> என் ராஜபாட்டை : joke.

.....

.
Showing posts with label joke.. Show all posts
Showing posts with label joke.. Show all posts

Wednesday, February 29, 2012

அண்ணே ஒரு சந்தேகம்



சந்தேகம் சாரங்கபாணி இவருக்கு சில சந்தேகங்கள் அதை இங்கே தந்துள்ளேன். பதில் தெரிந்தவர்கள் சொல்லலாம்.


பதிவர் வீடு சுரேஷ் இன்னொரு பிளாக் துவங்கினால் அதுக்கு சின்ன வீடு னு பெயர் வைப்பாரா ?


இடைதேர்தல் இடைதேர்தல்னு சொல்றாங்க ஆனா இடையே இல்லாதே குஷ்பு பிரசாரத்துக்கு ஏன் வாராங்க ?


மத்திய அரசு இரண்டு கேரளா மீனவர்கள் பலியானத்துக்கு காட்டும் வேகத்தை 200 தமிழ் மீனவர்கள் பலியாகும் போது காட்டாதது ஏன் ?



கூடல் பாலா தான் குழந்தைக்கு அணு என்று பெயர் வைப்பாரா மாட்டாரா ?


நாய் நக்ஸ் நக்கீரன் சாரை நாய் கடிக்குமா ?


தமிழ்வாசி பிரகாஷ் அமெரிக்காவுல செட்டில் ஆனா இங்கிலீஷ்வாசினு  சொல்லலாமா ?

விக்கி வெங்கட்க்கு தலைல இருப்பது விக்கா ?

பல வருடங்களாகவே பண்ணிகுட்டி ராமசாமி  , குட்டியாகவே இருக்கின்றாரே குட்டி ஏன் இன்னும் வளர வில்லை ?

திடுடி எடுக்குற படத்த சொந்த படம்னு சொல்றாங்க ஆனா சொந்தமா எடுத்த அம்புலி படத்தை திருடி (3D) படன்னு சொல்றாங்க ஏன் ?


கம்பியூட்டரை START  செய்யும் போது
KEYBOARD NOT CONNECT PRESS F1 TO CONTINUE என்று வருது எண்ண பண்ணுவது ?


Monday, February 27, 2012

கேட்டான் பார் ஒரு கேள்வி…! நான் அழுவதா ? சிரிப்பதா?




சில வருடங்களுக்கு முன்பு அண்ணாமலை பல்கலைகழகத்தில் ஒரு செமினார் எடுக்கவேண்டிய கஷ்டமான நில( “ மாணவர்களுக்குதானே கஷ்டம் “  - வீடு சுரேஷ்  உங்க  MAIND VOICE ய CATCH பன்னிடேன்). சில முக்கிய வேலைகள் இருந்ததால் பெரிதாக எதும் தயாரிப்பு செய்யவில்லை. ( இல்லனா மட்டும் பெரிசா கிழிச்சுடுவ..)

எப்பவும் ஒரு செமினார் அல்லது வகுப்பில் புதிதாக ஒரு பாடம் ஆரம்பிக்கும் பொழுது ஒரு குட்டி கதை சொல்லுவது வழக்கம்( மனசுல என்ன ஜெயலலிதா, பாக்கியராஜ்னு நினைப்பா..?- விக்கி )

சரி SUBJECT தான் இல்ல கதையாது ஜாலியா சொல்லலாம்னு ஒரு கதை சொன்னென்.

“ அமெரிக்காவில் வருடா வருடம் பால் கறக்கும் போட்டி நடக்கும், பல நாட்டில் இருந்தும் பல போட்டியாலர்கள் கலந்துகொண்டு தங்கள் திறமையை காட்டுவார்கள்.

