> என் ராஜபாட்டை : இந்து

.....

.
Showing posts with label இந்து. Show all posts
Showing posts with label இந்து. Show all posts

Monday, January 6, 2014

எது மதசார்பின்மை ?





தேர்தல் வரும் சமயம் அரசியல்வாதிகளால் அதிகமாக உபயோகிக்கப்படும் வார்த்தை “மதசார்பின்மை “. இவர்கள் முழுமனதுடன் தன இதை சொல்கிறார்களா ? இல்லை அரசியல் நாடகமா என மக்களுக்கே தெரியும் . உண்மையில் எது மதசார்பின்மை , இவர்கள் சொல்லும் வாதங்கள் சரியா என பார்க்கலாம் வாங்க .

எனது கேள்விகள் :
1.       தனது கட்சி அல்லது இயக்கத்து பெயரில் சாதி / மத பெயரை இணைத்து கொண்ட இயக்கம் / கட்சி எப்படி மதசார்ப்பற்ற கட்சியாகும் .

உதாரணம் : இந்து மக்கள் முன்னணி , முஸ்லிம் முனேற்ற கழகம்

2.       ஒரு மதத்தின் பண்டிக்கைக்கு வாழ்த்து சொல்லுவது தவறு என சொல்லிவிட்டு மற்ற மத பந்திக்கு சாரி பண்டிக்கைக்கு முந்துவது (வாழ்த்து சொல்ல ) எப்படி மத சார்பின்மை யாகும் ?

உதாரணம் : திபாவளி, கிருஷ்ண ஜெயந்திக்கு “விடுமுறை தின “ சிறப்பு நிகழ்சி என போடும் கலைஞ்சர் டிவி மற்ற மத பண்டிக்கைக்கு அந்த பண்டிகை பெயரில் சிறப்பு நிகழ்சி போடுவது .

3.       ஒரு குறிப்பிட்ட மதத்தின் அடையாளங்களை கிண்டல் செய்து விட்டு அடுத்த மதத்து அடையாளங்களை ஓட்டுக்காக மாட்டிகொள்வது எப்படி மதசார்ப்பின்மையாகும் ?

உதாரணம் : ஒரு M.L.A குங்குமம் வைத்ததை கிண்டல் செய்துவிட்டு ரம்ஜான் கஞ்சி குடிக்க குல்லா போடுவது .


4.       ஒரு மதத்தின் நம்பிக்கையை அல்லது அவர்கள் கடவுள்களை கிண்டல் செய்துவிட்டு மற்ற மதத்தினரிடம் நற்பெயர் வாங்க எந்த கேள்வியும் கேட்காமல் வாய்மூடி இருப்பது எப்படி மதசார்ப்பின்மையாகும் ?

“ராமன் என்ன இஞ்சினியரா ?” என புத்திசாலித்தனமாக கேட்பதாக நினைத்து கேள்வி கேட்பது . மற்ற மதத்தில் இது போல பல கேட்கலாம் ஆனால் மற்றவர்கள் நம்பிக்கை கெடுக்க நான் அரசியல்வாதியில்லை )

5.       ஒரு மதத்திற்கு எதிரான கலவரத்தை / பிரச்சனையை மட்டும் ஊதி பூதாகரமாகி , மற்ற பிரச்சனைகளை மறக்கடிப்பது எப்படி மதசார்ப்பின்மையாகும் ?

குஜராத் கலவரத்தை பற்றி வாய்கிழிய பேசும் காங்கிரஸ் சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தை பற்றி வாய்திறப்பதில்லை .காங்கிரஸ் மட்டுமல்ல குஜராத் கலவரத்தை பற்றி பேசும் பலர் வசதியாக சீக்கியர்களை மறந்துவிடுகின்றனர் . கலவரம் , உயிர் , கஷ்டம் ,நஷ்டம் எது என்றாலும் அது அனைவருக்கும் போது தானே ? இரண்டு கலவரத்திலும் பாதிக்கபட்ட மக்களுக்குத்தானே குரல் கொடுக்க வேண்டும் . பிரதமராக ஒரு சீக்கியர் இருந்தும் கூட அதைப்பற்றி வாய்திறக்காமல் குஜராத்தை பற்றி பேசுகிறார் .


கடைசியாக ஒரு வார்த்தை ..
“என் மதம் பெரிது என சொல்வது பிரச்சனை இல்லை
என் மதம் மட்டும்தான் பெரியது என சொல்வதுதான் பிரச்சனை “

 ==============================================================
மாணவர்களுக்காக ஒரு தளம் சென்று பாருங்கள் 

Sunday, September 25, 2011

விநாயகரை கைது செய்து விசாரணை நடத்தும் ஹிட்லரின் நாஜி உளவுத்துறை : ஆஸ்திரேலிய அட்டூழியம்



ஆஸ்திரேலியாவில் இந்து கடவுள்களை அவமதிப்பது வாடிக்கையாகி வருகிறது. சமீபத்தில் பெண் கடவுள் லட்சுமியின் படத்தை நீச்சல் உடையில் பொறித்து சிட்னியில் நடந்த பேஷன் ஷோவில் உலா விட்டனர். அதற்கு இந்து அமைப்புகள் போராட்டம் நடத்திய பின் மன்னிப்பு கேட்கப்பட்டது. இந்நிலையில் விநாயகரை அவமதித்துள்ளனர். ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்னில் வருகிற 29-ந்தேதி திருவிழா நடக்கிறது.
 
இதை தொடர்ந்து அங்குள்ள ஒரு நிறுவனம் ஒரு காமெடி நாடகம் நடத்த ஏற்பாடு செய்துள்ளது. அதில், இந்து கடவுள் விநாயகரை கேலி கிண்டல் செய்து காட்சி வடிவமைக்கப்பட்டுள்ளது. அதாவது விநாயகரை கைது செய்யும் சர்வாதிகாரி ஹிட்லரின் நாஜி உளவுத்துறை அவரிடம் விசாரணை நடத்தி துன்புறுத்துவது போன்ற கதை அமைக்கப்பட்டுள்ளது. இது குறித்து பரபரப்பு விளம்பரங்களும் செய்யப்பட்டு வருகின்றன. இதற்கு இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
 
அமெரிக்காவை சேர்ந்த இந்து பிரமுகர் ராஜன்சேத் இதுபற்றி கருத்து தெரிவித்துள்ளார். விநாயகர் உலகம் முழுவதும் வாழும் இந்துக்களின் கடவுள். அவரை ஹிட்டலரின் நாஜி உளவுத்துறை விசாரணை நடத்துவது போன்று கற்பனை செய்து பார்ப்பது கற்பனைக்கும் எட்டாதது. விநாயகரை கோவில்கள் மற்றும் வீடுகளில் வைத்து வழிபட வேண்டுமே தவிர மேடையில் ஏற்றி கேலி செய்து சிரிக்ககூடாது.
 
அவர் ஒரு கேலி பொருள் அல்ல. இந்துக்களால் வணங்கப்படும் கடவுள் என தெரிவித்துள்ளார். இது குறித்து நாடக தயாரிப்பாளர் ஆலிஷ் நாஷ், இந்துக்களை அவமதிப்பது எங்கள் நோக்கம் அல்ல. மக்களை மகிழ்விப்பதற்காக தான் இந்த நாடகத்தை நடத்துகிறோம். அந்த காட்சிகளை மிகவும் கவனத்துடன் கையாள இருக்கிறோம்’’என்று தெரிவித்துள்ளார். 
 
நன்றி : KINGTAMIL.Com