> என் ராஜபாட்டை : facebook

.....

.
Showing posts with label facebook. Show all posts
Showing posts with label facebook. Show all posts

Thursday, August 27, 2015

FACEBOOK இல் வரும் தேவையில்லாத GAME REQUESTS தடுப்பது எப்படி ?





                  முகநூலில் பொழுதுபோக்கவும், நண்பர்களுடன் அரட்டை அடிக்கவுமே பலர் வருகின்றோம். நான் போட்ட நிலை தகவல், அல்லது போட்டோ , பகிர்ந்த விஷயங்களுக்கு மற்றவர்கள் என்ன சொல்கின்றார்கள் என பார்ப்பது ஒரு ஜாலியான விஷயம். ஆனால் பலர் கேம் ரிகுஸ்ட் கொடுத்தே அந்த ஜாலியை காலி செய்கின்றனர்.

           அப்படி அடிகடி தொல்லை செய்யும் நபர்களை எப்படி தடுப்பது, யாருமே நமக்கு ரிகுஸ்ட் தராமல் தடுப்பது எப்படி என்பதே இன்றைய பதிவு. இது எளிதான முறைதான். நீங்களும் செய்து உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செயுங்கள்.

வழிமுறை :









1. முகநூலில்  ‘Settings’ from the drop-down menu on your Facebook homepage.

2.  அதில் இடதுபுறம் உள்ள  ‘Apps’ ஆப்ஷனை தெரிவு செய்யுங்கள் ..

3. அதில் " Apps, Websites and Plugins box. " என்ற ஆப்ஷனை தெரிவு செய்யவும்.

4.  "Disable Platform" என்னும் பட்டனை கிளிக் செய்யவும்.

5. இப்பொது  "Disabled’ in the Apps, Websites and Plugins box." என்று தோன்றும்.

       இனி யாரும் உங்களுக்கு கேம் ரிகுஸ்ட் அல்லது ஏதாவது ஆப் ரிகுஸ்ட் கொடுக்க முடியாது.


குறிப்பு :

இதையும் மீறி ஏதாவது செய்தால் கீழே உள்ள படத்தை அவருக்கு வாட்சபில் அனுப்புங்கள்.







Tuesday, July 21, 2015

சைபர் க்ரைம் (Cyber Crime)




        இணையம் ஒரு விசித்திரம். ஒரு பக்கம் எண்ணற்ற வசதிகள் மூலம் இனிய முகங்களை காட்டி நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்துகின்றன. இன்னொரு பக்கம் ஹேக்கிங், ஸ்பாம், ஆபாசம் போன்ற வக்கிர முகங்களை காட்டி நம்மை துன்பத்தில் ஆழ்த்துகின்றன. சைபர் க்ரைம் எனப்படும் இணைய குற்றங்களை பற்றியும், பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றியும் சிறிதளவு இங்கு பார்ப்போம்.
இணைய குற்றங்கள் (Cyber Crimes):
1. ஸ்பாம்(Spam) எனப்படும் தேவையில்லாத மெயில்கள்.
2. கிரெடிட் கார்ட், டெபிட் கார்ட் மூலம் இணையத்தில் பணபரிமாற்றங்கள் நடக்கும்பொழுது, கடவுச்சொல் உள்பட கணக்கு விவரங்களை திருடுவது.
3. பாலியல் ரீதியான தொல்லைகள் . சாட்டிங்கில் ஆரம்பித்து டேட்டிங்கில் முடிகிறது இன்றைக்கு சில இணைய நட்புகள். அதுமட்டுமின்றி காதலன் என்ற பெயரில் வக்கிர வெறிபிடித்த கயவர்கள் பெண்களை ஆபாசமாக படம்பிடித்து அதனை இணையத்தில் வெளியிடுகிறார்கள். மேலும் அதனைக் கொண்டே பெண்களை மிரட்டி வருகிறார்கள்.
4. போதை பொருள் விற்பனை. தடைசெய்யப்பட்ட போதை பொருள்களை விற்பனை செய்வதற்கும் இணையத்தைப் பயன்படுத்துகிறார்கள்.


