> என் ராஜபாட்டை

.....

.

Thursday, April 18, 2013

TATA DOCOMO : சில திருட்டுதனங்கள்






கடந்த முன்று வருடங்களுக்கு முன் TATA DOCOMO PREPAID SIM வாங்கினேன் . கால் கட்டணங்கள் வினாடிக்கு அரை பைசாவும் , SMS இலவசமாகவும் இருந்ததால் அதையே பயன்படுத்தினேன் . மற்ற நிருவனகளுடன் ஒப்பிடும் போது BOOSTER PACK மிகவும் கம்மி .( வோடபோன் இல் 225 ரூபாய் உள்ளது இதில் வெறும் 52 ரூபாய் தான் ). ஏதேனும் குறை என்றால் 198 க்கு அடித்தால் உடனே சரி செய்வார்கள் , தவறாக எடுத்த பணத்தை உடனே கொடுப்பார்கள் .

ஆனால் இப்பொழுது ???

நிகழ்ச்சி 1:

CALLER TUNE நான் கேட்காமல் வைத்து விட்டு 120 ரூபாய் எடுத்தார்கள் , புகார் செய்ததும் 30 திருப்பி கொடுத்தனர் . மீதி இரண்டு நாளில் கிடைக்கும் என்றனர் . இரண்டு நாள் கழித்து கேட்டதும் மீண்டும் அதே பதில் இன்னும் இன்ரண்டே நாள் என்று . மறுபடி கேட்ட பொழுது தவறாக எடுக்கபட்ட பணம் இரண்டு நாளில் திருப்பி கிடைக்காவிட்டால் அவ்வளவுதான் . திரும்ப அளிக்க எங்களுக்கு உரிமையில்லை என சொன்னார்கள் . அரை மணிநேரம் அவர்களுடன் வாதிட்டு பணத்தை திரும்ப பெற்றேன் .




நிகழ்ச்சி 2:

கடந்த மாதம் தினம் ஒரு ஜோக் என சொல்லி 10 ரூபாய் எடுத்தனர் . புகார் செய்த போது நீங்கள் SMS முலம் ACTIVATE செய்து உள்ளிர்கள் . இது உங்கள் தவறு என்றனர் . நான் SMS செய்யவில்லை என வாதடியபின் பணத்தை திருப்பி அளித்தனர் .
அடுத்தநாள் தினம் ஒரு ஆபர் என சொல்லி 30 ரூபாய் எடுத்தனர் . மீண்டும் புகார் செய்ய நீங்கள் GPRS பயன்படுத்தி உள்ளிர்கள் என சொன்னார்கள் . என் மொபில் பேசிக் மாடல் அதில் அந்த வசதி இல்லை என்றதும் சரி என சொல்லி 20 ரூபாய் திருப்பி தந்தார்கள் . மீதி 10 எங்கே என்றதுக்கு ஒருவருக்கு மாதத்திற்கு 30 மட்டுமே திருப்பி அளிக்க முடியும் என்றால்கள் .

இது என்ன கதை எடுப்பது எவ்வளவு வேண்டுமானாலும் ஆனால் கொடுப்பது முப்பதுதானாம் . ஒருவாரம் தொடர்ந்து வாதாடினேன் .
விளைவுகள் :

  1. முன்று வருடமாக இலவசமாக இருந்த SMS பைசாவாக மாற்ற பட்டது .
  2. கால் கட்டணம் 1.2 / S  என மாறியது ( BOOSTER போட்டும் )
  3. எந்த BOOSTER போட்டாலும் பணம் போகுமே தவிர அதன் பலன்கள் கிடைக்காது .

