> என் ராஜபாட்டை : கதம்பம்

.....

.
Showing posts with label கதம்பம். Show all posts
Showing posts with label கதம்பம். Show all posts

Monday, July 28, 2014

கதம்பம் 28-07-2014





மிக நீண்ண்ண்ட இடைவெளிக்கு பின் கதம்பம் வருகிறது .


படித்தது :

நீண்ட நாட்களாகவே சாரு நிவேதிதா அவர்களின் நூலை படிக்கவேண்டும் என ஆசை ஆனால் அப்படி ஒரு வாய்ப்பு அமையவில்லை . அமேசன் தளத்தில் அவரது நூல் "தீராக்காதலி " கிடைத்தது . கொஞ்சமாவது காசுகொடுத்து வாங்கி படிப்போமே என்ற "நல்ல " எண்ணத்தில் ஆடர்போட்டு வாங்கி படித்தேன் . அந்த நடிகர்கள் கிட்டப்பா, பாகவதர் , பி,யு .சின்னப்பா போன்ற பெரும் தலைகளை பற்றிய பல அறிய தகவல்களின் தொகுப்பாக , கட்டுரையை எழுதியுள்ளார் .

அதில் உள்ள பல விஷயங்கள் மிகுந்த ஆச்சர்யத்தை கொடுத்தது . அதில் ஒரு தகவல் ..

"தமிழில் முதலில் இரட்டை வேடம் மற்றும் பத்து வேடம் போட்ட நடிகர் பி.யு. சின்னப்பா " என்பது புதிய, அறியாத தகவல் .

டிஸ்கி : இதை முகநூளில் போட்டபோது வாத்தியார் பால கணேஷ் அவர்கள் அடித்த கமெண்ட் :

"அவர் சின்னப்பா இல்லை "பெரிய"ப்பா ..."


செத்து தொலைங்கடா :


நேற்று சென்னையில் பைக் ரேசில் இடுபட்டு , விபத்தில் சிக்கி ஒரு மாணவர் உயிரிழந்த செய்தி கேட்டேன் . வருத்தத்தை விட கோவம்தான் வந்தது . படிக்கும் பையனுக்கு ஏன் விலையுர்ந்த ஸ்போர்ட்ஸ் பைக் ? பணம் இருக்கே என இப்படி வாங்கிகொடுத்து அவனை கெடுத்து , அந்த பையனும் ரேஸ் என போய் இப்போ உயிரைவிட்டுவிட்டான் . இனி துடித்து என்ன பயன் ?

இப்படி ரேஸ் போய் , ரேஸில் கலந்துகொள்ளும் ஆள்கள் செத்தால் பரவாயில்லை , அப்பாவியாக ரோட்டில் போகும் ஆட்களை காலி செய்துவிடுகிறார்கள் . எவனோ திமிரெடுத்து செய்யும் செயலுக்கு அப்பாவிகள்தான் பலியாக விடுமா ?

டிஸ்கி : இப்போ தலைப்பை படியுங்கள் 


பார்த்த படம் :

"வேலையில்லா பட்டதாரி " தனுஷின் மார்க்கெட்டை தூக்கி பிடிக்கும் படம் . ஆரம்பம் முதலே ஜாலியாக செல்கிறது . இடைவேளைக்கு பின் படம் தடம்மாருகிறது . கடைசி சண்டை தேவையே இல்லை. திணிப்பு . தனுஷின் உடம்பை காட்டவேண்டும் என்றே அந்த சண்டை போல . நம்ம படங்களில் தேவையே இல்லாமல் பாடல் ,சண்டைகளை சேர்ப்பதை எப்போது விடபோகிரர்களோ ?

படத்தில் லாஜிக் பற்றி யோசிக்க கூடாது . படத்துக்கு வந்தோமா , ஜாலியா என்ஜாய் செய்தோமோ போனோமான்னு இருக்கணும் . இங்கோ\இங்கிலீஷ் சரியா தெரியாதவன் எப்படி BPO இல் முதல் மாசமே 50000 சம்பாதிப்பான் , ஏலட்ரானிக் ஜாமர் எப்படி தனுஷின் வீடியோ ரெகார்ட்ராய் மட்டும் தடுக்கவில்லை என்று யோசித்தால் படம் பார்க்க முடியாது .


