> என் ராஜபாட்டை : comedy.

.....

.
Showing posts with label comedy.. Show all posts
Showing posts with label comedy.. Show all posts

Wednesday, November 9, 2011

விஜய் ரசிகர்கள் – சிரியுங்கள் ஆனால் சீரியஸா எடுத்துகாதீர்கள்




இது முழக்க முழுக்க கிண்டல் மட்டுமே

விஜய் : ͌பேஸ்புக்கில் என்னை கிண்டல் செய்து வருவதாக எனக்கு தகவல் வந்துள்ளது. அந்த புத்தகம் மட்டும் என் கையில் கிடைத்தால் அதை சுக்கு நூறாக கிழித்து எறிவேன் என கூறிகொள்கிறேன்.



மேனேஜர் : சார் உங்க அடுத்த படத்துல “நடிகை நிலா” வை புக் பன்னிருக்கோம்.

விஜய் : அய்யயோ அவங்க வேண்டாம்

மேனேஜர் :ஏன் சார் ?

விஜய் : அப்புறம் அம்மா “நிலா அபகரிப்பு”னு என் மேல வழக்கு போட்டுட போறங்க..




விஜய் : நிறைய ரீமேக் படத்துல நான் நடிச்சது உண்மைதான் , அதுக்குனு “நண்பன்” படம்         “͌பிரண்ட்ஸ்” படத்தின் ரீமேக்கானு கேட்குறது ரொம்ப ஓவர்.



விஜய் : எனக்கு டாக்டர் பட்டம் கிடைத்துள்ளதால் இனி என்னிடம் ஆப்ரேஷன் செய்துகொள்பவர்கள் மட்டுமே என் ரசிகர் மன்றத்தில் சேரமுடியும் என தெரிவித்துகொள்கிறேன்.


விஜய் : என் கட்சியில் கொள்கை பரப்பு செயளாலர் இல்லை என்பதால் கொள்கையே இல்லை என எதிர்கட்சிகள் சொல்வதை வன்மையாக கண்டிக்கிறேன்.



விஜய் : இந்த இந்தியா- வெஸ்ட் இண்டிஸ் கிரிக்கெட் மேட்ச்சைதான்  டி.வியிலே காட்டுகின்றார்களே, பின்பு எதுக்காக பிடிவாதமாக சேப்பாக்கம் மைதானத்திலும் ஆட வேண்டும் என்பதே இன் கேள்வி..?


விஜய் : என் அடுத்த படம் பயங்கர சஸ்பென்ஸா இருக்கும்.

ரசிகர் : எப்படி?

விஜய் : எந்த படத்தில் இருந்து சுட்டோம்னு யாரும் கண்டுபிடிக்க முடியாது.

ஆசிரியர் : software னா என்னா? Hardware னா என்னா?

விஜய் : செடிய புடுங்கினா இருப்பது soft-வேர், மரத்தை புடுங்கினா இருப்பது Hard- வேர்.

ஆசிரியர் : நீ சரியான …………!

விஜய் : இந்தியா கிரிக்கெட் அணியின் தோல்வியை ஆராய ஏன் சி.பி.ஐ (CBI) வாராங்க ?

மேனேஜர் : கடவுளே அது பி.சி.சி.ஐ (BCCI)


Friday, October 21, 2011

நாஞ்சில் மனோவை கலாய்ப்போர் சங்கம்




இந்த பதிவு முழுவதும் நம்ம அண்ணன், தலைவர், சகலகலா(யார் அந்த கலானு கேட்ககூடாது) வல்லவர், “பார்” புகழும் தங்க(சரி ..முறைக்காதீங்க,  பித்தளை) மகன் மனோ அவர்களை கலாய்த்து எழுதப்பட்டது.

மனோ பள்ளியில் படிக்கும் போது..:

ஆசிரியர் : ஏண்டா பிளம்பர்(plumber) கூப்பிட்டுகிட்டு வந்துருக்க?

மனோ : Qestion Paper லீக் ஆகுதானு செக் பன்ன..

( ஆசிரியர் அவுட்)

…………………………………………………………………………………….

ஆசிரியர் : முதல் மாசம் பிப்ரவரினா, 10 வது மாசம் என்ன ?

