> என் ராஜபாட்டை : தமிழ்படம்

.....

.
Showing posts with label தமிழ்படம். Show all posts
Showing posts with label தமிழ்படம். Show all posts

Saturday, July 19, 2014

சதுரங்க வேட்டை : விமர்சனம்





www.rajamelaiyur.blogspot.com



நடிகர் , இயக்குனர் மனோ பாலாவின் தயாரிப்பில் , லிங்குசாமியின் வெளியிட்டில் வந்திருக்கும் படம் சதுரங்க வேட்டை . தனுஷின் வேலையில்லா பட்டதாரிக்கு போட்டியாக வந்த இந்த படம் போட்டியில் வெல்லுமா என பார்ப்போம் .

கதை :

நாம் எல்லாரும் எதோ ஒருதடவையாவது யாரிடமாவது ஏமாந்து இருப்போம் . அப்படி நமை ஏமாற்றியவரின் புத்திசாலித்தனத்தை பாராட்டாமல் இருக்கமுடியாது. அதுபோலதான் இந்த படத்தின் ஹீரோ. ஹீரோ காந்திபாபுவாக மிளகாய் படத்தில் நடித்த நட்டு என்கிற நடராஜன் . இவர் சிறந்த ஒளிபதிவாளரும் கூட . சீக்கிரம் பணக்காரனாக துடிக்கும் பேராசை கொண்ட மக்களின் பலவினத்தை பயன்படுத்தி பணம் சம்பாதிப்பது இவரின் தொழில் . ஈமு கோழி முதல் மண்ணுளி பாம்பு வரை இவர் விளையாடு செல்கிறது . 
www.rajamelaiyur.blogspot.com

இந்த குற்றத்திற்காக போலீசிடம் மாட்டி வெளிவரும் பாபு கடத்தப்பட , பணம் என்ன ஆனது , ஏன்  கடத்தல் , இதன் இடையே வரும் காதலி இஷாரா என்ன ஆனார் , கடைசியில் நட்டு திருந்தினாரா இல்லை எதிரிகளால் கொள்ளபட்டாரா என்ற சதுரங்க ஆட்டத்தின் முடிவை திரையில் பாருங்கள் .

www.rajamelaiyur.blogspot.com


+ பாயின்ட் 

* நடராஜின் அலட்டல் இல்லாத நடிப்பு . இதுல வேறு யாராவது பெரிய  
  நடிகரைபோட்டு கேரட்டரை கொல்லாமல்விட்டது நல்லது .

* வசனங்கள் மிக பெரிய பலம் (நல்லவனா இருந்த செத்தபின்புதான் 
  சொர்கத பார்க்கலாம் ஆனா கெட்டவனா இருந்தா வாழும்போதே 
  பார்க்கலாம் ..)

* மக்களை ஏமாற்றும் திட்டங்கள் . சமிபத்தில் நடந்த நிகழ்வுகளை 
 கதையில் காட்டியது (MLM Plan)

* வழக்கம் போல இளவரசுவின் நடிப்பு அருமை .

* புதுமுக இயக்குனர் என சொல்லமுடியாத அளவுக்கு கலக்கி உள்ள 
  இயக்குனர் வினோத்

* பின்னணி இசை

* வேகமான திரைகதை


-    
   -   பாயின்ட் :

பாடல்கள் சுமார்தான் . இசை ஷான் ரோல்டன்
மற்றபடி பெரிய குறைகள் ஒன்றும் தெரியவில்லை (எனக்கு )

முடிவா !!!
கண்டிப்பா பார்க்கலாம் , ஜாலியா குடும்பத்துடன் பார்க்கலாம்



Thursday, June 26, 2014

விஜய் , அஜித் , சூர்யா- Face book இல் படும்பாடு

விஜய் , சூர்யா , அஜித் முவரும்  இப்போது facebook இல் அதிகம் ஒட்டப்படும் நடிகர்கள் . அவர்களை கிண்டல் செய்து பல புகைப்படங்கள் வருகின்றது . அவற்றில் சில உங்களுக்காக ... இவையனைத்தும் ஜாலிக்காக மட்டுமே , யாரும் கமெண்டில் இந்த அப்பாவியை காய்ச்சி எடுக்கவேண்டாம் .














டிஸ்கி : மூவர் ரசிகர்களையும் திருப்தி படுத்திவிட்டேன் என நினைக்கிறன் .

