> என் ராஜபாட்டை : மாணவர்களுக்காக

.....

.
Showing posts with label மாணவர்களுக்காக. Show all posts
Showing posts with label மாணவர்களுக்காக. Show all posts

Saturday, January 30, 2016

வெற்றி உன் கையில் : பெற்றோர் மற்றும் மாணவர்களுக்கான தொடர்





     இன்னும் ஒரு மாதத்தில் +2 மாணவர்களுக்கு ஆண்டு பொது தேர்வு வர உள்ளது. அதற்காக மாணவர்களும் அவர்களுக்கு துணையாக பெற்றோர்களும் கடினமாக தயாராகிக்கொண்டு இருப்பார்கள். இவர்களுக்காகத்தான் இந்த தொடர். இது அறிவுரை அல்ல கடந்த 15 வருட கல்விபணியில் கிடைத்த அனுபவங்களின் தொகுப்பு மட்டுமே. உங்கள் ஆதரவு இருந்தால் இது இன்னும் நன்றாக தொடரும்.


     முதலில் தேர்வுக்கு தயாராகும் மாணவ, மாணவியர் அனைவருக்கும் வாழ்த்துக்கள். கண்டிப்பாக நல்ல மதிப்பெண் பெற்று நல்ல கல்லூரியில் செலவில்லாமல் சேர கண்டிப்பாக ஆண்டவன் அருள்புரிவான். இந்த சூழ்நிலையில் உங்களுடன் சில கருத்துகளை பகிர்ந்துகொள்ள விழைகிறேன்.

செய்ய கூடியவை மற்றும் கூடாதவைகள் :



  • ·         கஷ்டபட்டு படிப்பதைவிட இஷ்ட்டபட்டு படியுங்கள். சிலர் மிக குறைவான நேரமே படிப்பார்கள் ஆனால் மதிப்பெண் அதிகமாக எடுப்பார்கள். சிலர் விழுந்து விழுந்து படிப்பார்கள் ஆனால் மதிப்பெண் மிக குறைவாக இருக்கும். காரணம் மனபாடம் செய்யும் பாடம் அந்த நேரத்தில் மட்டுமே உதவும் ஆனால் புரிந்து படிக்கும் பாடம் கடைசிவரை மறக்காது தேர்வு நேரத்தில் சும்மா புரட்டிபார்த்தாலே போதும் எளிதாக தேர்வை எதிர்கொள்ளமுடியும்.

  • ·         கண்டதை படித்தவன் பண்டிதன் ஆவான்னு சொல்வாங்க அதுபோல கண்ட நேரத்தில் படிப்பது சரியல்ல. காலை நேரம் என்றால் குறைந்தது நான்கு மணிக்கு ஆரம்பிக்கலாம். மாலை நேரத்தில் 6 – 10 சரியான நேரம். இரவு பத்து மணிக்கு மேல் படிப்பது வேஸ்ட். இரவு கண்விழித்து நைட் ஸ்டெடி செய்வதெல்லாம் உடம்பை கெடுத்துகொள்ளும் வேலையாகும்.

  • ·         LKG குழந்தை போல ஒரு கேள்வி பதில் படித்ததும் எழுதிபார்காமல் இரண்டு அல்லது மூன்று கேள்வி பதில்களை சேர்த்து எழுதுவது நல்லது (அவரரவர் திறமைக்கு ஏற்ப எண்ணிக்கை மாறலாம் ). அப்போதுதான் நாம் எதை மறக்கிறோம் என கண்டறியலாம்.

  • · பாடங்களை அன்றாட நிகழ்ச்சியுடன் இணைத்து நினைவில் வைத்துகொள்ளுங்கள். உதாரணமாக கணினி அறிவியலில் SWITCH CASE PROGRAM எழுதும்போது புத்தகத்தில் 1 = ONE , 2= TWO என இருக்கும் இதை A= AJITH , V= VIJAY  என மாற்றிகொண்டால் புரோகிராமும் மறக்காது SYNTAX என்படும் புரோகிராம் எழுதும் வழிமுறையும் மறக்காது.

