> என் ராஜபாட்டை : பதிவர்கள்

.....

.
Showing posts with label பதிவர்கள். Show all posts
Showing posts with label பதிவர்கள். Show all posts

Tuesday, November 4, 2014

சில நொடி சினேகம் : குறும்பட விமர்சனம்




கடந்த வாரம் மதுரையில் நடந்த பதிவர் சந்திப்பில் நண்பர் குடந்தை சரவணன் அவர்களால் இயக்கத்தில் எடுத்த “சில நொடி சிநேகம் “ என்ற குறும்படம் வெளியிடப்பட்டது. 

பிரபல பதிவர் , கவிதை மன்னன் அரசன் , கன்னி பெண்களின் அண்ணன் சாரி கண்ணன் “கோவை ஆவி” மற்றும் பதிவுலக மார்கேண்டயன் துளசிதரன் அய்யா நடித்துள்ளனர் . இயக்கம் குடந்தை மண்ணின் மைந்தர் R.V.சரவணன் அவர்கள் .


கதை :

கதை மிக சிறியதுதான் . (சின்ன கதைய எடுத்தாதாம் அது குறும்படம் , பெரிய கதைனா அது பெரும்படம் !!!). ஆட்டோவில் ஒனன்றாக வரும் இருவர் ஐந்து ரூபாய் சில்லறை பாக்கியில் நண்பர்களாகின்றனர். உறவினர் காரில் வந்ததால் தான் நண்பனையும் அழைத்து செல்ல தேடும் ஒருவரும் , பஸ்ஸில் கஷ்டபட்டு ஏறி நண்பருக்காக சீட்டு போட்டு காத்திருக்கும் ஒருவர் என சில நொடிகளில் ஏற்பட்ட நட்பு எப்படி ஆழமாக மாறியது என்பதுதான் கதை .


+ பாயிண்ட்ஸ்


இயக்கம் மிக அருமை , முதல் படம் போலவே இல்லை .


அன்றாடம் நம் வாழ்வில் நடக்கும் / கடக்கும் சம்பவத்தை எடுத்தது 


மிக குறைவான கதாபாத்திரங்கள் .


மூவரின் அருமையான நடிப்பு .


மிக இயல்பான வசனங்கள் .


- பாயின்ட் :

குழந்தை எழுந்து நடக்க ஆரம்பித்த உடனே அது ரஜினிபோல நடக்கவில்லை என குறை கூற கூடாது எனவே முதல் முயற்சி என்பதால் எந்த குறையையும் சொல்ல மனமில்லை .


ஆச்சரியம் :

ஆவி ஓடும் பஸ்ஸில் ஏறியது .



டிஸ்கி : திரைப்படத்தில் இயக்குனர்கள் ஒரு காட்சியில் தலையை காட்டுவார்கள் அதுபோல இதிலும் இயக்குனர் சரவணன் ஒரு காட்சியில் வருகிறார் .



Tuesday, April 9, 2013

பதிவர்கள் கவனத்திற்கு ...



இன்றைய நிலையில் பல புதிய பதிவர்கள் தினமும்பதிவு எழுதிகின்றனர் .சிலர் வாரம் ஒன்று இரண்டு என்றும் எழுதுவதுண்டு . ஒவ்வொருவருக்கும் பதிவு எழுதுவதில்வித்தியாசம் இருக்கும் .சிலர் கவிதைகள் மட்டும் எழுதுவார் . சிலர் சினிமா , அரசியல் , மொக்கை எனகலந்துகட்டி அடிப்பார்கள் . (சிலர் அடுத்தவர்களை குறை கூற மட்டுமே பதிவு போடுவார்கள் ).

இப்படி நாம் கஷ்டப்பட்டு எழுதும்பது நிறைய பேரை சென்றடைய வேண்டும் என நினைப்பது இயல்புதான் . அப்படி எழுதும் பதிவை எப்படி பிரபலபடுத்துவது ?.  எளிதான வழி திரட்டிகளில் இணைப்பது . அதை விட எளிய வழி ஒன்று உள்ளது . அதை பற்றிதான் பார்க்க போகிறோம் .

பதிவர்கள் அனைவரும் கண்டிப்பாக FACEBOOK இல் கணக்கு வைத்திருப்போம் . உங்கள் FACEBOOK WALL இல் உங்கள் பதிவை வெளியிடலாம் . அதுமட்டுமில்லாது பல FACEBOOK GROUP, AND FACEBOOK PAGE  இல் இணைந்து விட்டு அதில் உங்கள் பதிவின் லிங்க்கை வெளியிடலாம் . நாம் ஒவ்வொரு GROUP, PAGE ஆக சென்று பதிவை வெளியிடுவது நேரத்தை விரையமாக்கும் . அனைத்து குருப் மற்றும் பக்கங்களில் ஒரே நேரத்தில் வெளியிட்டால் எப்படி இருக்கும் ? அதுக்கு உதவுவதே இந்த பதிவு .