டிஸ்கி  : இது பழைய பதிவை கொஞ்சம் பட்டி டிங்கரின்க் பார்த்தது .

இதையும் படிக்கலாமே ?
 

Saturday, May 18, 2013

நேரம் : விமர்சனம்





ரெட் ஜெயன்ட் வெளியிடு என்பதால் கொஞ்சம் எதிர்பார்ப்பை கிளப்பியாதால் இந்த படம் பார்க்க போனேன் . தியட்டரில் 6 மணிக்கு படம் ஆனால் 6.15 க்குதான் போனேன் . உள்ளே என்னை சேர்த்து மொத்தம் 6 பேர் தான் . நமக்கு நேரம் சரியில்லை என நினைத்து படம் பார்க்க துவங்கினேன் .

கதை

ஒரே நாளில் நடக்கும் கதை . ஹீரோ நவீன் வில்லன் வட்டி ராஜா விடம் வாங்கிய கடன் , தங்கை கணவனுக்கு தரவேண்டிய வரதடசனை இவை இரண்டையும்  மாலை 5 மணிக்குள் தரவேண்டும் இத்துடன் தன் காதலி தனக்காக வீட்டை விட்டு வந்துவிட அவளை அவள் தோழி வீட்டில் இருக்க சொல்லி 5  மணிக்கு அழைத்து செல்கிறேன் என சொல்கிறான் . வேறு ஒருவன் தர வேண்டிய பணத்துக்காக தவறுதலாக ஹீரோயினை கடத்தி 5  மணிக்குள் வட்டி ராஜா பணம் கேட்க இவை அனைத்தும் எப்படி முடிகிறது என்பதுதான் கதை .


+ பாயிண்ட்

  • ஹீரோ , ஹீரோயின் என அதிக புது முகங்கள் . (இதுவே பாயிண்ட் )

  • தேவையில்லாத பாடல்கள் இல்லாதது .

  • பஞ்ச் டயலாக் , குத்து பாட்டு , இரட்டை வசனம் ஏதும் இல்லாதது .

  • 1 மணி 57 நிமிடத்தில் படத்தை முடித்தது .

  • இறுதியில் வரும் நாசர் பேசும் வசனங்கள் .

  • படத்தில் வரும் கதாபாத்திரங்கள் அனைத்தும் இறுதியில் ஒரே சம்பவத்தில் தொடர்புடையதாக காட்டும் யுக்தி .
  • காதல் காட்சிகளை வள வள என இழுக்காமல் முடித்தது .

  • கிளைமாக்ஸ் யாரும் எதிர்பாராத டுவிஸ்ட் .


- பாயிண்ட் :

  • சரியான விளம்பரம் இல்லாததால் இப்படி ஒரு படம் வருவதே தெரியவில்லை .

  • நாசர் வில்லனா , காமெடியனா என தெளிவில்லாமல் உள்ள குழப்பம் .

  • ஹீரோ ஆரம்பத்தில் வேலை போய்விட்டது என்கிறார் , ஆனால் அடுத்து போகும் நேர்முக தேர்வில் முன் அனுபவம் இல்லை என்கிறார் எப்படி ?

  • ஒரு I T  கம்பெனியில் வேலை பார்ப்பவர்களுக்கு 50,000 ரூபாய் ஒரு பெரிய தொகையா ?

  • ஒளிப்பதிவு ஆரம்பத்தில் சில இடங்களில் டல்லாக உள்ளது .( தியட்டர் சரியில்லையோ ??)

  • பின்னணி இசை சில காட்சிகளில் வசனத்தை மறைக்கிறது .



முடிவா !!!!!

படம் துவக்கம் மிக மெதுவாக போகிறது ஆனால் இடை வேலைக்கு பின் வேகமாக உள்ளது .
நேரம் (தியட்டரில்) இருந்தால் பார்க்கலாம் .


ஆனந்த விகடன் மார்க் : 36

குமுதம் : பரவாயில்லை

ராஜபாட்டை மதிப்பீடு : 2.5 / 5


Saturday, June 16, 2012

பில்லா vs சகுனி : ஜெய்க்க போவது யாரு ?



இந்த இரண்டில் எது வெற்றி பெரும் என ரசிகர்கள் நிங்கள் கணியுங்கள் . உங்கள் ஓட்டை சைடு  பாரில் உள்ள POLL BOX இல் போடவும் .