மனோ : டெலிவரி

………………………………………………………………………………….

ஆசிரியர் : உனக்கு எது மிகவும் பிடிக்கும் ? தமிழ் மொழியா? ஆங்கில மொழியா?

மனோ : இரண்டும் இல்லை.

ஆசிரியர் : பின்பு?

மனோ : உங்க பொண்னு கனிமொழியை தான் பிடிக்கும்

------------------------------------------------------------

மனோ தனது விடைதாளில் அணைத்து பதில்களுக்கும் ||||||||||||||||| என போட்டிருந்தார் அதன் கீழே அவர் எழுதினார்..

“ விடைகளை சுரண்டி தெரிந்து கொள்ளவும்”

…………………………………………………………………………..

காட்டில் சிபியும் மனோவும் சுற்றிபார்க்கும் போது ஒரு சிங்கம்( நான் இல்லப்பா..) வந்தது,

சிபி : மனோ Shoot பன்னு.. Shoot பன்னு..

மனோ : இருப்பா .. இப்பதான் கேமராவில் பேட்டரி போடுறேன்.

(மனோ புத்திசாலி)

…………………………………………………………………………….

மனோவின் மகன்: அப்பா 5 + 3 எத்தனை ?

மனோ : முட்டாள் பய மகனே, அறிவில்லதவனே, இந்த சின்ன கணக்கு கூட தெரியில்ல நி படிச்சு என்ன கிழிக்க போற? இதுகூட தெரியாத நீ கருன் போல வாத்தியாராதான் போவ சரி .. சரி போய் Calculator எடுத்துவா போட்டுகாட்டுறேன்.

………………………………………………………………………………..

மனோவின் மகன்: அப்பா.. முட்டாள் என்றால் யார்ப்பா?

மனோ : ஒரு விஷயத்தை மிக எளிதாக சரியான விளக்கத்துடன் எடுத்து கூறி ஒரு குழந்தை கூட  புரிந்து கொள்ளும் விதத்தில் சொல்ல வேண்டும். அப்படி புரியவைக்க முடியாதவந்தான் முட்டாள் .. புரிந்ததா?

மனோவின் மகன்: ஒன்னுமே புரியவில்லை


விக்கி : அந்த சைனீஷ் பொண்னுகிட்ட I Love You  சொன்னியே என்ன ஆச்சு ?

மனோ : வேஸ்ட்.. அவ ஏற்கனவே இரண்டு பேர லவ் பண்றா போலிறுக்கு..


விக்கி : எப்படி சொல்லுற?

மனோ : I Love You too( 2) னு சொன்னாலே..


மனோ , விக்கி, சசிகுமார் மூவரும் ஒரு வங்கிக்கு செல்கின்றனர். எதிர்பாராதவிதமாக அங்கு கொள்ளை நட்க்கின்றது. கொள்ளைகாரனில் ஒருவன் விக்கியிடம்..

கொள்ளைகாரன் : இந்த கொள்ளையை நீ பாத்தியா?

விக்கி : ஆமா( டூமில்.. விக்கி காலி)

கொள்ளைகாரன்( மனோ விடம்) : இந்த கொள்ளையை நீ பாத்தியா?

மனோ : இல்லை.. ஆனா சசி பார்த்தார்.

( என்ன ஒரு கொலைவெறி)
 ஒரு குருப்பாத்தான் இருக்கோம் 

Saturday, October 15, 2011

சிபியை போட்டுதள்ள விக்கி போட்ட திட்டங்கள்





கேரள நாட்டை விக்கி”ரமாதித்தியன் என்ற மன்னன் ஆண்டுவந்தான். அவனுக்கு அந்த நாட்டிலேயே மிகவும் புத்திசாலியான சிபி என்பவர் மேல் கோபம். (விக்கிக்கு 5 மனைவி, 8 Wife, 10 துனைவி. இதுக்கும் சிபி மேல் உள்ள கோவத்துக்கும் சம்மந்தம் இல்லை) சிபியை எப்படியாவது போட்டுதள்ள வேண்டும் என திட்டம் போட்டார்.

