> என் ராஜபாட்டை : கதம்பம் 27/07/13

.....

.

Saturday, July 27, 2013

கதம்பம் 27/07/13




அன்பு நண்பர்களே , கதம்பம் என்ற பல்சுவை தொகுப்பை மிக நீண்ட நாளாக எழுத முடியவில்லை . இனி மாதம் ஒரு முறையாவது எழுத முயற்சிக்கிறேன் .

நண்பர்கள் :

கடந்த செவ்வாய் அன்று சென்னை செல்ல வேண்டிய வேலை இருந்தது . அங்கு சென்ற பின் பதிவுலக நண்பர்கள் சிலரை பார்க்க நினைத்தேன் . ஆனால் நண்பருக்காக போனதால் முடியவில்லை . கரை சேரா அலைகள் அரசன் அவர்களுக்கு போன் செய்தேன் . பின்பு மெட்ராஸ்பவன் சிவகுமாருக்கு போன் செய்தேன் . அலுவலகம் கிளம்பு போகிறேன் என சொன்னவர் , திடிரென இருங்கள் செந்தில் வருகிறார் , அவருடன் நீங்கள் இருக்கும் இடத்திற்கு வருகிறேன் என சொன்னார் .





சிவாவும் , KRP செந்திலும் வந்தார்கள் . சுமார்  ஒரு மணிநேரம் பேசினோம் . மிக ஜாலியாக இருந்தது . இருவரும் என்னமோ நீண்ட நாள் நண்பர்கள் போல பேசினார்கள் . நேரமின்மையால் அதிகம் பேச முடியவில்லை . பதிவர் சந்திப்பில் அந்த குறை தீரும் என எண்ணுகிறேன் .
====================================================================


அரசியல் :

மோடிக்க விசா தரகூடாது என அமெரிக்காவுக்கு 29 MP கள் கடிதம் .

# அதுவும் போர்ஜரியா பலர் கையெழுத்தை யாரோ போட்டுருக்காங்க .

# ராஜபக்ஷே இந்தியா வந்தப்ப இவர்கலாம் என்ன பண்ணிகிட்டு இருந்தாங்க ???



28 ரூபாய்க்கு மேல் செலவு செய்தால் அவர்கள் வறுமை கோட்டுக்கு மேல் உள்ளார்கள் என அர்த்தம் .:  திட்ட கமிஷன்

# சென்னையில் வசந்த பவனில் 2 இட்லி 42 ரூபாய் .
# இந்த வீணா போன கிமிஷன் இருக்கும் இடத்தில் பாத்ரும் கட்ட செலவு 27 லட்சம்


ரசித்த ஜோக் :

வகுப்பில் காப்பி அடித்த மாணவனை இனி காப்பி அடிக்க மாட்டேன்னு 100 தடவை இம்போசிஷன் எழுத சொன்னார் ஆசிரியர் . அந்த மாணவன் எழுதியது கிழே ..

#include
void main( )
{
int i;
for(i=1;i<=100;i++)
{
printf(இனி காப்பி அடிக்கமாட்டேன் );
}
}


முகபுத்தகத்தில் எனது STATUS

ஒருவரை பிடிக்கா விட்டால் உடனே விலகிவிடு . இல்லையெனில் இறுதியில் அவமானமே மிச்சம் இருக்கும் .


இதுவரை S.P.பாலசுப்ரமணியம் குரல்தான் உலகிலேயே அழகு என்று இருந்தான் , என் மகன் சரணின் அப்பா என்ற குரலை போனில் கேட்கும் வரை .

உலகிலேயே மிகவும் அதிர்ஷ்டசாலி
நல்ல நண்பர்களை பெற்றவர்களே .



 இது உண்மையா ?


11 comments:

  1. யோவ் வாத்தி என்கிட்ட ஏன்யா சொல்லல... இதை எதிர்த்து இன்று முழுவதும் உண்ணும் விரதம் இருக்கப் போகிறேன்

    ReplyDelete
  2. பதிவர் சந்திப்பில் உங்கல் ஆசை நிறைவேறட்டும் வாழ்த்துக்கள் சார்

    ReplyDelete
  3. என்னையும் கூப்பிட்டிருக்கலாமே.... இருந்தாலும் வந்திருக்க முடியுமா தெரியலை...

    ReplyDelete
  4. சென்னையில் சந்திக்கிறேன்...

    ReplyDelete
  5. ரசித்தேன்....

    வந்தப்ப சொன்ன போனப்ப சொல்லல...

    நல்லாயிரு...

    ReplyDelete
  6. சத்தம் இல்லாம சென்னை விசிட்டா? இருக்கட்டும்! சுவையான தகவல்கள்! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  7. சிவாவும் செந்தில் அண்ணனும் சென்னையின் இரட்டைக்குழல் துப்பாக்கிகளாச்சே..அன்பு தோட்டாக்களால் துளைத்திருப்பார்களே!

    ReplyDelete
  8. அப்போ இனி எஸ்.பி.பி பாட்டை கேக்க மாட்டீங்கதானே!

    ReplyDelete
  9. கதம்பத்தில் அனைத்து விஷயங்களும் இரசிக்கும்வண்ணமிருந்தன.

    ReplyDelete
  10. அன்பின் ராஜா - கதம்பம் நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  11. மீண்டும் பதிவர் விழாவில் சந்திப்போம் ராஜா. கண்டிப்பாக வரவும்.

    ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...