> என் ராஜபாட்டை : மாணவர் நலன்

.....

.
Showing posts with label மாணவர் நலன். Show all posts
Showing posts with label மாணவர் நலன். Show all posts

Monday, May 6, 2013

மாணவர்கள் மற்றும் பெற்றோர் கவனத்திற்கு



+2 தேர்வு முடிவுகள் வியாழன் ( 9-5-13)  அன்று வருகின்றது. நன்றாக படிக்கும் மாணவன் முதல் , பாஸ் பண்ணினா போதுன் என நினைக்கும் மாணவன் வரை அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர். இவர்களை விட அதிக ஆவலுடன் மற்றும் எதிர்பார்ப்புடன் இருப்பவர்கள் பெற்றோர்கள். தன மகனை அடுத்து என்ன சேர்ப்பது , எங்கே சேர்ப்பது என கனவு கண்டுகொண்டு இருப்பவர்கள். இவர்கள் இருவார்க்கும் சில வார்த்தைகள் ....

மாணவர்களே ...

நல்ல மதிப்பெண் பெற்றால் அல்லது எதிர்பார்த்ததை விட அதிக மதிப்பெண் வந்தால் எவ்வளவு சந்தொஷமடைகிரோமோ அது போல மதிப்பெண் குறைந்தால் கவலைபடாதீர்கள் . சிலர் ஒரு மார்க் குறைந்ததுக்கு பல நாட்கள் அழுது பார்த்துள்ளேன்.

மதிப்பெண் குறைந்தாலோ அல்லது தேர்வில் தோல்வி  வெற்றியை தவரவிட்டாலோ மனதை தளரவிடவேண்டாம். தேர்வு முடிவு வந்த அடுத்த 15  நாட்களில் மீண்டும் தேர்வு எழுதி வெற்றி பெறலாம. வெற்றி தள்ளி போய் உள்ளதே தவிர கிடைக்காமல் போகாது.

தப்பி தவறி கூட தற்கொலை என்ற முட்டாள் தனமான , தவறான முடிவை எடுக்காதிர்கள். இந்த தேர்வில் தோற்றால் மறுபடியும் வெற்றி பெற வாய்ப்புண்டு ஆனால் உயிர் போனால் மீண்டும் வராது. உங்கள் மேல் பாசம் வைத்து உங்களையே உலகமாக நினைத்து வாழும் பெற்றோரை  ஒரு நிமிடம் நினைத்து பாருங்கள், வாழ்வில் மதிப்பெண் மட்டுமே முக்கியமில்லை. படிக்ககாத , தேர்வில் பாஸ் ஆகாத பலர் வாழ்கையில் முன்னேறிஉள்ளனர் ( தோணி B.Com ல இன்னும் பாஸ் செய்ய முடியலை, டெண்டுல்கர் 10 வகுப்புடன் நிறுத்திவிட்டார் )

பெற்றோருக்கு ..

பையன் நல்ல மதிப்பெண் பெற்றால் என் மகன் என பாசம் காடும் நீங்கள் அவன் மார்க் குறைந்தாலோ அல்லது பெயில் ஆனாலோ அதே பாசத்தை காட்டுங்கள். உங்கள் பாசத்தைவிட உங்கள் அரவணைப்பை விட அவனை தேற்றும் சக்தி வேறு இல்லை. உங்கள் ஒரு தவறான , அல்லது கோபமான சொல் அவன் வாழ்க்கை பாதையையே மாற்றிவிடும்.

என் கல்வி அனுபவத்தில் DISTRICT FIRST, SCHOOL FIRST எடுத்தவன் என்ன ஆனான் என்றே தெரியவில்லை அல்லது இன்னும் வேலை தேடிக்கொண்டு இருக்கின்றான். ஆனால் சாதரணமாக படித்தவன் , குறைவான மதிப்பெண் எடுத்தவன் இன்று பல உயர் பதவியில் உள்ளனர். (சாதாரண மார்க் எடுத்த என் மாணவன் இப்போது கப்பற்படையில் உயர் பதவியில் உள்ளான். )

மகனை மதிப்பெண் பெரும் இயந்திரமாக பார்க்காதீர்கள் . முக்கியமாக அடுத்த மாணவருடன் அல்லது மாணவியுடன் ஒப்பிட்டு பேசாதீர்கள். அவன் உங்களை அடுத்த குழந்தையின் அப்பாவுடன் ஒப்பிட்டு பேசினால் உங்களுக்கு எப்படி இருக்கும் ?
கடைசியாக , அவன் மதிப்பெண் குறைய அவன் மட்டுமே காரணம் இல்லை என்பதை புரிந்துகொள்ளுங்கள்.


டிஸ்கி : தேர்வு முடிவுகளை பார்க்க








Wednesday, July 4, 2012

தனியார் பள்ளி ஆசிரியர் என்றால் மட்டமா ?




