> என் ராஜபாட்டை : கருணாநிதி நாட்டைப் பிடித்த சனி, ஸ்டாலின் ஒரு பிணி-விஜயகாந்த் கடும் தாக்கு

.....

.

Tuesday, April 12, 2011

கருணாநிதி நாட்டைப் பிடித்த சனி, ஸ்டாலின் ஒரு பிணி-விஜயகாந்த் கடும் தாக்கு

பண்ருட்டி: இந்த நாட்டைப் பிடித்த சனியன் கருணாநிதி. அவரது மகன் ஸ்டாலின் ஒரு பிணி என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் மிகக் கடுமையாக தாக்கியுள்ளார்.


பண்ருட்டியில் இன்று பிற்பகல் தேமுதிக வேட்பாளர் சிவக்கொழுந்துவை ஆதரித்துப் பேசினார் விஜயகாந்த். மிகப் பெரிய அளவில் திரண்டிருந்த தொண்டர்கள் மத்தியில், விஜயகாந்த் பேசுகையில் கூறியதாவது:

என்னைப் பற்றி விமர்சிக்கிறார் மு.க.ஸ்டாலின். உண்மையில், இந்த நாட்டைப் பிடித்த சனியன்தான் உங்க அப்பா. உங்க அப்பாதான் இந்த நாட்டின் சனியன். நீங்கள் இந்த நாட்டைப் பிடித்த பிணி.



எங்களது கூட்டணியை எண்ணெயும், தண்ணீரும் போல என்கிறார்கள். உண்மையில் உங்களது கூட்டணிதான் எண்ணெயும், தண்ணீரும் போல. எங்களது கூட்டணி, தேனும் பாலும் போல. எங்களது கூட்டணி மக்கள் கூட்டணி.

உங்களை சமூக நீதி காத்த கூட்டணி என்கிறீர்கள். ஆனால் உண்மையில் அது சமுதாய விரோத கூட்டணி. பாமக தலைவர் சொன்னாரே, கலைஞர் அலை வீசுகிறது என்று. ஆனால் அனல் காற்றுதான் வீசுகிறது.

என்னைக் காடுவெட்டி குரு பயமுறுத்துகிறார். எனக்குப் பயமெல்லாம் கிடையாது. உங்க தலைவர்தானே அன்று கலைஞர் ஆட்சிக்கு சைபர் மார்க் போட்டார். கருணாநிதி ஆட்சிக்கு அதிக சைபர்களைப் போட்டவர் ராமதாஸ்தான். இன்று அந்த சைபர் கூட்டணியில் போய்ச் சேர்ந்திருக்கிறார்.

தமிழினத் தலைவர் என்று கூறிக் கொள்கிறாரே கலைஞர், உண்மையில் அவர் தமிழினத்தை அழித்த தலைவர். அவரால் ஒரு இனமே அழிந்து போய் விட்டது. தமிழ் மக்களுக்காகப் போராடுவேன் என்று கூறுகிறார் கருணாநிதி, அவரை இலங்கைப் படையிடம் சிக்கி உயிரிழந்த 550 மீனவர்களின் ஆவி கூட மன்னிக்காது.

கருணாநிதி ஆட்சி சாதனை அல்ல, பெரும் வேதனைதான். மக்கள் அவர்களுக்கு தீர்ப்பளிக்கப் போகிறார்கள். நிச்சயம் அவர்களை வீட்டுக்கு அனுப்புவார்கள்.

டெல்லியில் இன்று அன்னா ஹஸாரே உண்ணாவிரதம் இருக்கிறார். எதற்காக, ஊழலை நாட்டை விட்டே விரட்ட வேண்டும் என்பதற்காக. ஆனால் கலைஞரோ, அண்ணாவின் பெயரைச் சொல்லி நாட்டை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்.

மே 13க்குப் பிறகு தெரியும், மானாடுதா, மயிலாடுதா என்பது. அரசன் அன்று கொல்வான். தெய்வம் நின்று கொல்லும். கலைஞர் வீடா, தமி்ழ்நாடா என்பதை வாக்களிக்கப் போகும் முன்பு நினைத்துப் பார்த்து முடிவு செய்து கொண்டு வாக்களியுங்கள் என்றார் விஜயகாந்த்.
Thanks : Thatstamil.com

1 comment:

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...