> என் ராஜபாட்டை : குஷ்பு விகடன் பேட்டி- காமெடி கலவை

.....

.

Thursday, March 8, 2012

குஷ்பு விகடன் பேட்டி- காமெடி கலவை



கார்த்திக் முதல் ராஜ்கிரண் வரை உங்களுடன் நடித்த ஹீரோக்களில் உங்களுக்குப் பிடித்தவர் யார்? ஏன்? மழுப்பல் இல்லாமல் நச்சென்று பதில் சொல்லுங்கள். நீங்கள்தான் ஸ்ட்ரெய்ட் ஃபார்வர்டு ஆயிற்றே?'' 

இனி யாரை பற்றி சொன்னா என்ன ... எப்படி இருந்தாலும்  இனிகதாநாயகி வேடம் கிடையாது ..
''கார்த்திக்தான் எப்பவும் என் ஃபேவரைட். நான் 'வருஷம் 16’ பண்றதுக்கு முன்னாடி இருந்தே, அவரை எனக்குப் பிடிக்கும். 'மௌன ராகம்’, 'அக்னி நட்சத்திரம்’ படங்கள் பார்த்த பிறகு எனக்கு கார்த்திக் பைத்தியமே பிடிச்சிடுச்சு. ஒரு நடிகன்னா துறுதுறுனு இப்படித்தான் இருக்கணும். அவர் நடிப்பை, ஸ்டைலை சும்மா வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. இது எல்லாத்தையும் மீறி அவர் என் குடும்ப நண்பர். அவர் உங்க எல்லாருக்கும்தான் கார்த்திக். ஆனா, எங்களுக்கு அவர் 'முரளி’. என் பசங்களுக்கு அவர் 'முரளிப்பா’... 'பெரியப்பா’. இன்னும் சொல்லணும்னா, அவரோட போட்டோ மட்டும்தான் என் வீட்ல இருக்கும். வேற எந்த ஹீரோ போட்டோவும் இருக்காது. என் கணவரோட அண்ணன் என்ற ஸ்தானத்தில் அவரை வெச்சிருக்கேன் நான்!''



''நீங்கள் சொன்னால் சரியாக இருக் கும்... தமிழ் சினிமாவின் அடுத்த சூப்பர் ஸ்டார் யார்?'' 

சுந்தர் . சி தான் .. தீ படம் பாத்ததுமே முடிவு பண்ணிடோம் 
 
''கண்டிப்பா அடுத்த சூப்பர் ஸ்டார் யாருமே இல்லை. எப்பவும் அவர்தான்... அவர் மட்டுமேதான் சூப்பர் ஸ்டார்!  ( இது தான் உண்மை )
ரஜினி சார் சினிமாவுக்கு வந்தப்ப, 'இவர்தான் சூப்பர் ஸ்டாரா வருவார்’னு யாரும் நினைச்சுப் பார்த்திருக்க மாட்டாங்க. ஏன்... அவரே நினைச்சிருக்க மாட்டார். ரஜினி சாரே சினிமாவில் வளர்ந்த பிறகு, இப்ப ராஜன் கேட்கிற மாதிரி அப்ப யாராவது, 'இவர் சிவாஜி சார் இடத்தைப் பிடிப்பாரா? எம்.ஜி.ஆர். இடத்தைப் பிடிப்பாரா?’னு கேள்வி கேட்டு இருப்பாங்க. ஆனா, அவங்க இடத்தையா ரஜினி சார் பிடிச்சிருக்கார்? இங்கே யாரும் யாரோட இடத்தையும் பிடிக்க முடியாது. இன்னும் 20 வருஷத்துக்குப் பிறகு, 'அஜீத், விஜய், சூர்யா இடத்தை யார் பிடிப்பாங்க?’னு கேட்கலாம். இது ஓர் ஓட்டம். ஒவ்வொருத்தர் நடிப்பு, உழைப்பைப் பொறுத்து அவரவருக்கான இடம் நிர்ணயிக்கப்படும். அவ்வளவுதான்!''




''உங்களை இயக்கியதில் உங்களைக் கவர்ந்தவர் யார்? யாருடைய இயக்கத்தில் நடிக்க விரும்புகிறீர்கள்?'' 

முதலில் யார் என்னை வைத்து இயக்க விருப்பம் னு கேளுங்க ..( படத்துலதான் )
 
 ''நான் எப்பவும் மணிரத்னம், பாரதிராஜா, பாலசந்தர்னு மூணு பேரின் ஃபேன். இவங்களோட படங்களை முடிஞ்சா முதல் நாள் முதல் ஷோவே பார்த்துடுவேன். ஆனா, என்னை இயக்கிய இயக்குநர்களில் எனக்குப் பிடித்தவர் பி.வாசு சார். அவர் என்னை வெச்சு கிட்டத்தட்ட 15 படங்களை இயக்கியிருக்கார். இப்போதைய இயக்குநர் களில் நான் நடிக்க விரும்புவது கௌதம் மேனன், வசந்தபாலன்னு பெரிய லிஸ்ட்டே இருக்கே!''




'' 'சின்ன குஷ்பு’ என்று யாருக்காவது பட்டம் கொடுக்கச் சொன்னால், இப்போதைய கதாநாயகிகளில் யாருக்குக் கொடுப்பீர்கள்?'' 