5. இணையதளங்களை ஹேக் செய்வது. ஹேக்கர்களிடமிருந்து அமெரிக்காவின் சி.ஐ.ஏ-வும் தப்பவில்லை, மின்னணு சாதனங்களில் ஜாம்பவனாக திகழும் சோனி(Sony)யும் தப்பவில்லை. சமீப காலமாக பல தளங்கள் ஹேக் செய்யப்படுகின்றது.
6. இருபது வயதுக்குட்பட்டவர்களுக்கு அல்லது இருபது வயதுக்குட்பட்டவர்களின் ஆபாச புகைப்படங்கள், படங்கள் இன்னும் சிலவற்றை இணையத்தில் பதிவது. [ஒன்றுமட்டும் புரியவில்லை. அது போன்ற ஆபாச தளங்களுக்கு சென்றால் கேள்வி கேட்கும். நீங்கள் இருபது வயதுக்குட்பட்டவரா? இல்லையா? என்று. சிறுவர்களும் "ஆம்" என்பதை க்ளிக் செய்தால் எளிதாக அந்த தளங்களை பார்க்கலாம். இது எப்படி இருக்கிறது என்றால், சிகரெட் பாக்கெட்டில் மண்டை ஓடு படத்தை போடுவது போல தான். ஆபாச தளங்களை முழுமையாக தடை செய்வதே இதற்கு சரியான தீர்வாகும்.]
7. இவற்றைவிட கொடியது, குழந்தைகள் மீதான பாலியல் தாக்குதல்கள். மனித உருவில் பல மிருகங்களும் நம்முடன் வாழத்தான் செய்கின்றன. இவர்கள் சிறுவர், சிறுமிகள் உரையாடும் அரட்டை அறைகளுக்கு(Chatting) சென்று தங்களை குழந்தைகளாகவே அறிமுகம் செய்கின்றனர். பிறகு அவர்களின் புகைப்படங்கள், வீட்டு முகவரி, பள்ளி முகவரி என தகவல்களை பகிர்கின்றனர். இது போன்ற கேடு கெட்டவர்கள் ஒரு அமைப்பாகவே செயல்படுகின்றனர். தங்களுக்குள் குழந்தைகளின் ஆபாச புகைப்படங்களையும், தகவல்களையும் பகிர்ந்துக் கொள்கின்றனர்.

பாதுகாப்பு வழிகள்:

1. எந்த நிலையிலும் முகம் தெரியாத நபர்களிடம் உங்கள் தொலைபேசி எண், வீட்டு முகவரி, பள்ளி முகவரி போன்றவற்றை பகிர வேண்டாம்.
2. ஃபேஸ்புக் போன்ற சமூக தளங்களில் அறிமுகம் அல்லாதவர்களை நண்பர்களாக சேர்க்க வேண்டாம்.
3. குழந்தைகள் தனி அறையில் இணையத்தில் உலவுவதை அனுமதிக்காதீர்கள். குழந்தைகள் பயன்படுத்தும் கணினிகளை பொதுவான இடத்தில் வைப்பது நலம்.
4. இணையம் பற்றியும் பாதுகாப்பு வழிகள் பற்றியும் உங்கள் குழந்தைகளிடம் மனம் விட்டு பேசுங்கள். கணினி பற்றி அவர்களுக்கு என்ன தெரியும்? என்பதை கேட்டு தெரிந்துக் கொள்ளுங்கள். அவர்களுடன் இணையத்தில் சிறிது நேரம் செலவிடுங்கள். அதிகமான குழந்தைகள் வழிமாறி செல்வதற்கு சரியான அரவணைப்பு இல்லாதே காரணம் என நான் கருதுகிறேன்.
5. உங்கள் குழந்தைகள் பார்வையிடும் வலைத்தளங்களை கண்காணியுங்கள். நீங்கள் செல்லும் போது குழந்தைகள்அவர்கள் பார்த்துக் கொண்டிருந்த வலைத்தளத்தை மூடினால், உடனே கவனிக்கவும்.
6. அறிமுகம் இல்லாத நபர்கள் உங்களை நேரில் சந்திக்க அழைத்தால் மறுத்துவிடுங்கள்.
7. நீங்கள் மற்றவர்களுடன் அரட்டை அடிப்பதை அவர்கள் பதிவு செய்யக் கூடும் என்பதை மறவாதீர்கள்.
8. அறிமுகம் இல்லாதவர்களுடன் முகம் பார்த்து அரட்டை அடிக்கும் வீடியோ சாட்டிங்கை தவிர்த்துக் கொள்ளுங்கள். அதுவும் பதிவு செய்யப்பட்டு, உங்களுக்கு தெரியாமலே இணையத்தில் பரப்பப்படலாம்.
9. இணையத்தில் உங்களை பற்றிய முழு விவரங்களையும் பகிர வேண்டாம். முக்கியமாக ஃபேஸ்புக்கில்.
10. குழந்தைகள், பெண்கள் புகைப்படங்களை இணையத்தில் பகிர்வதை தவிர்க்கவும். தற்போது உள்ள தொழில்நுட்பங்கள் மூலம் அந்த புகைப்படங்களை ஆபாசமாக மாற்றலாம் என்பதையும் கவனத்தில் கொள்ளவும்.
11. உங்கள் password-ஐ பெற்றோர்களை தவிர வேறு யாரிடமும் தெரிவிக்க வேண்டாம்.
12. பணபரிமாற்றங்கள் செய்யும் பொழுது அந்த பக்கத்தின் முகவரியை பாருங்கள். http::// என இருந்தால் உங்கள் கார்ட் விவரங்களை கொடுக்காதீர்கள்.https:// என்று இருந்தால் மட்டுமே பணப்பரிமாற்றம் செய்யுங்கள். https::// என்பது பாதுகாப்பான வழியாகும்.
13. காதலன் என்றாலும் உங்களை படம்பிடிப்பதை அனுமதிக்காதீர்கள்.
பிரச்சனை பெரிதாக ஆனால் ஃசைபர் க்ரைமில் புகார் செய்யலாம். புகார் செய்யும் முன் வக்கீல்களிடம் ஆலோசனை பெறவும்.