டவுட் :


பாலஸ்தீனத்தின் காஸா மீதான
இஸ்ரேலின் கொடூர
தாக்குதலுக்கு எதிர்ப்பு
தெரிவித்தும் இம்
மோதலை முடிவுக்கு
கொண்டுவராத
அமெரிக்காவை கண்டித்தும்
மும்பையில் பெப்சி, கோக்
குளிர்பானங்கள்
விற்பனைக்கு தடை
விதிக்கப்பட்டுள்ளது.

#ஆனா அதே அமெரிக்கன் கண்டுபிடிச்ச பேஸ்புகை மட்டும் தடை செய்யாம பயன்படுத்துவோம்.

#ஒரே கன்பியூஷன். . .



==============================================================
இந்தியா முழுதும் போட்டியிட்டு 44 சீட் மட்டும் ஜெய்த்து எதிர்கட்சி பதவி வேனும்னு கேட்குது. ஏன் ஒரு மாநிலத்தில் மட்டும் போட்டியிட்டு 37 சீட் ஜெய்த்த அ.தி.மு.க அந்த பதவியை கேட்க்ககூடாது?

10 ம் வகுப்பில் 480 எடுத்தவனை விட 12 ம் வகுப்பில் 482 எடுத்தவன் பெரிய ஆளா?

#டவுட்


============================================================
இலங்கை நிறுவனம் தயாரிப்பதால் "கத்தி" படத்தை தடைசெய்யவேண்டும்.

#செய்தி

அப்போ இலங்கைகு விமானம் விடும் சன் நெட் ஒர்க்கில் உள்ள டிவியை தடை செய்யனும்னு ஏன் யாரும் போராடல?

#ஊருக்கு இளிச்சவாயன் பிள்ளையார் கோவில் ஆண்டியா?

  

Wednesday, April 16, 2014

கதம்பம் 16-04-14









12 தேர்வு சதவிதமும் சில உண்மைகளும் :

வருடா வருடம் தேர்வு சதவிதம் உயர்வதாக அரசு சொல்கிறது . நாமும் மாணவர்கள் நன்றாக படிக்க ஆரம்பித்துவிட்டார்கள் என நெனைகிறோம் . ஆனால் அது உண்மையல்ல எனபது இந்த வருடம் பேப்பர் திருத்த சென்றபோது தெரிந்தது . மாணவன் என்ன எழுதினாலும் பரவாயில்லை முடிந்த அளவு அவனை பெயில் ஆக்காமல் மார்க் போடுங்கள் என சொல்லுகிறார்கள் . இப்படி பாஸ் போட்டால் எப்படி கல்விதரம் உயரும் என தெரியவில்லை .

இதிலும் பெயில் ஆகும் மாணவர்கள் பலர் உள்ளனர் . 15 மார்க் எடுத்தால் பாஸ் என்றால் அவன் எழுதுவதே 10 மார்க்குதான் எப்படி அவனை பாஸ் போடுவது ? 
இன்னுன் சிலர் திருத்தும் ஆசிரியர்க்கு என தொடக்கி ஒரு சோகமான கடிதத்தை கடைசி பக்கத்தில் எழுதுகிறான் . 

வாழ்க கல்வி துறை / முறை .


=========================================================================

ஆழ்துளை கிணறும் சீழ் பிடித்த சமூகமும் .


நேற்றுதான் ஒரு குழந்தையை காப்பற்றினார்கள் , அதுக்குள் இன்று மற்றொரு குழந்தை ஆழ்துளை கிணற்றில் விழுந்துவிட்டது . கடுமையான தண்டனைகள் இல்லாததே இதுக்கு காரணம் . குழந்தை மீண்டால் கொலை முயற்சி வழக்கும் , ஏதாவது ஆனால் (ஆக கூடாது ..) கொலை வழக்கும் பதியபட்டல் தான் திருந்துவார்கள் .

 
 ======================================================================

எது மதசார்பின்மை ?

நமக்கு பிடிக்குதோ இல்லையோ ஒரு குறிப்பிட்ட கட்சி மட்டும் ஊருக்குள் ஓட்டு கேட்க வரகூடாதுனு சொல்வது சரியா? நாளை ஒருவேளை அந்த கட்சி ஜெய்த்தால் எங்கள் ஏரியாவுக்கு எதும் செய்யாதீர்கள்னு சொல்வார்களா?

எதிரியே வீட்டுக்கு வந்தாலும் வரவேற்பதுதான் பண்பாடுனு எல்லா மதமும் சொல்லுது. ஓட்டு கேட்பது அவர்கள் இஷ்டம் போடுவதும், போடாததும் உங்கள் உரிமை. ஊருக்குள் வரகூடாதுனு சொல்லி நீங்களே ஊரைவிட்டு தனித்து போவதுபோல் தோன்றுகிறது.