சில கேள்விகள் :

  1. எனக்கு ஒரு BOOSTER APLICABLE ஆகாது என்றால் எப்படி பணத்தை மட்டும் எடுத்து கொண்டு இது உங்களுக்கு கிடையாது என சொல்லலாம் ?
  2. ஒரு BOOSTER போடும் போது முன்பு உள்ள BOOSTER தானாகவே செயல் இழந்து விடும் . இதுதானே அனைத்து நிறுவனங்களின் நடைமுறை .
  3. வாடிக்கையாளரின் பணத்தை எவ்வளவு வேண்டுமானாலும் எடுப்போம் ஆனால் மாதம் 30 மட்டுமே திருப்பு தருவோம் என்பது பகல் கொள்ளை அல்லவா ?
  4. தவறாக ACTIVATE செய்யபட்ட சர்வீசும் 24 ம்ணி நேரத்திர்க்குள் 155223 என்ற எண்ணின் மூலம் DEACTIVATE செய்யபட்டால் முழு பணமும் திருப்பி தரப்பட வேண்டும் என்பது TRAI விதிமுறை . அதை எப்படி மீறுகின்றனர் ?
  5. ஒரு வாடிக்கையாளர் ஒரு நாளைக்கு ஒருதடவைதான் 198 சேவையை பயன்படுத்தலாமா ?( DOCOMO CUSTOMER TRY பண்ணிபாருங்க இரண்டால் தடவை முயற்சி செய்தால் வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரி பிஸியாக உள்ளார் என வரும் )
  6. வாடிக்களையாலரை கேட்காமல் எப்படி SMS மூலம் ஒரு சேவையை அவர்களே ACTIVATE செய்யலாம் . SMS படிக்க தெரியாதவர்கள் என்ன செய்வார்கள் ?

என்ன தீர்வு ?

நண்பர்களே இதுக்கு என்ன தீர்வு ? இதை முடிந்த அளவு FACEBOOK இல் SHARE  செய்யுங்கள் . உங்கள் கருத்தையும் சொல்லுங்கள் . இதுபோல உங்களுக்கு எதாவது நேர்ந்துள்ளதா ?







Monday, April 15, 2013

ரிலாக்ஸ் ப்ளீஸ்



கடைத் தெருவில் இருவர்:

மாப்ளே... அந்தப் பிச்சைக்காரன் கேட்டதும் அஞ்சு ரூபாயை உடனே போட்டுட்டியே?

எப்பிடி இருந்தாலும் நீ கேக்கப் போற? உனக்குக் கொடுக்கிறதை விட அவனுக்குப் போட்டா புண்ணியமாவது மிஞ்சும்...




====================================================================


வீட்டில் இரு நண்பர்கள்:

என்னடா... போன் பேசிட்டு ஒரு மாதிரி ஆயிட்டே?

ஊர்ல இருந்து மச்சான் போன் பண்ணுனான். அங்க இருந்து அணுகுண்டைச் சுமந்துக்கிட்டு ஏவுகணை வருதாம்..

புரியலை'

என் பொண்டாட்டிய கூப்பிட்டுக்கிட்டு, மாமனார் இங்க வந்துக்கிட்டு இருக்காராம்..


====================================================================




ஒருவர்: என்ன, இந்தக் கல்யாணத்துக்கு வந்தவங்க எல்லோரும் சில்லறையா மொய் எழுதுறாங்க..?

மற்றவர்: அதுவா.., மாப்பிள்ளை கண்டக்டராம்...




ராமு: ஓட்டப்பந்தய வீரர் வீட்டுக் கல்யாணத்துக்குப் போனது தப்பாப் போச்சு!

சோமு: ஏன்?

ராமு: 200 மீட்டர் தூரத்துல இருந்த டைனிங் ஹாலுக்கு ஓடி வர்ற முதல் 100 பேருக்குத்தான் விருந்துன்னு சொல்லிட்டார்..!


====================================================================

 டீ கடையில் இருவர்:

எனக்கு பெண் குழந்தை பிறந்திருக்கு... இந்தக் காலத்துக்கு ஏற்ற மாதிரி ரெண்டு மூணு பேர் சொல்லுங்களேன்..

லஞ்சா...
லாவண்யா...
மாமூலினி...


====================================================================

கொசுவுக்கும் பசுவுக்கும் என்ன வித்தியாசம்?????????
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.

..

.
..
.

.

பசு தன் இரத்தத்தை பாலா குடுக்குது...........

கொசு நம் இரத்தத்தை பால் மாதிரி குடிக்குது ........
 


====================================================================


 "அந்த ஆள் எப்பவும் மத்தவங்க கையைத் தான் எதிர்பார்ப்பாரு..."

