந்து நடக்க ஆரம்பித்த உடனே அது ரஜினிபோல நடக்கவில்லை என குறை கூற கூடாது எனவே முதல் முயற்சி என்பதால் எந்த குறையையும் சொல்ல மனமில்லை .


ஆச்சரியம் :

ஆவி ஓடும் பஸ்ஸில் ஏறியது .



டிஸ்கி : திரைப்படத்தில் இயக்குனர்கள் ஒரு காட்சியில் தலையை காட்டுவார்கள் அதுபோல இதிலும் இயக்குனர் சரவணன் ஒரு காட்சியில் வருகிறார் .



9 comments:

  1. நண்பர் ஆர். வி. சரவணன் இயக்கிய 'சில நொடி சிநேகம்' என்கிற குறும்படத்தின் சிறையல்புகளையும் பெருமைகளையும் அழகாக தொகுத்தளித்தீர்கள்.
    நானும் படத்தை இணையத்தில் பார்த்து மிக இரசித்தேன்.
    தங்கள் விமர்சனத்தில், //ஆச்சரியம்// என்ற தலைப்பின்கீழ்
    கொடுத்த விளக்கம் படித்து சிரித்தேன்.

    ReplyDelete
  2. ரொம்ப அழகான விமர்சனம். எந்த பதிவிலும் வராத புதுமையான விமர்சனம். !!! நகைச்சுவையுடனும்! மிகவும் ரசித்தோம்! உங்கள் விமர்சனத்தை! + மட்டும் (மே) எழுதியதற்காக!!!(அஹ்ஹாஅ)-துளசி, கீதா.

    கீதா: தலைமுடிக்கு டை அடிச்சுட்டு உலா வரதுனாலயா, எங்க துளசிக்கு பதிவுலக மார்கண்டேயர் பட்டம்?!!!! அரைக் கிழம்க..ஹஹ்ஹஹ்ஹஹ்

    ReplyDelete
  3. மிகுந்த நன்றிகள் வாத்தியாரே ...

    ReplyDelete
  4. விமர்சனம் சிறப்பு! படம் சிறப்பாக இருந்தது! நன்றி!

    ReplyDelete
  5. மிக்க நன்றி ராஜா.

    ReplyDelete
  6. //ஆவி ஓடும் பஸ்ஸில் ஏறியது// :) :)

    ReplyDelete
  7. //ஆச்சரியம் :

    ஆவி ஓடும் பஸ்ஸில் ஏறியது .// ஹா ஹா

    ReplyDelete
  8. வணக்கம் தங்கள் தளம் வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது ...
    வாழ்த்துக்கள்
    அறிமுகம் செய்தவர் குருநாதசுந்தரம்
    link is here click now!

    ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...