#மாற்று கருத்துகள் வரவேற்க்கபடுகிறது.. . .


========================================================================
IPL திருவிழா :


பலரை கவர்ந்த , ஊழலை அதிகரித்த IPL இன்று துவங்குகிறது . இனி பல வீட்டில் சண்டைதான் . சீரியலா ? மேட்சா ? என ..

ஒரு வீட்டில் கனவன் ஆதிக்கமா? மனைவி ஆதிக்கமா? என தெரியவேண்டுமா? நாளை இரவு 8 மணிக்கு IPL ஓடினா கனவன் ஆதிக்கம், அப்பவும் சீரியல் ஓடினா( எல்லா வீடு போல) மனைவி ஆதிக்கம் தான். . .


===================================================================

உலகம் உருண்டை :

போன தேர்தலில் :
 
கலைஞர் டிவியில், விஜயகாந்தை கிண்டல் செய்யும் காட்சிகள் மற்றும் வடிவேலுவின் பேட்டிகள் ஓடியது.

இப்போ :

ஜெயா டிவியில் விஜயகாந்தை கிண்டல் செய்யும் காட்சிகள், வடிவேலு பேட்டி ஓடுது.

#உலகம் உருண்டைனு நிருபித்துவிட்டார்கள்!!!
   

Thursday, October 24, 2013

கதம்பம் 24-10-13



                  மிக நீண்ட இடைவெளிக்கு பின் உங்களுக்காக  கதம்பம் .



போராட்டம் :



அது என்ன விசித்திரம் என்று  தெரியவில்லை நமது நாட்டில் அரசியல்கட்சிகள் நடத்தும் எந்த போராட்டமும் ( ரயில் மறியல் , பஸ் மறியல் , சாலைமறியல் ) அந்த கட்சி தலைவர்கள் பிறந்தநாள் அல்லது அவர்கள் குடும்ப விழா நடக்கும் நாளில் மட்டும் நடப்பதில்லை . அவர்களுக்கு வசதியான நாளில் வைத்துவிட்டு அப்பாவி மக்களைத்தான் கஷ்டபடுத்துகின்றனர் . 

அமெரிக்காவை எதிர்த்து போராட்டம் நடத்தினால் கூட நம்ம ஊர் பஸ்சை  மறைத்துதான் நடத்துகிறார்கள் . காங்கிரஸ் கூட தான் கூட்டணி என முடிவு சொல்லிவிட்டு அவர்களை எதிர்த்து ரயில் மரியலாம் . இன்னும் பல தலைவர்கள் மக்களை ஒன்னும் தெரியாத மடையர்கள் என்றே நினைக்கிறார்கள் . 


பார்த்த படம் :



பலவருடங்களுக்கு முன் கேட்ட , இப்பவும் பார்க்க நினைத்த படம் "முகமது பின் துக்ளக் " . YOUTUBE இல் வேறு எதோ தேடும் போது கிடைத்தது . பிரின்ட் சரியில்லை என்றாலும் , சோ வின் பல வசனங்கள் செம . நிறைய வனங்கள் இன்றைய அரசியல் நிலைக்கும் ஒத்து  வர கூடியவை தான் .

அவற்றில் சில :

          : இதுவரை நீங்கள் ஓட்டு போட்டு ஜெயக்கவைதவர்கள் உங்களுக்கு ஒன்றுமே செய்யவில்லை . நானும் செய்யபோவதில்லை . எனவே எனக்கு ஒருமுறை ஓட்டு போடுங்கள் "


          " அடுத்த தேர்தலை பற்றி நினைப்பவன் அரசியல்வாதி
தனது அடுத்த தலைமுறையை பற்றி நினைப்பவன் தலைவன் "

        "மக்கள் ஒரு பிரச்சனையை பற்றி தீவிரமாக பேசுவார்கள் . அடுத்த பிரச்சனை வந்துவிட்டால் முந்தய பிரச்சனையை மறந்துவிடுவார்கள் "

      "நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சிமாருவர்கள் என தெரியும் இப்படி இவ்வளவு வேகமா மாறுவாங்கன்னு தெரியாது "

முடிந்தால் பாருங்கள் .