"ஏன்...?"

"அவருதான் கைரேகை ஜோசியம் பார்க்கறவராச்சே...!"



 ====================================================================

டிஸ்கி:  இவை அனைத்தும் ரிலாக்ஸ் ப்ளீஸ் என்ற FACEBOOK PAGE இல் சுட்டவை .

இதையும் படிக்கலாமே ?


எப்படி இந்தியாவை காப்பாத்துவேன்? 


 

Tuesday, April 9, 2013

பதிவர்கள் கவனத்திற்கு ...



இன்றைய நிலையில் பல புதிய பதிவர்கள் தினமும்பதிவு எழுதிகின்றனர் .சிலர் வாரம் ஒன்று இரண்டு என்றும் எழுதுவதுண்டு . ஒவ்வொருவருக்கும் பதிவு எழுதுவதில்வித்தியாசம் இருக்கும் .சிலர் கவிதைகள் மட்டும் எழுதுவார் . சிலர் சினிமா , அரசியல் , மொக்கை எனகலந்துகட்டி அடிப்பார்கள் . (சிலர் அடுத்தவர்களை குறை கூற மட்டுமே பதிவு போடுவார்கள் ).

இப்படி நாம் கஷ்டப்பட்டு எழுதும்பது நிறைய பேரை சென்றடைய வேண்டும் என நினைப்பது இயல்புதான் . அப்படி எழுதும் பதிவை எப்படி பிரபலபடுத்துவது ?.  எளிதான வழி திரட்டிகளில் இணைப்பது . அதை விட எளிய வழி ஒன்று உள்ளது . அதை பற்றிதான் பார்க்க போகிறோம் .

பதிவர்கள் அனைவரும் கண்டிப்பாக FACEBOOK இல் கணக்கு வைத்திருப்போம் . உங்கள் FACEBOOK WALL இல் உங்கள் பதிவை வெளியிடலாம் . அதுமட்டுமில்லாது பல FACEBOOK GROUP, AND FACEBOOK PAGE  இல் இணைந்து விட்டு அதில் உங்கள் பதிவின் லிங்க்கை வெளியிடலாம் . நாம் ஒவ்வொரு GROUP, PAGE ஆக சென்று பதிவை வெளியிடுவது நேரத்தை விரையமாக்கும் . அனைத்து குருப் மற்றும் பக்கங்களில் ஒரே நேரத்தில் வெளியிட்டால் எப்படி இருக்கும் ? அதுக்கு உதவுவதே இந்த பதிவு .


கிழே உள்ள சில லிங்க்கில் சென்று ஒரே கிளிக்கில் அனைத்து குருப்பிலும் உங்கள் பதிவை வெளியிடலாம் . இதை நான் பயன்படுத்தி உள்ளேன் .


               இதில் உங்கள் FACEBOOK கணக்கில் உள்ள அனைத்து குருப் , பேஜ் ,நண்பர்கள் அனைவரும் வருவார்கள் . சிலவற்றை மற்றும் தெரிந்து எடுக்கவும் . அனைத்துக்கும் அனுப்பினால் ( MORE THEN 40 PAGE OR GROUP OR FRIENDS) நீங்கள் இரண்டு நாளைக்கு FACEBOOK இல் எதையும் SHARE செய்ய முடியாது . 

தினமும் பதிவு எழுதுபவர்கள் இதில் சில குருப்பை மட்டும் தெரிவு செய்யவும் .

எப்பொழுதாவது எழுதுபவர்கள் நிறைய தெரிவு செய்யலாம் .



                இது SHAREWARE போன்றது . இதில் இலவசமாக 5  குருப்க்கு மட்டுமே அனுப்பலாம் . பணம் கட்டினால் நிறைய குருப்க்கு அனுப்பலாம் .


   இது மேலே உள்ளது போல தான் . ஆனால் எளிதில் FACEBOOK, TWITTER , G+ போன்ற அனைத்து தளங்களிலும் பகிரலாம் .


டிஸ்கி : இது போல வேறு ஏதாவது வழி இருந்தால் சொல்லுங்கள் .