இந்த வருடம் இந்தியா சார்பில் யாரை அனுப்பலாம் என பயங்கரமா யோசித்து கடைசியில் நம்ம ராமராஜனை செலக்ட் செய்தார்கள். அவர்தான் பாட்டு பாடியே பால் கறப்பாரே


போட்டி துவங்கியது, அவரவர்கள் தாங்கள் கொண்டுவந்துள்ள மாடுகளுடன் தனி அறைக்கு சென்றனர். 2 மணி நேரம் கழித்து அனைவரையும் அவர்கள் கறந்த பாலுடன் வரசொன்னார்கள்.

ஜப்பாங்காரன் 15 லிட்டரும், அமெரிக்காகாரன் 10 லிட்டரும், ரஷ்யாகாரன் 8 லிட்டரும், பாகிஸ்தாங்காரன் 5 லிட்டரும் கறந்து இருந்தனர். அனைவராலும் பெரிதும் எதிர்பார்க்கபட்ட நம்ம ராமராஜன் வேறும் 2 லிட்டர் மட்டுமே கறந்து இருந்தார்.

அனைவருக்கும் பயங்கர அதிர்ச்சி. நடுவர்கள் அவரிடம் சென்று என்ன சார் நிங்கதான் ஜெய்பிங்கனு எதிர்பார்தோம், இப்படி 2 லிட்டர் மட்டும் கறந்து ஏமாத்திட்டிங்களே ? என கேட்டார்கள்.

அதுக்கு ராமராஜன் “ நான் என்ன சார் பன்னுறது அவசரத்துல வரப்ப "காளை “ மாட்டை ஓட்டிட்டு வந்துட்டேன், அதுல இவ்வளவு தான் கறக்க முடிந்தது “ என்றார் கூலாக.

(கதை முடிச்சுடு துங்குனவங்க முழிச்சுக்குங்க)

அதுபோல நானும் அவசரமா வந்ததால நிறைய PREPARE பன்ன முடியல, என்னால முடிந்த அளவு நடத்துறேன் பாத்துக்க்குங்க என கூறிவிட்டு நடத்த ஆரம்பித்தேன்.

எல்லாம் நடத்தி முடித்துவிட்டு “ யாருக்காவது எதாது சந்தேகம் இருந்தா கேட்களாம்” என்ரறேன்.( இதுக்கு பெயர்தான் வாயகுடுத்து வாங்கிகட்டிகிறது)

ஒரு மாணவன் எழுந்து கேட்டான் பாரு ஒரு கேள்வி !!!

“ இந்தியா தோற்கிறா போல எப்படி நீங்க கதை சொல்லலாம் “

அடங்கோய்யால  SUBJECT ல இருந்து ஒரு சந்தேகம் கேளுடானா கதைல கேட்ட அவன் நாட்டு பற்றை பாத்து நான் அழுவதா ? சிரிப்பதா?



Saturday, January 28, 2012

சிரிக்கவில்லை என்றால் சுட்டேபுடுவேன்




ஐந்து கணவன் கட்டிய பாஞ்சாலி நல்லா இருந்தால் , ஆனால்
கண்ணகி , மாதவினு இரண்டு பேரை கட்டின கோவலன் செத்தே போனான்.  # நீதி : நீங்களே கண்டுபிடிங்க ..


கருண் : ஏண்டா 2011 காலண்டர் வாங்கபோய்ட்டு சும்மா வந்துருக்க ?

சௌந்தர் : அந்த கடையில 150 காலண்டர் தான் இருக்கு , அதான் வந்துடன்.

கருண் : ??????????????????

தலையில் காயத்துடன் சிபி ..மனைவியிடம்..
சிபி : எதுக்கு என்னை அடிச்ச ?
மனைவி : உங்க சட்டை பையில் ஜனனி னு எழுதிய பேப்பர் இருந்தது யாரு அவ ?

சிபி : அய்யோ .. அது நேத்தி குதிரை பந்தயத்தில் நான் பணம் கட்டிய குதிரை பெயர் ..

மனைவி : சாரிங்க ....

மறுநாள் .. பூரி கட்டையுடன் இருக்கும் தன மனைவியை பார்த்து ..

சிபி : இப்ப என்ன கோபம் ?

