> என் ராஜபாட்டை : wedding day

.....

.
Showing posts with label wedding day. Show all posts
Showing posts with label wedding day. Show all posts

Thursday, August 22, 2013

வாழ்த்துங்கள்


2010 ஆகஸ்டு இல்  இதே நாளில் தான் அந்தசம்பவம் நடந்தது . எனது வாழ்க்கையையே புரட்டிபோட்ட நிகழ்ச்சி அது . அதுதான் என்னை நானே உணரவைத்த நிகழ்ச்சி . என்னையும் இந்த உலகில் ஒரு பெரிய மனிதனாக மாற்றிய நிகழ்வு நடந்த நாள் இன்று .



என்னடா ஓவரா பில்டப் குடுக்குரானே ஏதாவது விருது கிருது வாங்க்கிய நாளா அல்லது ஏதாவது சாதனை செய்த நாளா என என்னிகின்றிர்களா ? ஆம் ஒரு அருமையான விருது கிடைத்த நாள் தான் . என்ன விருது தெரியுமா ?? சக்தி பிரியதர்ஷினி என்ற என் தேவதை கிடைத்த நாள் இன்று .



ஆம் இன்றுடன் திருமண வாழ்வில் அடியெடுத்து வைத்து மூன்று வருடங்கள் முடிந்து விட்டது . நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நாங்கள் எல்லா வளமும் பெற உங்கள் வாழ்த்துகளும் ஆசிர்வாதங்களும் தேவை . நான் நன்றாக இருக்கவேண்டும் என நினைப்பதில் பெரும் பங்கு என் நண்பர்களாகிய உங்களுக்கு உண்டு அதான் உங்களிடம் வாழ்த்துக்கள் கேட்கிறேன் .


வாழ்த்துங்கள் வளர்கிறேன் ...





என் அப்பா அம்மாவை வாழ்த்திய அனைவருக்கும் நன்றி :


Wednesday, August 22, 2012

தேவதையை கரம்பிடித்து இரண்டு வருடம் ஓடிவிட்டதா !!!




22-08-2010 அன்று தான் அந்த சம்பவம் நடந்தது. ஆம் இந்த அப்பாவியின் பிரமசாரி பட்டம் தொலைந்து சம்சாரி ஆனா நாள் அது. என் அழகான தேவதையை திருச்சியில் கண்டுபிடித்தேன். அங்குதான் அவர் கரம் பிடித்தேன் .

இந்த இரண்டு வருடத்தில் இதுவரை நாங்கள் சண்டையே போட்டதில்லை .(வீட்டு செலவு , விசேஷத்திற்கு துணி எடுப்பது , உறவினர் இல்லத்திற்கு செல்வது , குடும்பத்தில் முக்கிய முடிவை எடுப்பது போன்ற சின்ன விஷயத்தை எல்லாம் அவள் பார்த்து கொள்ளுவாள் . இந்தியா பாகிஸ்தான் பிரச்னை , ஈழ பிரச்னை , விக்கிலிக்ஸ் பிரச்னை போன்ற பெரிய விஷயங்களை நான் பார்த்துகொள்ளுவேன்)


என்னை மாற்றினாள் :

சரியான நேரத்தில் உணவு , செல்லும் இடத்திற்கு ஏற்ப உடை அணியும் பழக்கத்தை கற்றுகொடுத்தாள் .

வீட்டுக்கு தேவையானதை செய்ய கற்றுகொடுத்தாள் .

செலவு செய்தால் அதை குறித்து வைத்துக்கொள்ள , அதில் எது வீண் செலவு என கண்டுபிடிக்க கற்றுகொடுத்தாள் .

பதிவுகளை எழுதி முடித்தபின் அதை திருத்தும் , வாசிக்கும் பழக்கத்தையும் , பிழைகளை திருத்தவும் கற்றுகொடுத்தாள் .

வேலை செய்யும் இடத்தில் உள்ள பிரச்சனைகளை வாசலில் செருப்புடன் விட்டு விட்டு வர வேண்டும் என கற்றுகொடுத்தாள் .

நான் ஊருக்கு தான் ஆசிரியர் அவள் தான் எனக்கு  ஆசிரியர் .


இந்த ஜென்மம் மற்றும் அல்ல எத்தனை ஜென்மம் எடுத்தாலும் தொடரவேண்டும் இந்த உறவு ..


உங்கள் வாழ்த்துகளை எதிர்நோக்கும் ..

K.ராஜா சக்தி பிரியதர்ஷினி
செல்வன் R.S.சரண்