இன்றைய நிலையில் தமிழ் சினிமாவின் பலத்த எதிர்பார்ப்பு தல அஜித்தின் "பில்லா 2" தான். பில்லா வின் வெற்றி மற்றும் மன்காத்தாவின் வசூல் சாதனையால் பில்லா 2 வின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது . கமலை இயக்கிய இயக்குனர் சக்ரி இந்தப்படத்தை இயக்குகிறார்.

யுவனின் இசையில் பாடல்கள் ஏற்கனவே ஹிட் . அதிலும் மதுரை பொண்ணு , உனக்குள்ளே ஒரு மிருகம் இரண்டும் அதிரடி ஹிட் . படத்தின் சண்டைகாட்சிகள் பெரிதும் எதிர்பார்ப்பை அதிகபடுத்தயுள்ளது .


சகுனி :

தொடர் வெற்றிகளை குவித்துவரும் கார்த்திக்கின் அடுத்த அதிரடி ஆட்டம் சகுனி . காமெடி படமான இதில் சந்தானம் வேறு இருப்பது படத்திற்கு இன்னும் பலம் . டிவி யில் டிரைலர் கூட சந்தானத்தை முன் நிறுத்தி செய்யபடுகிறது . படங்கள் நன்றாக உள்ளது . இயக்குனர் புதியவர் .

ஜூலை 2 வர வேண்டிய படம் திடிரென 22 தேதி வருகின்றது . அன்றுதான் பில்லா 2 ரிலிஸ் . எனவே போட்டி கடுமையாக இருக்குன் என தெரிகின்றது . அன்றுதான் இளைய தளபதியின் பிறந்த நாள் .

இந்த இரண்டில் எது வெற்றி பெரும் என ரசிகர்கள் நிங்கள் கணியுங்கள் . உங்கள் ஓட்டை சைடு  பாரில் உள்ள POLL BOX இல் போடவும் .

Friday, May 11, 2012

விஜய் அஜித் இணைந்து நடிக்க கதை தயார் : அம்புலி 3D பட இயக்குனர் ஹரீஷ் நாராயண் Exclusive பேட்டி பகுதி - 2

அம்புலி 3 D   படத்தின் இயக்குனர் ஹரிஷ் நாராயண் அவர்களின் சிறப்பு பேட்டி தொடர்கின்றது :


வலைபதிவர்களை ஊக்குவிக்கும் வண்ணம் பேட்டி தந்த அவர்களின் நல்ல மனதை தமிழ் பதிவர்கள் சார்பாக பாராட்டி வணங்குகின்றேன் .



1. அஜித் – விஜய் இருவரும் ஒரே சமயத்தில் ஒரு படம் இயக்க அழைத்தால் யார் அழைப்பை ஏற்ப்பிர்கள் ?
-          சபரி I B.E அண்ணாமலை பல்கலைகழகம்
Expendibles படத்தில் அத்தனை பெரிய ஆக்ஷன் ஹுரோக்களும் ஒன்றாய் இணைந்து நடித்து ரசிகர்களுக்கு சூப்பர் விருந்து படைத்திருக்கிறார்கள்... அதே போல், தமிழ் திரையுலகில் முதல்முறையாக இரண்டு பெரும் நட்சத்திரங்கள் இணைந்து மிரட்டும் முதல் 3D படம் என்ற ப்ராண்டிங்கை ஏற்படுத்த எல்லா முயற்சிகளையும் செய்வேன். கதையும் ரெடியாக இருக்கிறது...
2. உங்களின் அடுத்த படம் என்ன ?
- ராஜராஜன் – START SYSTEM COMPUTERS , MELAIYUR
அம்புலி இரண்டாம் பாகத்தின் ஸ்க்ரிப்ட் ரெடி.. ஆனால், தொழில்நுட்ப ரீதியாய் அப்படித்திற்கு ஒரு வெளிநாட்டு பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. அதன்பிறகே அதை தொடர வேண்டும் என்று திட்டமிட்டிருக்கிறோம். இதற்கிடையில், இன்னொரு படத்தை முடித்துவிடலாம் என்று அம்புலி தயாரிப்பாளரே கூறியிருக்கிறார். எனவே சூடாக ஒரு ஸ்க்ரிப்ட் ரெடியாகி கொண்டிருக்கிறது... அதுவும் நிச்சயம் குடும்பத்தோடு கண்டு ரசிக்கக்கூடிய ஒரு படமாய் அமைய எல்லா முயற்சியும் செய்துக் கொண்டிருக்கிறோம். அதிகாரபூர்வமான அறிவிப்பை விரைவில் நிச்சயம் பகிர்கிறேன்.

