> என் ராஜபாட்டை : பிரபல பதிவர்கள் கலந்து கொள்ளும் பட்டிமன்றம் – அனைவரும் வருக.

.....

.

Monday, February 20, 2012

பிரபல பதிவர்கள் கலந்து கொள்ளும் பட்டிமன்றம் – அனைவரும் வருக.





அன்பு காணமல் போன கனவுகள் பிளாக் சகோதரி ராஜீ அவர்கள் எனக்கு ஒரு விருது தந்துள்ளார். இதை கேள்விபட்டதும் பலபதிவர்களுக்கு ஒரு சந்தேகம் , இந்த விருது இவருக்கு எதுக்கு வழங்கப்பட்டது.( எனக்கும் அதே சந்தேகம்தான்). காரணத்தை கண்டறிய மூன்று குழுக்கள் அமைக்கபட்டது.( கூடன்குளத்துக்கு அமைக்கபட்ட குழுபோல இது பொய் சொல்லாது). இவர்கள் தாங்கள் கண்டறிந்த காரணத்தை வைத்து ஒரு பட்டிமன்றம் நடத்த போகின்றனர்.


குழு 1 : ராஜாவின் எழுத்து நடையே இந்த விருதுக்கு காரணம் .

     இதில் எனது குரு கரண் , அகில உலக ஷகிலா ரசிகர்மன்ற தலைவர் சி.பி , அதிரடி நாயகன் மனோ பேச்சாளர்களாக உள்ளனர் .

குழு 2 : ராஜாவின் தொழில்நுட்ப அறிவே இந்த விருதுக்கு காரணம் .

இந்த அணியில் தொழில்நுட்ப காண்டாமிருகம் (எத்தனை நாளுக்குத்தான் புலினு சொல்றது?) அண்ணன் சசி , ஆனந்த விகடனில் சமிபத்திய ஓனர் ( என் விகடன்னு தானே சொன்னார் ..) தமிழ்வாசி , அமைதி புயல் பிளாக்கர்  நண்பன் அப்துல் பாசித் ஆகியோர் பேச்சாளர்களாக உள்ளனர் .

குழு 3 : ராஜாவின் நகைசுவை உணர்வே இந்த விருதுக்கு காரணம் .

இந்த அணியில் தமிழ்மணம் கொன்றான் , நகைசுவை வள்ளல் bio-data புகழ் பண்ணிகுட்டி அவர்கள் மற்றும் அண்ணாமலை பல்கலைகழகத்தின் வருங்கால துணை வேந்தர் நாய் நக்ஸ் நக்கீரன் , மண்ணின் மைந்தன் காடு சாரி வீடு சுரேஷ் ஆகியோர் பேச்சாளர்களாக உள்ளனர் .

நடுவர் : நாட்டாமை விக்கியுலகம்

நாள் : 30 2 2012

இடம் : நாயுடு ஹால் சாரி நாயகர் ஹால் மதுரை.


டிஸ்கி ; இந்த விருதை இன்னும் சிலருக்கு அளிக்க விரும்புகின்றேன் .

  1. வடகரை தாரிக் செலவில்லாமல் அனைத்து புத்தகங்களையும் தருவதால்

  1. S.ராமன் வேலூர் உழியர்களுக்காக குரல் குடுபவர் இவர்

  1. வினோ என்வழி என்னும் வலைத்தளம் முலம் கலக்கும் ரஜினி ரசிகர் .

  1. கவிதை வீதி சௌந்தர் இவர் என் இனம் ( ஆசிரியர்னு சொல்லவந்தேன்) கவிதை மன்னன்.

  1. தமிழ்த்தோட்டம் வித்தியாசமான வலைத்தளம் நடத்துகின்றார் .
  2. எனத் தி வேர்ல்ட் என்னும் தளம் முலம் பல அறிய தகவல் தரும் ஸ்டாலின் வெஸ்லி  

36 comments:

  1. ம் நடத்துங்க நேரில் வரலாமா? அழைப்பிதழ் அனுப்பிவீங்களா!

    ReplyDelete
  2. நடுவர்.....ம்

    முடிவ எதிர்பார்கிறேன்

    ReplyDelete
  3. ங்கொய்யால பட்டப்பெயரே பதற வைக்குதே......

    ReplyDelete
  4. ////நடுவர் : நாட்டாமை விக்கியுலகம்/////

    வெளங்கிரும்...... அந்த பட்டிமன்றம்.....

    ReplyDelete
  5. // “தமிழ்மணம் கொன்றான் “, நகைசுவை வள்ளல் “bio-data” புகழ் பண்ணிகுட்டி அவர்கள் மற்றும் அண்ணாமலை பல்கலைகழகத்தின் வருங்கால துணை வேந்தர் நாய் – நக்ஸ் நக்கீரன் , மண்ணின் மைந்தன் காடு சாரி வீடு சுரேஷ் //

    நல்லா பேரு வைக்கறீங்க.

    ReplyDelete
  6. ///மனசாட்சி said...
    நடுவர்.....ம்

    முடிவ எதிர்பார்கிறேன்/////

    முடிச்சிடுவோம்....

