> என் ராஜபாட்டை : குடும்பம்

.....

.
Showing posts with label குடும்பம். Show all posts
Showing posts with label குடும்பம். Show all posts

Saturday, July 4, 2015

உங்கள் வீட்டில் குழந்தைகள் உள்ளதா ?



இன்றைய நிலையில் மிகவும் கஷ்டமான காரியம் என்பது ஒரு குழந்தையை வளர்ப்பதுதான் . குழந்தை மனம் நோகாமலும் , அது கெட்டவழியில் போகாமலும் , நாம் நல்ல பெயர் எடுக்கும் வகையிலும் குழந்தைகளை வளர்ப்பது என்பது இந்தியாவில் இருந்துஊழலை ஒழிப்பதற்கு சமம் . குழந்தைகளிடம் நாம் எப்படி நடக்க வேண்டும் என்பதுதான் இந்த பதிவின் சாராம்சம் .


1. குழந்தையை கண்டிப்பாக அடுத்த குழந்தையுடன் ஒப்பிடாதிர்கள் . குழந்தை உங்களை அடுத்த பெற்றோருடன் ஒப்பிட்டால் பொறுத்து கொள்விர்களா ?



2. குழந்தைகளுடன் பேச , விளையாட நேரம் ஒதுக்குங்கள் . டிவி சிரியல் முக்கியமல்ல , எத்தனை நாள் கழித்து பார்த்தாலும் சிரியல் புரியும் . பெற்றவர்கள் தன்னிடம் பேச வேண்டும் என என்னும் குழ்\குழந்தைகள் அதிகம் .

3. குழந்தைகள் சொல்வதை கேளுன்க்கள் . அது சொல்வது அர்த்தமில்லாத வார்த்தைகாய இருந்தாலும் கேளுங்கள் . அப்போதுதான் குழந்தை நன்றாக பேச வரும் . கூச்சம் போகும் .

4. பாராட்டுங்கள் . அது சின்னதாக ஏதாவது நல்ல விஷயம் செய்தாலும் பாராட்டுங்கள் . 



5. ஏதாவது தவறாக செய்தால் மென்மையாக கண்டியுங்கள் . அடித்துதான் ஒரு குழந்தையை நல்லவனாகக் முடியும் என்பது தவறு .

6. அடம்பிடிப்பதை கண்டியுங்கள் . அது கேட்டதை எல்லாம் வாங்கி கொடுத்து கெடுக்காதிர்கள் . ஏன் வாங்கி தரவில்லை என்பதை புரியவைக்க முயற்ச்சி செய்யுங்கள் .

7. பெண் குழந்தைகள் உடை விஷயத்தில் ஜாக்கிரதையாக இருங்கள் . எத்தனை வயதானாலும் உங்களுக்கு அவள் குழந்தைதான் ஆனால் மற்றவர்கள் பார்வையில் ?



8. மற்றவர்களிடம் மரியாதையாக பேச கற்று கொடுங்கள் . முதலில் நாம் மரியாதையாக பேச வேண்டும் . நாம் மனைவியை வாடி என்றால் குழந்தையும் வாடி என்றுதான் சொல்லும் .

9. குழந்தை முன் சண்டை போடாதிர்கள் . அது அதன் மனதில் காயத்தை ஏற்படுத்தும் .

10. அடுத்த குழந்தையை பற்றி தவறான எண்ணம் நம் குழந்தை மனதில் புகுதாதிர்கள் .



11. அடுத்தவர்களுக்கு கொடுத்து உண்ணும் பழக்கத்தை கற்றுகொடுங்கள் . இன்றய நிலையில் நெறைய குழந்தைகளுக்கு அவர்கள் பெற்றோர்கள்  சொல்லும் தவறான வார்த்தை " யாருக்கும் கொடுக்காம நீ மட்டும் சாப்பிடு " என்பதுதான்



எனக்கு தெரிந்த சில விஷயங்களை உங்களிடம் பகிர்ந்து உள்ளேன் . உங்கள் கருத்தை சொல்லுங்கள் .

மாடல் : R.S.சரண்

இது ஒரு மீள் பதிவு


படித்து விட்டிர்களா ?