சைபர் க்ரைமில் ஏற்றுக்கொள்ளப்படும் புகார்கள்:

1. இண்டர்நெட் கடவுச்சொல் திருட்டு
2. அச்சுறுத்தும் மின்னஞ்சல்கள்
3. இணைய பின்தொடர்தல் (Cyber Stalking) [பாலியல் ரீதியிலான தொல்லைகள், வேறொருவர் உங்களை போல இணையத்தில் உலவுவது, மிரட்டல்கள் ஆகியவைகளும் அடங்கும்].
4. குழந்தைகள் வன்கொடுமை / ஆபாச தளங்கள்
5. கடன் அட்டை எண் திருட்டு
6. வலைத்தள ஹேக்கிங்

தமிழ்நாட்டில் புகார் கொடுக்க:

சென்னை தவிர பிற மாவட்டங்கள்:

Tmt.Sonal V.Misra, IPS,
SCB, Cyber Cell
SIDCO Electronics Complex,
Block No. 3, First Floor,
Guindy Industrial Estate,
Chennai -32

மின்னஞ்சல் முகவரி: spcybercbcid.tnpol@nic.in
சென்னை:
Tr.S.Aravind,
DSP, CBCID, Cyber Crime Cell
SIDCO Electronics Complex,
Block No. 3, First Floor,
Guindy Industrial Estate,
Chennai -32

தொலை பேசி எண்: 044-22502512
மின்னஞ்சல் முகவரி: cbcyber@nic.in

நன்றி : முகநூல் பக்கம் 

Thursday, June 26, 2014

விஜய் , அஜித் , சூர்யா- Face book இல் படும்பாடு

விஜய் , சூர்யா , அஜித் முவரும்  இப்போது facebook இல் அதிகம் ஒட்டப்படும் நடிகர்கள் . அவர்களை கிண்டல் செய்து பல புகைப்படங்கள் வருகின்றது . அவற்றில் சில உங்களுக்காக ... இவையனைத்தும் ஜாலிக்காக மட்டுமே , யாரும் கமெண்டில் இந்த அப்பாவியை காய்ச்சி எடுக்கவேண்டாம் .














டிஸ்கி : மூவர் ரசிகர்களையும் திருப்தி படுத்திவிட்டேன் என நினைக்கிறன் .

டிஸ்கி  : இது பழைய பதிவை கொஞ்சம் பட்டி டிங்கரின்க் பார்த்தது .

இதையும் படிக்கலாமே ?
 

Thursday, December 19, 2013

TOP 10 FACEBOOK STATUS



இந்த வருடத்தின் TOP 10 FACEBOOK STATUS உங்கள் பார்வைக்காக தொகுத்து வழங்குகிறேன் . இது யாருடைய டாப் 10 என நீங்கள் குழம்ப வேண்டாம் . இது உங்கள் மனம் கவர்ந்த ஒரு பதிவரைடையது தான் . அந்த பிரபல பதிவர் யார் என்பது பதிவை படிக்க ஆரம்பித்ததும் நீங்களே கண்டுபிடித்து விடுவிர்கள் .


விசில் அடிக்கலாம் வாங்க



 ====================================================================

 கொடுமையான விஷயம் :

மயிலாடுதுறையை சுற்றி வசிக்கும் மக்களுக்கு ஒரு கொடுமையான விஷயம் . இன்று இரவு 8 to 9 உள்ளூர் தொலைக்காட்சியான T C U சேனலில் நான் பங்கு பெரும் நேரடி நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது . மாணவர்கள் இதில் தொலைபேசி மூலம் கலந்து கொண்டு சந்தேகங்களை (பாட சம்பந்தமாக ) கேட்கலாம் . எனக்கு தெரிந்தால் (!!!) சொல்கிறேன் . நிகழ்ச்சி முடிந்த பின் உங்கள் கருத்தை சொல்லுங்கள்




 ======================================================================
COMPUTERSCIENCE இல் முதல் முறையாக எனது மாணவன் நடராஜன் 200 / 200
வாழ்த்துக்கள் ..
# சந்தோஷமான தருணம்



 =======================================================================
 நாகை மாவட்டத்தில் முதலிடம் பெற்ற ROTARY CLUB MATRIC . HSC பள்ளியின் மாணவர்
M.A.சிவராம் கார்த்திக்கு வாழ்த்துக்கள் .