கிழே உள்ள சில லிங்க்கில் சென்று ஒரே கிளிக்கில் அனைத்து குருப்பிலும் உங்கள் பதிவை வெளியிடலாம் . இதை நான் பயன்படுத்தி உள்ளேன் .


               இதில் உங்கள் FACEBOOK கணக்கில் உள்ள அனைத்து குருப் , பேஜ் ,நண்பர்கள் அனைவரும் வருவார்கள் . சிலவற்றை மற்றும் தெரிந்து எடுக்கவும் . அனைத்துக்கும் அனுப்பினால் ( MORE THEN 40 PAGE OR GROUP OR FRIENDS) நீங்கள் இரண்டு நாளைக்கு FACEBOOK இல் எதையும் SHARE செய்ய முடியாது . 

தினமும் பதிவு எழுதுபவர்கள் இதில் சில குருப்பை மட்டும் தெரிவு செய்யவும் .

எப்பொழுதாவது எழுதுபவர்கள் நிறைய தெரிவு செய்யலாம் .



                இது SHAREWARE போன்றது . இதில் இலவசமாக 5  குருப்க்கு மட்டுமே அனுப்பலாம் . பணம் கட்டினால் நிறைய குருப்க்கு அனுப்பலாம் .


   இது மேலே உள்ளது போல தான் . ஆனால் எளிதில் FACEBOOK, TWITTER , G+ போன்ற அனைத்து தளங்களிலும் பகிரலாம் .


டிஸ்கி : இது போல வேறு ஏதாவது வழி இருந்தால் சொல்லுங்கள் .



இதையும் பார்க்கலாமே :

கணவன் , மனைவி ,தெரியாது.. முடியாது.

 

அஜித் Vs ஆர்யா மற்றும் சன் டிவி 

 

இலவசமாக SMS அனுப்ப வேண்டுமா ?

Monday, August 27, 2012

இந்த பதிவர்கள் தொல்லை தாங்கலப்பா ....



கோவிலில் ...

மனோ :கடவுளே கடந்த 5 வருடமா எனக்கு லாட்டரி டிக்கெட்ல
        ஒரு கோடி விழனும்னு வேண்டுறேன் ஆனா நீ   
        செய்யமாட்ற .. ஏன் ? நான் உனக்கு என்ன பண்ணனுனா  
        பரிசு விழ வைப்ப ?

கடவுள் : வெண்ணெய் .... எனக்கு ஒன்னும் பண்ண வேண்டாம்
         முதலில் நீ லாட்டரி டிக்கெட் வாங்கு .
==========================================================================

கடவுள் : பக்தா உனக்கு என்ன வரம் வேண்டும் ?

மனசாட்சி : பூமியில் இருந்து சொர்க்கத்துக்கு ரோடு வேண்டும் .

கடவுள் : அதற்க்கு வாய்ப்பே இல்லை வேறு எதாவது கேள் .

மனசாட்சி : வீடு சுரேஷ் , தனுஷ் போல ஒல்லியா ஆகணும்

கடவுள் : சொர்க்கத்துக்கு எப்படி சிங்கிள் ரோடா ? அல்லது டபுள் ரோடா ?
========================================================================
காதலி : அன்பே ஒரு கவிதை சொல்லுங்கள் ..

கவிதை வீதி சௌந்தர் : அன்பே உன்னை பார்த்தேன் உலகை
                           மறந்தேன் .

காதலி : அருமை .. மேலே சொல்லுங்க

கவிதை வீதி சௌந்தர் : உன் தங்கையை பார்த்தேன் உன்னை
                           மறந்தேன் .

=================================================================
வேடந்தாங்கல் கருண் வகுப்பில் பாடம் நடத்தும் போது வகுப்புக்கு வெளியே ஒரு நாய் கத்தி கொண்டு இருக்கிறது . அதனால் இவர் பாடம் நடத்துவதை நிறுத்தி வைக்கிறார் .

மாணவன் : சார் அது கத்துவதை நிறுத்திவிட்டது , நீங்க
            ஆரம்பியுங்கள்
===========================================================================

விக்கி : சி பி ஒரு தத்துவம் சொல்லுங்க .