இதையும் பார்க்கலாமே :

கணவன் , மனைவி ,தெரியாது.. முடியாது.

 

அஜித் Vs ஆர்யா மற்றும் சன் டிவி 

 

இலவசமாக SMS அனுப்ப வேண்டுமா ?

Thursday, April 4, 2013

கணவன் , மனைவி ,தெரியாது.. முடியாது.

நண்பர்களே சமிபத்தில் முக புத்தகத்தில்(FACEBOOK) படித்த இரண்டு விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் .
 
கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன...?


1. அன்பாக, பிரியமாக இருக்க வேண்டும்.

2. மனது புண்படும்படி பேசக்கூடாது.

3. கோபப்படக்கூடாது.

4. சாப்பாட்டில் குறை சொல்லக்கூடாது.

5. பலர் முன் திட்டக்கூடாது.

6. எந்த இடத்திலும் மனைவியை விட்டு கொடுக்கக்கூடாது.

7. முக்கிய விழாக்களுக்கு சேர்ந்து போக வேண்டும்.

8. மனைவியிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும்.

9. சொல்வதைப் பொறுமையாகக் கேட்க வேண்டும்.

10. மனைவியின் கருத்தை ஆதரிக்க வேண்டும், மதிக்க வேண்டும்.

11. வித்தியாசமாக ஏதாவது செய்தால் ரசிக்க வெண்டும். பாராட்ட வேண்டும்.

12. பணம் மட்டும் குறிக்கோள் அல்ல. குழந்தை, குடும்பம் இவற்றிற்கும் உரிய முக்கியத்துவம் தந்து நடந்து கொள்ள வேண்டும்.

13. வாரம் ஒரு முறையாவது மனம் விட்டுப் பேச வேண்டும்.

14. மாதம் ஒரு முறையாவது வெளியில் அழைத்துச் செல்ல வேண்டும்.

15. ஆண்டுக்கு ஒரு முறையாவது சுற்றுலா செல்ல வேண்டும்.

16. பிள்ளைகளின் படிப்பைப் பற்றி அக்கறையுடன் கேட்க வேண்டும்.

17. ஒளிவு, மறைவு கூடாது.

18. மனைவியை நம்ப வேண்டும்.

19. முக்கியமானவற்றை மனைவியிடம் கூற வேண்டும்.

20. மனைவியிடம் அடுத்த பெண்ணை பாராட்டக்கூடாது.

21. அடுத்தவர் மனைவி அழகாக இருக்கிறாள் என்று எண்ணாமல் தனக்குக் கிடைத்ததை வைத்து சந்தோசப்படவேண்டும்.

22. தனக்கு இருக்கும் கஷ்டம், தன் மனைவிக்கும் இருக்கும் என்று எண்ண வேண்டும்.

23. உடல் நலமில்லாத போது, உடனிருந்து கவனிக்க வேண்டும்.

24. சின்ன, சின்னத் தேவைகளை நிறைவு செய்ய வேண்டும்.

25. சிறு சிறு உதவிகள் செய்ய வேண்டும்.

26. குழந்தைகள் அசிங்கம் செய்து விட்டால் “இது உன் குழந்தை” என்று ஒதுங்கக்கூடாது.

27. அம்மாவிடம் காட்டும் பாசத்தை, மனைவியிடமும் காட்ட வேண்டும்.

மனைவியிடம் கணவன் எதிர்பார்ப்பது என்ன...?
(ரொம்ப இல்லைங்க ஒன்னே ஒன்னு தான்....)

நிம்மதி.....

=========================================================================================
தெரியாது...! முடியாது...!கிட ­ையாது...!
*************** ­*************** ­**************************************
  1. உலகம் போற்றும் சாக்ரடீசுக்கு எழுதப் படிக்கத் தெரியாது.
  2. குயிலுக்குக் தனக்கென கூடு கட்டவோ, தன் முட்டையை அடைகாக்கவோதெரியாது.
  3. செந்நாய் எனப்படும் விலங்குக்குகுரைக்கத் தெரியாது.
  4. ஒட்டகத்துக்கு நீந்தத் தெரியாது.
  5. மனிதனால் கண்களைத் திறந்து கொண்டு தும்ம முடியாது.
  6. பிளாட்டினம் எனும் உலோகத்தை எந்த அமிலத்தாலும் கரைக்க முடியாது.
  7. எமு எனும் பறவையால் பின்புறமாக நடக்க முடியாது.
  8. வாத்தின் "க்வாக்" சத்தத்துக்கு மட்டும் எதிரொலி கிடையாது.