பார்த்து நொந்த படம் :


என் வாழ்நாளில் இரண்டு படங்கள் மட்டுமே பாதி பார்பதுக்குள்  தூக்கம் வந்தது . ஒன்று யா யா . மற்றது தனுஷின் "நையாண்டி ". படம் பார்க்க வருபவர்களை நையாண்டி செய்ய போகிறோம் என சிம்பாலிக்கா சொல்லத்தான் இப்படி பெயர் வைத்தார்களோ என்னவோ ,படம் செம போர் . இதுல நஸ்ரியா இடுப்பு பிரச்சனை வேறு . போங்கடா நீங்களும் உங்க படமும் .

படித்த புத்தகம் :


பதிவர் சந்திப்பில் டிஸ்கவரி புக் பேலஸ் வைத்திருத்த ஸ்டாலில் "ராஜீவ் கொலையும் தமிழர்கள் மீதான பழியும்  " என்ற புத்தகம்  வாங்கினேன் . இபோதான் படிக்க நேரம் வந்தது .

அதை படித்தபின் ஒரு கொலை வழக்கில் இவ்வளவு ஓட்டைகள் உள்ளது . நீதி துறை எப்படி இதை கண்டுகொள்ளாமல் உள்ளது என ஆச்சர்யமாக உள்ளது . உண்மையான காங்கிரஸ் காரர்கள் இதைப்படிக்க வேண்டும் . அப்புறம் சத்தியமா அவன் காங்கிரசில் இருக்கமாட்டன் .

ரசித்தது :


வக்கிலிடம் பிரச்சினையுடன் ஒருத்தார் வந்தார்,
வக்கீல்: என்ன பிரச்சினை?
வந்தவர்; சார், என் நண்பர் என்னிடம்
ஐம்பதாயிரம் ரூபாய் வாங்கி ஓரு வருஷம்
ஆச்சு சார். இந்தா தரேன்
அந்தா தரேன்னு இழுத்து அடிக்கிறார்.
வக்கீல்: ஏதாவது எவிடன்ஸ் இருக்கா?
வந்தவர்: ஒன்னும் இல்லை சார்.
வக்கீல்: அப்படின்னா அவருக்கு நீங்க கொடுத்த
ஓரு லட்ச்சத்தை எப்போ திருப்பி தரேன்னு கேட்ட
எழுதுங்க
வைத்தவர்: அம்பதாயிரம் தானே சார்.
வக்கீல்: உங்களிடம் கடன் வாங்கியவரும்
இதையே சொல்லி பதில் எழுதுவார் . அதான்
எவிடன்ஸ். அதை எடுத்து கொண்டு வாங்க
பேசிக்கலாம்.





இதையும் படிக்கலாமே :

Wednesday, August 14, 2013

கதம்பம் 14-08-13




நடிகர் விஜய் செய்தது சரியா ?



தலைவா படம் பல தடங்கல்களால் தமிழ் நாட்டில் வெளிவரமுடியாமல் தவிக்கிறது . இதுக்கு முக்கியகாரணம் விஜயின் அப்பா சொன்ன ஒருவார்த்தை தான் காரணம் . "நான் அண்ணா விஜய் M.G.R ". இதனால் பல த டைகள் வந்து படம் முடங்கி யுள்ளது . இந்த நிலையில் விஜய் விட்ட ஒரு அறிக்கை அவரின் ஹீரோ இமேஜ்அய் பதம் பார்த்துள்ளது .

"புரட்சி தலைவி அம்மா மிக சிறப்பான ஆட்சி தருகிறார் என துவங்கி அவரை பயங்கரமாக புகழ்ந்து ஒரு அறிக்கை தந்துள்ளார் . வடிவேலுக்கு ஒத்து போல ஒரு நிலைமை ஏற்பட்டபோது ,ஏன் இன்னும்  சினிமாவில் அவரின் எதிர்காலமே கேள்வி குறி ஆகும்போதும் கூட அவர் தனது நிலையை மாற்றி முதல்வருக்கு ஜால்ரா அடிக்கவில்லை .

கமல் தனது பிரச்சனையை மீடியா மற்றும்மக்களிடம் சொன்னார் . ஆனால் சினிமாவில் எல்லாரையும் எதிர்த்து பெயர் வாங்கிய அடுத்த முதல்வர் கனவில் உள்ள விஜய் இப்படி அறிக்கை விட்டது கஷ்டமாக உள்ளது . ஆனால் சினிமாவில் உள்ள பலர் இது போன்ற பிரச்னைகளுக்கு குரல் குடுப்பதில்லையே ஏன் ?

========================================================================

எனது முக புத்தகத்தில் இருந்து ..