மனைவி : உங்க குதிரை இப்ப போன் பண்ணுச்சு ...


ஒரு பெண் தான் ஒரு பையனை காதலிப்பதாக அவள் தோழியிடம் சொன்னால் ... அவர்கள் கேட்ப்பது ....
அவன் எப்படியிருப்பான் ?
அவன் என்ன பண்றான் ?
எவ்வளவு சம்பளம்
வசதியா ?


இதுவே ஒரு ஆண் தான் காதலிப்பதை தன் நண்பர்களிடம் சொன்னால் அவர்கள் கேட்ப்பது .....

மச்சான் எப்ப டிரீட் .....
# ஆண் மனசு வெள்ளை .


"வீடு "சுரேஷ்  : நம்ம காலேஜ் பிரின்சிபால் சரியான முட்டாளா இருப்பார்னு நினைக்கிறன் .

மாணவி : நான் யாருன்னு தெரியுமா உனக்கு ?

"வீடு "சுரேஷ் : தெரியாது .

மாணவி : அவருடைய பொண்ணு ..

"வீடு "சுரேஷ் : நான் யாருன்னு உனக்கு தெரியுமா ?

மாணவி : தெரியாது ..
"வீடு "சுரேஷ் : அப்பாடி தப்பித்தேன் .. எஸ்கேப் ..


மனோ : நான் உன்னை அடிக்கும் போது உனக்கு வரும் கோபத்தை எப்படி கன்ட்ரோல் பண்ணுவ ?

மனோவின் மகன் : உடனே பாத்ருமை சுத்தம் செய்ய ஆரம்பித்துவிடுவேன் ..

மனோ : அதனால உன் கோபம் எப்படி போகும் ?

மனோவின் மகன் : நான் சுத்தம் பண்ணுறது உங்க டுத்பிரஷ வச்சுல ...

Friday, November 11, 2011

உங்கள் பள்ளி புகைபடங்களை தரும் ஒரு இனையதளம்.





நம்து வாழ்கையில் நாம் ரசித்த, எந்த கவலையும் இன்றி துள்ளிதிரிந்த காலம் என்றால் அது பள்ளி பருவம் தான். இப்போதும் பள்ளி காலங்களையும், பள்ளி பருவ நண்பர்களையும் நாம் அசைபோடாமல் இருக்கமாட்டோம். அந்த காலத்தில் பன வசதி காரணமாகவோ,அல்லது எதேனும் காரனத்தால் பள்ளியில் எடுத்த புகைபடங்கள்களை வாங்காமல் இருந்திருபோம்.

இப்போது பணம் இருக்கும் ஆனால் புகைபடம் கிடைகாது. நமது பள்ளி புகைபடம் மற்றும் நம்து நண்பர்களுடன் நாம் இருந்த புகைபடங்களை நமக்காக வழங்குகிறது ஒரு இனையதளம்.

வெளி நாட்டில் மட்டுமே இருந்த இந்த வசதியை இப்போது இந்தியாவிற்க்கும் வழங்கி உள்ளது.இந்த வசதியை பெற கிழே உள்ள Link ஐ கிளிக் செய்யவும்.

  1. கிளிக் http://www.worldschoolphotographs.com/
  2. உங்கள் நாடு, மாநிலம், மாவட்டத்தை தெரிவு செய்யவும்.
  3. உங்கள் பள்ளி பெயர், படித்த வருடம் தெரிவு செய்யவும்
  4. ஒகே பட்டனை கிளிக் செய்யவும்.

உங்களுக்கு லக் இருந்தால் , உங்கள் பள்ளி புகைபடம் இருந்தால் கண்டிப்பாக கிடைக்கும்.


இந்த பதிவு பிடித்திருந்தால் Facebook, Twitter , g + இல் Share பண்னவும். மறக்காமல் இண்டிலி, தமில் 10, உடான்ஸ் போன்றவற்றில் ஒட்டு போடவும்.