சில தினங்களுக்கு முன்பு பேருந்தில் ஒரு பழைய நண்பரை பார்க்க நேர்ந்தது , அவர் இப்போது ஒரு அரசு பள்ளியில் ஆசிரியராக இருக்கின்றார். நீ என்ன செய்கிறாய் என கேட்டார் . நான் கணினி ஆசிரியர் என சொன்னேன். எந்த பள்ளி என கேட்டார் . பள்ளியின் பெயரை கேட்டதும் ஒ மெட்ரிக் பள்ளியா? என கேட்டுவிட்டு இப்ப கல்வித்தரம் குறைய இதுபோல உள்ள தனியார் பள்ளிதான் காரணம் என பேச ஆரம்பித்துவிட்டார் .அவருடன் விவாதம் செய்ய எனக்கு விருப்பம் இல்லை காரணம் அவர் மெரிட்டில் வேலைக்கு சேரவில்லை பணம் குடுத்து சேர்ந்தார். இவரை போல பலர் தனியார் பள்ளி ஆசிரியர் என்றால் மட்டமாக பார்க்கின்றனர் . அவர்கள்ளிடம் சில கேள்விகள் ..

  1. இரண்டு அரசு பள்ளி ஆசிரியர்கள் ஒன்றாக சேர்ந்தால் எப்பொழுதாவது மாணவர்கள் படிப்பை பற்றி பேசி பார்த்து இருகின்றிகளா ? அரியர்ஸ் , முன்பணம் , சம்பளம் பற்றி மட்டும்தான் இருக்கும் .ஆனால் தனியார் பள்ளி ஆசிரியர்கள் சந்தித்தால் அதில் கண்டிப்பாக மாணவர்களை பற்றி பேச்சு இருக்கும்
  2. 1500 முதல் சம்பளம் வாங்கும் ஆசிரியர் கூட மாணவன் மேல் காட்டும் அக்கறையை 30000 சம்பளம் வாங்கும் அரசு பள்ளி ஆசிரியர் காட்டுவதில்லை .
  3. எந்த தனியார் பள்ளி ஆசிரியரும் 10 அல்லது 12 வகுப்பு போது தேர்வு விடைத்தாள் திருத்தும் இடங்களில் போராட்டம் நடத்துவதில்லை .
  4. இதுவரை மாணவர்கள் நலனுக்காக ஏதாவது போராட்டம் நடத்தி உள்ளார்களா ?
  5. எங்களிடம் படிக்கும் அனைத்து மாணவர்களின் குடும்ப விவரம் முதற்கொண்டு எங்களுக்கு தெரியும் . தன்னிடம் படிக்கும் அனைத்து மாணவனின் பெயர்களும் பல ஆசிரியர்களுக்கு தெரியாது .
  6. தனியார் பள்ளி ஆசிரியர் மாணவர்களிடம் தவறாக நடந்தால் அவரை வேலையை விட்டு நீங்க முடியும் ஆனால் அரசு பள்ளியில் அவருக்கு இடம் மாற்றம் மட்டுமே , இங்கு செய்த தவறை வேறு இடத்தில் தொடரபோகிறார் .
  7. பல வருடங்களுக்கு முன் படித்த மாணவன் கூட எங்களிடம் தொடர்பில் இருப்பான் , கல்லூரியில் நடக்கும் பாடத்தில் வரும் சந்தேகங்களை கூட போனில் கேட்பான் . அரசு பள்ளியில் இதற்க்கு வாய்ப்பில்லை .
  8. மாணவன் வீட்டில் நடக்கும் சுக துக்கங்களில் நாங்கள் கலந்து கொள்வோம் . ஆனால் அரசு பள்ளி ஆசிரியர்கள் பலர் தகுதி பார்ப்பார்கள் .
  9. TET (ஆசிரியர் தகுதி தேர்வு ) க்கு பலர் எதிர்ப்பு தெரிவித்தனர் . காரணம் பணம் கொடுத்து வேலை வாங்கிவிட்டோம் இனி எப்படி தேர்வு எழுதுவது என .
  10. 5 வருடத்திற்கு ஒருமுறை அனைத்து ஆசிரியர்களுக்கு ஒரு தகுதி தேர்வு வைத்து அதில் வெற்றி பெற்றால்தான் ஆசிரியர் பணியில் தொடரலாம் என ஒரு சட்டம் வந்தால் இங்கு உள்ள ஆசிரியர்களில் 90 % அதை எதிர்ப்பார்கள் .

டிஸ்கி : இது பெரும்பாலான அரசு ஆசிரியர்களுக்கு பொருந்தும் . இதிலும் சில விதிவிலக்குகள் உள்ளன. பல ஆசிரியர்கள் உண்மையில் அர்பணிப்புடன் பணியாற்றுகின்றனர். அவர்கள் மனம் புண்பட்டிருந்தால் மன்னிக்கவும்

டிஸ்கி : இதில் ஏதேனும் தவறு இருந்தால் அல்லது வேறு கருத்து இருந்தால் பின்னுட்டத்தில் சொல்லுங்கள்

இதையும் படிக்கலாமே :

வாங்க கொஞ்சம் மூளையை பயன்படுத்தலாம்

எனக்கு ஒரு சந்தேகம் ...