  • ·         பழைய தேர்வு விடைத்தாள்கள் , கேள்வித்தாள்கள் அனைத்தையும் சேகரித்து அதை முழுமையாக படிக்கவும். பள்ளியில் நடந்த தேர்வு விடைத்தாள்களில் நமக்கு எந்த பதிலுக்கு ஏன் மதிப்பெண் குறைக்கபட்டது என கவனித்தாலே நிறைய பிழைகளை களையமுடியும். நல்ல மதிப்பெண் / முழுமதிபேன் எடுத்த மாணவர்களின் விடைத்தாள்களையும் பார்க்கவேண்டும். அவர்களுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம் என உணரவேண்டும்.

  • ·         கணித பாடத்தை மனபாடம் செய்யும் ஆட்கள் இன்னும் இருகின்றார்கள். அப்படி செய்யாமல் ஒத்த கருத்துடைய மாணவர்களுடன் இணைந்து போட்டுபார்கலாம். நமக்கு தெரிந்த கணக்கை மற்ற மாணவர்களுக்கு சொல்லிகொடுக்கலாம். அவ்வாறு செய்யும் போது நாமும் படித்ததுபோல ஆச்சு, சொல்லிகொடுத்தாபோலவும் ஆச்சு, நமக்கு தோன்றாத புதிய சந்தேகங்களை மற்றவரிடம் இருந்து வரும்போது அதை எப்படி சரிசெய்யலாம் என கற்க உதவுகிறது.

  • · ஒவ்வொரு பாடத்திற்கும் எத்தனை நாள் தேவை என கணக்கிடவேண்டும். நாம் எடுக்க நினைக்கும் மதிப்பெண்ணை பெரிதாக எழுதி நமது அறையில் ஓட்டலாம்.

  • ·    நண்பர்களுடன் வீண் அரட்டை, இருசக்கரவாகனத்தில் ஊர் சுற்றுவதை நிறுத்திக்கொள்ளுங்கள்.

பெற்றோர் கவனத்திற்கு ..


  • ·         நீங்கள் முதலில் உங்கள் பிள்ளைகள் மேல் நம்பிக்கை வையுங்கள். ஆதரவான வார்த்தைகளை கூறுங்கள். பள்ளியில் தற்பொழுது நடக்கும் தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்ணை காட்டி அவனை திட்டாதீர்கள். “நீ எல்லாம் எதுக்கும் லாக்கில்லை “ என சொல்லாதிர்கள். அப்படி பெயர் பெற்ற பிள்ளைகள்தான் வருங்காலத்தில் பெரிய ஆளாக வருகின்றார்கள். “உன்னால் முடியும் படிப்பா, உன்னால் முடிஞ்ச அளவு டிரை செய்” என பாசிட்டிவாக பேசுங்கள்.

  • ·         தனி அறையில், இணைய வசதியுடன் கணினி, WI-FI இணைந்த ஆண்ட்ராய்ட் போன் கொடுத்துவிட்டு பையன்படிக்கவேமாட்றான்னு சொன்னா ஆசிரியர்கள் என்ன செய்வார்கள்? மாணவனை அவன் சிந்தனை மாறாவண்ணம் பார்க்கவேண்டியது உங்கள் பொறுப்பும் கூட..

  • ·   24 மணி நேரமும் படி படி என சொல்லாதிர்கள், நம்மால் 24 மணிநேரம் ஒரே வேலையை செய்யமுடியுமா? அவன் கவனம் சிதறாவண்ணம் அவனுக்கு ரெஸ்ட் எடுக்க வழிசெயுங்கள்.

  • ·    மதிப்பெண் மட்டுமே வாழ்க்கையில்லை என்பதை நீங்களும் உணர்ந்து அவர்களுக்கும் புரியவையுங்கள்.

  • ·         அடுத்த மாணவர்களுடன் உங்கள் பிள்ளைகளை ஒப்பிடாதீர்கள்.

  • · சரியான , சத்தான உணவுவகைகளை கொடுங்கள். இரண்டு மாதங்களுக்கு அசைவம், பானிபூரி , நூடுல்ஸ் போன்ற எளிதில் செரிமானம் ஆகாத உணவுவகைகளை தவிருங்கள். நிறைய பழசாறு, இளநீர் குடிக்க சொல்லுங்கள். சாதாரண தலைவலிக்கு மாத்திரைபோட சொல்லாதீர்கள்.