3. நெஞ்சை தொட்டு சொல்லுங்கள் தமிழ் சினிமாவில் இப்போது வரும் படங்களில் 95% குப்பை தானே ? ஏன் ?
                         - நகுலன் - START SYSTEM COMPUTERS 
குப்பை என்பதற்கு பதிலாய் 'பழைய புத்தக கடையாக' இருக்கிறது என்று வேண்டுமானால் சொல்லலாம். காரணம், புது புத்தகங்கள் நல்ல விலைக்கு போகும், ஆனால், பழை புத்தகங்கள் எடைக்குத்தான் போகும். மக்களில் பலர் திரைப்படங்களை எடைக்குத்தான் வாங்கி  பார்க்கிறார்கள் (திருட்டு விசிடி) புத்தகத்தின் விலையை முழுதாய் கொடுக்க மக்களில் பலர் தயாராய் இல்லை... (எல்லோரையும் குறிப்பிடவில்லை..)  பழைய புத்தக கடையில் ரொம்ப நேரம் தேடினால்தான் நல்ல புத்தகம் கிடைக்கும். தேடிப்பாருங்கள் நகுலன்... ப்ளீஸ்..

4. உங்களை போல சினிமாவில் சாதிக்க துடிப்பவர்களுக்கு நிங்கள் தரும் அறிவுரை என்ன ?
கர்ணன் – உடற்கல்வி ஆசிரியர் , மேலையூர்
அம்புலிக்கு பிறகு நிறைய இளம் இயக்குனர்கள் என்னிடம் உதவி இயக்குனராய் சேர வருகின்றனர். உதவி இயக்குனராய் சேர ஒரு காலத்தில், ரசனையும், ஆர்வமும் மட்டுமே போதுமான தகுதியாக இருந்திருக்கலாம். ஆனால் இன்றைய நவீன யுகத்தில், ஒரு செல்ஃபோனில்கூட படம் எடுக்கக்கூடிய அசாத்திய திறமை தேவைப்படுகிறது. இதை நான் அவர்களிடமும் எதிர்ப்பார்க்கிறேன். ஆனால், நான் எதிர்ப்பார்க்கும் சில தகுதிகள் வெகுசிலரிடமே இருக்க காண்கிறேன். உதவி இயக்குனர் என்று மட்டுமில்லை... நாளைக்கு அவர்களே ஒரு நல்ல வெற்றிப்பட இயக்குனராக மாறுவதற்கும் எனக்கு தெரிந்த சில ஆலோசனைகள் அல்லது பயிற்சிகள் இதோ...
1. தமிழ் சரளமாக பேச, படிக்க, எழுத தெரிந்து கொள்ளவும். அதற்கு பயிற்சியாய், ஒரு முழுநாவலை ஏற்ற இறக்கங்களுடன் நடித்தபடி படித்துக் காட்ட பழகவும். நாவல் சிரமம் என்றால் சிறுவர் கதை  புத்தகங்களும் பரவாயில்லை. குறிப்பாக காமிக்ஸ்-ஓ அல்லது கிராஃபிக்ஸ் நாவலோ பழகினால் ஸ்டோரி போர்டிங் சுலபமாகிவிடும். இண்டர்நெட்டில் இலவசமாய் பல காமிக்ஸ்கள் கிடைக்கிறது. நிச்சயம் முயற்சிக்கவும்.
2.  ஒரு பக்க கதைகளை நிறைய எழுதிப் பழகுங்கள்... அல்லது பிறர் எழுதி வார இதழ்களில் வெளியான வித்தியாசமான ஒரு பக்க கதைகளை காட்சிப்படுத்திப் பார்த்து பழகுங்கள்.... முடிந்தால் மொபைல் கேமிராவில் நண்பர்களை நடிக்க வைத்து ஷூட் செய்து பார்க்கவும்.
3. இண்டர்நெட்டிலும், நூலகங்களிலும் சென்று எந்த ஒரு விஷயத்தையும் அலசி ஆராய்ந்து தேடிப்படித்து ரிப்போர்ட் ரெடி செய்து பழகுங்கள். உங்கள் பிரத்யேக கதைகளில் வரும் சில விசேஷ தலைப்புகளை R&D செய்ய இது உதவும்
4. தமிழ் டைப்பிங் (கணிணி அறிவுடன்) நிச்சயம் கற்றுக் கொள்ளுங்கள்... (நம்புங்கள்... துறையில் இந்த தகுதி வெகு சிலரிடமே உண்டு)