சி பி : மனசுக்குள்ள பிகர் வந்தாலும்
         உடம்புல சுகர் வந்தாலும்
         தொல்லைதான்
================================================================

சி பி : நேற்று ஜேம்ஸ் பாண்ட நடித்த படம் பார்த்தேன்
கவிதைகள் பிரேம் : என்ன படம் ?

சி பி : காண்டம் பார் சேல்ஸ்

கவிதைகள் பிரேம் : யோவ் !!! அது குவாண்டம் ஆப் சோலிஸ்

சி .பி ; அப்படியா ? அப்புறம் குங்கும பூ போண்டா என்று ஒரு படம் பார்த்தேன் ..

கவிதைகள் பிரேம் :கடவுளே .. அது குங்பூ பாண்டா


===============================================================



Tuesday, November 29, 2011

பதிவர்களையும், அஜித் ரசிகர்களையும் கேவலப்படுத்திய "வினவு" தளம்





சமிபத்தில் திரு பத்ரி அவர்களின் நடிகர் அஜித்பற்றி ஒரு பதிவை நான் பிரசுரம் செய்திருந்தேன். அந்த பதிவை பற்றியும் , பதிவர்கள் பற்றியும் மிகவும் மட்டகரமாக வினவு தளம் ஒரு கட்டுரை எழுதியுள்ளது. அதில் இருந்து சில பகுதிகளும், சில கேள்விகளும்.


//பத்ரியின் இந்த பதிவை 42 பதிவர்கள் லைக்கியிருக்க, 21 பதிவர்கள் பகிர்ந்து பாராட்டியிருக்கிறார்கள். பத்ரியின் வலைப்பதிவிலும் தனது உணர்ச்சிகளை பதிவு செய்திருக்கின்றனர். கருவளையத்தை வெள்ளையாக்கும் முயற்சியில் அந்த மூகப்பூச்சுக் கலைஞர் ஈடுபடும் போது பேசிய உரையாடல் இந்த அளவுக்கு வரவேற்பு பெறும் என்று தோற்கடிக்க முடியாதவன் என இப்பதிவுக்கு பெயரிட்ட பத்ரிக்கு தெரியாமல் இருந்திருக்காது. ஆனாலும் இதற்காகவே தன்னை சினிமா ப்ரியன், தலயின் ரசிகன் என்று அஜித்தின் இரசிகர்கள் நம்புவது உண்மையில்லையென சற்று வெட்கத்துடன் என்றாலும் வெளிப்படையாகவே மறுக்கிறார் பத்ரி. என்ன இருந்தாலும் இரசிகர்கள் எனப்படுவோர் பெஞ்ச் டிக்கெட் வர்க்கம்தானே? ஒரு சினிமா நடிகனின் இரசிகன் என்ற அடையாளத்தை நமது அறிஞர் பெருமக்கள் மலிவாகவே கருதுவதை தவறு என்று சொல்ல முடியாதில்லையா? //


வினவுவில் இந்த கட்டுரையை எழுதியவர் கட்டில் ரகமா?( பெஞ்ச்!!) ரசிகனை இழிவுபடுத்த இவருக்கு என்ன உரிமை உள்ளது?


// ஆனால் கடந்த சில ஆண்டுகளாக தமது ஊதியம் அதாவது தினசரி பேட்டா உயர்த்தப்படாத நிலையில் போராடப் போவதாக பெப்சி அதாவது தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர் சம்மேளனம் அறிவித்திருந்ததை எத்தனை பேர் அறிவீர்கள்?
//

எங்க ஊருல பஸ் ஸ்டாண்ட் சரியில்ல அது உங்களுக்கு தெரியுமா? உலகில் உள்ள அனைத்து பிரசனையும் ஒருவர் அறிந்து வைத்திருக்க வேண்டும் என நினைப்பது முட்டாள்தனம். எனக்கு தெரிந்தது உங்களுக்கு தெரியாது, உங்களுக்கு தெரிந்தது எனக்கு தெரியாது..

// தொழிலாளர்களின் சம்பளத்தை நியாயமாக உயர்த்தாமல் நான் நடிக்கமாட்டேன் என்று தலயோ, தளபதியோ, உலக நாயகனோ, சூப்பரோ பேசினார்களா? இல்லை அவர்கள் ஏன் பேசவில்லை என்று பதிவுலகம்தான் துள்ளிக் குதித்ததா?
//

இது லூசுதனமான வாதம். இப்ப பஸ் கட்டணம் உயர்ந்ததுக்கு ஏன் நீங்கள் சாகும்வரை உண்ணாவிருதம் இருக்ககூடாது?