1173 




 ========================================================================
மாவட்ட அளவில் முதல் மதிப்பெண் பெற்றதை விட மகிழ்ச்சியானது. .

அணைத்து மாணவர்களும் தேர்வு அடைந்தது.

#எல்லா குழந்தையும் எங்கள் குழந்தைதான்


 =======================================================================

  "எங்கள் பள்ளியில் 380 மார்க்கு மேல உள்ள மாணவர்களை மட்டும் தான் சேர்ப்போம். உங்க பள்ளி போல அட்டம்ப்ட் கேஸா இருந்தாலும் பரவாயில்லைனு சேர்க்கமாட்டோம்" அப்படினு ஒருத்தர் சொன்னார்.

நான் சொன்னேன் " ஏற்கனவே நல்ல படிக்கிறவனை நல்ல மார்க் எடுக்க வைப்பது சாதனையுமில்லை அது தான் நல்ல ஸ்கூல்/ ஆசிரியர் என அர்த்தமில்லை. படிக்காதவனை கூட உன்னால் முடியும் என நம்பிக்கையூட்டி நல்ல மார்க் எடுக்க வைபதுதான் சாதனை. அதுதான் நல்ல ஸ்கூல்/ ஆசிரியர். " என்றேன்.

##நான் சொன்னது சரியா????



 =====================================================================
கடந்த வருடம் +2 இல் மாவட்ட அளவில் மதிப்பெண் பெற வைத்தமைக்கு ஆசிரியர்களுக்கு பாராட்டுவிழா இன்று பள்ளியில் நடைப்பெற்றது. அப்போது வழங்கபட்ட பரிசு.




======================================================================

 இனியாது திருந்துவார்களா??
=====================
நேற்று - மதியம் 2:30 பஸ் பயணத்தின்போது..
சபரி மலையில் இருந்து வேலூர் திரும்பும்
ஒரு அய்யப்ப பக்தர் அருகில்
நின்று கொண்டிருந்த ஒரு முஸ்லிம்
பெரியவருக்கு இருக்க
இடமளித்து எழும்பி நின்றார்...
அந்த பெரியவர் நீங்க இருங்க தம்பி மலையில்
இருந்த இறங்கி களைப்பாக வந்திருப்பீங்க என
கூறி இருக்க மறுத்தார்...
நான் ரெயிலில் வரும்போதே நல்லா ரெஸ்ட்
எடுத்துட்டேன் நீங்க நோன்பு பிடிசிருப்பீங்க
காலைல இருந்தே எதுவும் சாப்பிடாம
களைப்பா இருப்பீங்க... நீங்க உக்காருங்க
என்று சொல்லி உக்கார வைத்தார்...
எங்கள் வாழ்கை பயணத்தின்
ஒவ்வொரு நொடியும் இப்படிதான் கழியுது...
இப்படித்தான் நாங்க வாழ்கிறோம், இனியும்
வாழ்வோம் !
Thanks to Sulthan Salahudeen



 ====================================================================




 நேர்மைக்கு பரிசு இடமாற்றம். மயிலாடுதுறையில் போக்குவரத்து துறை இன்ஸ்பெக்டர் திரு நெப்போலியன் பதவியேற்றபின் மாயிலாடுதுறையே மாறியிருந்தது. டிராபிக் ஜாம் இல்லை. வாகன விபத்து குறைவு, ரோட்டில் கண்னை மூடிகொன்டு வன்டிஓட்டுபவர்கள் குறைவு, பஸ்ஸில் படியில் பயணம் செய்ய பயந்த மாணவர்கள் என நன்றாக இருந்தது. நேற்று திடிரென அவரை மாற்றிவிட்டார்கள். இனி மயிலை ட்ராபிக் ஜாமில் சிக்கி தவிக்கட்டும் என நினைத்து இடம் மாற்றம் செய்ய அந்த"புண்ணியவான்" வாழ்க.

#என்ன_உலகம்டா_இது??



  ====================================================================

தாத்தா வீட்டிக்கு போகும் குஷியில் சரண். .

 ====================================================================
  
இதுதான் இந்தியா
===============

ஐயாயிரம் கோடி கடன் வாங்கிய விஜய்
மல்லையா தற்கொலை செய்து கொள்ளவில்லை...
அவருக்கு கடன் கொடுத்த வங்கிகாரனுங்க
எவனும் தற்கொலை பண்ணிக்கல..
அந்த கடனைக் கொடுக்கச்சொன்ன நம்ம
நிதியமைச்சர் தற்கொலை பண்ணிக்கல..
ஆனால் நமக்கெல்லாம் சோறு போடும்..
எங்கள் ஏழை உழவன்..
சில ஆயிரம் கடனை திருப்பிக்கட்ட
முடியாமல் தற்கொலை செய்து கொள்கிறான்..
ஏனெறால் இவனுக்கு மானம் தான் பெரிது..
- இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ.
நம்மாழ்வார்


  ====================================================================

  டாக்டர் விஜய், டாக்டர் கமல்னு இனி யாரும் பெருமையா சொல்லிகாதிங்க.