கேக்குறவன் கேன பயலா இருந்தா கேஸ்ட்ரால் கம்பெனி ஓனர் ஃபிடல் கேஸ்ட்ரோனு சொல்வானுங்க. . . .

‪#‎மொக்கை‬ 2013


====================================================================
தெரியுமா??

TITMOUSE என்பது ஒரு வகை பறவை.

PRAIRIE DOG என்பது ஒரு வகை அணில்.
  

========================================================================

தல அஜித்தின் அடுத்த பட தலைப்பு "VEERAM ":

- செய்தி.

அய்யயோ !! V ல ஆரம்பிச்சாலே பிரச்சனை வருமே??
(VIJAYKANTH, VIJAY, VADIVELU , VISWARUPAM. . . .),


===================================================================

"V" ல ஆரம்பிக்கும் நடிகர்களுக்கும் , அம்மாக்கும் ஒத்து போகாதோ??

VIJAY KANTH
VADIVEL

இப்போ. . .

VIJAY. . .

எதுக்கும் விக்ரம் கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்கட்டும். . .

=================================================================

நீங்கள் சொல்லும் அணைத்து கருத்துகளுக்கும் யாருமே எதிர்ப்பு தெரிவிப்பது இல்லை என்றால் எல்லாரும் உங்களுக்கு ஜால்ரா அடிக்கிறார்கள் என அர்த்தம்.
 

===================================================================

ரசித்த சிறுகதை :

ஓர் இரவுநேரம் ஒருவன் தன் மூன்று வயது மகன்
தூங்கிக்கொண்டிருக்கும் போது தன்
மனைவியின் மேல்உள்ள கோபத்தில் அவளைக்
கொன்று யாருக்கும் தெரியாமல்
பினத்தை புதைத்து விடுகிறான்.
மறுநாள் காலை மகன் எழுந்து அம்மாவைப்
பற்றி கேட்டால் என்ன
சொல்லி சமாளிப்பது என்று ஆலோசனை செய்கி
ஆனால் மகன் அம்மாவைப்பற்றி கேட்க வில்லை.
இரண்டாம் நாளாவது கேட்பான் என
நினைத்தான்.ஆனாலும் கேட்கவில்லை.வழக்கம்
போல மகன் சந்தோசமாக இருந்தான்.
மூன்றாம் நாள் மெதுவாக மகனிடம்
பேச்சு கொடுத்தான்.
"உனக்கு நம்ம வீட்ல எதாவது மாற்றம்
தெரியுதா? எங்கிட்ட ஏதாவது கேக்கனும் போல
இருந்தா கேளு"
மகன் மெல்லக்கேட்டான்:
"மூனுநாளா அம்மா ஏன் உங்க
பின்னாடியே நிக்கிறாங்கப்பா?"



==================================================================

அதிர்ச்சி :


மயிலாடுதுறையை கூட பெரிய சிட்டியா மதிச்சு தாக்குதல் நடத்த திட்டம் போட்டவன் கண்டிப்பா தீவிரவாதியா இருக்கமாட்டான்.



=================================================================

     
 ரசித்த புகைப்படம் :





 
இன்றைய தத்துவம் :



இதையும் படிக்கலாமே :


தலைவா : திரைவிமர்சனம் 

 


இலவசமாக SMS அனுப்ப வேண்டுமா ?
 

 




Monday, August 5, 2013

கதம்பம் 05-08-13


கடந்த மாத கதம்பம் பதிவுக்கு ஆதரவளித்த  நல்ல உள்ளங்களுக்கு நன்றி . இதோ இந்த வாரமும் . ( அடிகடி தொடரும் கொஞ்சம் சகித்துக்கொள்ளவும் )


இது சரியா ? தவறா ? 


இயக்குனர் சேரனின் மகள் காதல் விஷயத்தில் பலர் பல்வேறு விதமாக பேசுகின்றனர் . படங்களில் காதலை வாழவைத்தவர் தனது குடுப்பத்தில் எதிர்ப்பது சரியா என்று . இது சரியான வாதமாக படவில்லை . தொடர் கொலைகளை படமாக எடுப்பவர் கொலை செய்தால் தப்பில்லை என்பது போல உள்ளது . 

சேரன் தன மகள் காதலிக்கும் காதலன் சரியில்லை என தான் சொல்கிறார் . காதலை எதிர்க்கவில்லை . ஒரு அப்பா தன மகளின் வாழ்கையை நல்ல படியாக அமைத்து கொடுக்க வேண்டும் என விரும்புவது தவறா ? காரணமே இல்லாமல் அல்லது சாதியை , மதத்தை காட்டி எதிர்த்தால் அதை தவறு என சொல்லலாம் .