இலவசமாக RE-CHARGE செய்ய புதிய இரண்டு அப்ளிகேஷன்கள்...

Wednesday, May 16, 2012

சீரியசான பிரச்சனை ..




கடந்த இரண்டு வாரமாக விடுமுறையாக இருப்பதால் நூலகம் (நான் நல்லபிள்ளை ) அல்லது டிவி அல்லது சரண் என பொழுது போகின்றது . இந்த நேரத்தில் வீட்டில் சில சீரியல் பார்த்தார்கள். வேறு வழியில்லாமல் பார்க்க வேண்டி இருந்தது. அப்படி பார்த்ததன் விளைவுதான் இந்த பதிவு .இந்த சீரியல்கள் பார்க்கும் போது தோன்றிய சந்தேகங்கள் , ஆத்திரங்கள் , கோவங்கள் ,வெறுப்புகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.

  1. நல்ல நண்பனாக பழகி விட்டு அவனை அவன் மனைவியிடன் இருந்து பிரிக்க முயற்சிக்கும் ஒரு பெண் . நாளை எந்த பெண்ணாவது தனது கணவனின் தோழியை பார்த்ததால் சந்தேகம் வராதா ?
  2. பெற்ற மகனை கெடுக்க அனைத்து வழியிலும் முயலும் தம்பி மற்றும் அம்மா . ( ஒருவேளை இயக்குனர் அம்மா அப்படியோ அல்லது அவர் அண்ணனை இப்படிதான் கெடுக்க நினைகின்ராரோ ?) 
  3. கொழுந்தியாலை கொலை செய்யும் வில்லன் (யாருக்காது கொழுந்தியாலை கொல்ல மனம் வருமா ஹீ .. ஹீ )
  4. தன மகனும் மருமகளும் சேரக்கூடாது என மருமகள் இருக்கும் அறையை இரவில் பூட்டி வைக்கும் தாய் ( அப்ப பகலுல சேர்ந்துட்டா ?)
  5. கணவனை சந்தேகப்படும் மனைவி , மனைவியை சந்தேகப்படும் கணவன் .
  6. நிறைய தொடர்களில் கதாநாயகிக்கு இரண்டு கணவன் அல்லது ஏற்கனவே திர்மனமானவரின் மனைவியாக கதாநாயகி .
  7. ஏன் எல்லா சிரியாலும் பெண்களை மையமாக வைத்து வருகின்றது ?( நாதஸ்வரம் விதிவிலக்கு )
  8. ஏன் ஆண்கள் பெயரில் சிரியல் எடுத்தா ஓடாதா ?
  9. சினிமாவில் மட்டும் பார்த்த கற்பழிப்பு காட்சிகள் சீரியலிலும் ( செல்லமே மற்றும் நாதஸ்வரத்தில் )
  10. பச்ச குழந்தையை பெரிய மனுஷி போல பேச வைப்பது


சினிமாவுக்கு இருப்பது போல தொலைக்காட்சிக்கும் சென்சார் வேண்டும் ( ஹ்ம்ம் .. சினிமா சென்சார் மட்டும் பெருசா என்னத்த கிழிசாங்க ..). வீட்டில் உள்ள வர்களை கொஞ்ச கொஞ்ச மாக மனநிலை பாதிப்புக்கு உள்ளாக்குகின்றது இது . தயவு செய்து சிரியல் பார்ப்பதை குறையுங்கள்.



மாற்று வழிகள் :

  1. காமெடி நிகழ்ச்சிகள் பாருங்கள் ( ஜெயா நியுஸ் , கலைகர் நியுஸ் போல )
  2. கார்டுன் நெட்வொர்க் பாருங்கள்
  3. ஆன்மிக சேன்னல் பாருங்கள் ( நித்தியானதா வகை அல்ல )
  4. ஆங்கில காமெடி சேன்னல் பாருங்கள் ( பாராளுமன்ற நேரடி ஒளிபரப்பு பாருங்கள் )
  5. எதுமே இல்லையா ஏன் ராஜபாட்டை பிளாக் படியுங்கள் .