காரணம்:
நடிகை தேவயானிக்கு அமெரிக்க உலக தமிழ் பல்கலைகழகம் டாக்டர் பட்டம் நேற்று வழங்கியது.






 டிஸ்கி : அந்த பதிவர் ...... போங்க பாஸ் இன்னுமா தெரியாம இருக்க 
                  போறிங்க ?

டிஸ்கி : இதுபோல நீங்களும் உங்கள் FACEBOOK இல் உங்கள் TOP 10 STATUS அறிந்துகொள்ள 

https://www.facebook.com/yearinreview/  இதை உங்கள் FACEBOOK URL இல் COPY & PASTE செய்யவும் .

 

Monday, November 25, 2013

சிரிக்கலாம் வாங்க


சமிபத்தில் எனது முகபுத்தகத்தில் (facebook ) போட்ட STATUSகளின் தொகுப்பே இந்த பதிவு . இவையனைத்து நகைசுவை என எண்ணி எழுதபட்டது . சிரிப்பு வரவில்லை என்றால் சங்கம் பொறுப்பல்ல ..


============================================================================

அதிக அளவில் அர்ச்சனை செய்பவர் யார்??

1) கோவில் பூசாரி

2) மனைவி

#ஹைபோதட்டிகல்_கொஸ்டின் . .


======================================================================


 என்ன கொடும இது?
=================

ஒரு அரசியல்வாதி பள்ளியில் பேச போனார். அங்கு கூடி இருந்த மாணவர்களிடம்
"மாணவர்களே தினமும் 2 திருகுறள் படியுங்கள். அப்படி படித்தால் வாரம் 14 குறள் படிக்கலாம், மாதம் 60 குறள் படிக்கலாம், வருடத்திற்க்கு 730 குறள் படிக்கலாம். இப்படியே படித்தால் உங்கள் வாழ்நாளில் பல "லட்ச கணக்கான" திருகுறள் படிக்கலாம் என முடித்தார்.


=====================================================================

பெண்ங்கள் சீட்டில் ஆண் உட்காந்தா வெறுப்பா பேசுகின்ற கண்டக்டர், ஆண்கள் சீட்டில் பெண்கள் உட்காந்தால் தன் பொறுப்பை மறப்பது ஏன்???

#பயண_கடூப்ஸ்


=======================================================================


"இந்தியாவில் தொலைதொடர்பு முதல் அனைத்துவகையிலும் மக்களை முன்னேற்றியது காங்கிரஸ் தான்"
தந்தி டி.வியில் திருச்சி வேலுசாமி.

SMS கருத்துகணிப்பில் காங்கிரஸ் மோசம் என்றதும் அவர் சொன்ன வார்த்தை

"நாட்டில் SMS அனுப்ப தெரியாத தொலைபேசி வசதி இல்லைதாவர்கள் தான் அதிகம் அதனால இந்த கருத்து கணிப்பை கணக்கில் எடுக்க முடியாது"

#சமாளிப்பு


=====================================================================  

பலத்த மழையை பார்த்ததும்
மனதில் சட்டென தோன்றும்
எண்ணம். .
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
ஆஹா. . .நாளைக்கு ஸ்கூல் லீவா??


=======================================================

காணவில்லை:
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
24 மணி நேரமாக கரண்டை காணவில்லை.

#சும்மாவே கட்டு கட்டுனு கட்பண்ணுவாங்க, இப்போ மழை, காற்று வேற கேட்கவா வேனும்??


=====================================================================
எச்சில் துப்பாதீர்கள், குப்பை போடாதீர்கள், புகை பிடிக்காதீர்கள் என பஸ் ஸ்டாண்டில் பயணிகளுக்கு சொல்லும் முன் நடத்துனர், ஓட்டுனர்களுக்கு சொல்ல வேண்டும் போல. . .

======================================================================
    
சூப்பர் ஐடியா. .