// அந்த சினிமா உலகில் சில கோடிகளை சம்பளமாக வாங்கும் அஜித் இல்லையா? அவரும் அதற்கு காரணமில்லையா? கேட்டால் அதற்கு அவர் என்ன செய்வார், அதெல்லாம் தயாரிப்பாளரது பிரச்சினை என்று நமது புத்திசாலி பதிவர்கள் கேட்பார்கள்.
//

உங்களிடம் வேலைபார்பவர்களுக்கு நீங்கள் ஏன் சம்பளம் தருகிறிர்கள்? திறமைக்கும், மார்கெட்க்கும்தான் மரியாதை. உங்களுக்கு வரும் அளவு என் வலைக்கு பார்வையாளர்கள் ஏன் வருவதில்லை எது நியாயமா என நான் கேட்டால் அது எவ்வளவு கேனதனமான இருக்குமோ அதுபோல இருக்கு உங்கள் கேள்வி.

// படைப்பாளிகளான முதலாளிகளின் யோக்கியதையை தோலுரித்து ரூ.2 விலையில் ஒரு சிறு வெளியீடு கொண்டு வந்து கிட்டத்தட்ட 10,000 பிரதிகள் தொழிலாளிகளிடம் விற்பனை செய்யப்பட்டன (வினவிலும் விரைவில் வெளியிடுகிறோம்). கூட்டம் முடிந்ததும் துணை நடிகைகள், ஏனைய தொழிலாளர்கள், பெப்சி நிர்வாகிகள் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்ததும் நினைவுக்கு வருகிறது.
//

ஏன் புத்தகத்தை இலவசமாக அளிக்கவேண்டியதுதானே? ஒரு 2 ரூபாய் புத்தகத்தை இலவசமாக தர துப்பில்லை, 190 ரூபாய் பிரியானி போட்டவரை குற்றம் சொல்ல வெட்கமா இல்லை.

// தமிழ் சினிமா நட்சத்திரங்களின் வள்ளல் கதைகள் குறித்து எம்.ஜி.ஆர் தொட்டு விஜயகாந்த் வரை ஏராளமுண்டு. ராமாவரம் தோட்டத்தில் புரட்சித் தலைவர் போடாத விருந்தா, சாப்பிடாத ஆட்களா? விஜயகாந்த் கொடுக்காத அயர்னிங் மிஷினா, மூன்று சக்கர வண்டியா? இல்லை அகரம் பவுண்டேஷனுக்கு அழைத்தால் ஸ்விட்சுடு ஆஃப் (ஆதாரம் அண்ணன் உண்மைத் தமிழன்) என்று வந்தாலும் சூர்யாவின் வள்ளல்தனத்தை வியக்காத பதிவர்களா? எழுதாத பத்திரிகையாளர்களா? யாரிடம் கதை விடுகிறீர்கள்?
//

அண்ணே நீங்க தினமும் 100 பேருக்கு நல்ல உணவும், வருடா வருடம் 100 குழந்தைக்கு படிப்பு செலவையும் செய்ரிங்களா? நீங்களே நன்கொடை தாருங்கள் என பிச்சை எடுக்குறிங்க, இதுல நல்லது செய்றவங்களை கிண்டல் பண்ணுறிங்க.

// ஆனால் தொழிலாளிகள் கூட என்றாவது ஒரு நாள் திருந்துவார்கள். ஆனானப்பட்ட நுகர்வு கலாச்சாரத்தில் மூழ்கிக் குளித்த அமெரிக்க மக்களே திருந்தவில்லையா என்ன? அதே நேரம் பத்ரியோ இல்லை பதிவர்களோ இந்த மட்டன் பிரியாணி மனிதாபிமானத்திலிருந்து திருந்துவார்கள் என்பதற்கு உத்திரவாதம் இருக்கிறதா? தெரியவில்லை!//

நாங்க திருந்துறது இருக்கட்டும், நீங்கள் எப்ப திருந்த போறிங்க?
அடுத்தவங்களை குறைமட்டுமே சொல்லுவது ஒரு சைக்கோ குணம். முடிந்தால் நல்லது செய்யுங்கள் , நல்லது செய்வோறை பாரட்ட கற்றுகொள்ளுங்கள். இல்லை மூடிகிட்டு சும்மா இருங்க.

டிஸ்கி: அந்த பதிவின் Link
டிஸ்கி 2: பதிவுலகில் யாரிடமும் சண்டை போடகூடாது என நினைத்தேன். நம் பதிவர்களை மட்டமாக பேசியதை பார்த்து கோவம் வந்துவிட்டது.