  9. பெல்ஜியம் நாட்டில் சினிமாவுக்குத் தணிக்கை கிடையாது.
  10. கடல் சிலந்தி, ஸ்குவிட்களுக்கு ­ம் காது கிடையாது.
  11. சுவிட்சர்லாந்து ­ நாட்டிற்கென்று தனி தேசிய மொழி கிடையாது.
  12. இசைமேதை பீத்தோவனுக்குப் ­ படிப்பறிவு கிடையாது.
  13. வண்ணத்துப் பூச்சியின் இறக்கையில் பறக்கும் தசைகள் கிடையாது.
  14. நீளமான கடல் பிராணி ஆக்டோபஸ்க்கு முதுகெலும்பு கிடையாது.
  15. இங்கிலாந்து அரசியின் காருக்கு எண்கள் எதுவும் கிடையாது.
  16. பறவைகளுக்கு மூக்கால் நுகரும் சக்தி கிடையாது.
  17. ஆப்கானிஸ்தானில் ­ ரயில்கள் கிடையாது.
  18. ஆங்கிலத்தில் ஒன்றிலிருந்து நூறு வரை எழுத்தால் எழுதும் போது"A" எனும் எழுத்து கிடையாது.
     இதையும்படிக்கலாமே :

    எப்படி இந்தியாவை காப்பாத்துவேன்?":  
     
    இலவசமாக SMS அனுப்ப வேண்டுமா ?

Tuesday, April 2, 2013

எப்படி இந்தியாவை காப்பாத்துவேன்?



ஏன் இந்தியா பிரச்சனையிலே இருக்கு.
அப்படின்னு ரொம்ப தீவிரமா யோசித்ததில் எனக்கு தோன்றியது .
 
மக்கள் தொகை: 110 கோடி
9 கோடி ஓய்வு பெற்றவர்கள்
Visit


 XciteFun.net
30 கோடி மாநில அரசு பணியாளர்கள்
17 கோடி மத்திய அரசு பணியாளர்கள்
(இருவருமே வேலை செய்யறதில்லை)
Visit XciteFun.net
 
 
1 கோடி IT ஆளுங்க (அவங்க என்னிக்கு இந்தியாக்கு உழைசாங்க)
Visit XciteFun.net
 
 
25 கோடி பள்ளில படிப்பவர்கள்
Visit XciteFun.net
 
 
1 கோடி 5வயசுக்கும் கீழானவர்கள்
Visit XciteFun.net
 
 
15 கோடி வேலை தேடுவோர்
Visit XciteFun.net
 
 
1.2 கோடி சீக்கு புடிச்சி ஆஸ்பிடலில் இருப்போர்
Visit
 XciteFun.net

 
 
ஒரு புள்ளிவிபரத்தின் படி 79,99,998பேர் ஜெயிலி
 
 
மிச்சம் இருப்பது நீங்களும்  நானும்

நீங்க எப்போ பார்த்தாலும் என் பிளாக் படிக்கிறதுல பிஸி(!!!!)
Visit XciteFun.net 

அய்யோ!! நான் மட்டும் ஒத்தையாளா எப்படி
இந்தியாவை காப்பாத்துவேன்
Visit XciteFun.net 

 ?ui=2&view=att&th=1256889301c88c70&attid=0.1&disp=attd&realattid=ii_1256889301c88c70&zw

ஒண்ணுமே புரியல போங்க ...

இதையும் படிக்கலாமே :

இந்தியா முழுவதும் இலவசமாக பேச வேண்டுமா ?(ராஜபாட்டை ஸ்பெஷல் )

 Rs. 3000 மதிப்புள்ள REGCLEAN PRO V 6.2 இலவசமாக ......