> என் ராஜபாட்டை : விருது

.....

.
Showing posts with label விருது. Show all posts
Showing posts with label விருது. Show all posts

Monday, February 20, 2012

பிரபல பதிவர்கள் கலந்து கொள்ளும் பட்டிமன்றம் – அனைவரும் வருக.





அன்பு காணமல் போன கனவுகள் பிளாக் சகோதரி ராஜீ அவர்கள் எனக்கு ஒரு விருது தந்துள்ளார். இதை கேள்விபட்டதும் பலபதிவர்களுக்கு ஒரு சந்தேகம் , இந்த விருது இவருக்கு எதுக்கு வழங்கப்பட்டது.( எனக்கும் அதே சந்தேகம்தான்). காரணத்தை கண்டறிய மூன்று குழுக்கள் அமைக்கபட்டது.( கூடன்குளத்துக்கு அமைக்கபட்ட குழுபோல இது பொய் சொல்லாது). இவர்கள் தாங்கள் கண்டறிந்த காரணத்தை வைத்து ஒரு பட்டிமன்றம் நடத்த போகின்றனர்.


குழு 1 : ராஜாவின் எழுத்து நடையே இந்த விருதுக்கு காரணம் .

     இதில் எனது குரு கரண் , அகில உலக ஷகிலா ரசிகர்மன்ற தலைவர் சி.பி , அதிரடி நாயகன் மனோ பேச்சாளர்களாக உள்ளனர் .

குழு 2 : ராஜாவின் தொழில்நுட்ப அறிவே இந்த விருதுக்கு காரணம் .

இந்த அணியில் தொழில்நுட்ப காண்டாமிருகம் (எத்தனை நாளுக்குத்தான் புலினு சொல்றது?) அண்ணன் சசி , ஆனந்த விகடனில் சமிபத்திய ஓனர் ( என் விகடன்னு தானே சொன்னார் ..) தமிழ்வாசி , அமைதி புயல் பிளாக்கர்  நண்பன் அப்துல் பாசித் ஆகியோர் பேச்சாளர்களாக உள்ளனர் .

குழு 3 : ராஜாவின் நகைசுவை உணர்வே இந்த விருதுக்கு காரணம் .

இந்த அணியில் தமிழ்மணம் கொன்றான் , நகைசுவை வள்ளல் bio-data புகழ் பண்ணிகுட்டி அவர்கள் மற்றும் அண்ணாமலை பல்கலைகழகத்தின் வருங்கால துணை வேந்தர் நாய் நக்ஸ் நக்கீரன் , மண்ணின் மைந்தன் காடு சாரி வீடு சுரேஷ் ஆகியோர் பேச்சாளர்களாக உள்ளனர் .

நடுவர் : நாட்டாமை விக்கியுலகம்

நாள் : 30 2 2012

இடம் : நாயுடு ஹால் சாரி நாயகர் ஹால் மதுரை.


டிஸ்கி ; இந்த விருதை இன்னும் சிலருக்கு அளிக்க விரும்புகின்றேன் .

  1. வடகரை தாரிக் செலவில்லாமல் அனைத்து புத்தகங்களையும் தருவதால்

  1. S.ராமன் வேலூர் உழியர்களுக்காக குரல் குடுபவர் இவர்

  1. வினோ என்வழி என்னும் வலைத்தளம் முலம் கலக்கும் ரஜினி ரசிகர் .

  1. கவிதை வீதி சௌந்தர் இவர் என் இனம் ( ஆசிரியர்னு சொல்லவந்தேன்) கவிதை மன்னன்.

  1. தமிழ்த்தோட்டம் வித்தியாசமான வலைத்தளம் நடத்துகின்றார் .
  2. எனத் தி வேர்ல்ட் என்னும் தளம் முலம் பல அறிய தகவல் தரும் ஸ்டாலின் வெஸ்லி  

Tuesday, January 3, 2012

சிறந்த தொழில்நுட்ப வலைத்தளம் விருது .




இந்த புத்தாண்டில் வழங்க படும் முதல் விருது இது. பல வலைதளங்கள் தொழில்நுட்ப பதிவு போடுகின்றனர். ஆனால் எல்லரைவிடவும் முதலிலும் , தெளிவாகவும் , புரிந்து கொள்ள எளிமையாகவும் இன்றைய கணினி உலகை பற்றி எழுதுவதில் வல்லவர் இவர் .