நேற்று : "உங்களுக்கு மிகவும் பயனுள்ள இனையதளங்கள் பகுதி - 2":

நேற்று முதல் நாள் "விஜய் ரசிகர்கள் – சிரியுங்கள் ஆனால் சீரியஸா எடுத்த...":


Monday, October 31, 2011

விஜய் படத்திற்க்கு தடை : ஜெ. அதிரடி





வேலாயுதம் படத்தில் “ரத்ததின் ரத்தமே.. “ பாடலில் “சென்னை சங்கமத்தில் தங்க மெடல் வாங்கி வந்தேன்” என ஒரு வரி வருகிறது. சென்னை சங்கமம் கனிமொழி நடத்தியது எனவே அந்த வார்த்தையை நீக்க வேண்டும் அல்லது படத்தை தடை செய்வேண். ஜெயலலிதா.   # இமாஜினிஷன்.


மங்காத்தா படத்தில் அதிகமாக புகைபிடிக்கும் காட்சிகள் உள்ளது எனவே அந்த படத்தை தடை செய்யவேண்டும் அன்புமணி # சாரி கொஞ்ச நாள் தூங்கிடேன்.

7 ஆம் அறிவு படத்தில் தமிழர்கள் திருப்பி அடிக்க வேண்டும் என சூரியா கூறுவது வன்முறையை தூண்டும் வசனம் எனவே அந்த படத்தை தடை செய்ய வேண்டும்.- தங்கபாலு  # ஏன்பா நான் சரியா பேசுறேனா?

“சோனியா, சோனியா சொக்கவைக்கும் சோனியா” என பாடி எங்கள் தலைவிய கிண்டல் செய்த ரஹ்மானை கைது செய்ய வேண்டும் # ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்


“வ- குவார்டர் கட்டிங்” என பெயர் வைத்தது என்னை கிண்டல் செய்வது போல் உள்ளது  # விஜய்காந்த்



“ஜில்லாக்” பாடலில் “நாட்டு கட்டை, டவுனு கட்டை இரண்டும் கலந்த செம கட்டை..” என மரத்தை பற்றி பாடி எங்களை கிண்டல் செய்கிறார் விஜய். # ராமதாஸ்.






விஜய் வேலாயுதத்தில்  “ஜில்லாக்” பாடலில் "சூரியனே தேவையில்லை .." என பாடியதால் தான் நாங்கள் தோற்றோம் ..  # கருணாநிதி




Friday, October 28, 2011

அரசியல்வாதி ஆவது அப்படி ?




டாக்டர் ஆவது எப்படி? ஆசிரியர் ஆவது எப்படி? பிளாக்கர் ஆவது எப்படி? ஏன் சாமியார் ஆவது எப்படினு கூட எல்லாரும் எழுதிட்டாங்க. ஆனா அரசியல்வாதி ஆவது எப்படினு யாரும் எழுதவில்லை. இந்த உலகத்திலேயே அதை எழுத சிறந்த நபர் நீங்கள்தான் என கூறி என்னை எழுததூண்டிய 1,00,000 க்கு மேற்ப்பட்ட பதிவர்களுக்கு நன்றி.

  1. கட்சியை தெரிவு செய்யுங்கள்.

·         எதாவது ஒரு கட்சியில்  சேருங்கள். கொள்கை, கன்றாவிலாம் பாக்காதீங்க( எந்த கட்சில இதெல்லாம் இருக்கு?).

·         அந்த கட்சியில் உங்கள் ஊர் முக்கிய புள்ளியின் பிறந்த நாள், மகள் வயசுக்கு வந்த நாள், அவர் முதல் முறை குப்புர படுத்த நாள் என அனைத்து நாளுக்கும் வாழ்த்து போஸ்டர் அடித்து அவர் கண்னில் படும் இடத்தில் ஒட்டவும்.


  1. தலைமையை காக்காபிடிக்கவும்.

