> என் ராஜபாட்டை : அண்ணே ஒரு சந்தேகம்

.....

.

Wednesday, February 29, 2012

அண்ணே ஒரு சந்தேகம்



சந்தேகம் சாரங்கபாணி இவருக்கு சில சந்தேகங்கள் அதை இங்கே தந்துள்ளேன். பதில் தெரிந்தவர்கள் சொல்லலாம்.


பதிவர் வீடு சுரேஷ் இன்னொரு பிளாக் துவங்கினால் அதுக்கு சின்ன வீடு னு பெயர் வைப்பாரா ?


இடைதேர்தல் இடைதேர்தல்னு சொல்றாங்க ஆனா இடையே இல்லாதே குஷ்பு பிரசாரத்துக்கு ஏன் வாராங்க ?


மத்திய அரசு இரண்டு கேரளா மீனவர்கள் பலியானத்துக்கு காட்டும் வேகத்தை 200 தமிழ் மீனவர்கள் பலியாகும் போது காட்டாதது ஏன் ?



கூடல் பாலா தான் குழந்தைக்கு அணு என்று பெயர் வைப்பாரா மாட்டாரா ?


நாய் நக்ஸ் நக்கீரன் சாரை நாய் கடிக்குமா ?


தமிழ்வாசி பிரகாஷ் அமெரிக்காவுல செட்டில் ஆனா இங்கிலீஷ்வாசினு  சொல்லலாமா ?

விக்கி வெங்கட்க்கு தலைல இருப்பது விக்கா ?

பல வருடங்களாகவே பண்ணிகுட்டி ராமசாமி  , குட்டியாகவே இருக்கின்றாரே குட்டி ஏன் இன்னும் வளர வில்லை ?

திடுடி எடுக்குற படத்த சொந்த படம்னு சொல்றாங்க ஆனா சொந்தமா எடுத்த அம்புலி படத்தை திருடி (3D) படன்னு சொல்றாங்க ஏன் ?


கம்பியூட்டரை START  செய்யும் போது
KEYBOARD NOT CONNECT PRESS F1 TO CONTINUE என்று வருது எண்ண பண்ணுவது ?


23 comments:

  1. ஆகா

    கிளம்பிட்டாங்கையா....கிளம்பிட்டாங்...க.

    ReplyDelete
  2. ஒரு சந்தேகம்ன்னு சொல்லிட்டு மானாவாரியா கேட்டா?

    ReplyDelete
  3. //இடைதேர்தல்னு சொல்றாங்க ஆனா இடையே இல்லாதே குஷ்பு பிரசாரத்துக்கு ஏன் வாராங்க ?//

    இடையில வந்தவுக அதான் அப்பு

    ReplyDelete
  4. நீங்க என்ன பேரு வைப்பீங்க......என் ராணி பாட்டை....இல்லே என் மந்திரி பாட்டை ஹி..ஹி ஹி

    ReplyDelete
  5. எனக்கொரு சந்தேகம்.
    இவையெல்லாம் நீங்களே யோசிச்சவையா?

    ReplyDelete
  6. பரிட்சை நேரத்துல பிள்ளைகளுக்கு சொல்லி குடுக்காம இதெல்லாம்தான் யோசிச்சுக்கிட்டு இருக்கீங்களா?

    ReplyDelete
  7. ஏய்யா ........... ஏன்? ஏன் இப்பிடி? ஹி ஹி

    ReplyDelete
  8. நல்லாத்தானே போய்கிட்டு இருந்துச்சு ராஜா சார்.., திடீர்ன்னு ஏன் இந்த கொலைவெறி ...

    எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும் ..., இதெல்லாம் எப்படி சார் தானா தோணுதா.., இல்லை எப்படி ..?

    ReplyDelete
  9. இந்த கேள்வி எல்லாம் உங்க பசங்க...
    உங்ககிட்ட கேட்டது தானே....????

    ReplyDelete
  10. இப்ப நம்ம மக்கள் எல்லாம் ஓட்டுவீடுன்னுதாங்க கூப்பிடுறாங்க.....

    ReplyDelete
  11. ///மத்திய அரசு இரண்டு கேரளா மீனவர்கள் பலியானத்துக்கு காட்டும் வேகத்தை 200 தமிழ் மீனவர்கள் பலியாகும் போது காட்டாதது ஏன் ?///

    சேச்சிக காரணமா இருக்குமோ?

    ReplyDelete
  12. நாய் – நக்ஸ் நக்கீரன் சாரை நாய் கடிக்குமா ?

    எதுக்கு நாய் சாகறதுக்கா?

    ReplyDelete
  13. ///தமிழ்வாசி பிரகாஷ் அமெரிக்காவுல செட்டில் ஆனா “இங்கிலீஷ்வாசி”னு சொல்லலாமா ?////

    ஆங்கிலவாசி!

    ReplyDelete
  14. ///விக்கி “ வெங்கட்க்கு தலைல இருப்பது விக்கா ?///

    செத்த கிளிக்கு எதுக்கு கூண்டு!

    ReplyDelete
  15. ///பல வருடங்களாகவே பண்ணிகுட்டி ராமசாமி , குட்டியாகவே இருக்கின்றாரே குட்டி ஏன் இன்னும் வளர வில்லை ?///

    பன்னி சேச்சி என்று வைக்க சொல்லுறாருங்க....!

    ReplyDelete
  16. ///“KEYBOARD NOT CONNECT PRESS F1 TO CONTINUE “ என்று வருது எண்ண பண்ணுவது ?////

    கீ போர்டுல கொஞ்சம் விளக்கெண்ணை விடவும்......சரியாகவில்லை என்றால் மண்ணெண்னை ஊற்றி கொழுத்தவும்...!

    ReplyDelete
  17. நல்லா வருதுங்க சந்தேகம் உங்களுக்கு.

    ReplyDelete
  18. இப்போ ராஜா மந்திரியாக போறாரு....

    ReplyDelete
  19. படங்கள் தெளிவில்லாமல் இருப்பதன் காரணம் என்ன அன்பரே

    ReplyDelete
  20. யோவ் மாப்ள நல்லா வருதுய்யா வாயில..ஹிஹி நீர் சொன்னத விட இந்த வீடுப்பய சொன்ன கமண்ட் தான் ஹூம்!

    ReplyDelete
  21. //மத்திய அரசு இரண்டு கேரளா மீனவர்கள் பலியானத்துக்கு காட்டும் வேகத்தை 200 தமிழ் மீனவர்கள் பலியாகும் போது காட்டாதது ஏன் //

    உண்மையான குமுறல்...

    //கம்பியூட்டரை START செய்யும் போது
    “KEYBOARD NOT CONNECT PRESS F1 TO CONTINUE “ என்று வருது எண்ண பண்ணுவது ?//

    நீங்க தான் கம்பியூட்டர் வாத்தி.. நீங்க தான் சொல்லணும்!!

    அனைத்தும் அருமை!

    ReplyDelete
  22. வெயில் கூடும்போதே நெனச்சேன் இப்படி எதாவது ஏடாகூட பதிவு வரும்னு!

    அருமை அருமை

    ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...