வலைத்தளம் பயன்படுத்தும் நாம் அனைவரும் இவரின் பதிவில் இருந்து ஏதாவது ஒன்றையாவது நமது தளத்தில் இணைத்திருப்போம். Facebook, Tiwtter , G + , Blog , Webcasting , Domain , Gmail, Yhoo chat , Facebook Chat என இவர் எழுதாத விஷயங்களே கிடையாது.

எனது தளத்தில் ஓடும் popular post widget இவரின் கைகாரியம்தான். வலைதளத்தை அருமையாக வடிவமைக்க இவரின் பதிவுகள் கண்டிப்பாக உதவும் .

இத்தகைய பெருமை கொண்ட அவர் அண்ணன் ந்தேமாம் சசி அவர்கள் .

அவர்களுக்கு இந்த விருதை வழங்குவதில் ராஜபாட்டை பெருமிதமும் , மகிழ்ச்சியும் கொள்கிறது .

டிஸ்கி : ஏற்கனவே அண்ணன் நாஞ்சில் மனோ அவர்கள் விருது வழங்கிவிட்டார். இருந்தாலும் அது இன்டர்நேஷனல் அவார்ட் , இது நேஷனல் அவார்ட் .



Wednesday, November 30, 2011

பல்சுவை வலைதளம் விருது




இந்த மாதத்திற்க்கான பல்சுவை வலைதளம் விருதை பெறுபவர் நம்து விக்கியுலம் வெங்கட்  அவர்கள். பதிவர்களால் செல்லமாக வீடியோ விக்கி என அழைக்கப்படுபவர் இவர்.

  1. இவரால் தான் YOUTUBE என்ற தளமே பிரபலமானது
  2. இவருக்கு உள்குத்து போடவே தெரியாது.
  3. இலங்கை பதிவர்கள் எல்லாரும் இவர்க்கு நெருங்கிய நண்பர்கள்
  4. தமிழிக்கு இவரால் அறிமுகம் செய்யப்பட்ட வார்த்தை “கிளிச்சிக்காஸ்”
  5. இவருக்கு கோபமே வராது. (மீறி வந்தா..)

வியட்னாம் பற்றியும், அங்கு உள்ள வாழ்கைமுறை பற்றியும் அருமையாக எழுதியவர். இவர் எழுத்தில் கிண்டல் தலைவிரித்தாடும்( சில சமயம் சர்சைகளும்).  யாரும் அறியாத ஆனால் அனைவரும் விரும்பும் வகையில் வீடியோகளை தேடிபிடித்து பதிவு செய்வதில் கில்லாடி. இவருக்கு விருது வழங்குவதில் பெருமை கொள்கிறோம்.





Monday, October 10, 2011

இந்த மாத SUPER BLOGGER விருது


பதிவுலகில் அடியடுத்து வைத்த நாள் முதல் இன்று வரை தனது எழுத்துகளால் அனைவரையும் கட்டி போடும் அருமையான பதிவர் இவர் . இவரது எழுத்து நடை , நகைசுவை உணர்வு , சமுகத்தின் மேல் இவருக்கு உள்ள அக்கறை இவற்றால் இவர் தொடர்ந்து தமிழ்மணத்தில் முதலிடத்தில் இருக்கிறார் . 

தனது பதிவுகள் மட்டுமே அதிக வாக்கு பெற்று முன்னிலை பெறுவதை விரும்பாமல் , 18 வாக்குக்கு மேல் தமிழ்மணத்தில் போடவேண்டாம் என தானே விரும்பி ஓட்டை வேண்டாம் என்றது பலரின் பாராட்டை பெற்றது .

சில பதிவுகள் ஆபாசமாக இருகின்றன என குற்றாட்டுகள் இருந்தாலும் இவருக்கு பெண்கள் மத்தியில் ஆதரவு அதிகம் . பதிவுலகில் நண்பர்களும் அதிகம் . அப்படி பட்ட பதிவர்தான்          "   நாற்று  "  நிரூன்.

அவருக்கு இந்த விருதை அளிப்பதில் ராஜபாட்டை பெருமை அடைகிறது .