·         கட்சி தலைவருக்கு பேதிவந்தா கூட உடனே அவருக்காக மண் சோறு சாப்பிடனும்(அதையும் போட்டோ எடுத்துகனும்).
·         வருங்கால நிரந்தர முதல்வர், ஜனாதிபதி, அமெரிக்க அதிபர் என வாய்ல வந்தத அடிச்சுவிடனும்.
·         தலைவர் கைது செய்யபடலாம் என செய்தி வந்ததும் மண்னனெய்ல தண்னிய கலந்து மேல ஊத்திகனும்(வேண்டாம்னு தடுக்க 5 பேர் ரெடியா இருக்கனும்)

  1. போட்டோ .

·         வெள்ளை வேட்டி, சட்டையில் கும்பிடுவதுபோல, வயதான கிழவியை கட்டிபிடிப்பது போல, குழந்தையுடன் உட்காந்து சாப்பிடுவது போல, 1000 மக்கலுக்கு மத்தில நிற்ப்பது போல, யேசு, ராமர், காந்தி, போல போட்டோ எடுத்து வைத்து கொள்ளுங்கள்.

  1. வாக்குறுதிகள் :

·         எந்த அரசியல்வாதியும் சொன்னதை செய்யபோவதில்லை. எனவே என்ன வேண்டுமானாலும் சொல்லுங்கள். உங்களூக்காக சில..

·         18 வயது உள்ளவர்கள் ஒரு ஓட்டு போடலாம் என்பது போல 36 வயது உள்ளவர்கள் 2 ஓட்டு போடலாம்.

·         எங்கள் ஆட்சியில் வங்கால விரிகுடாவில் கண்டிப்பாக தூறு வாரப்படும்

·         எங்கள் ஆட்சியில்தான் ஐஸ்வர்யா ராய் கர்ப்பமானார்.

·         இலங்கையில் மக்கள் தொகைகுறைய நான்கள் தான் காரணம்.

·         எங்களுடன் கூட்டணி வைக்க ஓபாமாவே ஆசைப்பட்டார்.



டிஸ்கி : இவற்றை முயர்சி செய்து அடிவாங்கினால் சங்கம் பொறுப்பல்ல.





Sunday, October 23, 2011

என்ன கொடுமை சார் இது ?

கிழே சில படங்கள் உள்ளது . அந்த படங்களில் உள்ளவர்கள் இடத்தில் நீங்கள் இருந்தால் என்ன செய்விர்கள் ...?












கண்டிப்பா மேலே உள்ள தலைப்பைதான் சொல்லுவிர்கள் ..

Monday, October 17, 2011

இவருடன் போட்டி போட யார் தயார் ?



நகைசுவை திலகம்

காமடி பிசாசு

சிரிப்பு டாக்டர் ( விஜய் இல்லை )


நமது உள்ளம் கொள்ளைகொண்ட நகைசுவை புயல் சாம் ஆண்டர்சன் அவர்களின் வீடியோ தொகுப்பு  உங்களுக்காக ..



நடிப்பு திறமை வளர்ப்பது எப்படி ?


நடனம் ஆடுவது எப்படி ?


ரஜினிக்கு போட்டியாக ..



மைகேல் ஜாக்சண்க்கு இணையாக ..



டிஸ்கி : விக்கியுடன் சேர்ந்து ரொம்ப கெட்டுபோய்டேன் ..
அதான் ஒரே வீடியோ பதிவா இருக்கு ..




Thursday, October 6, 2011

மகாபாரதத்தில் மங்காத்தா

இந்த பதிவிற்கும் அஜித்தின் மங்காத்தாவிற்கும் எந்த சம்மந்தமும்   இல்லை . நாடக உலக மன்னன் s .ve  சேகர் அவர்களின் நாடகம் ஒன்றின் தலைப்புதான் இது.


