மிக நீண்ட இடைவெளிக்கு பின் உங்களுக்காக கதம்பம் .
போராட்டம் :
அது என்ன விசித்திரம் என்று தெரியவில்லை நமது நாட்டில் அரசியல்கட்சிகள் நடத்தும் எந்த போராட்டமும் ( ரயில் மறியல் , பஸ் மறியல் , சாலைமறியல் ) அந்த கட்சி தலைவர்கள் பிறந்தநாள் அல்லது அவர்கள் குடும்ப விழா நடக்கும் நாளில் மட்டும் நடப்பதில்லை . அவர்களுக்கு வசதியான நாளில் வைத்துவிட்டு அப்பாவி மக்களைத்தான் கஷ்டபடுத்துகின்றனர் .
அமெரிக்காவை எதிர்த்து போராட்டம் நடத்தினால் கூட நம்ம ஊர் பஸ்சை மறைத்துதான் நடத்துகிறார்கள் . காங்கிரஸ் கூட தான் கூட்டணி என முடிவு சொல்லிவிட்டு அவர்களை எதிர்த்து ரயில் மரியலாம் . இன்னும் பல தலைவர்கள் மக்களை ஒன்னும் தெரியாத மடையர்கள் என்றே நினைக்கிறார்கள் .
பார்த்த படம் :
பலவருடங்களுக்கு முன் கேட்ட , இப்பவும் பார்க்க நினைத்த படம் "முகமது பின் துக்ளக் " . YOUTUBE இல் வேறு எதோ தேடும் போது கிடைத்தது . பிரின்ட் சரியில்லை என்றாலும் , சோ வின் பல வசனங்கள் செம . நிறைய வனங்கள் இன்றைய அரசியல் நிலைக்கும் ஒத்து வர கூடியவை தான் .
அவற்றில் சில :
: இதுவரை நீங்கள் ஓட்டு போட்டு ஜெயக்கவைதவர்கள் உங்களுக்கு ஒன்றுமே செய்யவில்லை . நானும் செய்யபோவதில்லை . எனவே எனக்கு ஒருமுறை ஓட்டு போடுங்கள் "
" அடுத்த தேர்தலை பற்றி நினைப்பவன் அரசியல்வாதி
தனது அடுத்த தலைமுறையை பற்றி நினைப்பவன் தலைவன் "
"மக்கள் ஒரு பிரச்சனையை பற்றி தீவிரமாக பேசுவார்கள் . அடுத்த பிரச்சனை வந்துவிட்டால் முந்தய பிரச்சனையை மறந்துவிடுவார்கள் "
"நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சிமாருவர்கள் என தெரியும் இப்படி இவ்வளவு வேகமா மாறுவாங்கன்னு தெரியாது "
முடிந்தால் பாருங்கள் .
பார்த்து நொந்த படம் :
என் வாழ்நாளில் இரண்டு படங்கள் மட்டுமே பாதி பார்பதுக்குள் தூக்கம் வந்தது . ஒன்று யா யா . மற்றது தனுஷின் "நையாண்டி ". படம் பார்க்க வருபவர்களை நையாண்டி செய்ய போகிறோம் என சிம்பாலிக்கா சொல்லத்தான் இப்படி பெயர் வைத்தார்களோ என்னவோ ,படம் செம போர் . இதுல நஸ்ரியா இடுப்பு பிரச்சனை வேறு . போங்கடா நீங்களும் உங்க படமும் .
படித்த புத்தகம் :
பதிவர் சந்திப்பில் டிஸ்கவரி புக் பேலஸ் வைத்திருத்த ஸ்டாலில் "ராஜீவ் கொலையும் தமிழர்கள் மீதான பழியும் " என்ற புத்தகம் வாங்கினேன் . இபோதான் படிக்க நேரம் வந்தது .
அதை படித்தபின் ஒரு கொலை வழக்கில் இவ்வளவு ஓட்டைகள் உள்ளது . நீதி துறை எப்படி இதை கண்டுகொள்ளாமல் உள்ளது என ஆச்சர்யமாக உள்ளது . உண்மையான காங்கிரஸ் காரர்கள் இதைப்படிக்க வேண்டும் . அப்புறம் சத்தியமா அவன் காங்கிரசில் இருக்கமாட்டன் .
ரசித்தது :
வக்கிலிடம் பிரச்சினையுடன் ஒருத்தார் வந்தார்,
வக்கீல்: என்ன பிரச்சினை?
வந்தவர்; சார், என் நண்பர் என்னிடம்
ஐம்பதாயிரம் ரூபாய் வாங்கி ஓரு வருஷம்
ஆச்சு சார். இந்தா தரேன்
அந்தா தரேன்னு இழுத்து அடிக்கிறார்.
வக்கீல்: ஏதாவது எவிடன்ஸ் இருக்கா?
வந்தவர்: ஒன்னும் இல்லை சார்.
வக்கீல்: அப்படின்னா அவருக்கு நீங்க கொடுத்த
ஓரு லட்ச்சத்தை எப்போ திருப்பி தரேன்னு கேட்ட
எழுதுங்க
வைத்தவர்: அம்பதாயிரம் தானே சார்.
வக்கீல்: உங்களிடம் கடன் வாங்கியவரும்
இதையே சொல்லி பதில் எழுதுவார் . அதான்
எவிடன்ஸ். அதை எடுத்து கொண்டு வாங்க
பேசிக்கலாம்.
இதையும் படிக்கலாமே :