ஆந்திர சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் மகள் இது போல சென்று இப்போது படும் பாடு  நாடறிந்தது . காதல் எதிர்காலத்தை பார்க்காது . "குழோ , கஞ்சியோ எதுவானாலும் நான் தயார் என சொல்லும் பக்குவம் திருமணம் முடிந்து தொடரும் என சொல்லமுடியாது .


========================================================================

முக நூலில் பலர் பல விஷயங்களை பகிர்கின்றனர் . அது காமெடியாக இருக்கலாம் ,தத்துவங்களாக இருக்கலாம் .கலை இலக்கியம் , அரசியல் சம்பத்தபட்டதாக கூட இருக்கலாம் . ஆனால் சிலர் எழுதும் பதிவுகள் நம்மை யோசிக்க வைக்கும் , சிரிக்க வைக்கும் அப்படிபட்ட பதிவுகள் சில உங்களுக்காக ...

பள்ளிக்கூடம் படிக்கையில கேட்ட ஜோக் இது... இப்பவும் சுத்திக்கிட்டு இருக்கு...

மழை பெய்வதை யார் யார் எப்படி சொல்வார்கள் ..?

இரும்பு வியாபாரி – கனமா பெய்யுது
கரும்பு வியாபாரி – சக்கைப்போடு போடுது
சலவைக்காரர் – வெளுத்துக் கட்டுதுங்க
டாக்டர் – தினமும் மூணு வேளை
நர்ஸ் – நார்மலாத்தான்
பஞ்சு வியாபாரி – லேசா பெய்யுது
போலீஸ்காரர் – மாமூலா பெய்யுது
வேலைக்காரி – பிசு பிசுன்னு
அட்டை – விடாம பெய்யுது
ஆமை- வெளியே தலை காட்டா முடியலை
குயில் – அது ‘பாட்டு’க்கு பெய்யுது
தேள் – கொட்டு கொட்டுன்னு
நண்டு – பிடி பிடின்னு
 
==============
தமிழ் சினிமாவின் விதிகள்

1.ரேப் ஸீனுக்கு புலி, மானைக் காட்டுறது. முதலிரவு ஸீனுக்கு ஒரு குறிப்பிட்ட நேரத்துக்கப்பறம் லைட்டை ஆஃப் செஞ்சிடறது. மேக்ஸிமம் ரேப் ஸினுக்கு நம்ம ஹீரோயின் சேலைதான் கட்டியிருப்பாங்க...

2.பனி பொழியுற நாட்டுப் பாடல் காட்சிகள்ல, ஹீரோ மட்டும் கோட்டு, சூட்டு, கிளவுஸ் எல்லாம் போட்ருப்பாரு, ஆனா ஹீரோயின் அம்மணிக்கு மட்டும் டூபீஸ்....சே...என்னமாதிரி சமுகத்தில் வாழ்கிறோம் நாம்..?

3.படத்தோட உச்சக்கட்டமா வில்லன் எங்கேயாவது பாம் வச்சுடுவான். அதை டிஃப்யூஸ் பண்ண வர்ற ஹீரோ எந்த கலர் வயர வெட்டுறது அப்படின்னு டென்ஷனாகி செவப்பா நீலமான்னு மாத்தி மாத்தி யோசிப்பார். ஆனா அவர் கவலையே பட வேண்டாம். ஏன்னா அவர் எந்த வயர வெட்டினாலும் பாம் அமந்து போகும். (தக்காளி ..நீ புடுங்குற எல்லாமே தேவையில்லாத ஆணிதான்..)

4.நல்லதொரு ரேப் சீனை நாசமாக்க வரும்நம்ம ஹீரோ, வந்ததும் மொதோ வேலையா தன்னோட சட்டையையோ ஜெர்கினையோ கழட்டி பொண்ணு மேல போர்த்துவார்.(அடேய் உன்ன யார்ர இங்க வரச்சொன்னது ச்சே )

5.ஹீரோ ரெட்டைப்புள்ளையா இருந்தா அதுல ஒருத்தர் கண்டிப்பா ரொம்பக் கெட்டவனா இருப்பாரு. ஆனா கிளைமாக்ஸ்ல“நான் ஏன் அப்படி இருந்தேன் தெரியுமா”ன்னு ஒரு பாடாவதி டயலாக் பேசி நல்லவனா மாறிடுவார்..
 