நான் அழகா பொறந்தது என் தப்பா ?


 

Sunday, May 20, 2012

மாணவர்கள் மற்றும் பெற்றோர் கவனத்திற்கு



+2 தேர்வு முடிவுகள் செவ்வாய் அன்று வருகின்றது. நன்றாக படிக்கும் மாணவன் முதல் , பாஸ் பண்ணினா போதுன் என நினைக்கும் மாணவன் வரை அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர். இவர்களை விட அதிக ஆவலுடன் மற்றும் எதிர்பார்ப்புடன் இருப்பவர்கள் பெற்றோர்கள். தன மகனை அடுத்து என்ன சேர்ப்பது , எங்கே சேர்ப்பது என கனவு கண்டுகொண்டு இருப்பவர்கள். இவர்கள் இருவார்க்கும் சில வார்த்தைகள் ....

மாணவர்களே ...

நல்ல மதிப்பெண் பெற்றால் அல்லது எதிர்பார்த்ததை விட அதிக மதிப்பெண் வந்தால் எவ்வளவு சந்தொஷமடைகிரோமோ அது போல மதிப்பெண் குறைந்தால் கவலைபடாதீர்கள் . சிலர் ஒரு மார்க் குறைந்ததுக்கு பல நாட்கள் அழுது பார்த்துள்ளேன்.

மதிப்பெண் குறைந்தாலோ அல்லது தேர்வில் தோல்வி  வெற்றியை தவரவிட்டாலோ மனதை தளரவிடவேண்டாம். தேர்வு முடிவு வந்த அடுத்த 15  நாட்களில் மீண்டும் தேர்வு எழுதி வெற்றி பெறலாம. வெற்றி தள்ளி போய் உள்ளதே தவிர கிடைக்காமல் போகாது.

தப்பி தவறி கூட தற்கொலை என்ற முட்டாள் தனமான , தவறான முடிவை எடுக்காதிர்கள். இந்த தேர்வில் தோற்றால் மறுபடியும் வெற்றி பெற வாய்ப்புண்டு ஆனால் உயிர் போனால் மீண்டும் வராது. உங்கள் மேல் பாசம் வைத்து உங்களையே உலகமாக நினைத்து வாழும் பெற்றோரை  ஒரு நிமிடம் நினைத்து பாருங்கள், வாழ்வில் மதிப்பெண் மட்டுமே முக்கியமில்லை. படிக்ககாத , தேர்வில் பாஸ் ஆகாத பலர் வாழ்கையில் முன்னேறிஉள்ளனர் ( தோணி B.Com ல இன்னும் பாஸ் செய்ய முடியலை, டெண்டுல்கர் 10 வகுப்புடன் நிறுத்திவிட்டார் )

பெற்றோருக்கு ..

பையன் நல்ல மதிப்பெண் பெற்றால் என் மகன் என பாசம் காடும் நீங்கள் அவன் மார்க் குறைந்தாலோ அல்லது பெயில் ஆனாலோ அதே பாசத்தை காட்டுங்கள். உங்கள் பாசத்தைவிட உங்கள் அரவணைப்பை விட அவனை தேற்றும் சக்தி வேறு இல்லை. உங்கள் ஒரு தவறான , அல்லது கோபமான சொல் அவன் வாழ்க்கை பாதையையே மாற்றிவிடும்.

என் கல்வி அனுபவத்தில் DISTRICT FIRST, SCHOOL FIRST எடுத்தவன் என்ன ஆனான் என்றே தெரியவில்லை அல்லது இன்னும் வேலை தேடிக்கொண்டு இருக்கின்றான். ஆனால் சாதரணமாக படித்தவன் , குறைவான மதிப்பெண் எடுத்தவன் இன்று பல உயர் பதவியில் உள்ளனர். (சாதாரண மார்க் எடுத்த என் மாணவன் இப்போது கப்பற்படையில் உயர் பதவியில் உள்ளான். )

மகனை மதிப்பெண் பெரும் இயந்திரமாக பார்க்காதீர்கள் . முக்கியமாக அடுத்த மாணவருடன் அல்லது மாணவியுடன் ஒப்பிட்டு பேசாதீர்கள். அவன் உங்களை அடுத்த குழந்தையின் அப்பாவுடன் ஒப்பிட்டு பேசினால் உங்களுக்கு எப்படி இருக்கும் ?
கடைசியாக , அவன் மதிப்பெண் குறைய அவன் மட்டுமே காரணம் இல்லை என்பதை புரிந்துகொள்ளுங்கள்.


டிஸ்கி : தேர்வு முடிவுகளை பார்க்க