ஒரு நாள் சிபி, கோகுல் மற்றும் தமிழ்வாசி மூவரையும்  வரவைத்தார். முதலில் கோகுலை அழைத்து “என் உடம்பில் என்ன வாசனை வருகிறது என பார்” என்றார். கோகுல் முகர்ந்து பார்த்துவிட்டு “வாசனை வரவில்லை, கெட்ட நாத்தம் தான் வருது “ என்றார். உடனெ விக்கி வாளை எடுத்து ஒரே போடு, கோகுல் காலி.

அடுத்து தமிழ்வாசியை அழைத்து அவரிடமும் அதே கேள்வி , தமிழ்வாசி பய்ந்து கொண்டு “மன்னா உங்கள் மீது மல்லிகை வாசம் விசுகின்றது” என்றார். விக்கி “ என்னிடமே பொய்யா?” என கூறி அவரையும் போட்டுதள்ளிவிட்டார்.

இறுதியாக சிபி, விக்கி அவரிடம் “ நீ சொல் “ என்றார். வாசனை என்று சொன்னாலும் காலி, நாத்தம் என சொன்னாலும் காலி. சிபி அவ்வளவுதான் என எல்லாரும் நினைக்க, சிபி மெதுவாக விக்கியிடம் சென்று “ எனக்கு இரண்டு நாளாக ஜலதோஷம், எனவே எனக்கு எந்த வாசமும் தெரியவில்லை “என்றார்.

சிபியை விட மனமில்லா விக்கி, “உன்னை எப்படி கொல்வது என தெரியவில்லை, உனக்கு ஒரு வாய்ப்பு தருகிறேன், இந்த நாயை(நாய் நக்ஸ் இல்லை) எப்படி கொல்கின்றாயோ அப்படிதான் உன்னை கொல்வேன்” என்றார். சிறிது யோசித்த சிபி  நாயின் வாலை பிடித்து அடித்து கொன்றார். விக்கிக்கு அதிர்ச்சி, சிபிக்கு வால் இல்லை அப்புறம் எப்படி கொல்வது என.

சரியான வாய்ப்பு வந்தும் சிபியை ஒன்னும் பன்னமுடியவில்லையே என விக்கிக்கு வருத்தம். அப்போது அவரது மதியுக மந்திரி மனோ வந்து விக்கி காதில் எதோ சொன்னார். உடனே விக்கி சிபியை பார்த்து “ உன்னை போட்டு தள்ள பார்த்தேன், தப்பி விட்டாய், இருந்தாலும் உனக்கு ஒரு தண்டனை  உண்டு”

மரணதண்டனை இல்லை என தெரிந்ததும் சிபிக்கு சந்தோஷம் “என்ன தண்டனை சொல்லுங்கள் “ என்றார். விக்கி “ இனி நீ உன் ஆயுள் முழுவதும் கில்மா படம் பார்க்க கூடாது

டார் எது வெடித்தது ? என்ன நடந்துசுனு நான் சொல்லிதான் தெரியனுமா ? விக்கி எண்ணம் கடைசியில பலித்துவிட்டது.

Saturday, September 24, 2011

தீவிரவாதிகள் பிடியில் பதிவர்கள்.




ஒரு கட்டிடத்தில் நமது பதிவர்கள் சந்திப்பு நடக்கிறது. அந்த சமயத்தில் ஒரு தீவிரவாதி உள்ளே புகுந்து அனைவரையும் பிடித்து கொள்கிறான். அந்த நேரத்தில் அவர்கள் ரியாக்ஷன் அப்படி இருக்கும் என ஒரு கற்பனை.

சீனா : நாம வேனா வாரம் ஒருத்தரை தீவிரவாதியிடம் பேச்சுவார்த்தை
        நடத்த அனுப்பலாமா?

சித்ரா : ஐயா.. இது வலைசரம் இல்லை.. கொலை சரம்.

சீனா : நீ போய் ஒரு டான்ஸ் ஆடு. அதை பார்த்து அவன் பயத்துல
        செத்துடுவான். நாம தப்பிச்சுடுலாம்.