ஒருத்தன் கஸ்ட்டமர் கேர்
நம்பருக்கு போனை போட்டான்..ஒரு பொண்ணு தான்
போனை எடுத்திச்சு ..
.
.
"ஹலோ..!! வணக்கம் !! என்ன விஷயம்
சொல்லுங்க சார்...மே ஐ ஹெல்ப் யூ !!
.
"நன்றி..! உங்களுக்கு கல்யாணம் ஆய்டிச்சா.. ?
.
"வாட் ..!! அத பத்தி நான் உங்களுக்கு சொல்ல
வேண்டியதில்லையே ..! எதுக்கு போன்
எடுதிங்க்களோ அத பத்தி மட்டும் கேளுங்க..!"
.
"கோவ படாதிங்க மேடம்...! கல்யாணம்
ஆய்டிச்சா ?"
.
"இல்லை..!! அதுக்கு என்ன இப்போ?"
.
"இல்லை..!! நான் உங்களை கல்யாணம்
பண்ணிக்கலாமா?.."
.
".சாரி..! எனக்கு விருப்பம் இல்லை ..! "
.
"நான் ஒரு ஆப்பர் தரேன் ..என்ன லவ் மேரேஜ்
பண்ணா...ஹனிமூனு
க்கு சுட்சர்லாந்து போலாம்...அரேஞ்சுடு மேரேஜ்
ன்னா பாரிஸ் போலாம்!!
.
"சார்..!! நன் தன
இஷ்ட்டமில்லை ன்னு சொல்லிட்டேன்ல ..என்ன
ஏன் தொந்தரவு பண்ணுறீங்க..?
.
இப்ப புரிதா !!.. நான் இஷ்ட்டம் இல்லன்னா கூட
அந்த ஆப்பர் இருக்கு இந்த ஆப்பர்
இருக்கு ன்னு கொடச்சலை குடுப்பீங்கல்ல !!..
அப்ப இப்பிடித்தான் மத்தவங்களுக்கும்
இருக்கும்..!

#படித்ததில்_பிடித்தது


Monday, November 4, 2013

சின்ன சின்ன விஷயங்கள்



கீழே நீங்கள் படிக்க போவது அனைத்தும் எனது முக நூலில் நான் பகிர்ந்தவை . அவற்றில் பல நான் சொந்தமாக யோசித்தது (ஏய் !! யாருப்பா அது சிரிக்கிறது ?? பிச்சுபுடுவேன் பிச்சு ...) . சில படித்ததில் ரசித்தது . உங்களுக்காக அந்த தொகுப்பு இதோ ..

======================================================================


முக்கிய செய்தி:
விஜய்காந்த், வடிவேலுவுடன் இனைந்து. .
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.

.
.
.
.
.
நடித்த "தவசி " படம் கே டி.வியில் இப்போது. . .


==================================================================


நடிகர் கார்த்திக்கு இப்போது பிடிக்காத ஆனால் அவருக்கு இன்றய நிலையில் பொருத்தமான புது பாடல். .
.
.
.
.
"என் ஃபிஸு போச்சே. . . ."


=======================================================================


சுட்டகதை படம் முடிவில் இயக்குனர் படம்பார்த்த நமக்கு, பட தயாரிப்பாளருக்கு, நடித்த நடிகர்களுக்கு என அணைவருக்கும் ஒரு அருமையான வசனம் வைத்துள்ளார். அது
.
.
.
.
"வெளங்கிரும். . ."

#படத்தோட ரிசல்ட் அவருக்கு முன்பே தெரியும் போல???


=====================================================================


நேற்று பூம்புகாரில் தண்ணீ அடித்துவிட்டு கடலில் குளித்த நபர் ஒருவர் அலையால் இழுத்து செல்லபட்டு உயிரிழந்தார். தண்ணீ அடிக்கிற பக்கிங்க குடிச்சுட்டு சும்மா இருக்காம கடலில் போயா வீரத்தை காட்டுவது?
டாஸ்மாக் 10 மணிக்குதான் திறக்கிறது என்கின்றனர் ஆனால் பல கடைகள் சைடில் வியபாரம் செய்கின்றனர். கிடாரங்கொன்டான் டாஸ்மாக் காலை 7 மணிக்கே கூட்டத்தால் நிரம்பி வழிகிறது. பொதுமக்களும், போலிஸும் வேடிக்கைதான் பார்கின்றனர்.

#வாழ்க_ஜனநாயகம்.


===================================================================


"இலையை கண்ட இடத்தில் போட்டால் நாய்கள் சண்டை போடும்"
#திண்டுக்கல் லியோனி

#சேம் சைட் கோல். வாய் தவறி உளரிட்டாரா???


=====================================================================

ரிலிஸ் ஆகி ஒரு வாரமே ஆன "சுட்டகதை " படம் நாளை மாலை புதுயுகம் டி.வியில்.

நேரடியாக டி.வியில் படம் ரிலிஸ் ஆகும் நாள் வெகுதொலைவில் இல்லை.

#தமிழ்படங்களுக்கு வந்த சோதனை!!!


=================================================================

வெடிலாம் ஓவர் விலை ஓவரா இருக்கு. பேசாம 100 ரூபாய்க்கு பலூன் வாங்கி 200 ரூபா சம்பளத்துக்கு ஆள் வைத்து ஊத சொல்லி வெடிக்கலாம்னு பார்க்குறேன். செலவும் மிச்சம், சுற்றுசூழலுக்கும் பாதிப்பில்லை.