நயன் தாராவ சொல்லலாம் அவர்தான் இப்ப waiting  லிஸ்ட் ல இருக்கார் (பிரபு தேவாக்கு அடுத்து யாருன்னு )
''யாருக்கும் கிடையாது! அவங்க ஏன் சின்ன குஷ்புவா, சின்ன சிம்ரனா, சின்ன ஜோதிகாவா இருக்கணும்? அவங்க அவங்களாவே இருக்கட்டுமே. என்னை யாரும் சின்ன நதியா, சின்ன ராதான்னு கூப்பிடலையே. குஷ்புவாக மட்டும் பார்த்ததுதானே எனக்கு ப்ளஸ். அந்த ப்ளஸ் அவங்களுக்கும் கிடைக்கட்டுமே!''




''பொதுவாக, ரஜினியைப் புகழ்ந்து பாடும் பாடல்கள்தான் ஹிட் ஆகும். ஆனால், ரஜினியே உங்களைப் பற்றிப் பாடுவதுபோல அமைந்த 'கூடையில் என்ன பூ... குஷ்பு’ பாடலுக்கு அவருடன் ஆடும்போது உங்கள் மனநிலை எப்படி இருந்தது?'' 


 '' 'அண்ணாமலை’ படத்துல அந்தப் பாட்டு இருக்கிற விஷயமே எனக்குத் தெரியாது. ஒரு காமெடி சண்டைக் காட்சி எடுத்துட்டு இருந்தப்ப, 'உன் பேர்ல படத்துல ஒரு பாட்டு இருக்கு... தெரியுமா குஷ்?’னு ரஜினி சார் கேட்டார். நான் நம்பலை. ஆனா, ஒலிப்பதிவாகி வந்த பாட்டை நாகராவில் கேட்டுட்டு, 'சார், இது பயங்கர காமெடியா இருக்கு. இந்தப் பாட்டை யார் கேப்பாங்க?’னு விழுந்து விழுந்து சிரிச்சேன். ஆனா, அவரோ, 'டெஃபனிட்டா இந்தப் பாட்டு ஹிட்டாகும் குஷ்’னு சொன்னாரு. அந்தப் பாட்டை ஷூட் பண்ணும்போதுகூட லொகேஷன்ல நான் சிரிச்சுக்கிட்டேதான் இருந்தேன். ஆனா, தியேட்டர்ல பார்த்தப்பதான் அந்தப் பாட்டோட ரீச் புரிஞ்சது. 21 வருஷத்துக்கு அப்புறமும் அந்தப் பாட்டை டி.வி-யில் பார்க்கும்போது, ஷூட்டிங் ஸ்பாட்ல நடந்த விஷயங்கள், சிங்கப்பூர் ஷோ போனபோது நானும் ரஜினி சாரும் அந்தப் பாட்டுக்கு சேர்ந்து டான்ஸ் பண்ணினதுனு நிறைய விஷயங்கள் ஞாபகத் துக்கு வரும். ஆனாலும், எனக்கு அந்தப் படத்தில் பிடிச்ச பாட்டு, 'அண்ணாமலை அண்ணாமலை ஆசைப்பட்டேன் அண்ணாமலை’தான்!
அப்புறம் அந்தப் படம் பத்தி இன்னொரு ரகசியம் சொல்லவா? ஆக்ச்சுவலா 'அண்ணாமலை’ படம் ஷூட்டிங் ஆரம்பிச்சப்ப, படத்திலும் என் கேரக்டர் பேர் குஷ்புதான். நடிக்கும்போது ரஜினி சார் ஒவ்வொரு முறை, 'குஷ்பு... குஷ்பு...’னு கூப்பிடும்போது என்னையும் அறியாமல் சிரிச்சிடுவேன். அதனால, கிட்டத்தட்ட பாதிப் படம் ஷூட்டிங் முடிஞ்ச பிறகு என் கேரக்டர் பேரை 'சுப்பு’னு மாத்திட்டாங்க. இப்பவும் படம் பார்க்கும்போது நல்லாக் கவனிச்சா, படத்தின் ஆரம்பக் காட்சிகளில் விகடன் சார் உட்பட எல்லாரும் என்னைக் கூப்பிடும்போது 'குஷ்பு... குஷ்பு’னுதான் உதடு அசையும்!''

நன்றி : விகடன் 

இதையும் படிக்கலாமே :

துப்பாக்கி Vs பில்லா ௨

 

தமிழ் சினிமா வரலாற்றில் முதல் முறையாக ...

 

 

5 comments:

  1. நல்லாதானே போய்க்கிட்டு இருக்கு. அப்புறம் ஏன் இப்படி?

    ReplyDelete
  2. நல்லாத்தான் சொல்லுறாங்க அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    சூப்பர் கமண்ட்ஸ் பாஸ்

    ReplyDelete
  3. கடவுளே கடவுளே கடவுளே கடவுளே ...!

    ReplyDelete
  4. நல்ல கமெண்ட்களுடன் ஜாலி பகிர்வு.

    ReplyDelete
  5. பெரீரீரீப்பா கார்த்திக் பெரீப்பா....நல்லாத்தான்யா இருக்குயா ஒறவு முறை....

    ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...