    ReplyDelete
  7. ////! சிவகுமார் ! said...
    // “தமிழ்மணம் கொன்றான் “, நகைசுவை வள்ளல் “bio-data” புகழ் பண்ணிகுட்டி அவர்கள் மற்றும் அண்ணாமலை பல்கலைகழகத்தின் வருங்கால துணை வேந்தர் நாய் – நக்ஸ் நக்கீரன் , மண்ணின் மைந்தன் காடு சாரி வீடு சுரேஷ் //

    நல்லா பேரு வைக்கறீங்க./////

    நல்ல பேரு.... யாராவது தமிழ்மணம் ஆளுக பாத்துட்டு மறுக்கா சண்டைக்கு வராம இருந்தா சரி....

    ReplyDelete
  8. மனமகிழ்ந்தேன்

    விருது வழங்கியமைக்கு மிக்க நன்றி
    அன்புடன்
    தமிழ்த்தோட்டம்
    www.tamilthottam.in

    ReplyDelete
  9. புதிதாய் விருது பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  10. ஆஹா... நானுமா? ஆனா பட்டிமன்றம் அன்று

    "எனக்கு நெறையா வேலை இருக்கு, நான் ரொம்ப பிஸி"

    :) :) :)

    ReplyDelete
  11. ஆமா ராஜாங்கறது யாரு? ஸ்பெக்ரம் ராஜாவா?

    ReplyDelete
  12. raja sir,
    arumaiya per vaikireenga..

    aana antha thethithaan....
    uthaikuthu...annikku
    obaama,,,m.sing,,ippadi
    niraiya per kuupittirukkanga....
    irunthaalum kalanthukka muyarchi
    pannuren....

    ReplyDelete
  13. விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் !

    ReplyDelete
  14. விருது பெற்றமைக்கும்
    அந்த விருதை பகிர்ந்தளித்து மகிழ்ந்தமைக்கும்
    வாழ்த்துக்கள்.

    ஆளே இல்லாத டீக்கடையில் யாருக்கு
    டீ ஆத்தப் போறீங்க..
    அதுவும் பிப்ரவரி 30 ....

    ReplyDelete
  15. நடத்துங்க நடத்துங்க .. ஒரு முடிவோட இருக்கீங்க என்பது உண்மையாகிறது ஆசிரியரே ...

    ReplyDelete
  16. விருதுக்கு நன்றி நண்பா..?

    விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் !

    ReplyDelete
  17. அண்ணே..!!

    பட்டி மன்றம் "புட்டி" மன்றம் ஆகிடப்போகுது..!

    ஹா..ஹா..!!

    ReplyDelete
  18. piprvari 30 entha ulakaththila athai solli irukkalaamilla ?

    ReplyDelete
  19. பட்டிமன்றம் சொன்னீங்க எங்க நடக்குது . சொல்லவே இல்லை .

    ReplyDelete
  20. நண்பா தங்கள் பதிவின் சுருக்கத்தை எனது தளத்தில் நீங்கள் தந்தபடியே பதிவிட்டுள்ளேன்

    ReplyDelete
  21. உங்களுக்கு ஏன் விருது குடுத்தேன்னா இப்படி ஒரு பதிவை போடுவீங்கன்னுதான். பட்டி மன்றத்துக்கு பிப் 30 தேர்ந்தெடுத்து இருக்கீங்க பாருங்க. நீங்க இங்க பொறக்க வேண்டிய ஆளே இல்லை சகோ.

    ReplyDelete
  22. பட்டிமன்றமா?? ஆகா... அது நமக்கு பிடித்த ஏரியா ஆச்சே!!

    ஆனா, நீங்க வைக்கிற தேதி தான் சிரமம்..
    பேசாம நேரடி ஒளிபரப்பிற்கு ஏற்பாடு செய்ங்க!

    ReplyDelete
  23. 30-2-2012 அன்று ஒரு திருமணத்துக்குச் செல்லவிருப்பதால் நான் பட்டிமன்றம் பார்க்கும் வாய்ப்பை இழக்கிறேன். ஏன் நீங்கள் 31-4-2012க்கு நிகழ்ச்சியை ஒத்தி வைக்கக் கூடாது?!

    விருதுகளுக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  24. பாராட்டுக்கள்,விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  25. ஏற்கனவே ஒரே ஊர்காரன் என்ற முறையில் எனக்கு ஒரு விருது கேட்டேன். கொடுத்து விட்டீர்கள் நன்றி. 30ம் தேதி பட்டிமன்றத்தில் கலந்து கொள்வதற்காக டிக்கெட் போட்டாச்சி, ஏர்போர்ட்டில் காத்து இருக்கவும்.

    ReplyDelete
  26. இந்த பதிவர்களுக்கான பட்டபெயரே சும்மா அதிருது இந்த நிலையில பட்டிமன்றமா ?

    ReplyDelete
  27. sema :) Super :)
    nagaichuvaiye kaaranam

    ReplyDelete
  28. அழகான தொழில்நுட்ப பதிவுகள் மற்றும் பல்சுவை விருந்துகள் என்று கலந்து கட்டி அடிக்கற உங்களுக்கு பொருத்தமான விருதுதான் தலைவரே!.

    ReplyDelete
  29. 30.2.12 ஆஆ.. அன்னைக்கு நான் ஒரே பிஸி. 31.2.12 அல்லது 33.2.2012 டேட்ல வச்சா நல்லாயிருக்கும். இந்த நக்கலுக்குத்தான் உங்களூக்கு விருது.

    ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...