======================================================================================
 தற்பொழுது படித்த புத்தகம் ;

நண்பர் பிலாசபிபிரபா சில நாட்களுக்கு (மாதங்களுக்கு ???) முன் வாங்கி தந்த சுஜாதா நாவலில் ஒன்று  டாக்டர் நரேந்திரனின் வினோத வழக்கு . நண்பர் ஒருவர் வாங்கி சென்றுநேட்று தான் தந்தார் . அருமையான கதை .  வாசிக்க விரும்பும் நண்பர்களுக்கு E-BOOK LINK  இதோ :


டாக்டர் நரேந்திரனின் வினோத வழக்கு
 
 ==========================================================================================
 
ரசித்த புகைப்படம் :
 
 

Saturday, July 27, 2013

கதம்பம் 27/07/13




அன்பு நண்பர்களே , கதம்பம் என்ற பல்சுவை தொகுப்பை மிக நீண்ட நாளாக எழுத முடியவில்லை . இனி மாதம் ஒரு முறையாவது எழுத முயற்சிக்கிறேன் .

நண்பர்கள் :

கடந்த செவ்வாய் அன்று சென்னை செல்ல வேண்டிய வேலை இருந்தது . அங்கு சென்ற பின் பதிவுலக நண்பர்கள் சிலரை பார்க்க நினைத்தேன் . ஆனால் நண்பருக்காக போனதால் முடியவில்லை . கரை சேரா அலைகள் அரசன் அவர்களுக்கு போன் செய்தேன் . பின்பு மெட்ராஸ்பவன் சிவகுமாருக்கு போன் செய்தேன் . அலுவலகம் கிளம்பு போகிறேன் என சொன்னவர் , திடிரென இருங்கள் செந்தில் வருகிறார் , அவருடன் நீங்கள் இருக்கும் இடத்திற்கு வருகிறேன் என சொன்னார் .





சிவாவும் , KRP செந்திலும் வந்தார்கள் . சுமார்  ஒரு மணிநேரம் பேசினோம் . மிக ஜாலியாக இருந்தது . இருவரும் என்னமோ நீண்ட நாள் நண்பர்கள் போல பேசினார்கள் . நேரமின்மையால் அதிகம் பேச முடியவில்லை . பதிவர் சந்திப்பில் அந்த குறை தீரும் என எண்ணுகிறேன் .
====================================================================


அரசியல் :

மோடிக்க விசா தரகூடாது என அமெரிக்காவுக்கு 29 MP கள் கடிதம் .

# அதுவும் போர்ஜரியா பலர் கையெழுத்தை யாரோ போட்டுருக்காங்க .

# ராஜபக்ஷே இந்தியா வந்தப்ப இவர்கலாம் என்ன பண்ணிகிட்டு இருந்தாங்க ???



28 ரூபாய்க்கு மேல் செலவு செய்தால் அவர்கள் வறுமை கோட்டுக்கு மேல் உள்ளார்கள் என அர்த்தம் .:  திட்ட கமிஷன்

# சென்னையில் வசந்த பவனில் 2 இட்லி 42 ரூபாய் .
# இந்த வீணா போன கிமிஷன் இருக்கும் இடத்தில் பாத்ரும் கட்ட செலவு 27 லட்சம்


ரசித்த ஜோக் :

வகுப்பில் காப்பி அடித்த மாணவனை இனி காப்பி அடிக்க மாட்டேன்னு 100 தடவை இம்போசிஷன் எழுத சொன்னார் ஆசிரியர் . அந்த மாணவன் எழுதியது கிழே ..

#include
void main( )
{
int i;
for(i=1;i<=100;i++)
{
printf(இனி காப்பி அடிக்கமாட்டேன் );
}
}


முகபுத்தகத்தில் எனது STATUS

ஒருவரை பிடிக்கா விட்டால் உடனே விலகிவிடு . இல்லையெனில் இறுதியில் அவமானமே மிச்சம் இருக்கும் .


இதுவரை S.P.பாலசுப்ரமணியம் குரல்தான் உலகிலேயே அழகு என்று இருந்தான் , என் மகன் சரணின் அப்பா என்ற குரலை போனில் கேட்கும் வரை .

உலகிலேயே மிகவும் அதிர்ஷ்டசாலி
நல்ல நண்பர்களை பெற்றவர்களே .



 இது உண்மையா ?


Friday, October 5, 2012

கதம்பம் 05/10/2012






யாருக்காக போராட்டம் ?