அவரது நாடகங்கள் நகைசுவைக்கு பெயர் போனவை .(அவர் வம்பு சண்டைக்கு பெயர் போனவர் ). இந்த நாடகத்தில் ஒரு விஞ்சனியின் விபரீத கண்டுபிடிப்பால் கடந்த காலத்துக்கு சேகர் சென்றுவிடுவார் . முதலில் வீரபாண்டிய கட்டபொம்மன்னிடம் இவர் பண்ணும் அலம்பல் , அடுத்து ஷாஜகனிடம் அவர் தஜ்மஹளை படம் எடுக்கு வாடகைக்கு கேட்பதும் அதனால் வரும் சண்டையும் அருமை .

மூன்றாவதாக மகாபாரத காலத்திற்கு சென்று கௌரவர்களை மங்காத்தா விளையாடி ஜெயிப்பார் . பின்பு 4089 வருடம் சென்று அவர் அடிக்கும் லூட்டி வயிறு குலுங்க சிரிக்கவைக்கும்.

நீங்களும் கேட்டு பாருங்கள் . கண்டிப்பாக பிடிக்கும் .
டவுன்லோட்  செய்ய ..





Tuesday, October 4, 2011

5



தினமும் மொக்கை போடாமல் என்றாவது ஒரு நாள் நல்ல விஷயம் அல்லது பொது அறிவு விஷயம் போடலாம் என நினைக்கிறேன். அந்த வகையில் இன்று.

பஞ்சதந்திரங்கள் :

  1. கூட்டாளிகளிடையே பேதம் உண்டாக்குதல்.
  2. நண்பர்களை சம்பாதித்தல்
  3. பகைவரிடம் உறவாடி வெல்லுதல்
  4. பொருள் அழிவு
  5. ஆராய்ச்சியின்றி செயலில்  இறங்குதல்.


பஞ்சமாபாதகங்கள் :

  1. கொலை
  2. பொய்
  3. திருட்டு
  4. மது
  5. குரு நிந்தை

ஐம்பெரும் காப்பியங்கள்

  1. சிலப்பதிகாரம்
  2. ம்ணிமேகலை
  3. சீவகசிந்தாமணி
  4. வளையாபதி
  5. குண்டலகேசி

ஐஞ்சிறு காப்பியங்கள்

  1. உதயண குமார காப்பியம்
  2. நாககுமாரகாவியம்
  3. யசோதா காவியம்
  4. சூளாமனி
  5. நீலகேசி

பஞ்சவர்ணங்கள்

  1. வெள்ளை
  2. கருப்பு
  3. சிவப்பு
  4. பசுமை
  5. பொன்னிறம்

பஞ்சரத்தினம்

  1. வைரம்
  2. முத்து
  3. மாணிக்கம்
  4. னீலம்
  5. மரகதம்

ஐம்படைத்தாலி

  1. சங்கு
  2. சக்கரம்
  3. கதை
  4. வாள்
  5. வில்   , இவை இனைந்த உருவம் கொண்ட குழந்தைக்கு போடும் நகையே ஐம்படைத்தாலி ஆகும்

கடைசியாக ..

  1. அரசன்
  2. கோ
  3. மன்னன்
  4. கிங்
  5. மாவீரன்    இதெல்லாம்  ராஜா “ என்ற பொருளில் வருபவை.
                
  


Monday, October 3, 2011

நாஞ்சில் மனோ Vs கருண் Vs சி.பி – யார் அதுல பெரிய ஆள்?



நம்ம பதிவர்கள் நாஞ்சில் மனோ ,கருண் ,  சி.பி மூவரும் ஒரே பெண்ணை டாவடித்து வந்தனர். (அந்த பெண் இந்த மூவரையும் கண்டுகல) யார் அந்த பெண்ணை கழுத்தருப்பது Sorry கல்யாணம் முடிப்பது என போட்டி. இந்த பிரச்சனை நம்ம நாட்டாமை விக்கியிடம் சென்றது.

அவர் அந்த பெண்ணை பிக்கப்பன்ன நினைத்து மூவருக்கும் ஒரு போட்டி வைத்தார். ஜெயிப்பவர்களுக்கு அந்த பெண் சொந்தம் என சொல்லிவிட்டார்.