Friday, August 26, 2011

பல்சுவை வலைதளம் விருது



இந்த மாதத்திற்கான பல்சுவை வலைதளம் விருதை பெறுபவர் நமது நாஞ்சில் னோ அவர்கள்.


அவரின் சிறப்புகள் :

  1. ஒரு லேப் டாப் வைத்து 10 பதிவு போடுவது.
  2. குற்றாலத்தில் குளித்ததை வைத்து பல பதிவுகள் போடுவது.
  3. பதிவர்கள் எவ்வளவு கலாய்த்தாலும் தாங்குவது.( ரொம்ப நல்லவரு)
  4. தனது டெர்ரர் புகைபடங்களை பயப்படாமல்(நமக்குதான் பயம் வரும்) தனது தளத்தில் வெளியிடுவது.
  5. தக்காளியையும் , சிபியையும் கலாய்த்து பதிவு போடுவது.
  6. பல லட்சகணக்கான வாசகர்களின் வேண்டுகோளுக்கினெங்க தனது வலைதளத்தில் HEADER AREA ல் இருந்த தனது புகைபடத்தை எடுத்தது.

இப்படி இவரை பற்றி பல 1000 கனக்கான சிறப்புகள் சொல்லலாம். ஆனால் நேரம் இல்லாததால்(நிறைய பொய் சொல்லகூடாது என்பதால்) இத்துடன் முடிக்கிறேன்.

இத்தகய சிறப்பு வாய்ந்த அண்ணன் மனோவுக்கு இந்த விருதை வழங்குவதில் உன்மையாகவே மகிழ்ச்சி அடைகிறேன்.

Saturday, July 16, 2011

மிக சிறந்த பல்சுவை வலைத்தளம் விருது

பதிவுலகில் பலர் இருந்தாலும் சிலர் தான் அனைவரையும் கவர்கின்றனர் . கதை , கவிதை , கட்டுரை , சினிமா , அரசியல்  என அனைத்து துறைகளிலும் தனது எழுத்து திறமையால் பல பதிவுகளை படைத்து நம்மை மகிழ்விப்பவர் இவர்.

சமுக அக்கறையுடன் எழுதுவதில் வல்லவர் இவர் . அதில் தனது சொந்த கருத்துகளை அனைவரும் ஏற்று கொள்ளும் வகையில் எழுதுவார் .கவிதை பல எழுதி வைரமுத்துவை வம்புக்கு இழுப்பவர் .

அவர்தான் நமது " வேடந்தாங்கல் " ருண் .


அவருக்கு இந்த பல்சுவை வலைத்தளம் விருதை வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன் .

Tuesday, March 15, 2011

விருது


இலங்கை கொண்டான்  - கருணாநிதி

இலங்கைல அப்பாவி தமிழர்கள் சாகும் போது கூட  கடிதமும் , அரை மணி நேரம் உண்ணாவிருதமும் இருந்த சாதனைக்காக.

பல்டி மன்னன்  - ராமதாஸ்

கடந்த மாதம் வரை கருணாநிதியை திட்டிவிட்டு அன்பு மணிக்கு ராஜ்யசபா பதவி உண்டு என்றதும் கருணாநிதிதான் உலகமகா உத்தமர் என பல்டி அடித்த காரணத்துக்காக .

ஆடுடா ராமா ஆடுடா - கி - வீரமணி

கருணாநிதி எது சொன்னாலும் அப்படியே அறிக்கைவிட்டு சூடு படும் காரணத்திற்காக ..


நான்தான் First  - மன்சூர் அலிகான்
 
பெரிய கட்சிகளே தேர்தல் அறிக்கை விடாத நிலையில் நான் ஜெயித்தால் அனைவருக்கும் வாஷிங் மெசின் இலவசம் என அறிவித்த மன்சூர் அலிகான்


அப்பாவி அப்ருவர் - மன்மோகன் சிங்
எல்லா தப்பையும் தன் மேல போட்டு கொண்டு மன்னிப்பு கேட்பதால்




இன்னும் பல விருதுகள் இருக்கு .. உங்களுக்கு எதாவது விருது தோன்றினால் பின்னுடம் இடுங்கள் .