கூடல் பாலா: அய்யோ ! வேண்டாம்.. பில்டிங் கொஞ்சம் பழசு.. நான் வேணா
         தீவிரவாதிக்கு எதிரா ஒரு போராட்டம் நடத்தட்டா?

சீனா : 2 நாளாதான் போராட்டம் நடத்தாம இருக்க.. வேண்டாம் விடு.

வேடந்தாங்கல் கருன் : நான் வேனா ஒரு கவிதை சொல்லட்டா?

சீனா : கவிதை வேண்டாம் . அவங்கிட்ட போய் ஒரு 2 மணி நேரம் வகுப்பு
        எடு. அவன் தானே ஒடிடுவான்.

வேடந்தாங்கல் கருன் : நம்ம சி.பி எங்கே ?

சீனா : புதுசா கண்னடிக்கும் கன்னி” னு ஒரு கில்மா படம் வந்து இருக்கு. அத பார்த்து விமர்சனம் எழுத போயிருக்கார். வாங்க பலே பிரபு நீங்க என்ன செய்யலாம்னு சொல்லுங்க ?

பலே பிரபு : நான் அந்த தீவிரவாதியின் பயோடேட்டா வை வாங்கி என்
               வலையில் போடவா ?

சீனா : நீ ஒன்னும் போடவேண்டாம். அதோ வந்தேமாதரம் சசி வாரார்
        அவர்கிட்ட கேட்போம்.

சசி : வைரஸ்களிடம் இருந்து தப்பிபது எப்படி தெரியுமா ?

கருன் : முதலில் தீவிரவாதியிடம் இருந்து தப்பிபது எப்படினு சொல்லு ?

சசி : ஆண்டி வைரஸ்…….

சி.பி : என்னது ஆண்டியா ? எங்கே?

சசி : யோவ்.. நான் சொன்னது ANTI VIRUS

சி.பி ; அதோ விக்கி தக்காளி வாரான். அவங்கிட்ட கேட்போம்.

விக்கி : என் குட்டிசுவர் தொடரை படிக்க சொல்லுவோம். அத படிச்சுடு
          அவன் எப்படி உயிரோடு இருப்பானு பார்கிறேன்.

ரமேஷ் : நம்ம டெர்ரர் கும்மி குருப்பை விட்டு கலாய்க சொல்லலாமா?

சி.பி : 4 நாள் கழித்து கொல்லுரவன் உடனே கொன்னுடுவான்.

நாஞ்சில் மனோ : நான் என் லேப்டாப் வச்சு எதாவது பண்ணடா ?
கவிதைவீதி சௌந்தர் : வேண்டாம் . அப்புறம் நான் கவிதை சொல்லி உன்னை கொன்னுடுவேன் .
                                 சரி எங்கே நம்ம தமிழ்வாசி ?
நாஞ்சில் மனோ : அவர் எப்பவோ ஆதிவாசியா போய்டார் .

கவிதைவீதி சௌந்தர் : சரி பன்னிகுட்டி ராமசாமி எங்கே ?

நாஞ்சில் மனோ : அவர் பூமிய தேடி போய்டார் .

கருன் : அங்க பாருங்க.. நம்ம FOOD திவிரவாதிக்கு எதோ குடிக்க குடுத்தார் . அவன் மயங்கி விழுந்துடான்.

சி.பி. : வெரி குட், FOOD. எப்படி உனக்கு மயக்க மருந்து குடுக்குற ஐடியா
        வந்தது ?

FOOD :  ஐயோ ! ! நான் மயக்க மருந்து குடுக்கல.

கருன் : பின்னே என்ன குடுத்த ?

FOOD : நான் தயாரிச்ச சூப்பைதான் குடுத்தேன்.

எல்லாரும் மயக்கம் அடித்து விழுகின்றனர்.

டிஸ்கி 1: சீனா ஐயா கோவித்துகொள்ள கூடாது.

டிஸ்கி 2: சிரிப்பு வரலைனா நான் பொருப்பு இல்லை

டிஸ்கி 3: இதில் இடம்பெற்ற பதிவர்கள் தவறாக எடுத்துகொள்ளகூடாது.

இப்படிக்கு :  டிஸ்கி மேல டிஸ்கி போடும் சங்கம்.