விக்கி ஒரு புது மெஷின் கண்டுபிடித்துள்ளார். அதில் 10 பல்ப் இருக்கும். யாராவது அந்த மெஷினிடம் பொய் சொன்னால், பொய்யின் அளவுக்கு ஏற்ப்ப பல்ப் எரியும். நாஞ்சில் மனோ, கருண் , சி.பி மூவரில் யார் பெரிய பொய் சொல்கின்றார்களே அவர்கள் வெற்றி பெற்றவர் ஆவார். ஆனால் சொல்லும் பொய் English ல சொல்லவேண்டும்.

கருண்

“  I Think I am the Tamilmanam Top Blogger…”

மெஷினில் 3 பல்ப் எரிகிறது.

சி.பி

“ I Think I don’t Like Gilmaa Movies….”

மெஷினில் 6 பல்ப் எரிகிறது.


இறுதியாக நம்ம மனோ…மெஷின் முன்னால் நின்று…

        “ I Think…….



“டமால்… எல்லா பல்பும் பயங்கர பிரகாசமாக எரிகின்றது…

ஆயிரம் இருந்தாலும் மனோ மனோதாங்க…



டிஸ்கி : இந்த காதல் கதையை மனோ தனது அடுத்த பதிவாக போடுவார்
          என நம்புகிறேன்.






Wednesday, September 28, 2011

பதிவே எழுதாமல் தமிழ்மணத்தில் முதலிடம் பெறுவது எப்படி ?

DAVID  BLAINE    மேஜிக் உலகின் முடிசூடா மன்னன் . சாதாரண சீட்டு கட்டில் இருந்து அந்தரத்தில் மிதக்கும் அதிசயம் வரை அனைத்தையும் செய்யகூடிய அபூர்வ மனிதர்.(நித்யானந்தா அந்தரத்தில் பறப்பேன் என புருடா விட்டது போல இல்லை ).

அவர் செய்த பல மேஜிக் வீடியோவின் தொகுப்புகள் உங்களுக்காக ..
தெருவில் செய்யும் மேஜிக் :

அவரின் மிக சிறந்த மேஜிகில் ஒன்று இது :



சீட்டு கட்டு மேஜிக் :


டிஸ்கி  1  : பதிவே எழுதாமல் தமிழ்மணத்தில்  முதலிடம் பெற ஏதாவது மேஜிக் இருக்கா ? 

டிஸ்கி 2  : தலைப்பை ஏட்டிக்கு போட்டியாக வைத்தால் தான் வேலைக்கு ஆகும் 
                     என யாரோ சொன்னதால் தான் இந்த தலைப்பு .



Saturday, September 24, 2011

தீவிரவாதிகள் பிடியில் பதிவர்கள்.




ஒரு கட்டிடத்தில் நமது பதிவர்கள் சந்திப்பு நடக்கிறது. அந்த சமயத்தில் ஒரு தீவிரவாதி உள்ளே புகுந்து அனைவரையும் பிடித்து கொள்கிறான். அந்த நேரத்தில் அவர்கள் ரியாக்ஷன் அப்படி இருக்கும் என ஒரு கற்பனை.

சீனா : நாம வேனா வாரம் ஒருத்தரை தீவிரவாதியிடம் பேச்சுவார்த்தை
        நடத்த அனுப்பலாமா?

சித்ரா : ஐயா.. இது வலைசரம் இல்லை.. கொலை சரம்.

சீனா : நீ போய் ஒரு டான்ஸ் ஆடு. அதை பார்த்து அவன் பயத்துல
        செத்துடுவான். நாம தப்பிச்சுடுலாம்.

கூடல் பாலா: அய்யோ ! வேண்டாம்.. பில்டிங் கொஞ்சம் பழசு.. நான் வேணா
         தீவிரவாதிக்கு எதிரா ஒரு போராட்டம் நடத்தட்டா?