5. ஆங்கிலம் ஏதோ பெரிய பூதம் என்று பயந்து விலகாதீர்கள். அடிப்படை ஆங்கில அறிவு பழகுங்கள் (கணிணியும்... டைப்பிங்கும் உட்பட) இலவசமாக கஸ்டமர் கேர் நம்பர்களுக்கு ஃபோன் செய்து அவர்களிடம் சில அடிப்படை கேள்விகள் கேட்டு ஆங்கிலத்தில் பேசி பார்க்கவும். நிச்சயம் கற்றுக் கொள்ளலாம்....
6. (இது கட்டாயமல்ல) 'ஃபோட்டோஷாப்' பழகுங்கள். இது தெரிந்தால் நீங்கள் நாளை எடுக்கப்போகும் காட்சியை வெவ்வேறு ஃபோட்டோக்களை வைத்து அடுக்கிப் பார்த்து லைட்டிங் பேட்டர்ன் முதற்கொண்டு ரெடி செய்யலாம். 
7. லேட்டரல் திங்கிங் முக்கியம்... எந்த ஒரு விஷயத்தையும் வெவ்வேறு கோணங்களில் அணுகி விடையளித்து பாருங்கள்... செஸ் கேம் போல...சில சமயம் சிறு பிள்ளையாய் யோசித்தாலும் பரவாயில்லை... 
8. ஒத்த கருத்துடைய ஒரு நண்பருடன் சேர்ந்து... தினமும் ஒரு படம்பார்த்து அந்த படத்தை பற்றி அலசி ஆராய்ந்து பேசுங்கள். டிக்கெட் செலவு செய்து அரங்கில் சென்றுதான் பார்க்க வேண்டும் என்றில்லை... டிவியில் போடும் பழைய கிளாசிக் வகை படங்களையும் (நிச்சயம் தமிழ்ப்படமும்மதான்) ஆய்வுக்காக பார்க்கலாம்...
9. தினமும் அடிக்கடி நிறைய பாடல்களை கேளுங்கள். பாடலின் டைமிங்... எங்கு வரிகள் கவனிக்கப்படுகிறது... எங்கு இசை ஆக்கிரமிக்கிறது... எங்கு பாடகரின் குரலை ரசிக்க முடிகிறது போன்ற விஷயங்களை அனுபவியுங்கள்.
10. முக்கியமான ஒரு திறன்... 'இதெல்லாம் எனக்கு ஏற்கனவே தெரியும்..' அல்லது 'இதெல்லாம் எனக்கு எதற்கு' என்று எதையும் ஒதுக்காதீர்கள் 'அட்டே..! இது புதிதாக இருக்கிறதே... இதை எப்படி செய்வது...' என்று ஆர்வமாய் கேட்டு கற்றுக் கொள்ளும் சகஜத்தன்மையை வளர்த்துக் கொள்ளுங்கள். அது உங்கள் ஜூனியரிடமிருந்து கற்றுக் கொள்வதாய் இருந்தாலும் சரி...
(குறிப்பு.:  இங்குள்ளவை என்னிடம் உதவி இயக்குனராக சேர நான் எதிர்ப்பார்க்கு கட்டளைகள் அல்ல... நான் இயக்குனராவதற்கு முன்பு என்னை தயார்படுத்திக் கொள்ள நானே வரைந்து கொண்ட வழிமுறைகள் மட்டுமே...)

5. இந்த வெற்றியை அடைய நிங்கள் இழந்தவை என்ன ? என்ன ?
                                                            இளையராஜா – INDUSIND BANK , SIRKALI 
மனதிற்கு பிடித்து வந்த துறையென்பதால் எனது இழப்புகளை நான் பொருட்படுத்தவில்லை... ஆனால், என் தந்தையின் நண்பர்கள் சிலர் அவரவர் மகன்களை மகள்களைப் பற்றி பெருமை பேசும்போது, என் தந்தையால் நான் ஜெயிக்கும் வரை பேசாமலிருக்க வைத்த அந்த மௌன நிமிடங்களையே பெரிய இழப்புகளாக கருதுகிறேன். பலமுறை அவர் அந்த நிமிடங்களில் என்னிடம் வருத்தப்பட்டதுண்டு... ஆனால், இன்று அந்த மௌனங்களை மேளதாளங்களாக மாற்றக்கூடிய எல்லா முயற்சிகளையும் செய்து கொண்டு வருகிறேன்.