  •  இது பொதுவான கருத்துகளே ஆகும். அடுத்த பகுதியில் இருந்து மாணவர்கள் பயன்பெறும் வகையில் ஒவ்வரு பாடத்திற்கும் எப்படி தயாராக வேண்டும் என அனுபவமிக்க ஆசிரியர்களின் கருத்துகளும் , மதிப்பெண் அதிகம் பெற உதவும் முக்கிய குறிப்புகளும் இடம் பெரும்.


டிஸ்கி : இந்த பகுதி பற்றிய உங்கள் கருத்துகள் எனக்கு தேவை. இங்கேயே உங்கள் கருத்துகளை பதியலாம் அல்லது உங்கள் கருத்துகளை rrajja.mlr@gmail.com மின் அஞ்சலுக்கும் அனுப்பலாம்.



Wednesday, January 8, 2014

+2 மாணவர்களுக்கு இலவசமாக மேற்ப்படிப்பு படிக்க வாய்ப்பு





பன்னிரெண்டாம் வகுப்பு முடித்ததும் மாணவர்கள் அதிகம் சேர்வது இன்ஜினியரிங் தான் . நல்ல காலேஜ் கிடைக்க வேண்டியது எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் அதில் சீட் கிடைக்கவேண்டும் என்பது . சீட்டுக்கு பல லட்சம் செலவாகும் . நான்கு வருடங்கள் படித்து முடிக்க இன்னும் சில லட்சங்கள் ஆகும் . படித்த பின் உடனே வேலை கிடைக்குமா என்றால் சந்தேகம்தான் . வருடம் தொடும் பல்லாயிரகணக்கான மாணவர்கள் வேலையின்றி சும்மா இருக்கிறார்கள் .

பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் , படித்த மாணவர்கள் உங்களுக்கு இலவசமாக மேற்படிப்பு படிக்க ஒரு எளிதான வழி உள்ளது . அதுமட்டுமல்ல படித்து முடித்ததும் அரசு வேலை உறுதி . சந்தோகம் இல்லை இது உண்மைதான் .


நேஷனல்டிபென்ஸ் அக்கடமி ராணுவத்துக்கு ஆள் எடுக்கிறது . பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் , படித்த மாணவர்கள் இதுக்கு விண்ணப்பிக்கலாம் . 

நன்மைகள் :

  • தகுதி தேர்வுக்கு சென்று வர இலவச ரயில் டிக்கெட் .

  • முழுவதும் இலவசம் . ஒரு பைசா கூட நீங்கள் செலவு செய்ய வேண்டாம் .

  • படிக்கும் பொழுது உணவு , உடை , உறைவிடம் இலவசம் 

  • படிக்கும் காலத்தில் உங்கள் ஊருக்கு சென்று வர இலவசரயில் டிக்கெட் .

  • படித்து முடித்ததும் உங்கள் மதிப்பென்க்கு ஏற்ப அரசு வேலை .

  • குறைந்த பட்ச சம்பளம் 40000.
 
  • எளிதான தேர்வு முறை .
 
  • TNPSC GROUP I தேர்வுக்கு சமமான வேலைவாய்ப்பு .


மற்ற தகவல்கள் :


இந்த தேர்வுக்குஆன் லைனில் மட்டுமே விண்ணபிக்கலாம் .

விண்ணப்பிக்க : www.upsconline.nic.in



இந்த தேர்வுக்கான நடைமுறைகள் , தகுதிகள் இன்னும் பல விவரங்கள் அறிந்து கொள்ள  : CLICK HERE


Tuesday, January 24, 2012

மாணவர்களுக்காக : உதவித்தொகையுடன் படிக்கவேண்டுமா ?