சீனா : 2 நாளாதான் போராட்டம் நடத்தாம இருக்க.. வேண்டாம் விடு.

வேடந்தாங்கல் கருன் : நான் வேனா ஒரு கவிதை சொல்லட்டா?

சீனா : கவிதை வேண்டாம் . அவங்கிட்ட போய் ஒரு 2 மணி நேரம் வகுப்பு
        எடு. அவன் தானே ஒடிடுவான்.

வேடந்தாங்கல் கருன் : நம்ம சி.பி எங்கே ?

சீனா : புதுசா கண்னடிக்கும் கன்னி” னு ஒரு கில்மா படம் வந்து இருக்கு. அத பார்த்து விமர்சனம் எழுத போயிருக்கார். வாங்க பலே பிரபு நீங்க என்ன செய்யலாம்னு சொல்லுங்க ?

பலே பிரபு : நான் அந்த தீவிரவாதியின் பயோடேட்டா வை வாங்கி என்
               வலையில் போடவா ?

சீனா : நீ ஒன்னும் போடவேண்டாம். அதோ வந்தேமாதரம் சசி வாரார்
        அவர்கிட்ட கேட்போம்.

சசி : வைரஸ்களிடம் இருந்து தப்பிபது எப்படி தெரியுமா ?

கருன் : முதலில் தீவிரவாதியிடம் இருந்து தப்பிபது எப்படினு சொல்லு ?

சசி : ஆண்டி வைரஸ்…….

சி.பி : என்னது ஆண்டியா ? எங்கே?

சசி : யோவ்.. நான் சொன்னது ANTI VIRUS

சி.பி ; அதோ விக்கி தக்காளி வாரான். அவங்கிட்ட கேட்போம்.

விக்கி : என் குட்டிசுவர் தொடரை படிக்க சொல்லுவோம். அத படிச்சுடு
          அவன் எப்படி உயிரோடு இருப்பானு பார்கிறேன்.

ரமேஷ் : நம்ம டெர்ரர் கும்மி குருப்பை விட்டு கலாய்க சொல்லலாமா?

சி.பி : 4 நாள் கழித்து கொல்லுரவன் உடனே கொன்னுடுவான்.

நாஞ்சில் மனோ : நான் என் லேப்டாப் வச்சு எதாவது பண்ணடா ?
கவிதைவீதி சௌந்தர் : வேண்டாம் . அப்புறம் நான் கவிதை சொல்லி உன்னை கொன்னுடுவேன் .
                                 சரி எங்கே நம்ம தமிழ்வாசி ?
நாஞ்சில் மனோ : அவர் எப்பவோ ஆதிவாசியா போய்டார் .

கவிதைவீதி சௌந்தர் : சரி பன்னிகுட்டி ராமசாமி எங்கே ?

நாஞ்சில் மனோ : அவர் பூமிய தேடி போய்டார் .

கருன் : அங்க பாருங்க.. நம்ம FOOD திவிரவாதிக்கு எதோ குடிக்க குடுத்தார் . அவன் மயங்கி விழுந்துடான்.

சி.பி. : வெரி குட், FOOD. எப்படி உனக்கு மயக்க மருந்து குடுக்குற ஐடியா
        வந்தது ?

FOOD :  ஐயோ ! ! நான் மயக்க மருந்து குடுக்கல.

கருன் : பின்னே என்ன குடுத்த ?

FOOD : நான் தயாரிச்ச சூப்பைதான் குடுத்தேன்.

எல்லாரும் மயக்கம் அடித்து விழுகின்றனர்.

டிஸ்கி 1: சீனா ஐயா கோவித்துகொள்ள கூடாது.

டிஸ்கி 2: சிரிப்பு வரலைனா நான் பொருப்பு இல்லை

டிஸ்கி 3: இதில் இடம்பெற்ற பதிவர்கள் தவறாக எடுத்துகொள்ளகூடாது.

இப்படிக்கு :  டிஸ்கி மேல டிஸ்கி போடும் சங்கம்.