6. எல்லா படங்களிலும் பெண்களை ஒரு போக பொருளாகவே காட்டுகின்றனர் , அப்படி இல்லாமல் பெண்ணை மையபடுத்தி நிங்கள் ஒரு படம் எடுப்பிர்களா ?
                                     - பூங்கோதை – சத்துணவு அமைப்பாளர் , திருவெண்காடு
நான் சினிமாவுக்காக எழுதி வைத்திருந்த முதல் திரைக்கதையே ஒரு பெண்ணை மையப்படுத்தியதுதான். 'டெய்ஸியின் டயரியிலிருந்து கடைசி 4 பக்கங்கள்...' என்ற ஒரு கதை... 'டெய்ஸி' என்ற ஒரு பெண்-நிருபரின் துப்பறியும் திறன் குறித்த கதை அது. முழுக்க முழுக்க அவளது எண்ணங்களின் காட்சிப்பதிவாய் கூடிய ஒரு த்ரில்லர் கதை... நிச்சயம் வருங்காலத்தில் எடுப்பேன்...

7. இந்த படத்தை பார்த்த பின் உங்கள் பெற்றோர்கள் கருத்து என்ன ?
- ரா. சக்தி , மேலையூர்
அப்பா அம்மா மற்றும் எனது பாட்டி மூவரும் இப்படத்தை நான்கு தடவை பார்த்தார்கள். அரங்குகளில் குடும்பத்தோடு வரும் மக்கள் கூட்டமும், குறிப்பாக குழந்தைகள் சிரித்து மகிழ்ந்து ஆரவாரம் செய்துக் கொண்டே படத்தை பார்ப்பதும் அவர்களுக்கு ரொம்பவும் பிடித்துப் போனது. இப்படியே அனைவரும் குடும்பத்தோடு வந்து கொண்டாடும்படி படத்தை நிறைய எடு... என்று எனக்கு அன்புக்கட்டளையிட்டார்கள். நிச்சயம் கட்டளையை நிறைவேற்றுவேன்.
இந்த வளரும் குழந்தை பதிவருக்கு  பேட்டி அளித்த இயக்குனருக்கு நன்றி 


டிஸ்கி : அன்பு நண்பர் சம்பத் அவர்களின் tamilparents மற்றும் மயிலனின்  மயிலிறகு    வலை தளம் இந்த வார என் விகடனில் வந்துள்ளது  அவருக்கு எங்கள் வாழ்த்துகள் 

Monday, March 5, 2012

தமிழ் சினிமா வரலாற்றில் முதல் முறையாக ...




நமது மிக பெரிய பொழுது போக்கு சினிமாதான். என்னை போல பல பதிவர்களுக்கு பதிவு எழுத விஷயம் தருவதே சினிமா தான் இன்று நான் பார்க்க போவது தமிழ் சினிமா வரலாற்றில் முதல் முறையாக நிகழ்ந்த சில சம்பவங்களை
 ...
வாங்க பார்க்கலாம் ..

தமிழில் முதல் .பேசும்படம்  : காளிதாஸ்

தமிழில் முதல் சமுக படம் மேனகா

தமிழில் முதல் நகைசுவைபடம் : சபாபதி

தமிழில் முதல் சான்றிதழ் பெற்ற படம் : மர்மயோகி

தமிழில் முதல் வட்டார மொழி படம் : மக்களை பெற்ற மகராசி

தமிழில் முதல் பாடல்கள் இல்லாத படம் : அந்த நாள்

தமிழில் முதல் கலர் படம் : அலிபாபாவும் நாற்பது திருடர்களும்   (தமிழ்நாட்டின் மொத்த பாராளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை 40 # சும்மா GK)


ஊர்வசி விருது பெற்ற முதல் தமிழ் நடிகை : சுகாசினி

செவாலியர் விருது பெற்ற முதல் தமிழ் நடிகர் : சிவாஜி

தமிழில் முதலில் கதாநாயகன் இல்லாத படம் :
ஒளவையார்



இதையும் படிக்கலாமே :


அண்ணே ஒரு சந்தேகம்