காந்தி பெல்லோஷிப் :
     பட்டதாரி மாணவர்களுக்காக வழங்கப்படும் உதவித்தொகை இது . இரண்டு ஆண்டுகள் உதவித்தொகை கிடைக்கும் . முக்கியமாக பள்ளிகல்வியில் ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் . மேலும் விவரங்களுக்கு :

                WWW.GANDHIFELLOWSHIP.ORG


எங் இந்திய பெல்லோஷிப் :

     பட்டபடிப்பு முடித்த மாணவர்கள் முதுகலை படிக்க இந்த உதவித்தொகை வழங்கபடுகின்றது. படிப்பு மற்றும் இன்றி மற்ற துறைகளிலும் மாணவர்களின் ஆர்வத்தை வைத்து இது வழங்கப்படும். ஒரு வருடத்திற்கு 8 லட்ச ருபாய் வழங்கப்படும் . மேலும் விவரங்களுக்கு :

           WWW.YOUNGINDIAFELLOWSHIP.COM

உதவித்தொகை இல்லாத படிப்புகள் :

INDIAN INSTITUTE OF SPACE SCIENCE:

திருவந்தபுரத்தில் உள்ள IISS( INDIAN INSTITUTE OF SPACE SCIENCE) கல்வி நிலையத்தில் B.Tech படிக்க விண்ணப்பிக்கலாம். ISAT என்னும் நுழைவு தேர்வு எழுதவேண்டும்.  விவரங்களுக்கு :

           WWW.IIST.AC.IN/ISAT2012

ஆஜீம் பிரேம்ஜி பல்கலைகழகம் :

           இங்கு EDUCATION , DEVELOPMENT துறைகளில் முதுநிலை பட்ட படிப்பு படிக்க விண்ணப்பிக்கலாம். வங்கிக்கடன் வசதி உண்டு. விவரங்களுக்கு :

                WWW.AZIMPREMJIUNIVERSITY.EDU.IN

Saturday, January 7, 2012

மாணவர்களுக்காக : படிக்க காசு வேண்டுமா ?




நன்றாக படிக்கும் பல மாணவர்கள் மேற்கொண்டு படிக்க வசதி இல்லாத காரணத்தால் பாதியில் படிப்பை விடுகின்றனர். சிலர் நல்ல மதிப்பெண் எடுத்தும் பணம் இல்லாத காரணத்தால் கல்லூரியில் சேர முடியாமல் வேலைக்கு செல்லும் நிலை ஏற்படுகின்றது. இவர்களுக்காக சில உதவி தொகை வழங்க சில அமைப்புகள் உள்ளன அவற்றை பற்றிய ஒரு தொகுப்புதான் இது.

ராஜஸ்தான் யூத் அசோசியேஷன் :

பட்ட படிப்பு மற்றும் டிப்ளமோ படிக்க உதவி தொகை வழங்குகின்றனர். இது சென்னை , செங்கல்பட்டு , காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டும்மே.

விவரங்களுக்கு :  www.ryabookbank.com

ஜெய்கோபால் கரோடியா விவேகானந்தா டிரஸ்ட் :

இது தனிரர் நிறுவனம் , பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்காக உதவுகின்றது இது .

விவரங்களுக்கு : jaigopal garodia scholarships center, jaigopal garodia vivekananda vidyalaya trust , U-6 Seventh street, anna nagar, chennai ph : 26206261

கௌரவ் பவுண்டேஷன் :
சென்னையில் உள்ள நிறுவனம் , ஆய்வு மற்றும் உயர்கல்விக்கு உதவி தொகை வழங்குகின்றது. பயனாளிகளின் வருட வருமானம் 4,00,000  லட்ச ரூபாய் குள்ள இருக்க வேண்டும் .

விவரங்களுக்கு :  http://gauravfoundation.org/scholarship.html

எஸ் . கே . டி .பி தொண்டு நிறுவனம் :

சென்னை தி நகரில் இயங்கிவரும் நிறுவனம் இது. தமிழ்நாட்டை சேர்ந்த எவரும் இதற்க்கு விண்ணப்பிக்கலாம்.

விவரங்களுக்கு : www.skdbassociation.com/scholarships.html

மற்ற சில நிறுவனங்கள் ....

1. vidhyasakar educational trust
  B-1 Narumakar apartment, Brindavan nagar Extension
  Adambakkam, chennai -88









நன்றி : புதிய தலைமுறை வார இதழ்


நேற்று :


டிஸ்கி : அன்பு நண்பர்களே... இந்த பதிவு அனைவரையும் சென்றடைய இன்டலி , உடான்ஸ் , தமிழ்10, உலவு இல் ஓட்டு போடவும். FACEBOOK , TWITTER , G+ இல் SHARE பண்ணவும் .