சமிபத்தில் பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து பல கட்சிகள் போராட்டம் நடத்தின . ஒரே காரணத்துக்காக போராட கூட இந்த கட்சிகள் ஒன்று இனையாதது வருத்தமாக உள்ளது . ஒவ்வொரு கட்சிகளும் ஒவ்வொரு நாள் என சாலை மறியல் செய்த்ததில் பெட்ரோல் விலை உயர்வை  கூட பொறுத்து கொள்ளலாம் என தோன்ற ஆரம்பித்து விட்டது . போராட்டம் என்ற பெயரில் சாலையை உடைப்பது பேருந்துகளை அடிப்பது , அதில் செல்லும் பெண்களை கிண்டல் செய்வது என வந்த வேளையை விட பிற வேளைகளில் கவனம் செலுத்துபவர்கள் தான் அதிகம் .

மக்களுக்காக என சொல்லி மக்களை கஷ்டபடுத்தாதிர்கள்


சந்தோஷம் :

கடந்த வாரம் எங்கள் பள்ளியில் மிக பெரிய புத்தக கண்காட்சி நடைப்பெற்றது . நிறைய பதிப்பகங்கள் வந்து இருந்தன . (நிறைய கல்லுரி பெண்கள் வந்தார்கள் ஆனால் அவர்களை நான் பார்க்காவில்லை ). தினமும் ஒரு களை நிகழ்ச்சி என கொண்டாடினர் . கடைசி நாள் அன்று தான் புத்தகங்கள் வாங்கினேன் .

வாங்கிய புத்தகங்கள் :

மனிதனுக்குள்ளே ஒரு மிருகம்   - மதன்

கேள்வி பதில்கள்               - சுகி சிவம்

நேர் நேர் தேமா                - கோபிநாத்

டாலர் தேசம்                  - பா. ராகவன்

அனிதாவின் காதல்கள்          - சுஜாதா

திசை கண்டேன் வான் கண்டேன்       - சுஜாதா

நேதாஜியின் வீர வரலாறு             - சிவலை இளமதி


தேடி கிடைக்காதது :

துளசி தளம்   - என்டமுறி வீரேந்திரநாத்

என் இனிய இயந்திரா  - சுஜாதா


Facebook இல் ரசித்தது :

மங்குனி அமைசர் போட்ட ஸ்டேடஸ் :

அனைத்து காற்றாலை மின்சார தயாரிப்பு விசிறிகளுக்கு ஜென்றேடேர் மூலம் மின்சாரம் அளித்து ஓடவிட்டால் நிறைய மின்சாரம் தயாரிக்க முடியும் அல்லவா ?


# பேசாம உங்களை மின்துறை அமைச்சராக ஆக்கிவிடலாம் .

ரசித்த படம் :

சாட்டை :

எங்கள் பள்ளி மாணவர்கள் ( +1 , +2) 450 பேருடன் மயிலாடுதுறை விஜயா தியட்டரில் படம் பார்த்தோம் . மாணவர்களுக்கு மட்டுமல்ல நிறைய ஆசிரியர்களும் இந்த படத்தில் பல விஷயங்களை கற்றுக்கொள்ளவேண்டும் . கிளைமாக்ஸ் நாடக பாணியில் இருந்தாலும் ஒரு அருமையான முயற்சி . இயக்குனர் அன்பழன் , தயாரிப்பாளர் பிரபு சாலமன் , நடிகர் சமுத்திர கனி , தம்பி ராமையாவுக்கு கண்டிப்பாக பாராட்டை தெரிவிக்க வேண்டும் . இது கொக்கை படம் என விமர்சனம் போட்டவர்களை கருட புரானம்படி லத்திகா படம் பார்க்க வைக்கலாம் .


ரசித்த கவிதை :

மனைவியின்
மறைவுக்காக
கணவன்
கட்டிய
வெள்ளை சேலை
தாஜ்மகால் .


சந்தேகம் :

ஆ.தி.மு.க போடும் வழக்குகளை சட்டப்படி எதிர்கொள்ளுவோம் ஓடி ஒழிய மாட்டோம்  # கருணாநிதி

பொன்முடி தலைமறைவு

அழகிரி மகன் தலை மறைவு


# அய்யா இதுக்கு பெயர் ஏன்னா ?


 இதையும் படிக்கலாமே :



தொலைவில் இருக்கும் கணணியை நமது கணினி மூலம் இயக்குவது எப்படி?





இலவசமாக உங்கள் mobile க்கு ரீ-சார்ஸ் செய்ய வேண்டுமா ?