#தீபாவளி_ஐடியா


====================================================================

ஒருவர் இன்று எங்கள் கடைக்கு சாப்பாடு ஆர்டர் கொடுக்க வந்தார். 2 இட்லி, ஒரு கரண்டி பொங்கல், ஒரு கரண்டி கேசரி, 2 போண்டா, ஒரு கப் காப்பி, 2 பூரி இப்படி ஒரு செட் என்ன விலை வரும் என்றார். 50 ரூபாய் ஆகும் என்றோம். அவர் இது ரொம்ப அந்நியாயம் ஒரு 25 ரூபாய் போட்டுகுங்க என்றார். கடைசியில் 45 ரூபாய்க்கு ஒத்துகொன்டார். 1000 அட்வான்ஸ் கொடுத்துவிட்டு அவர் சொன்னதுதான் ஹைலைட்.
"50 பேர்க்குனா சரியா 50 பேர்சாப்பிடுவது போல செய்யாதிங்க. ஒரு 100 பேராவது சாப்பிடிவது போல செய்யுங்க"

#அடபாவி நீ நிதிஅமைச்சர் சிதம்பரம் போல வருவடா. . .


=====================================================================

அதிரடி ஆரம்பம் :
,
,
,
,

,
,
மின்வெட்டு.

#பழைய குருடி கதவ திறடி கதை!!


==================================================================
 தீபாவளி உடையில் சிங்கமும் , சிங்க குட்டியும்


  
      
இதையும் படிக்கலாமே :

 FUNCTION KEYS : DO U KNOW?

Saturday, October 19, 2013

தெரியுமா ?





தெரியுமா ?? என்னைபோல பல பதிவர்களுக்கு தெய்வம் இவர் . ஆமாம் இவர்தான் காப்பி பேஸ்ட்
கண்டுபிடித்தவர் 
Lawrence G. Tesler (Larry Tesler)  





Inventors of Computer Hardwares: -


1:Keyboard— Herman Hollerith, first keypunch  devices in 1930’s
-
2:Transistor— John Bardeen, Walter Brattain & Wiliam Shockley ( 1947-48)
-
3:RAM— An Wang and Jay Forrester (1951)
-
4:Trackball— Tom Cranston and Fred Longstaff (1952)
-
5:Hard Disk— IBM , The IBM Model 350 Disk File (1956 )
-
6:Integrated Circuit— Jack Kilby & Robert Noyce ( 1958)
-
7:Computer Mouse — Douglas Engelbart (1964)
-
8:Laser printer— Gary Starkweather at XEROX in1969.
-
9:Floppy Disk— Alan Shugart &IBM( 1970)
-
10:Microprocess­or— Faggin, Hoff & Mazor – Intel 4004 (1971)

List of Facebook Shortcut Keys




Ctrl + Alt + 0 — Help

Ctrl + Alt + 1 — Home
 
Ctrl + Alt + 2 — Timeline
 
Ctrl + Alt + 3 — Friends
 
Ctrl + Alt + 4 — Inbox
 
Ctrl + Alt + 5 — Notifications
 
Ctrl + Alt + 6 — Account Settings
 
Ctrl + Alt + 7 — Privacy
 
Ctrl + Alt + 8 — About
 
Ctrl + Alt + 9 — Terms
 
Ctrl + Alt + m — New Message



                      உண்மைதானே ???/




                                                                      அடபாவிகளா ...

                     மனமிருந்தால் மார்க்கம் உண்டு




படித்து பாருங்கள் :


FACEBOOK TRICKS 2013
 

Monday, August 5, 2013

கதம்பம் 05-08-13


கடந்த மாத கதம்பம் பதிவுக்கு ஆதரவளித்த  நல்ல உள்ளங்களுக்கு நன்றி . இதோ இந்த வாரமும் . ( அடிகடி தொடரும் கொஞ்சம் சகித்துக்கொள்ளவும் )


இது சரியா ? தவறா ? 


இயக்குனர் சேரனின் மகள் காதல் விஷயத்தில் பலர் பல்வேறு விதமாக பேசுகின்றனர் . படங்களில் காதலை வாழவைத்தவர் தனது குடுப்பத்தில் எதிர்ப்பது சரியா என்று . இது சரியான வாதமாக படவில்லை . தொடர் கொலைகளை படமாக எடுப்பவர் கொலை செய்தால் தப்பில்லை என்பது போல உள்ளது . 

சேரன் தன மகள் காதலிக்கும் காதலன் சரியில்லை என தான் சொல்கிறார் . காதலை எதிர்க்கவில்லை . ஒரு அப்பா தன மகளின் வாழ்கையை நல்ல படியாக அமைத்து கொடுக்க வேண்டும் என விரும்புவது தவறா ? காரணமே இல்லாமல் அல்லது சாதியை , மதத்தை காட்டி எதிர்த்தால் அதை தவறு என சொல்லலாம் .

ஆந்திர சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் மகள் இது போல சென்று இப்போது படும் பாடு  நாடறிந்தது . காதல் எதிர்காலத்தை பார்க்காது . "குழோ , கஞ்சியோ எதுவானாலும் நான் தயார் என சொல்லும் பக்குவம் திருமணம் முடிந்து தொடரும் என சொல்லமுடியாது .


========================================================================

முக நூலில் பலர் பல விஷயங்களை பகிர்கின்றனர் . அது காமெடியாக இருக்கலாம் ,தத்துவங்களாக இருக்கலாம் .கலை இலக்கியம் , அரசியல் சம்பத்தபட்டதாக கூட இருக்கலாம் . ஆனால் சிலர் எழுதும் பதிவுகள் நம்மை யோசிக்க வைக்கும் , சிரிக்க வைக்கும் அப்படிபட்ட பதிவுகள் சில உங்களுக்காக ...

பள்ளிக்கூடம் படிக்கையில கேட்ட ஜோக் இது... இப்பவும் சுத்திக்கிட்டு இருக்கு...

மழை பெய்வதை யார் யார் எப்படி சொல்வார்கள் ..?

இரும்பு வியாபாரி – கனமா பெய்யுது
கரும்பு வியாபாரி – சக்கைப்போடு போடுது
சலவைக்காரர் – வெளுத்துக் கட்டுதுங்க
டாக்டர் – தினமும் மூணு வேளை
நர்ஸ் – நார்மலாத்தான்
பஞ்சு வியாபாரி – லேசா பெய்யுது
போலீஸ்காரர் – மாமூலா பெய்யுது
வேலைக்காரி – பிசு பிசுன்னு
அட்டை – விடாம பெய்யுது
ஆமை- வெளியே தலை காட்டா முடியலை
குயில் – அது ‘பாட்டு’க்கு பெய்யுது
தேள் – கொட்டு கொட்டுன்னு
நண்டு – பிடி பிடின்னு
 
==============
தமிழ் சினிமாவின் விதிகள்

1.ரேப் ஸீனுக்கு புலி, மானைக் காட்டுறது. முதலிரவு ஸீனுக்கு ஒரு குறிப்பிட்ட நேரத்துக்கப்பறம் லைட்டை ஆஃப் செஞ்சிடறது. மேக்ஸிமம் ரேப் ஸினுக்கு நம்ம ஹீரோயின் சேலைதான் கட்டியிருப்பாங்க...

2.பனி பொழியுற நாட்டுப் பாடல் காட்சிகள்ல, ஹீரோ மட்டும் கோட்டு, சூட்டு, கிளவுஸ் எல்லாம் போட்ருப்பாரு, ஆனா ஹீரோயின் அம்மணிக்கு மட்டும் டூபீஸ்....சே...என்னமாதிரி சமுகத்தில் வாழ்கிறோம் நாம்..?

3.படத்தோட உச்சக்கட்டமா வில்லன் எங்கேயாவது பாம் வச்சுடுவான். அதை டிஃப்யூஸ் பண்ண வர்ற ஹீரோ எந்த கலர் வயர வெட்டுறது அப்படின்னு டென்ஷனாகி செவப்பா நீலமான்னு மாத்தி மாத்தி யோசிப்பார். ஆனா அவர் கவலையே பட வேண்டாம். ஏன்னா அவர் எந்த வயர வெட்டினாலும் பாம் அமந்து போகும். (தக்காளி ..நீ புடுங்குற எல்லாமே தேவையில்லாத ஆணிதான்..)

4.நல்லதொரு ரேப் சீனை நாசமாக்க வரும்நம்ம ஹீரோ, வந்ததும் மொதோ வேலையா தன்னோட சட்டையையோ ஜெர்கினையோ கழட்டி பொண்ணு மேல போர்த்துவார்.(அடேய் உன்ன யார்ர இங்க வரச்சொன்னது ச்சே )

5.ஹீரோ ரெட்டைப்புள்ளையா இருந்தா அதுல ஒருத்தர் கண்டிப்பா ரொம்பக் கெட்டவனா இருப்பாரு. ஆனா கிளைமாக்ஸ்ல“நான் ஏன் அப்படி இருந்தேன் தெரியுமா”ன்னு ஒரு பாடாவதி டயலாக் பேசி நல்லவனா மாறிடுவார்..
 
======================================================================================
 தற்பொழுது படித்த புத்தகம் ;

நண்பர் பிலாசபிபிரபா சில நாட்களுக்கு (மாதங்களுக்கு ???) முன் வாங்கி தந்த சுஜாதா நாவலில் ஒன்று  டாக்டர் நரேந்திரனின் வினோத வழக்கு . நண்பர் ஒருவர் வாங்கி சென்றுநேட்று தான் தந்தார் . அருமையான கதை .  வாசிக்க விரும்பும் நண்பர்களுக்கு E-BOOK LINK  இதோ :


டாக்டர் நரேந்திரனின் வினோத வழக்கு
 
 ==========================================================================================
 
ரசித்த புகைப்படம் :